Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் மீதான வெறுப்பினால் நீதிபதி ரூ.100 கோடி அபராதம்: மேல்முறையீட்டு மனுவில் ஜெயலலிதா தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு: எனக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருப்பது, என் மீது விரோதமும், கடும் வெறுப்பையும் நீதிபதி கொண்டிருப்பதையே காட்டுவதாக மேல்முறையீட்டு மனுவில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ரூ.66 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்துள்ளார்.

அந்த மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்களில் தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எனக்கு 100 கோடி ரூபாய் அபராதமாக விதித்துள்ளார். இது ஒரு அசாதாரணமான தீர்ப்பாகும். இதுவரை நடைமுறையில் இல்லாதது.

மற்றொரு வகையில் பார்த்தால் எனக்கு விதிக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் அபராதம் முற்றிலும் அதிகார விதிகளை மீறிய ஒன்றாகும். ஏனெனில் என் மீது ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் அதற்கு இரு மடங்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் நீதிபதி இப்படி ஒரு அபராதத்தை விதித்து உத்தரவிட முடியாது. இது சட்ட அதிகார விதிகளை மீறியதாக உள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

எனக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருப்பது, என் மீது விரோதமும், கடும் வெறுப்பையும் நீதிபதி கொண்டிருப்பதையே காட்டுவதாக உள்ளது. அவர் ஒரு நோக்கத்துடன் இல்லாவிட்டாலும், அவர் உத்தரவு இதையே காட்டுகிறது. மேலும் ரூ.100 கோடி அபராதத் தொகையை எப்படி செலுத்துவது என்று உத்தரவிடுவதிலும் நீதிபதி தவறு செய்துள்ளார். அபராதத் தொகை எப்படி செலுத்தப்பட வேண்டும் என்று கூற அவருக்கு அதிகாரம் இல்லை.

சொத்து குவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் பெரும்பாலும் இதர வைப்பு முதலீடுகள் என்னால் செய்யப்பட்டவை அல்ல. என்னிடம் பெரிய அளவில் பணம் கை இருப்பும் இல்லை. அவையெல்லாம் வேறு நபர்கள் பெயர்களில் உள்ளது. அப்படி இருக்கும் போது நான் மட்டுமே ரூ.100 கோடி அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது சட்ட ரீதியாக சரியானது அல்ல.

மேலும் 7040 கிராம் தங்கம் எனக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீதிபதி தன் தீர்ப்பில் அந்த தங்கத்தை பற்றி குறிப்பிடவே இல்லை. அப்படி இருக்கும் போது ரூ.100 கோடி அபராதத் தொகை, அந்த தங்க நகைகளில் இருந்து ஈடுகட்ட முடியும் என்று எப்படி சொல்ல முடியும்?

என் மீதான வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டதற்கு கர்நாடக அரசு ரூ.5 கோடி செலவு செய்திருப்பதாக நீதிபதி தன் தீர்ப்பில் கூறி உள்ளார். இந்த 5 கோடி ரூபாய் செலவை நான் கர்நாடக அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தவறான தீர்ப்பாகும். இந்த உத்தரவில் இருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏனெனில் குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒருபோதும் செலவுத் தொகையை பெற முடியாது.

மேலும் இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலுக்கு எதிராக உள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=33313

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துப் பேசுறார். இது சரியில்லை யுவர் ஆனர்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துப் பேசுறார். இது சரியில்லை யுவர் ஆனர்.. :D

நீதிமன்றத் தீர்ப்பைத்தானே எதிர்த்துத் தூக்கநினைக்கிறார் செயலலிதா.... :o  நீதிபதியையே எதிர்த்துத் தூக்கிவிட்டு மார்தட்டும் காலமிது வன்னியரே..!! :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.