Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை துப்பாக்கிச் சூடு: தமிழக மீனவர் காயம்

Featured Replies

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் அருகே இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.

இதனால் பயந்து போன மீனவர்கள் அங்கிருந்து தப்பி ஜெகதாப்பட்டனம் வந்து சேர்ந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சௌந்தரராஜன் என்ற மீனவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். அவரை ஜெகதாப்பட்டனத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியச் செயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2006/10.../fisherman.html

புலிகள் தாக்கி சாவடைந்த மீனவர் யாராவ்து இருக்கீனமோ இந்தியாவுக்கு யார் தீவிரவாதி புலிகளா அரசா :evil:எல்லா அரசாங்கங்களுக்கும் தமிழன் மீது ஒரு நக்கல் பார்வை அதற்கெல்லாம் பதில் கிடைக்கும் பாருங்கோ

  • தொடங்கியவர்

என்னை பொறுத்தவரையில் காலி தாக்குதல் மற்றும் கபரனை தமிழக மீனவரும் கொண்டாடப்படக்கூடிய தாக்குதல்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு சிறீலங்கா அரசை அதன் கடற்படையைக் குற்றஞ்சாட்ட முன்னர் இந்திய கடற்படைத் தளபதியின் சமீபத்திய பகிரங்க அறிவுப்பான சிறீலங்கா கடற்படைக்கு ரடார் மற்றும் சுடுகலங்களை இந்தியா வழங்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்திய கடற்படையே சிறீலங்கா கடற்படையைப் பயன்படுத்தி தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நடத்துவதாகத்தான் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கதையை எத்தனை வருடமாக சொல்லிக் கொன்டு வருகிறார்கள் ???

ஜெயா அம்மா தொடக்கம் கருனாநிதி ஐயா வரை இதே கதைத்தான்....

தமிழ்நாடு மாத்திரம் இலங்கையை விட 3, 4 மடங்கு பெறியது.

தமிழ்நாட்டு தமிழனுக்கு கொஞ்சம் கூட மானம் ரோசம் இல்லையா..? அல்லது தோசை இட்லி ரொட்டி தின்னுற இந்தியனுக்கு கூட அது இல்லையா....?

  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசியன் தேசியத்தை பற்றி சிந்திக்கமாட்டான் அவனுக்கு கடவுள் இருக்கிறான்,கள்ளசாமிமாமிமார

பல பில்லியன் டொலர் செலவழித்து பல வல்லுனர்கள் தொழில்நுட்ப ஆராச்சிகள் செய்து பல நிஜ விபத்துக்களை பகுப்பாய்வு செய்து பல வருடத்து நீண்ட அனுபவங்களின் அடிப்படையில் கார்களை தயாரிக்கிறார்கள். அதனால் தான் மேற்கத்தேய உலகில் தயாரிக்கும் வாகனங்கள் வருடா வருடம் புதிய புதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வெளி வந்து விபத்துக்களையும் அதனால் வரும் உயிர் இழப்புகளையும் அங்கவீனங்களையும் குறைத்துவருகிறது. மேலும் வீதிகள், கட்டுப்பாட்டு விளக்குகளின், போக்குவரத்து விதிகளின், சமிக்கைகளின் தரத்தை உயர்த்துகிறார்கள் பயணங்களின் பாதுகாப்பை மேலும் உயர்த்த.

ஆனால் நாங்கள் என்ன செய்யிறம் மேற்குலகில் இருந்தாலும்?

35 000 பவுண்ஸ் இக்கு பிஎம்டபிள்யுவோ பென்சோ ஆவுடியோ வேண்டினாலும் கோயிலில கொண்டுவந்து ஜய்யரை கொண்டிச்சு பூசை செய்யிறம் ஊர் மாட்டு வண்டில்கள் மாதிரி. சந்தணமும் குங்குமமும் ஸ்டியரிங் வீலுக்கு பூசிறம் பயணங்கள் ஆபத்தில்லாமல் நடக்க வேணும் எண்டு.

ஆனா பயணங்கள் ஆபத்தில்லாமல் நடக்க வேணும் என்பதற்காக இருக்கிற

வீதி ஒழுங்குகள் விதி முறைகள் பற்றி முழுக்க தெரிந்திருக்கிறமா உருப்படியா?

அவை ஒவ்வொன்று என்ன காரணத்துக்காக (அதாவது எப்படியாக ஆபத்துகளை தவிர்க்க குறைக்க) வந்தது என்று சிந்திக்கிறோமா? ஏதோ பரிட்சையில் பாடமாக்கியோ குதிரை ஓடியோ தேர்ச்சி அடைந்தால் போதும் என்பது தான் குறிக்கோள்.

கார்களை அதன் வயதுக்கு ஏற்ற மாதிரி கிரமமாக பாரமரிப்பிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிகளை எவ்வாறு முறிப்பது என்பது எம்மில் பலர் முதுமானிப் பட்டம் பெற்றவர்கள்.

மலிவாக தரம் குறைந்த உதிரிப்பாகங்களை எங்கு வேண்டலாம் தயாரிக்கலாம் இறக்குமதி செய்யலாம் என்பதில் கூட பலருக்கு ஆசை.

இதில் இருந்த என்ன தெரிகிறது காச்சட்டை போட்டு பூச்சு பூசி வாசனைகளை போட்டுக் கொண்டு எவ்வளவு விலை கூடிய காரில சவாரி செய்தாலும் ஊரில கேவணத்தோடை மாட்டு வண்டிலில சவாரி செய்த சிந்தனையிலும் நம்பிக்கையிலும் தான் இன்னமும் இருக்கிறம்.

இப்படியான அத்தியாவசியமான விடையங்களில் இருந்தே எம்மில் பலர் என்னும் விடுதலை பெறவில்லை. அதுக்குள்ள.... :oops:

  • தொடங்கியவர்

குறுக்கால போவானின் கருத்து அத்தனையும் நிஜம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.