Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லெப்.கேணல் அக்பர் களமுனையில் வீரச்சாவு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சனிக்கிழமை அன்று முகமாலைக் களமுனையில் லெப்.கேணல் அக்பர் அவர்கள் வீரச்சாவடைந்தார். எதிரியின் முன்னேற்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் முன்னேற்பாடாக நிலைகளைப் பார்வையிட்டு ஒழுங்கமைக்கும்போது எதிரியின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இவர் இறக்கும்வரை விடுதலைப்புலிகளின் கவச எதிர்ப்புப் படைப்பிரிவான விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதியாவார்.

இலங்கைப் போர்க்களத்தில் ஆர்.பி.ஜி எனப்படும் கவச எதிர்ப்பு ஆயுதத்தை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் புலிகளே. அதன்பின்தான் அரசாங்கமே அவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கியது. தொடக்க காலத்திலிருந்தே கவச எதிர்ப்பு ஆயுதம் புலிகளுக்கு முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. முன்னர் சண்டையணிகளில் இருக்கும் ஆர்.பி.ஜி க்களைத் தவிர தனியணியாக கவச எதிர்ப்புக்கென அணியேதும் இருப்பதில்லை. அருந்தலாக இருந்த B10, RCL போன்றவற்றை முழு அளவிற் பயன்படுத்தியதுமில்லை.

யாழ்ப்பாணம் விடுபட்டு வன்னி வந்தபின் ஆர்.பி.ஜி ஆயுதம் கொண்ட சிறு அணியொன்று பயிற்சிகொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. 1996 மத்தியில் முல்லைத்தீவுச் சமர் நடந்தகாலப்பகுதியில் இவ்வணி பயிற்சி பெற்றது. பின் கிளிநொச்சியை இராணுவம் ஆக்கிரமிக்கத் தொடங்கிய சத்ஜெய நடவடிக்கையை எதிர்க்க அச்சிறு அணி களம் சென்றது. ஆனால் அப்போது அது குறிப்பிட்ட ஒரு படையணியின் சிறு அணியாக இருந்தது. பெயர் ஏதும் சூட்டப்படவில்லை.

சத்ஜெய சண்டையில் எதிரியின் டாங்களின் பாவனை மிக அதிகரித்ததையும், அதுவரை செயற்பட்டு வந்தபடி தாக்கதலணிகளின் ஆர்.பி.ஜியாளர்களை முழு அளவிற் பயன்படுத்தி சேதத்தை ஏற்படுத்த முடியாமையும் புதிய வடிவமொன்றுக்குத் தூண்டுகோலாக அமைந்தது.

சத்ஜெய முடிவடைந்ததும், இம்ரான் பாண்டியன் படையணியின்கீழ் கவச எதிர்ப்புக்கென சிறப்பு அணி உருவாக்கப்பட்டு பயிற்சிகள் தொடங்கின. 1997 ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதியில் முதலாவது அணி தொடங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. வன்னிமீதான பெரும் படையெடுப்புக்கு கவசப்படையே மூலப்பலமாக இருக்குமென்ற தூரநோக்கோடு விரைவாக சிறப்பணி உருவாக்கப்பட்டது. அப்படித் தொடங்கப்பட்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணிக்கு தொடக்கத்திலேயே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்தான் அக்பர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த குள்ள உருவமான, அக்பர் 1990 இல் புலியணியிற் சேர்ந்தவர். பின் இம்ரான் பாண்டியன் படையணில் தன் முழுக்காலத்தையும் கழித்தவர். முல்லைத்தீவு - ஓயாத அலைகள் சமரில் திறம்படப் பணியாற்றியிருந்தார்.

'ஆர்.பி.ஜி கொமாண்டோஸ்' என்று பொதுவாக அழைக்கப்பட்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணிக்குரிய சீருடையாக நெடுக்குவரி அறிமுகமானது. இது மற்ற அணிகளில் இருந்து இவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டும்.

இப்படையணியின் முதற்சமர்க்களம் ஜெயசிக்குறு தான்.

ஜெயசிக்குறு தொடங்கி முடிவதற்குள் இவ்வணியில் நிறைப்பேர் வீரச்சாவடைந்தனர். இதேகாலப்பகுதியில் புதியபுதிய அணிகள் பயிற்சி முடித்து சமர்க்களம் சென்றனர். வெற்றிபெறாத கிளிநொச்சிச் சமரில் வீரச்சாவடைந்த மேஜர் நவச்சந்திரன், பின் ஓயாத அலைகள் மூன்றில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் மணிவண்ணன், சமாதான காலத்தில் சுகவீனம் காரணமாக சாவடைந்த லெப்.கேணல் சுட்டா போன்றோர் விக்ரர் கவசஎதிர்ப்புப் படையணியின் இடைமட்டத் தளபதிகளாக இருந்தவர்கள்தாம்.

தொடக்கத்தில் ஆண் போராளிகளை மட்டும் கொண்டு தொடங்க்ப்பட்ட இப்படையணி ஜெயசிக்குறு களமுனை தொடங்கப்பட்டதிலிருந்து பெண்போராளிகளையும் இணைத்து வளர்ச்சி கண்டது.

படையணி தொடங்கப்பட்டது முதல் கடந்த சனிக்கிழமை வீரச்சாவடையும்வரை அவ்வணிக்கான தளபதியாக இருந்தவர் லெப்.கேணல் அக்பர்.

தலைமையின் எதிர்பார்ப்புக்களைச் சரிவரப் புரிந்து போராளிகளைக் கொண்டு செய்வித்த தளபதி அவர்.

2003 ஆண்டு அக்பர் அவர்கள் திருமணம் புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வரலாறு திரும்புகிறது. ஜெயசிக்குறுவையும்விட மிக மூர்க்கமான முறையில் கவசப்படைகளைக் கொண்டு இன்று வடபோர்முனையில் எதிரி முன்னேறுகிறான். முன்பை விடவும் அதிமுக்கியமாகச் செயற்படவேண்டிய நிலையில் கவச எதிர்ப்புப் படையணி உள்ளது. அதிக பொறுப்புக்கள் சமர்க்களத்தில் அவர்களுக்கு வந்து சேர்ந்துள்ளது.

இந்நிலையில் அப்படையணித் தளபதி வீரச்சாவடைந்துள்ளது வருந்தத் தக்கது.

என்ன நல்லவன் இந்த செய்தி இப்ப நிதர்சனத்தில் அச்சு மாற்றமில்லாமல் இருக்கு நீங்கள் நிதர்சனம் ஆசிரியரா :lol::lol: வாழ்த்துக்கள் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவியளா!

இதையும் போட்டிட்டாங்களோ?

நான் அவங்களை விசரங்கள் எண்டெல்லோ இவ்வளவு நாளும் சொல்லிவாறன்.

என்னை விசரனாக்க்கிப் போட்டாங்கள்.

உதுக்கு மேல கதைக்கிற நிலையில நானில்லை.

அடப்பாவியளா!

இதையும் போட்டிட்டாங்களோ?

நான் அவங்களை விசரங்கள் எண்டெல்லோ இவ்வளவு நாளும் சொல்லிவாறன்.

என்னை விசரனாக்க்கிப் போட்டாங்கள்.

உதுக்கு மேல கதைக்கிற நிலையில நானில்லை.

:lol::lol::lol::lol: வரிக்கு வரி போட்டிருக்கிறாங்க

http://www.nitharsanam.com/?art=20866 :lol::lol:

நல்லவன் அக்பர் முஸ்லீம் இனத்தை சேர்ந்தவரா?? அவரின் உண்மையான பெயர் என்ன

  • கருத்துக்கள உறவுகள்

90 ஆம் ஆண்டில் இணைந்தே லெப்.கேணல் நிலையை பெற்று இருக்கின்றார் என்டால் அவருடைய திறமையை இதில் இருந்தே புரிநது கொள்ளளாம்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்பர் முஸ்லீம் இனத்தவர் இல்லை. ஆனால் அப்படிப் பெயர்வரக் காரணம் என்னவென்று தெரியாது, முஸ்லீம் அல்லாத பல போராளிகள் முஸ்லீம் பெயர்களைக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுண்டல், பதினாறு வருடத்தில் லெப்.கேணல் நிலையை அடைவதொன்றும் பெரிய விசயமில்லையே?

அண்மையில் திருகோணமலையில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தென்றல்மாறன் யாழ்ப்பாண இடப்பெயர்வுக்குப்பின் இயக்கத்தில் இணைந்தவர்.

மகாஜனா அல்லது யூனியன் கல்லூரிப் பழைய மாணவன் புருசோத்தமன் என்ற லெப்.கேணல் சிவநேசன் 1995 இல் இணைந்து 2001 இல் வீரச்சாவு.

சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதிகளில் ஒருவராக இருந்து தென்தமிழீழத்தில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கில்மன் அவர்கள் வெறும் ஐந்துவருடங்கள் மட்டுமே புலிகள் அமைப்பில் பணியாற்றியவர். (நானறிந்து மிகக்குறுகிய காலத்துள் லெப்.கேணல் நிலையில் வீரச்சாவடைந்தவர் கில்மன் அவர்கள்)இப்படி இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டு போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நல்லவன் விரிவாக விளக்கத்திற்க்கு....

எமக்காய் எம் மண்ணுக்காய் எத்தனை எத்தனையோ இன்னுயீர்கள் விதையாகிவிட்டன. லெப்.கேணல். அக்பரும் விதையாகி விட்டார். எமது கண்ணீர் அஞ்சலிகள். உங்கள் உயிர் மூச்சு எம் மண்ணில் என்றும்.

ஈழததிலிருந்து

ஐhனா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழிஞ்சுதுபோ.

அந்த நிதர்சனக் கோமாளியள் எனக்கு 'லக்ஸ்மன்' எண்டு ஒரு பேரும் தந்திட்டாங்கள்.

இதெல்லாம் திருந்திற பிளானே இல்லாத ஜென்மங்கள்.

(இதையும் வாசிப்பியள் தானே?)

கிழிஞ்சுதுபோ.

அந்த நிதர்சனக் கோமாளியள் எனக்கு 'லக்ஸ்மன்' எண்டு ஒரு பேரும் தந்திட்டாங்கள்.

இதெல்லாம் திருந்திற பிளானே இல்லாத ஜென்மங்கள்.

(இதையும் வாசிப்பியள் தானே?)

நிதர்சனம் ஆசிரியர் லக்ச்மன் என அழைக்கப்படும் நல்லவனுக்கு யாழ் களம் சார்பாக வாழ்த்துக்கள் :D :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழிஞ்சுதுபோ.

அந்த நிதர்சனக் கோமாளியள் எனக்கு 'லக்ஸ்மன்' எண்டு ஒரு பேரும் தந்திட்டாங்கள்.

இதெல்லாம் திருந்திற பிளானே இல்லாத ஜென்மங்கள்.

(இதையும் வாசிப்பியள் தானே?)

திருந்திற பிளான் இருந்தா கனடாவில போனவருடம் விற்பனையான தமிழீழத் தேசியக்கொடிபற்றிய செய்தியை இம்மாதம் முன்பக்கத்தில் போடுவார்களா :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.