Jump to content

தோனி, ரெய்னாவிடம் விசாரணை * விரைவில் சூதாட்ட அறிக்கை தாக்கல்


Recommended Posts

சொர்க்கங்கள் கீழே விழுந்து விடாது: பிசிசிஐ மீது உச்ச நீதிமன்றம் கடும் விமர்சனம்
 

 

ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் உட்பட பல்வேறு வணிக நலன்கள் உடைய பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் விவரங்களை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் அல்லது சாம்பியன்ஸ் லீக் அணிகளின் உரிமையாளராக இருப்பதோடு பிசிசிஐ நிர்வாகத்திலும் ஒரு பதவி வகிக்கும் முரண்பட்ட இரட்டை நிலையை உருவாக்க பிசிசிஐ செய்த சர்ச்சைக்குரிய புதிய திருத்தங்களை ஆதரித்து பிசிசிஐ இன்று உச்ச நீதிமன்றத்தில் தனது வாதங்களைத் தொடர்ந்த போது, நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் மற்றும் கலிஃபுல்லா ஆகியோர், “பிசிசிஐ அதிகாரிகள் அணிகளின் உரிமையாளராக இல்லாது போனால் சொர்க்கங்கள் கீழே விழுந்து விடாது” என்றனர்.

 

"பிசிசிஐ தலைவர் அணி ஒன்றை நடத்தாமல் இருந்தால் ஐபிஎல் கிரிக்கெட்டே அஸ்தமித்து விடாது. இத்தகைய நலன்கள் இல்லாவிட்டால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாது போய் விடுமா என்ன, மேலும் வர்த்தக நலன்கள் கொண்ட ஒருவர் அணி ஒன்றையும் நடத்தலாம் என்பதை நம்பி ஐபிஎல் கிரிக்கெட் இல்லை.

ஆகவே, வணிக மற்றும் பிற நலன்கள் உள்ள பிசிசிஐ நிர்வாகிகள் பட்டியலை எங்களுக்கு கொடுங்கள். அப்படிப்பட்ட யார் யாருடன் எத்தகைய ஒப்பந்தங்களைச் செய்துள்ளீர்கள், மற்றும் என்ன மாதிரியான ஒப்பந்தங்கள் அவை என்பது எங்களுக்குத் தெரிந்தால் நல்லது.

 

அப்படி வணிக நலன்கள் இருக்கிறது என்று தெரியவந்தால் எந்தெந்த நிர்வாகிகள் பாதிக்கப்படுவார்கள்” என்று நீதிபதிகள் மீண்டும் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.

’திருத்தங்கள் செய்யப்படாத விதிமுறைகள் இருந்தால் அணியை நடத்த முன்வருபவர்கள் தயங்குவார்கள்’ என்று பிசிசிஐ வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் தெரிவித்ததையடுத்து திருப்தி அடையாத நீதிபதிகள் மேற்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளனர்.

சீனிவாசனுக்காக வாதாடும் வழக்கறிஞர் கபில் சிபல் கூறும் போது, “ஒரு அணிக்கு உரிமையாளராக இருப்பது தன்னிலே இரட்டை நலன் ஆகாது” என்றார்.

பிசிசிஐ விதிமுறை திருத்தம் 6.2.4 பிசிசிஐ நிர்வாகிகள், அலுவலர்கள் ஐபிஎல் அணியின் உரிமையாளராக செயல்பட வழிவகை செய்துள்ளது. ஆனால், பிரச்சினையே முரண்பட்ட இரட்டை நலந்தான் இப்போது வழக்கில் பெரும் பிரச்சினை.

 

இதனையடுத்து எந்தப் பின்னணியில் இந்த சர்ச்சைக்குரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கேள்வி எழுப்பியது.

“நீங்கள் அரசாக இருந்தாலும் சரி அல்லது ஒரு அமைப்பாக இருந்தாலும் சரி, மக்கள் நீங்கள் நடத்தும் போட்டிகள் நியாயமான முறையில் நடைபெறுகிறது என்ற உத்திரவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களின் இந்த புரிதல் மிக முக்கியமானது, அடிப்படையானது, நியாயமற்ற முறையில் ஆட்டம் நடத்தப்பட்டால் ஒருவரும் அதனை பின் தொடர மாட்டார்கள். ஆகவே இந்த விஷயத்தில் நீங்கள் தவறு செய்யக் கூடாது.

 

முரண்பட்ட இரட்டை நலம் இருக்கக் கூடாது என்றால் இருக்கக் கூடாது அவ்வளவுதான், பிசிசிஐ விதிமுறைகள் எங்களுக்கு ஒன்றும் புனிதமானதல்ல” என்று நீதிபதிகள் கூறியதோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லாமல் வேறு அணியின் உரிமையாளர் பிசிசிஐ பதவியிலும் இருக்கிறாரா என்று கேள்வி கேட்டனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6698187.ece?homepage=true

Link to comment
Share on other sites

வணிக நலன்கள் கொண்ட வீரர்கள், நிர்வாகிகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்
 

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் வணிக நலன்கள் கொண்ட வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் பெயர்களை பிசிசிஐ, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சவுரவ் கங்குலி, ஸ்ரீகாந்த், தோனி, அனில் கும்ளே, வெங்கடேஷ் பிரசாத், லால்சந்த் ராஜ்புட் உள்ளிட்ட வீரர்கள் பெயர்களும் சில நிர்வாகிகள் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலைக் கணக்கில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், "ஐபிஎல் அல்லது வேறு எந்த கிரிக்கெட்டிலோ வணிக நலன்கள் உள்ளவர்கள் நிர்வாகத்தில் இருக்கக் கூடாது” என்று கூறியது.

 

பிசிசிஐ-க்காக வாதாடிய சி.ஏ.சுந்தரம் என்ற வழக்கறிஞர், ஏதோ ஒரு விதத்தில் வணிக நலன்கள் இவர்களுக்கு இருக்கிறது என்றார்.

“இவர்களில் சிலர் வர்ணனையாளர்களாக இருக்கிறார்கள். கும்ளே, ஸ்ரீகாந்து போன்றவர்கள் முறையே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு பயிற்சி மட்டத்தில் இருக்கின்றனர்” என்றார் சுந்தரம்.

இதற்கு நீதிமன்றம், “இவர்களை 6.2.4 விதிமுறைகளிலிருந்து இதுவரை நீக்கி வைத்திருந்தீர்கள். அது குறித்து நாங்கள் எதையும் டீல் செய்ய விரும்பவில்லை. நாம் டெஸ்ட் போட்டிகளை எடுத்துக் கொள்வோம். 7ஆம் எண்ணில் குறிப்படப்பட்ட பெயரில் உள்ளவர் (ஸ்ரீகாந்த்) ஐபிஎல் அணியிலும் பணியாற்றினார், தேசிய அணியின் தேர்வுக்குழுவிலும் இருந்துள்ளார்.

 

அவரை எப்படி அணித் தேர்வுக்குழுவில் வைத்திருந்தீர்கள்? இதனை எப்படி நியாயப்படுத்த முடியும்? அவர் (ஸ்ரீகாந்த்) ஐபிஎல் கிரிக்கெட்டில் அவருக்கு ஏற்கெனவே பங்கு இருக்கும் போது அவரை எப்படி இந்திய அணித் தேர்வுக்குழுவிலும் வைத்திருந்தீர்கள்?” என்று கேட்டது.

அதற்கு பிசிசிஐ வழக்கறிஞர், இவையெல்லாம் முரண்பட்ட இரட்டை நலன்களாக வாய்ப்புள்ளதே தவிர அவ்வாறான வணிக நலன்கள் மட்டுமே என்பதாக நாம் பார்க்கத் தொடங்கினால் கஷ்டம்தான் என்றார். உதாரணத்திற்கு தோனியை எடுத்துக் கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி புரொமோட் செய்கிறார். அவர் இந்திய அணியின் கேப்டன், மேலும் அணியின் தேர்விலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். இப்படியிருக்கும்போது முரண்பட்ட இரட்டை நலம் என்று அனைத்தையும் டீல் செய்தால் கடினம்தான் என்றார் சுந்தரம் மேலும்.

 

இதற்கு நீதிமன்றம் கூறும்போது, ஒரு நிர்ணையிக்கப்பட்ட வருவாய்க்காக வர்ணனையாளர்களாக பணியாற்றுபவர்களால் ஆட்டத்தின் முடிவு மாறிவிடப்போவதில்லை. மாறாக ஏலத்தில் தன்னை முன்னிறுத்துபவர்களை இவர்களுடன் ஒப்பிட முடியாது அல்லவா? வர்ணனையாளர் போன்றவர்கள் ஆட்டத்தின் முடிவு மீது எந்த வித தாக்கமும் இல்லை என்றது.

 

உடனே சீனிவாசனின் வழக்கறிஞர் கபில் சிபல், “பிசிசிஐ தலைவராக இருப்பதும் அணி ஒன்றை நிர்வகித்து நடத்துவதும் முரண்பட்ட வணிக நலன்கள் என்றால் எனக்கு எதிராக உத்தரவு பிறப்பித்து விடுங்கள். முரண்பட்ட இரட்டை நலம் என்பது ஒரு கொள்கை விஷயமாக இருக்க முடியாதது, அது சமரசமற்றதாக இருக்க வேண்டும் என்றார் கபில் சிபல். இந்த இரட்டை நலம் எங்கும் இருந்து வருகிறது, நீதித்துறையிலும் இருக்கிறது” என்றார் சிபல்.’’

அதற்கு நீதிபதிகள், “பிசிசிஐ தலைவராக உங்கள் அணிக்கு நீங்கள் எப்படி ரூ.16 கோடியை அளிக்க முடியும், பிற அணிகளும் தொகையைப் பெற்றுள்ளன என்பதை மறுக்கவில்லை...நீங்கள் பின்னால் பணத்தை திருப்பி கொடுத்து விட்டீர்கள் என்பது உங்கள் செயல்பாடுகளை குறைத்து விடாது” என்றனர்.

அதற்கு கபில் சிபல், “பிசிசிஐ எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை என்பதல்ல விஷயம், சில குறைபாடுகள் உள்ளன அதனை சரி செய்ய முடியும் என்பதே. ஆட்ட நிர்ணயமும் சூதாட்டமும் 6.2.4 விதிமுறையுடன் தொடர்பில்லாதது. 90களிலிருந்தே ஆட்ட நிர்ணய சூதாட்டம் இருந்து வருகிறது.

 

ஆகவே, முரண்பட்ட இரட்டை நலம் என்றால் அதனை ஒவ்வொரு சந்தர்ப்பமாக பிரித்துப் பார்க்க வேண்டும். ஒரு பதவிக்காக போட்டியிடுவதும், பதவியில் இருப்பதும் சட்ட உரிமைகள், இதனை சட்டத்தினால் மட்டுமே திரும்பப் பெற முடியும்.

 

பிரச்சினை என்னவெனில் நாம் முரண்பட்ட இரட்டை நலம் என்பதை பொதுக் கொள்கையுடன் ஒப்பிட்டு குழப்பிக் கொள்கிறோம். அறக்குழு அவ்வாறான இரட்டை பந்தம் இருப்பதைக் கண்டால் என்னை நடவடிக்கைகளிலிருந்து விலகுமாறு கோரலாமே,

எல்லோருக்கும் தெரியும் நான்(சீனிவாசன்) ஒரு அணியின் உரிமையாளர் என்று. அப்போதைய தலைவர் ஷரத் பவாரிடம் அனுமதி பெற்றுள்ளேன் என்பதும் தெரியும். சென்னை சூப்பர் கிங்ஸ் இதனால் பலனடைந்தது என்று ஒருவரும் கூறவில்லையே. நிதிசார்ந்த நலன்கள் இருக்கிறது என்பது முரண்பட்ட இரட்டை நலன் ஆகாது” என்று சிபல் விளக்கமளித்தார்.

உச்ச நீதிமன்றம் ஐபிஎல் வழக்கு குறித்த உத்தரவை தள்ளி வைத்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article6701577.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.