Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தேடலில் நிதர்சனம்! வாழ்த்துக்கள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று எமக்கான ஊடகங்களின் வளர்ச்சி அதிசயிக்கத்தக்க வகையில் இருப்பினும், இவ்வளர்ச்சிகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழை மையமாகக் கொண்டதாகவே இருந்தது. ஒரு காலத்தில் எதிரியின் ஊடகங்களைத் தவிர எமக்கென்று ஊடகமில்லா நிலையும் இருந்தது. ஆனால் இன்று ஊடகப் போரில் எதிரியை புறமுதுகு காட்டி ஓடும் நிலைக்கு நாம் தள்ளியுள்ளோம்! இந்நிலைக்கு தமிழ்நெற் ஆற்றிய பங்கு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

இருப்பினும் எமது ஊடக வீச்சு சிங்கள மக்களை பெரிதாக சென்றடையவில்லை. அவர்கள் எமது தரப்பு நிலைப்பாட்டை ஏற்கிறார்களோ, இல்லையோ என்பதல்ல! அவர்களை நோக்கி எமது பிரச்சாரங்கள், பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது! கள உண்மை நிலவரங்களை அவர்களுக்கு தெரிவிக்கும்.

இன்று, இதற்கான முதல் அடியை "நிதர்சனம்" தொடங்கியிருக்கிறது. எம்மத்தியில் குறுகிய காலத்தில் எவ்வளவு நிதர்சனம் பிரபலமானதோ, அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தும் என்று நம்புவோம்.

நிதர்சனத்தின் இந்த புதிய தேடலுக்கு, யாழ்களம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். நிதர்சனம் தொடங்கிய அடியை ஏனைய எம்மவர் ஊடகங்களும் பின்பற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொற்ப நேரத்துக்கு முன், நன்பர் ஒருவரிடம், தமிழர்கள்/ புலிகள் ஏன் இன்னும் சிங்களவர்கள் மத்தியில் பரபுரையை குறிப்பிடும் அளவில் உருவாக்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

நிதர்சனம் இதைபற்றி கரிசனை எடுத்தற்கு நன்றி, வழ்த்துக்கள்.

இது முதல் படியே...இன்னும் வெகு தூரம் பிரயானம் செய்ய வேண்டி கிடக்குது.

என்னைப் பொருத்தவரை, காலம் தாமதித்தே நாம் காரியங்களைச் செய்கின்றோம் என்று சொல்லுவேன்.

சிங்களவர்கள் மத்தியிலே சிங்கள்வர்களின் போர்வைக்குள் இருந்தவண்ணம் இந்த பரபுரை செயற்படவேண்டும். இது தமிழர் மத்தியிலிருந்து தமிழர்களால் வெளிப்படையாக செயற்படும் போது அவற்றை சிங்களவர்கள் வெகு சுலபமாக உதாசீனப் படுத்த நிறைய சந்தர்பங்கள் உண்டு அல்லவா?

இன்று சிங்களவர்கள் சிங்கள ஊடகங்கள் கூறுபவற்றையே விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் .

சிங்கள்வர்களுக்குள் தமிழர்களின் பிரச்சணை முற்றிலுமாக அறிந்தவர்கள் மிக சொற்பமானவர்களே. தமிழர்களின் நியாயம் அவர்களுக்கு போதிய அளவு எடுத்துரைகப் படவில்லை, தொடர்ச்சியாக வெற்றிகரமாக எடுத்துரைக்கப்பட்டு கொண்டிருக்கவுமில்லை என்றே சொல்லுவேன்.

காலம் தாமதமாகுமுன் கரிசனை எடுத்து செயற்படுவோமா?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிதர்சனத்துக்கு!

ஆனால் சிங்கள ஊடகங்கள் செல்லிவரும், புலி சார்பு நிலை என்பதைப் பொறுப்புணர்ச்சியோடு காப்பாற்றி வருதலே, அதன் வெற்றி நிலையாகக் கொள்ள முடியும். அவசரமான தலைப்புக்கள், வேறு ஒரு நிலையோடு முடிச்சுப் போட்டு எழுதும் நிலைகள் பலவீனத்தை தமிழருக்கு ஏற்படுத்துமா என்று முதலில் சிந்தித்து எழுதுவது நல்லது!

மீண்டும் வாழ்த்துக்கள் நிதர்சனத்துக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிதர்சனம்

வாழ்த்துக்கள்!

ஆனாலும் எத்தனை சிங்களவர்கள் பார்பார்கள் என்று சொல்ல முடியாது, அப்படியே பார்த்தாலும், நம்புவார்களா? உன்மையாகவே நிலைமைகளை தெரிந்து கொள்ள வேணும் என்று நினைப்பவர்கள் தமிழ் நெட் பார்த்து தெரிந்து கொள்வார்களே? எத்தனை சிங்களவர்கள் தமிழ் நெட்டில் வரும் செய்திகளை நம்புகிறார்கள்?

நிதர்சனத்தின் நடத்தைகள் ஆரம்பத்தில் இருந்து இற்றை வரை ஒரு tabloid ரகத்திலானது. tabloid ரக ஊடகங்களும் சில விடையங்களை கைய்யாள தேவை. அந்த தேவையை நிதர்சனம் ஓரளவு பூர்த்தி செய்தது. ஆனாலும் சுட்டிக்காட்டிய பின்னரும் தொடரும் நிதர்சனத்தின் பொறுப்பற்ற பல நடத்தைகள் சந்தேகங்களை தூண்டுவதாக இருக்கிறது.

சிங்கள மக்களை நோக்கி அவர்களது பாசையில் எமது தரப்பு நியாயங்கள் செய்திகளை நிதானமாக பக்குவமாக பொறுப்புணர்வோடு சொல்ல வேண்டும். இந்த தகுதி ஒரு mainstream media இற்கு தான் உண்டு. நிதர்சனம் ஒரு mainstream media ஆ என்றால் பதில் நிச்சயமாக இல்லை.

பிரபல்யம், அதிக வருகையாளர்களை வைத்து நிதர்சனம் mainstream media ஆ இல்லையா என்று தீர்மானிக்க முடியாது. அவர்கள் வெளியிடும் செய்திகளின் தரம் நம்பிக்கை, நிதானம் என்பனதான் அங்கு முக்கியம். இவைற்றில் எதையும் நிதர்சனம் வெளிக்காட்டவில்லை.

தமிழில் எழுதப்படும் செய்திகள் விடையங்களின் சர்ச்சைகளை கண்டு பிடித்து விமர்சிப்பதே பெரியபாடாக இருக்கிறது. இந்த நேரத்தில் சிலரால் மட்டுமே விளங்கி விமர்சிக்கக்கூடியதாக சிங்கள மொழியிலும் தமது ஆட்டத்தை நடத்தப் போகிறார்கள் என்பது பெரிய பெரிய தவறுகள் கூட கவனிப்பார் அற்று தமிழர் தரப்பு நிலைப்பாடுகளாக செய்திகளாக செல்லப் போகிறது.

இது எங்கு கொண்டு சென்று முடிக்க போகிறது என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேணும். :? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

நிதர்சனத்தைப்பற்றி கதைச்சாலே இந்த பறவைகளுக்கு மூக்கடி வேத்திடும் என்று யாரே திட்டுறது கேக்குது. பரவாயில்ல தெரிஞ்சதை சொல்லுறன். அண்ணல் குறுக்கால போவன் ஒன்றை சொன்னார் பாருங்க அது வாஸ்தவம் பாருங்க..

இப்ப நிதர்சனம் தேசியத்துக்கு ஆதரவாய் போட்ட செய்திகளில சிலது..

-கண்டியில சாமாதான ஊர்வலம் போனோருக்கு...முட்டையாலும் தக்காளியாலும் அடியாம்....

-யாரோ இம்தியாஸ்..ராஜேந்திரன்?...அவர்கள் மகிந்தவோட சேர்வதைப்பற்றி...

-ஐதேகவிடம் ஒன்றும் கேட்கவில்லை.....உதவி மட்டும் ராஜபக்ச கேட்கிறாராம்....

-சுனாமிக்கு 2 நாள் முதலே...சுனாமி உதவிப் பணம் கொடுத்திருக்கிறார்களாம்...

இவை ரொம்ப ரொம்ப முக்கியம் பாருங்க.. சிங்கள மக்களுக்கும் எமக்கும். முதல் நாளே கரிச்சு கொட்டுறம் என்று நினைக்காதீங்க.. ஆனால் முதல் நாளே இப்பிடியிருந்தா வரும் காலங்கள் தமிழ் நிதர்சனத்தை வென்றிடும்

இதுக்கு ஒரு சிங்கள ஊடகம் தேவையோ?

நிதர்சனம் 03 மொழியில்.

நிதர்சனம் 03 மொழியில் பல்வேறு ஊடகங்களில் செய்திகளை எடுத்து போடுவதும் 03 மொழியில் செயற்பட ஆரம்பிப்பதும் தவறா? சரியா?

இதனால் எற்படும் சாதக பாத நன்மை தீமைகள் என்ன?

சிங்களவன் பல இலட்சம் தமிழரை கொண்று தமிழ் தாய் நிலத்தை ஆக்கிரமிக்கும்போது இது தேவைதானா?

இது தேவை இல்லை என்பதே எனது கருத்து.........

தமிழருக்க எண்று புதினம் சங்கதி பதிவு யாழ் களங்கள் இருக்கும்போது நிதர்சனம் என் இத்தகய துரோகச் செயல்களில் ஈடுபடுகிறது.

பறவைகள் நீங்களும் உதவலாமே அவர்களுக்கு அதுபோக ஆரம்பம் எப்படி இருந்தாலும் என்ன காலம்போக அவர்கள் நினைத்ததை நடாத்துவார்கள்போல தெரிகிறது.

என்ன கொழும்பில் ஆசிரியர் உட்பட 06 பேர் கடத்தல் 03பேர் கொலை எண்டும் ஒரு செய்தி போட்டிருக்கு.

ஜ.தே.க பிரதி தலைவராக பிறெமதாசாவின் மகன் நியமனம் என்றும் கிடக்கு ஆகவே வாழ்த்துகள்.

எடுத்தஉடனை என்ன வெட்டி விழுங்க இல்லை என்டோ கவலைபடுறியல் அவரப்படாதயுங்கொ.

பறவைகள் நீங்களும் உதவலாமே அவர்களுக்கு அதுபோக ஆரம்பம் எப்படி இருந்தாலும் என்ன காலம்போக அவர்கள் நினைத்ததை நடாத்துவார்கள்போல தெரிகிறது.

என்ன கொழும்பில் ஆசிரியர் உட்பட 06 பேர் கடத்தல் 03பேர் கொலை எண்டும் ஒரு செய்தி போட்டிருக்கு.

ஜ.தே.க பிரதி தலைவராக பிறெமதாசாவின் மகன் நியமனம் என்றும் கிடக்கு ஆகவே வாழ்த்துகள்.

எடுத்தஉடனை என்ன வெட்டி விழுங்க இல்லை என்டோ கவலைபடுறியல் அவரப்படாதயுங்கொ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.