Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழகத்தில் சற்றுமுன்னால் மாவீரர் நாள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Featured Replies

தமிழீழத்தின் யாழ் பல்கலைக்கழகத்தில் சற்றுமுன்னால் மாவீரர் நாள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலையில் இருந்து சிங்கள ராணுவப் படையினர் குவிக்கப்பட்ட நிலையில் பாரிய கண்காணிப்பின் மத்தியில்,ஒவ்வொருவராக சோதனையிடப்பட்டே வளாகத்தில் அனுமதிக்கப்பட்டபோதும்,குறித்த நேரத்தில் மாணவர் கூடும் அறையில் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கூடி சுடரேற்றிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

சுதந்திர தாகம் தணியாது.
ஆயுதம் கொண்டு எம்மை அடக்கவும் முடியாது.

 

10734172_643918345724775_243004108280207

  • கருத்துக்கள உறவுகள்

கெடுபிடிகளையும் கடந்து யாழில் நினைவு வணக்கம்; பல்கலைக்கழகத்திலும் சுடர்விட்டது (2ஆம் இணைப்பு, படங்கள்)

 

20141124_173109-300x168.jpgஇராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், இன்று வியாழக்கிழமை மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடங்கள், வீடுகள், ஆலயங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பொதுமக்கள் வழிபட்டுள்ளனர்.

கடந்த வாரமே யாழ்.பல்கலைக் கழகம் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில் இராணுவ கெடுபிடிகளையம் மீறி பல்கலை வளாகத்தில் மாணவர் பொது அறையில் ஈகைச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படுள்ளன. இந்த நெருக்கடி, அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போராட்டத்தில் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு மக்கள் தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

இரண்டாம் இணைப்பு:-

இதேவேளை மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இன்று 6.30 மணிக்கு விசேட வழிபாடும் இடம்பெற்றது.

இதேபோல தென்மராட்சி மிருசுவில் புனித நீக்கிலோஸ் தேவாலயத்தினில் மாவீரர்களிற்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு விசேட இடமொன்றினில் சுடரேற்றி அஞ்சலியும்  செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான தேவாலயங்களினில் தடைகள் முட்டுக்கட்டைகளினை தாண்டி ஆராதனைகள் சுடரேற்றல்கள் இடம்பெற்றிருந்தன.

 

யாழ் பல்கலைக்கழகத்தில்:-

20141124_173109.jpg

20141124_173137.jpg

20141124_173146.jpg

20141124_173034.jpg

மண்டைதீவில்:-

0011.jpg

0021.jpg

0041.jpg

0051.jpg

 

 

http://tamilleader.com/?p=44480

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.