Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் தெளிவான போர் முகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசின் தெளிவான போர் முகம்

மட்டக்களப்பு மாவட்டம் பனிச்சங்கேணி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சி சிறிலங்கா அரசின் போர் முகத்தை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. சமாதான முன்னெடுப்புகளுக்கு இவ்வாறான வலிந்த தாக்குதல் என்பது ஒரு போதும் நம்பிக்கையை ஏற்படுத்தமாட்டாது.

எதிர்வரும் 28ம் 29ம் திகதிகளில் பேச்சுவார்த்தைக்குத் தயார் என சிறிலங்கா அரசு இணக்கம் தெரிவித்துக் கொண்டு விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்துக்குள் பாரிய படை நகர்வை மேற்கொண்டமையால் போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் சர்வதேச சமூகத்தை சிங்களப் பேரினவாத அரசு ஏமாற்றுகிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

ஏனெனில், அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் கருதுகிறது.

சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைக்கான தமது விருப்பத்தை தெரிவித்தனர்.

அந்த நிலையில் சிறிலங்கா அரசு வலிந்த தாக்குதல்களை நிறுத்தி இதயசுத்தியுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அவசியமானது. ஆனால், வன்னிப் பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தினமும் விமானத்தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன. அதே போன்று ஆட்லறி எறிகணைத் தாக்குதல், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் என்பன இடம் பெற்று வருவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திலும் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன.

ஏற்கனவே, சம்பூர் மாவிலாறு படை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் உடமைகளை இழந்து நிர்க்கதியான நிலையில் வாகரைப் பிரதேசத்தில் தஞ்சமடைந்திருந்தனர். உணவு, உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு கூட சிறிலங்கா அரசு கதவடைப்புச் செய்த நிலையில் பட்டினிச் சாவில் வாழ்ந்த மக்கள் வாகரைப் பிரதேசம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கி தாக்குதல் விமானத் தாக்குதல்களால் மீண்டும் இடப்பெயர்வை சந்தித்துள்ளனர்.

இவ்வாறு இடம் பெயர்ந்துள்ள மக்கள் வெருகல் பகுதியிலுள்ள பால்சேனை வட்டவான் போன்ற இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். உண்மையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களின் பிரச்சினையை சமாதான வழிமுறையில் தீர்க்கும் எண்ணம் இருந்திருந்தால் இவ்வாறான ஒரு நெருக்கடி சூழலை ஏற்படுத்த முனையமாட்டார்கள்.

இருதரப்புக்கு இடையில் மீண்டும் நேரடிப் பேச்சுக்கள் இடம்பெற வேண்டுமானால், போர் நிறுத்தத்தை சிறிலங்கா அரசு முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். போர் நிறுத்த உடன்படிக்கைகயை முழுமையாக துவசம் செய்து கொண்டு ஒரு போதும் பேச்சு மேசையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாது.

புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இயல்பு நிலை உருவாக்கப்படும் பட்சத்தில் மாத்திரமே பேச்சுவார்த்தை நம்பிக்கையை ஏற்படுத்த இடமுண்டு. ஆனால், இன்றுள்ள நிலைமை அவ்வாறில்லை. சிறிலங்கா அரசு தாங்கள் மேற்கொள்ளும் வலிந்த தாக்குதல்களைப் பதில் தாக்குதல் எனத் திரிபுபடுத்திக் கூறுகின்றது.

அவ்வாறெனில் ஏன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை அப்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்க வேண்டும்? முகமாலைப் பகுதிக்குக் கண்காணிப்புக் குழு பிரதிநிதிகள் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புல்லுமலை அதிரடிப்படை முகாமிற்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பனிச்சங்கேணிப் பகுதிக்குச் செல்வதற்கும் படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

ஆனால், பனிச்சங்கேணியில் படையினரின் வலிந்த தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புச் சமரில் பதினைந்து படைச் சிப்பாய்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதுடன், ஒரு படைச் சிப்பாயை விடுதலைப் புலிகள் உயிருடன் சிறைப்பிடித்துள்ளனர்.

எனவே, யார் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர் என்பதற்கு இந்த விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட படைச்சிப்பாய்களின் சடலங்களும் சிறைப்பிடிக்கப்பட்ட படைச்சிப்பாயும் போதிய ஆதாரமாக உள்ள நிலையில் இன்னுமின்னும் சிறிலங்கா அரசு ஏமாற்றக் கூடாது.

http://www.battieezhanatham.com/newsite/in...=1710&Itemid=36 - மட்டு ஈழநாதம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திங்கள் 09-10-2006 18:18 மணி தமிழீழம் [மயூரன்]

திருமலை துறைமுகத்திற்கு ஆபத்தெனக் கூறி படையினர் கடும் எறிகணைத் தாக்குதல்.

மூதூருக்கு வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பிரதேசங்களை நோக்கி கடந்த இரு தினங்களாக படையினர் கடுமையான ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மூதூர், இறால்குழி, மணிராசன்குளம் பகுதிகளை நோக்கியே படையினர் இந்தத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

இந்தப் பிரதேசங்களில், கடற்புலிகள் புதிய பதுங்குகுழிகளை அமைத்து வருவதாகவும் இவற்றை அழிக்காவிடின் திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்புக்கு அது பெரும் அச்சுறுத்தலாயிருக்குமெனவும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.