Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோனி, ரெய்னாவிடம் விசாரணை * விரைவில் சூதாட்ட அறிக்கை தாக்கல்

Featured Replies

  • தொடங்கியவர்

சொர்க்கங்கள் கீழே விழுந்து விடாது: பிசிசிஐ மீது உச்ச நீதிமன்றம் கடும் விமர்சனம்
 

 

ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் உட்பட பல்வேறு வணிக நலன்கள் உடைய பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் விவரங்களை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் அல்லது சாம்பியன்ஸ் லீக் அணிகளின் உரிமையாளராக இருப்பதோடு பிசிசிஐ நிர்வாகத்திலும் ஒரு பதவி வகிக்கும் முரண்பட்ட இரட்டை நிலையை உருவாக்க பிசிசிஐ செய்த சர்ச்சைக்குரிய புதிய திருத்தங்களை ஆதரித்து பிசிசிஐ இன்று உச்ச நீதிமன்றத்தில் தனது வாதங்களைத் தொடர்ந்த போது, நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் மற்றும் கலிஃபுல்லா ஆகியோர், “பிசிசிஐ அதிகாரிகள் அணிகளின் உரிமையாளராக இல்லாது போனால் சொர்க்கங்கள் கீழே விழுந்து விடாது” என்றனர்.

 

"பிசிசிஐ தலைவர் அணி ஒன்றை நடத்தாமல் இருந்தால் ஐபிஎல் கிரிக்கெட்டே அஸ்தமித்து விடாது. இத்தகைய நலன்கள் இல்லாவிட்டால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாது போய் விடுமா என்ன, மேலும் வர்த்தக நலன்கள் கொண்ட ஒருவர் அணி ஒன்றையும் நடத்தலாம் என்பதை நம்பி ஐபிஎல் கிரிக்கெட் இல்லை.

ஆகவே, வணிக மற்றும் பிற நலன்கள் உள்ள பிசிசிஐ நிர்வாகிகள் பட்டியலை எங்களுக்கு கொடுங்கள். அப்படிப்பட்ட யார் யாருடன் எத்தகைய ஒப்பந்தங்களைச் செய்துள்ளீர்கள், மற்றும் என்ன மாதிரியான ஒப்பந்தங்கள் அவை என்பது எங்களுக்குத் தெரிந்தால் நல்லது.

 

அப்படி வணிக நலன்கள் இருக்கிறது என்று தெரியவந்தால் எந்தெந்த நிர்வாகிகள் பாதிக்கப்படுவார்கள்” என்று நீதிபதிகள் மீண்டும் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.

’திருத்தங்கள் செய்யப்படாத விதிமுறைகள் இருந்தால் அணியை நடத்த முன்வருபவர்கள் தயங்குவார்கள்’ என்று பிசிசிஐ வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் தெரிவித்ததையடுத்து திருப்தி அடையாத நீதிபதிகள் மேற்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளனர்.

சீனிவாசனுக்காக வாதாடும் வழக்கறிஞர் கபில் சிபல் கூறும் போது, “ஒரு அணிக்கு உரிமையாளராக இருப்பது தன்னிலே இரட்டை நலன் ஆகாது” என்றார்.

பிசிசிஐ விதிமுறை திருத்தம் 6.2.4 பிசிசிஐ நிர்வாகிகள், அலுவலர்கள் ஐபிஎல் அணியின் உரிமையாளராக செயல்பட வழிவகை செய்துள்ளது. ஆனால், பிரச்சினையே முரண்பட்ட இரட்டை நலந்தான் இப்போது வழக்கில் பெரும் பிரச்சினை.

 

இதனையடுத்து எந்தப் பின்னணியில் இந்த சர்ச்சைக்குரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கேள்வி எழுப்பியது.

“நீங்கள் அரசாக இருந்தாலும் சரி அல்லது ஒரு அமைப்பாக இருந்தாலும் சரி, மக்கள் நீங்கள் நடத்தும் போட்டிகள் நியாயமான முறையில் நடைபெறுகிறது என்ற உத்திரவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களின் இந்த புரிதல் மிக முக்கியமானது, அடிப்படையானது, நியாயமற்ற முறையில் ஆட்டம் நடத்தப்பட்டால் ஒருவரும் அதனை பின் தொடர மாட்டார்கள். ஆகவே இந்த விஷயத்தில் நீங்கள் தவறு செய்யக் கூடாது.

 

முரண்பட்ட இரட்டை நலம் இருக்கக் கூடாது என்றால் இருக்கக் கூடாது அவ்வளவுதான், பிசிசிஐ விதிமுறைகள் எங்களுக்கு ஒன்றும் புனிதமானதல்ல” என்று நீதிபதிகள் கூறியதோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லாமல் வேறு அணியின் உரிமையாளர் பிசிசிஐ பதவியிலும் இருக்கிறாரா என்று கேள்வி கேட்டனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6698187.ece?homepage=true

  • தொடங்கியவர்

வணிக நலன்கள் கொண்ட வீரர்கள், நிர்வாகிகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்
 

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் வணிக நலன்கள் கொண்ட வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் பெயர்களை பிசிசிஐ, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சவுரவ் கங்குலி, ஸ்ரீகாந்த், தோனி, அனில் கும்ளே, வெங்கடேஷ் பிரசாத், லால்சந்த் ராஜ்புட் உள்ளிட்ட வீரர்கள் பெயர்களும் சில நிர்வாகிகள் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலைக் கணக்கில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், "ஐபிஎல் அல்லது வேறு எந்த கிரிக்கெட்டிலோ வணிக நலன்கள் உள்ளவர்கள் நிர்வாகத்தில் இருக்கக் கூடாது” என்று கூறியது.

 

பிசிசிஐ-க்காக வாதாடிய சி.ஏ.சுந்தரம் என்ற வழக்கறிஞர், ஏதோ ஒரு விதத்தில் வணிக நலன்கள் இவர்களுக்கு இருக்கிறது என்றார்.

“இவர்களில் சிலர் வர்ணனையாளர்களாக இருக்கிறார்கள். கும்ளே, ஸ்ரீகாந்து போன்றவர்கள் முறையே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு பயிற்சி மட்டத்தில் இருக்கின்றனர்” என்றார் சுந்தரம்.

இதற்கு நீதிமன்றம், “இவர்களை 6.2.4 விதிமுறைகளிலிருந்து இதுவரை நீக்கி வைத்திருந்தீர்கள். அது குறித்து நாங்கள் எதையும் டீல் செய்ய விரும்பவில்லை. நாம் டெஸ்ட் போட்டிகளை எடுத்துக் கொள்வோம். 7ஆம் எண்ணில் குறிப்படப்பட்ட பெயரில் உள்ளவர் (ஸ்ரீகாந்த்) ஐபிஎல் அணியிலும் பணியாற்றினார், தேசிய அணியின் தேர்வுக்குழுவிலும் இருந்துள்ளார்.

 

அவரை எப்படி அணித் தேர்வுக்குழுவில் வைத்திருந்தீர்கள்? இதனை எப்படி நியாயப்படுத்த முடியும்? அவர் (ஸ்ரீகாந்த்) ஐபிஎல் கிரிக்கெட்டில் அவருக்கு ஏற்கெனவே பங்கு இருக்கும் போது அவரை எப்படி இந்திய அணித் தேர்வுக்குழுவிலும் வைத்திருந்தீர்கள்?” என்று கேட்டது.

அதற்கு பிசிசிஐ வழக்கறிஞர், இவையெல்லாம் முரண்பட்ட இரட்டை நலன்களாக வாய்ப்புள்ளதே தவிர அவ்வாறான வணிக நலன்கள் மட்டுமே என்பதாக நாம் பார்க்கத் தொடங்கினால் கஷ்டம்தான் என்றார். உதாரணத்திற்கு தோனியை எடுத்துக் கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி புரொமோட் செய்கிறார். அவர் இந்திய அணியின் கேப்டன், மேலும் அணியின் தேர்விலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். இப்படியிருக்கும்போது முரண்பட்ட இரட்டை நலம் என்று அனைத்தையும் டீல் செய்தால் கடினம்தான் என்றார் சுந்தரம் மேலும்.

 

இதற்கு நீதிமன்றம் கூறும்போது, ஒரு நிர்ணையிக்கப்பட்ட வருவாய்க்காக வர்ணனையாளர்களாக பணியாற்றுபவர்களால் ஆட்டத்தின் முடிவு மாறிவிடப்போவதில்லை. மாறாக ஏலத்தில் தன்னை முன்னிறுத்துபவர்களை இவர்களுடன் ஒப்பிட முடியாது அல்லவா? வர்ணனையாளர் போன்றவர்கள் ஆட்டத்தின் முடிவு மீது எந்த வித தாக்கமும் இல்லை என்றது.

 

உடனே சீனிவாசனின் வழக்கறிஞர் கபில் சிபல், “பிசிசிஐ தலைவராக இருப்பதும் அணி ஒன்றை நிர்வகித்து நடத்துவதும் முரண்பட்ட வணிக நலன்கள் என்றால் எனக்கு எதிராக உத்தரவு பிறப்பித்து விடுங்கள். முரண்பட்ட இரட்டை நலம் என்பது ஒரு கொள்கை விஷயமாக இருக்க முடியாதது, அது சமரசமற்றதாக இருக்க வேண்டும் என்றார் கபில் சிபல். இந்த இரட்டை நலம் எங்கும் இருந்து வருகிறது, நீதித்துறையிலும் இருக்கிறது” என்றார் சிபல்.’’

அதற்கு நீதிபதிகள், “பிசிசிஐ தலைவராக உங்கள் அணிக்கு நீங்கள் எப்படி ரூ.16 கோடியை அளிக்க முடியும், பிற அணிகளும் தொகையைப் பெற்றுள்ளன என்பதை மறுக்கவில்லை...நீங்கள் பின்னால் பணத்தை திருப்பி கொடுத்து விட்டீர்கள் என்பது உங்கள் செயல்பாடுகளை குறைத்து விடாது” என்றனர்.

அதற்கு கபில் சிபல், “பிசிசிஐ எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை என்பதல்ல விஷயம், சில குறைபாடுகள் உள்ளன அதனை சரி செய்ய முடியும் என்பதே. ஆட்ட நிர்ணயமும் சூதாட்டமும் 6.2.4 விதிமுறையுடன் தொடர்பில்லாதது. 90களிலிருந்தே ஆட்ட நிர்ணய சூதாட்டம் இருந்து வருகிறது.

 

ஆகவே, முரண்பட்ட இரட்டை நலம் என்றால் அதனை ஒவ்வொரு சந்தர்ப்பமாக பிரித்துப் பார்க்க வேண்டும். ஒரு பதவிக்காக போட்டியிடுவதும், பதவியில் இருப்பதும் சட்ட உரிமைகள், இதனை சட்டத்தினால் மட்டுமே திரும்பப் பெற முடியும்.

 

பிரச்சினை என்னவெனில் நாம் முரண்பட்ட இரட்டை நலம் என்பதை பொதுக் கொள்கையுடன் ஒப்பிட்டு குழப்பிக் கொள்கிறோம். அறக்குழு அவ்வாறான இரட்டை பந்தம் இருப்பதைக் கண்டால் என்னை நடவடிக்கைகளிலிருந்து விலகுமாறு கோரலாமே,

எல்லோருக்கும் தெரியும் நான்(சீனிவாசன்) ஒரு அணியின் உரிமையாளர் என்று. அப்போதைய தலைவர் ஷரத் பவாரிடம் அனுமதி பெற்றுள்ளேன் என்பதும் தெரியும். சென்னை சூப்பர் கிங்ஸ் இதனால் பலனடைந்தது என்று ஒருவரும் கூறவில்லையே. நிதிசார்ந்த நலன்கள் இருக்கிறது என்பது முரண்பட்ட இரட்டை நலன் ஆகாது” என்று சிபல் விளக்கமளித்தார்.

உச்ச நீதிமன்றம் ஐபிஎல் வழக்கு குறித்த உத்தரவை தள்ளி வைத்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article6701577.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.