Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தல்! - காலங்கள் மாறும், காட்சிகள் மாறும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல்! - காலங்கள் மாறும், காட்சிகள் மாறும்!

முத்துக்குமார்

97ff21bc-0c6b-423a-925e-54014ea128761.jp

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வழங்கத் தொடங்கிவிட்டன. மாரிப் பருவநிலைபோல இரு தரப்பினதும் செல்வாக்குத் தளங்களும் நாள் தோறும் ஏறி இறங்குகின்றது. மைத்திரிபால சிறிசேனா களமிறக்கப்பட்டதும் மகிந்தர் ஆடிப்போய்விட்டார். எதிரி தனது கோட்டைக்குள் இருந்து வந்திருக்கிறார் என்பதுதான் அவர் ஆடிப்போனமைக்குக் காரணம். எனினும் சிறிய சேதாரங்களுடன் வியூகங்களை வகுத்து நிலைமைகளை ஒருவாறு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியுள்ளார் போல தெரிகின்றது. பலர் எதிர்த்தரப்பிற்கு மாறுவர் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இவரது கட்டுப்பாட்டு வியூகங்களினால் நிலைமை தணிக்கப்பட்டிருக்கின்றது. இத் தணிப்புக்கு சாம, பேத, தான, தண்டம் என்கின்ற எல்லாத் தந்திரோபாயங்களும் பின்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. எல்லோருடைய கோப்புகளும் என்கையில் உள்ளன என்ற பகிரங்க அறிவிப்புடன் வெளியேறப் போகின்றனர் என எதிர்பார்த்த அமைச்சர்களின் மூச்சுக்காற்றைக் காணமுடியவில்லை. கோப்புப் பயம் இல்லாதவர்கள் கூட புதிய கோப்பு தயாரிக்கப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனராம்.

மகிந்தர் கட்டம் கட்டமான வியூகங்களை நகர்த்தி வருகின்றார். முதலாம் கட்டத்தில் தனது தரப்பிலிருந்து எதிர்த்தரப்பிற்கு மாறக்கூடியவர்களை தடுத்து நிறுத்துவதிலேயே கவனம் செலுத்தினார். அதில் ஓரளவு வெற்றி கிடைத்தவுடன் தாக்குதல் யுத்தத்தினைத் தொடங்கியிருக்கின்றார். இந்தத் தாக்குதல் யுத்தத்தின் நோக்கம் எதிர்த்தரப்பினை தற்காப்புக்குள் தள்ளுவதே! இந்த இரண்டாவது யுத்தத்திலும் அவர் வெற்றிகண்டு வருகிறார் போலவே தெரிகின்றது. ஜனாதிபதியையும் படைத்தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த சதி முயற்சி, புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம், ரணிலின் அரசாங்கத்தை உருவாக்க மைத்திரி பகடைக்காய் ஆக்கப்பட்டுள்ளார் என்பனவே எதிரணி மீது ஆரம்பிக்கப்பட்ட வலிந்த தாக்குதலின் மைய விடயங்கள். எதிர்த்தரப்பின் மீது புலிச்சாயம் பூசியமை நன்றாகவே வேலைசெய்யத் தொடங்கிவிட்டது. எதிர்த்தரப்பு தம்மீது பூசப்பட்ட புலிச்சாயத்தைக் கழட்டும் தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. எதிர்த்தரப்பு தாக்குதல் யுத்தத்தினை நடாத்துவதற்கு சந்தர்ப்பங்களையே கொடுப்பதில்லை என்பதில் மகிந்தர் மிகக் கவனமாக உள்ளார் போல தெரிகின்றது.

தேவாரம் பாடி கூட்டம் தொடங்குவது போல எதிர்த்தரப்பினரும் மகிந்தரின் யுத்த வெற்றியையும், அபிவிருத்தியையும் பாராட்டி விட்டுத்தான் தமது பிரச்சாரத்தை தொடங்குகின்றனர். இங்குதான் எதிர்த்தரப்பின் மிகப் பெரிய பலவீனம் தெரிகின்றது. ஏனெனில் மகிந்தர் இவை இரண்டையும் தான் தனது பிரச்சாரத்திற்கு ஆதாரமாகக் கொள்கின்றார். எதிர்த்தரப்பு தங்களின் பக்கத்திற்கே பந்தினை அடிக்கின்றது.

கள நிலவரத்தின்படி ஆரம்பத்தில் மைத்திரியின் கை சற்று ஓங்கியிருந்தது என்பது உண்மைதான். ஆனால் கடந்த இரண்டு நாள் நிலவரத்தின்படி மைத்திரியின் நிலை சற்று சரிய மகிந்தரின் நிலை சற்று வளர்ந்திருக்கின்றது. வரும் ஒரு மாத களச்செயற்பாடுகள் தான் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும்.

மகிந்தர் என்ன தில்லுமுல்லுகளைச் செய்தாவது வெற்றி பெறவே முயற்சிப்பார். அதிகாரம் இல்லாமல் ஒரு நாள் இருப்பைக்கூட அவரால் நினைக்க முடியாது. அவருடைய பரிவாரங்களும் அதிகாரம் இருக்கும்வரை மட்டும் அவருடன் இருப்பர். அதிகாரம் இல்லாதபோது அடுத்த நாளே கழன்று விடுவர். ஏனெனில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கா குடும்பத்திற்கு உரியதே ஒழிய ராஜபக்ச குடும்பத்திற்குரியதல்ல.

இதைவிட ஆட்சிப்பீடம் எப்போதும் கொழும்பு மேட்டுக்குடியிடமும். கண்டி மேட்டுக்குடியிடமுமே இருந்தது. ஏனையவரிடம் இந்த ஆட்சிப்பீடம் செல்வதை இந்த மேட்டுக்குடிகள் அங்கீகரிப்பதில்லை. இதில் பிரேமதாசாவும் மகிந்த ராஜபக்சவும் விதிவிலக்கு. பிரேமதாசாவினால் வம்சாவழி ஆட்சியைத் தொடரமுடியவில்லை. மகிந்தரை போர் வெற்றி பாதுகாத்த போதும் எதிர்காலத்திலும் பாதுகாக்கும் எனக் கூறமுடியாது.

இன்று ராஜபக்ச கம்பனியை தொடர்ந்தும் ஆட்சிக் கட்டிலில் வைத்திருக்க வேண்டும் என்பதில் சீனாவும் அதன் கூட்டணி நாடுகளும் தீவிரமாக உள்ளன. இலங்கையில் சீன ஆதிக்கத்தை அகற்ற வேண்டுமாயின், ராஜபக்ச ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டிய தேவை இந்திய மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளுக்கு உள்ளது. அவ்வாறு ராஜபக்சவை அகற்றுவதென்பதிலுள்ள சவால்களை நன்றாகக் கணக்குப் போட்டே பொது எதிரணியின் உருவாக்கம் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினையும் இணைத்தே ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதில் மேற்குலகமும் இந்தியாவும் தெளிவாக இருந்தது. சர்வதேச இராஜதந்திரி ஒருவர் முன்னர் தமிழ் முக்கியஸ்தர் ஒருவரிடம் இதனை நேரடியாகவே கூறியிருந்தார்.

எதிரணிப் பொதுவேட்பாளராக மைத்திரி இந்த அடிப்படையிலேயே களமிறக்கப்பட்டார். இங்கே எதிரணியில் பல தரப்புக்கள் தங்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப ஒரு புள்ளியில் சந்தித்துள்ளன. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம், இந்தியா, சந்திரிகா தரப்பு, ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சி என்பன சந்தித்திருக்கின்றன. அமெரிக்காவினதும் இந்தியாவினதும் இலக்கு இலங்கையிலிருந்து சீனாவின் செல்வாக்கினை அகற்றுதல், சந்திரிகாவின் இலக்கு பறிபோன சிறீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் பண்டாரநாயக்க குடும்பத் தலைமையிடம் கொண்டு வருதல், ஹெல உறுமயவின் இலக்கு தனக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட பொதுபல சேனாவின் செல்வாக்கினை இல்லாதொழித்தலும், பேரினவாதத்தின் இருப்பினை சர்வதேச நெருக்கடிகளில் இருந்து பாதுகாத்தலும், ஐக்கிய தேசியக்கட்சியின் இலக்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுதல். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இலக்கு எதுவும் கிடையாது. இவ் அனைத்துத் தரப்பினரும் தமது இலக்கினை நிறைவேற்றுவதற்கு மகிந்தரை அகற்றுதல் என்கின்ற ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர். இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம், குறிப்பாக அமெரிக்கா. துணைத் தயாரிப்பாளர் இந்தியா. பிரதான இயக்குனர் சந்திரிகாதான். துணை இயக்குனர் சோபித தேரர். பிரதான நடிகர் மைத்திரி, கௌரவ நடிகர் ரணில், துணைநடிகர்கள் ஹெல உறுமய, ஜே.வி.பி வகையறாக்கள்.

97ff21bc-0c6b-423a-925e-54014ea128764.jp

மகிந்தரை அகற்றுவதற்கு மகிந்தரின் கோட்டையையும், அவரது இனவாதத் தேசியத்தையும் உடைக்க வேண்டும். இனவாதத்தை உடைப்பதற்கு ஹெலஉறுமய பங்காற்றியிருக்கின்றது. மகிந்தரின் அதிகாரக் கோட்டையை உடைப்பதற்கு மைத்திரிபால சிறீசேன பங்காற்றியிருக்கிறார். கதாநாயகன் கோட்டைக்குள்ளிருந்தும், யுத்த வெற்றிவாதத் தளத்திலிருந்தும் வரவேண்டும் என்பதற்காகவே சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறீசேனா களமிறக்கப்பட்டுள்ளார். பல சக்திகளதும் நீண்டகால கடின உழைப்பு ஆரம்ப வெற்றியைக் கொடுத்திருக்கின்றது. மத்தியதர வர்க்கத்தைக் கவரும் சுலோகங்களான நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு, 17வது திருத்தம் மீள அறிமுகப்படுத்தல் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன.

சிங்கள மத்தியதர வர்க்கம் பிரேமதாசா காலத்தைப்போல மகிந்தரை அகற்றும் செயல்திட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தது. அரசசார்பற்ற நிறுவனங்களும் சில ஊடகங்களும் இதற்குள் அடங்கும். குடும்பத்தினரிடம் அதிகாரக்குவிப்பும், இராணுவ இறுக்கமுமே இதற்குக் காரணம். ஆனாலும் அதற்கு தலைமை கொடுப்பதற்கு யுத்த வெற்றிவாத தளத்திலிருந்து ஒரு தலைவர் கிடைக்கவில்லை. தற்போது மைத்திரிபால சிறீசேன கிடைத்திருக்கின்றார்.

ஆரம்பத்தில் போட்டியாளர்களில் ஒருவர் மைத்திரி என்பது இரகசியமாக பேணப்பட்டது. அதன் மூலம் ராஜபக்ச கம்பனி உசாரடையாமல் காய்கள் நகர்த்தப்பட்டன. சோபித தேரர் ஒதுங்கிய பின் சந்திரிகா, கரு, ரணில் என மும்முனைப்போட்டி போன்று திசைதிருப்பல்கள் நடந்தேறின. அதிலும் ரணிலா? சந்திரிகாவா? என்ற தெரிவே அதிகமாக இருந்தது. வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக இல்லாது பொதுவேட்பாளராக அதுவும் யுத்த வெற்றிவாதத் தளத்திலிருந்து வந்த வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதில் திட்டம் வகுத்தவர்கள் தீவிரமாக இருந்தனர். தனக்கு வெற்றிவாத முகம் இல்லை என்பதனாலும், இயக்குநர் பாத்திரத்தை ஏற்க வேண்டியிருந்ததினாலும், பிள்ளைகளின் எதிர்ப்பினாலும் சந்திரிகா போட்டியிலிருந்து விலகுவதாக ஒரு தோற்றத்தைக் காட்டி மைத்திரியினை களம் இறக்கியிருக்கிறார்.

தயாரிப்பாளர்களான சர்வதேச சக்திகளின் தெரிவு வேறாக இருந்தாலும், ரணிலுக்கு தான் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதே விருப்பம். தானே பொதுவேட்பாளருக்கு பொருத்தமானவர் என சரத் பொன்சேகாவைக் கொண்டும், விக்கிரமபாகு கருணாநாயக்காவினைக் கொண்டும் அறிக்கை விடச் செய்தார். சரத் பொன்சேகாவை விட்டுவிடுவோம். விக்கிரபாகு ரணில்தான் பொருத்தமானவர் எனக் கூறுவதற்கு கிடைத்த மாக்சீய அகராதி எதுவெனத் தெரியவில்லை. ரணிலுக்கு பொதுவேட்பாளர் முகம் இல்லை என சந்திரிகா வற்புறுத்தினார். இதனால் அமெரிக்கா அழுத்தம் கொடுக்க ரணிலுக்கு பணிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

மைத்திரி களமிறங்கப் போகின்றார் என்ற செய்தி தேர்தல் அறிவிப்பு பத்திரத்தில் கையொப்பமிட்ட பின்னரே மகிந்தருக்கு கிடைத்தது. அவரை சமாதானம் செய்ய சகோதரர்களை அனுப்பியும் இயலாதபோது, கடைசி நேரத்தில் தானே நேரடியாக சமாதானம் செய்ய முன்வந்தார். இறுதியில அவரது முயற்சியும் கைகூடவில்லை.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=97ff21bc-0c6b-423a-925e-54014ea12876

பதவி போனால் போர்க்குற்றம் வரும் என்று மஹிந்த அஞ்சவில்லை. ஆனால் அனுதாபத்தை வெல்ல போர்க்குற்றம் தன் மேல் சுமத்துவார்கள் என்று பிரச்சாரம் செய்கிறா*. போர்க்குற்றம் கொண்டுவருவதற்கு எந்த நாட்டுக்கும் அக்கறையில்லை.
 
பதவி போனால் மஹிந்த அஞ்சுவது இதற்குத்தான். (பழிக்கு பழி)   :D  :D
 
 
Spoiler
 
sf-the-welikada-jail-colombo-telegraph.j
 
 
 
.

Edited by ஈசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.