Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டவர்கள் வடக்கே செல்லத் தடை! – ஓமந்தையுடன் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வெளிநாட்டவர்கள் வடக்கே செல்லத் தடை! – ஓமந்தையுடன் திருப்பி அனுப்பப்படுகின்றனர். 
[sunday 2014-10-12 08:00]
foreigner-vavuniya-300-news.jpg
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வடபகுதிக்கான மூன்று நாள் பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ள நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருப்போர் வடபகுதிக்கு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்கபாட்டி சண்டே ரைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்போர் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
   
இந்த தடை உத்தரவு காரணமாக வடக்குக்கு செல்ல ஆயத்தமாகியுள்ள பல வெளிநாட்டவர்கள், தமது பயணத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலானோர், நேற்று ஓமந்தை சோதனை சாவடியுடன் திரும்பிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. குறித்த தடை தொடர்பில் முன்கூட்டியே அறிவித்தல் விடுக்கப்படாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக மரணவீடுகள், திருமணங்கள் என்ற பல்வேறு நிகழ்வுகளுக்காக வடக்குக்கு செல்லவிருந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் முன்கூட்டியே ஒதுக்கி வைத்திருந்த ஹோட்டல் அறைகளுக்கான பணமும் வீணாகிப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது இத்தகைய போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.http://www.seithy.com/breifNews.php?newsID=118526&category=TamilNews&language=tamil

அராஜகத்தின் இன்னொரு கட்டம், ஜெயா செய்ததுக்கு தண்டனை அனுபவிக்கிறா! அதை ஏதோ வேறொரு நாட்டில் என்று இருக்கமுடியாது ஒருநாளைக்கு அது இலங்கையிலும் நடக்கலாம்.

 

காலம்தான் தேதியை குறிக்கவேண்டும்.

தனது நாட்டில் வாழும் எல்லா இனங்களுக்கும் போதிய சுயாட்சியை வழங்களி மக்களின் உரிமைகளை சுவிற்சர்லாந்தின் அரசியலமைப்பு  உறுதி செய்த்துள்ளபடியால் சுவிஸ் ஜனாதிபதி  எந்த பாதுகாப்பும் இன்றி சைக்கிளில் தனது கடமைக்கு செல்ல கூடிய நிலமை உள்ளது. பல வேளைகளில் அவ்வாறு சென்றும் உள்ளார். சில முக்கிய கூட்டங்களுக்கு செல்லும் போது அது நடைபெறும் இடத்தில்  கார் தரிப்பிடம் இல்லாத காரணத்தால்  பொது போக்குவரத்தை பாவித்த அமைச்சர்களும் இங்கு உள்ளார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.