Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தில் JVP குதிக்கலாமென்ற செய்தி திரிபுபடுத்தப்பட்டது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்யக்கூடியதை பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் – மாகாண – உள்ளுராட்சி சபைகளையும் கட்டுப்பாட்டுள் வைத்திருக்கும் TNAயால் ஏன் செய்ய முடியாது?

sunil_CI.jpg

மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தில் ஜே.வி.பி குதிக்கலாமென்ற சாரப்பட வெளியான செய்தி திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்ட ஒன்றாகும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில் 1989 ம் ஆண்டில் நிலவிய மோசமான பொருளாதார நிலை மக்களை போராட்டத்திற்கு தள்ளியது. தற்போது  அதே போன்று மோசமான பொருளாதார நெருக்கடியினை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். அவ்வகையில் மக்களை அணிதிரட்டி அவர்களது உரிமைகளிற்காக போராவேண்டிய தேவை எமக்குண்டு.

ஆனால் அது ஆயுதப் போராட்டமென  நாம் கூறியிருக்கவில்லை.அவ்வாறான எண்ணமும் எம்மிடம் இல்லையென அவர் தெரிவித்தார்.

வடக்கு-கிழக்கு மக்கள் மிகமோசமான அடக்கு முறைகளிற்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். வடக்கில் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளனர். அதே போன்று 28 ஆயிரம் சிறார்கள் பெற்றோரை இழந்து அநாதைகளாக்கப்பட்டு உள்ளனர். அரைவாசிக்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு இருக்க  வீடேயில்லை.

இவை அனைத்தையும் மூடி மறைத்து மக்களை திசைதிருப்ப  களியாட்ட விடுதிகளையும் கார்ப்பெட் வீதிகளையும் இலங்கை அரசு அள்ளிவீசுகின்றது. அத்துடன் மக்களை ஊடகங்களை அது அடக்கி ஆளுகின்றது.

இவற்றைப் பேசவேண்டிய கூட்டமைப்போ  வேடிக்கை பார்ப்பதன் மூலம் அரசிற்கு முண்டு கொடுக்கின்றது. வடமாகாணசபை கூட்டமைப்பிடமுள்ளது. உள்ளுராட்சி  மன்றங்களில் 80சதவீதமானவையும் அவர்களிடமேயுள்ளது. ஆனால் வெறும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து செய்வதை ஏன் அவர்களால் செய்யமுடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

வடக்கிற்கு நாம் வருவதை தடுக்க இலங்கை அரசு பலத்த முயற்சிகளை செய்கின்றது. ஊடக மாநாட்டை  நடத்தக்கூடாதென  ஊடக அமையத்தை தமது தனது இராணுவப்புலனாய்வு பிரிவு மூலம் மிரட்டுகின்றது.

எமது கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளரது வீட்டிற்கு சென்று திரும்பியவுடன் அதே போன்று புலனாய்வு பிரிவினர் போய் மிரட்டுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வூடக மாநாட்டில் அவருடன்  அவர்களது கட்சியின் ஒரு பிரிவான சகோதரத்துவத்திற்கான மக்கள் அரண் அமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளர் இராஜேந்திரன் ,யாழ்.அமைப்பாளர் அம்பலவாணர் கணேஸ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.    

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113571/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்
இவை அனைத்தையும் மூடி மறைத்து மக்களை திசைதிருப்ப  களியாட்ட விடுதிகளையும் கார்ப்பெட் வீதிகளையும் இலங்கை அரசு அள்ளிவீசுகின்றது. அத்துடன் மக்களை ஊடகங்களை அது அடக்கி ஆளுகின்றது.

 

 

 

சிங்களவருக்கே அரசின் வித்தைகள் விளங்கி விட்டது. எம்மில் சிலர் விளங்காதது போல் நடிப்பது ஏன் என விளங்கவில்லை?

சூடுகண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்று ஒரு பழமொழி உண்டு இவர்களுக்கும் பொருந்தும் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடம் வந்து ஒழிக்காமல் இருந்தால் சரி..

 

அதையும் வைத்து தமிழரை வாட்டமுயல்கிறார்கள் போலும் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.