Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழிவை எதிர்நோக்கியுள்ள குடாநாட்டின் கடல்வளம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழிவை எதிர்நோக்கியுள்ள குடாநாட்டின் கடல்வளம்!

யாழ்.மாவட்டத்திலுள்ள கடற்பரப்பில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி தொழில் மேற்கொள்ளப்படுவதால் கடல் வளம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் வளம் அழியும் பட்சத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள கடற்றொழில் குடும்பங்கள் பெரும் நிர்க்கதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுநலன்விரும்பிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
fish-4.JPG
அத்துடன் யாழ்ப்பாண மக்களின் போசணையிலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடலுணவுகள் மூலம் கிடைக்கும் போசணை மட்டம் இழக்கப்பட்டால் தற்போதைய சூழல் மாற்றத்திற்கேற்ப வேகமாகப் பரவி வருகின்ற நோய்களின் தாக்கத்திற்கும் யாழ்ப்பாண மக்கள் உள்ளாகவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக கடல்சார் வல்லுநர்களோ அரசியல்வாதிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தொடர்பாகவும் சமூக நலன் விரும்பிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

fish-1.JPG
சிறிய கண்கணையுடைய தங்கூசி வலையில் கூடுகளை அமைத்து கடலில் வைப்பதால் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் குறைவடைகின்றது. குறிப்பாக இறால், நண்டு, மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் சிறியவை மேற்படி வலைக்குள் அகப்படுகின்றன. அவை வெளியே கொண்டுவரப்பட்டு பெரியவை தேவைக்கும் விற்பனைக்கும் எடுக்கப்பட்ட பின்னர் ஏனைய சிறிய உயிரினங்கள் வெளியே கொட்டப்படுகின்றன.

இந்தச் செயற்பாடுகள் காரணமாக மீன், நண்டு, இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கமும் குறைவடைகின்றது. இதனால் பெரும்பாலான கடற்றொழிலாளர் குடும்பங்கள் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை குறிப்பிட்டளவான கடற்றொழிலாளர்கள் மாற்றுத் தொழில்களை நாடவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

fish-3.JPG
இந்த சிறிய கண்களையுடைய தங்கூசி வலைகளின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அது இன்றுவரை கடற்றொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக கடற்றொழில் அமைப்புகளிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டால் குறித்த அமைப்புகள் அந்த விடயத்தில் உரிய அக்கறை காட்டுவதில்லையென்றும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகளும் தமது தனிப்பட்ட அரசியல் நலன் கருதி இந்த விடயத்தை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுவதாகவும் மேற்படி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்திற்கு முன்னர் யாழ்ப்பாண மாவட்ட பொருளாதாரத்தின் பெரும் பங்கு கடல் உணவுகளின் மூலம் பெறப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் பல வாகனங்கள் மூலம் கடலுணவுகள் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது கடற்றொழிலாளர் குடும்பங்களும் செல்வந்தக் குடும்பங்களாக இருந்தன.

ஆனால், யுத்தத்தைக் காரணம் காட்டி மீனவர்கள் இலகு முறையில் அமைந்த தொழில்முறைகளைக் கைக்கொள்ளத் தொடங்கினர். ஆழ்கடலுக்குச் சென்றால் கடற்படை மற்றும் கடற்புலிகளின் மோதல்களுக்கு இடையே அகப்பட நேரிடும் என்று அஞ்சிய மீனவர்கள் கரையோரப் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டனர்.

 
அந்தக் காலப்பகுதியிலேயே குறைந்த செலவில் நிறைந்த வருமானத்தைப் பெறுவதற்காக தங்கூசி வலைகள், குழை போட்டு மீன்பிடித்தல், மடிவலை இழுத்தல் போன்ற அங்கீகரிக்கப்படாத, கடல் வளத்தை அழிக்கின்ற தொழில் முறைகள் தலைதூக்கின.

ஆனால், தற்போது யுத்தம் முடிவடைந்து கடற்பாதுகாப்பு வலயச் சட்டங்கள் நீக்கப்பட்டுள்ள போதிலும் மேற்படி தொழில் முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த தொழில் முறைகள் தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் கடற்றொழில் குடும்பங்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

தங்கள் அரசியல் நலனின் மட்டும் அக்கறை கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளும் தங்கள் பதவிகளைத் தக்க வைப்பதற்காக வாளாவிருக்கின்ற கடற்றொழில்சார் அதிகாரிகளும் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுத்தால் கடலுணவுகள் மூலம் யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். கடற்றொழில்சார் மக்களையும் பாதுகாக்க முடியும்.

ஒரு பக்கம் தமிழ மீனவர்கள் அத்து மீறி வந்து தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடித்து எம் கடல்வளத்தினை அழிக்கின்றனர், இன்னொரு புறம் சிங்கள மீனவர்கள் வந்து இதே போன்ற உபகரணங்களை பயன்படுத்தி தங்கள் பங்குக்கு தமிழரின் கடல் வளத்தினை நாசமாக்கின்றனர், மிஞ்சி இருப்பதை எம் பொறுப்பற்ற மீனவர்களே அழிக்கின்றனர். மிகவும் கவலைக்குரிய விடயம் இது,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.