Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச வளங்களை கொள்ளையிட்டோரை ஆணைக்குழு அமைத்து பிடிப்பேன் : மைத்­தி­ரி­பால

Featured Replies

maithiri%20&mahi_CI.jpg

எமக்கு எதி­ராக அடக்கு முறையை பிர­யோ­கிக்­க­வேண்டாம் என்று ஜனா­தி­ப­திக்கு கூறுகின்றோம். நீதிஇ நியா­ய­மான தேர்­த­லுக்கு தடைபோடா­தீர்கள். அவ்­வாறு தடை போட்டால் தேர்­தலை ஒரு பக்கம் வைத்­து­விட்டு மக்­களை அணி­தி­ரட்டி வீதியில் இறங்­கி­வி­டுவோம் என்­ப­தனை கூறு­கின்றோம். 

எனவே, எமது போராட்­டத்தை வேறு திசைக்கு மாற்ற முயற்­சிக்­க­வேண்டாம். உலகத்தில் இவ்­வா­றான உதா­ர­ணங்கள் இடம்­பெற்­றுள்­ளன என்று எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

நான் பத­விக்கு வந்து 100 நாட்­களில் முக்­கிய ஆணைக்­குழு ஒன்றை நிய­மித்து அரச வளங்­களை கொள்­ளை­ய­டித்­த­வர்­களை பிடிப்பேன். அவர்­களை சிக்­க­வைப்பேன் என்­ப­தனை உறு­தி­ய­ளிக்­கின்றேன். திரு­டர்­களை பிடிப்­போம என்று தலதா நகரில் உறு­தி­ய­ளிக்­கின்றேன். எனவும் அவர் குறிப்­பிட்டார்.

சில தின­ங­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி தன்­னுடன் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டையும் வேட்­பாளர் யார் என்று கூட்டம் ஒன்றில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார்.

ஆனால் அவ­ருடன் போட்­டி­யிட்டு வெற்­றிப்­பெ­றப்­போகும் அந்த வேட்­பாளர் அலரி மாளி­கையில் இருந்­தமை அவ­ருக்குத் தெரி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கண்­டியில் நேற்று நடை­பெற்ற பொது எதி­ர­ணியின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க, அதன் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, ஜாதிக ஹெல உறு­ம­யவின் செய­லாளர் சம்­பிக்க ரண­வக்க உள்­ளிட்ட கட்­சியின் பிர­மு­கர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான லக்ஸ்மன் கிரி­யெல்ல, ராஜித்த சேனா­ரட்ன, கரு ஜய­சூ­ரிய, அர்­ஜுன ரண­துங்க, ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் மனோ கணேசன், மௌபிம ஜனதாக் கட்­சியின் தலைவர் ஹேம குமார நாண­யக்­கார, முன்னாள் அமைச்சர் துமிந்த திசா­நா­யக்க உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டனர்.

இங்கு எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் கூறி­ய­தா­வது;

வேட்பு மனுத் தாக்கல் செய்­து­விட்டோம். முத­லா­வது பிர­சாரக் கூட்­டத்தை வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த கண்­டியில் ஆரம்­பிக்க கிடைத்­தமை பெரு மகிழ்ச்­சி­யாகும். வர­லாற்றில் இடம்­பெற்ற பாரிய போராட்­டங்­களில் மலை­யக மக்கள் பெரும் பங்­கெ­டுத்­துள்­ளனர். ஸ்ரீத­லதா மாளிகை உள்ள இந்த இடத்தில் நிற்­கின்­ற­போது கவ­லை­யா­க­வுள்­ளது.

நானும் பங்­கெ­டுத்த மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம் அம்­பாந்­தோட்­டையில் நான்கு தல வீதிகள் அமைத்­தது. ஆனால் கண்­டியில் அபி­வி­ருத்தி இல்லை. அபி­வி­ருத்தி குறித்து பேசு­கின்றோம். ஆனால் இங்கு அபி­வி­ருத்தி இல்லை. 

ஜனா­தி­பதி மாதம் ஒரு தடைவை தலதா மாளி­கைக்கு விஜயம் செய்து தேரரை சந்­திப்பார். ஆனால் கண்டி அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வில்லை. நாம் ஜன­வரி எட்டாம் திகதி அமைக்கும் அர­சாங்கம் வர­லாற்று ரீதி­யா­னது.

கடந்த காலங்­களில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டுமா என்று கேட்­டனர். மூன்று மாதங்­களில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்க நட­வ­டிக்கை எடுப்பேன் என்று தலதா நகரில் உறு­தி­ய­ளிக்­கின்றேன். பத­விக்கு வந்து 100 நாட்­க­ளுக்குள் முக்­கிய ஆணைக்­குழு ஒன்றை நிய­மித்து அரச வளங்­களை கொள்­ளை­ய­டித்­த­வர்­களை பிடிப்போம் என்­ப­தனை உறு­தி­ய­ளிக்­கின்றேன்.

திரு­டர்­களை பிடிப்போம்

அர­சாங்க அபி­வி­ருத்தி திட்­ட­மி­டலில் மூன்றில் ஒரு பங்கு அர­சாங்­கத்­தினால் திரு­டப்­ப­டு­கின்­றது. அதனை அனு­திக்க முடி­யாது. அரச ஊழி­யர்கள் தனியார் ஊழி­யர்கள் கஷ்­டப்­ப­டு­கின்­றனர். கொள்­ளை­ய­டித்­தலை நிறுத்­தினால் அர­சாங்கம் மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கலாம். 

சுங்கத் திணைக்­க­ளத்தை சுத்­தப்­ப­டுத்­தினால் மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கலாம். உள்­நாட்டு இறை­வரி திணைக்­க­ளத்தை செயற்­தி­ற­னாக செயற்­ப­டுத்­தினால் மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கலாம்.

அர­சாங்­கத்தின் திருட்டை நிறுத்­தினால் அவற்றை செய்­யலாம். அர­சாங்கம் தற்­போது மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழ­ங­கு­கின்­றது. அரச வெளிக்­கள அதி­கா­ரி­க­ளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்­கி­னார்கள். 

அதற்கு 50000 ரூபா பெற்­றனர். எமது அர­சாங்­கத்தின் 100 நாள் திட்­டத்தில் அந்த 50000 ரூபாவை திருப்பிக் கொடுத்­து­வி­டுவேன்.

பட்­ட­தா­ரி­க­ளுக்கு சிறந்த கௌரவம் வழங்­கப்­படும். எமது அர­சாங்­கத்தில் அரச ஊழியர் பக்­க­சார்­பாக அன்றி சிறப்­பாக செயற்­பட நட­வ­டிக்கை எடுப்போம்.

சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்­தலை உறு­தி­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்போம். பக்­கச்­சார்­பன்றி செயற்­பட ஷிராணி பண்­டா­ர­நா­யக்க முற்­பட்­டதால் அவரை பதவி விலக்­கினார். நாங்கள் அவற்றை வேத­னை­யுடன் பார்த்­துக்­கொண்­டி­ருந்தோம்.

எனவே ஜனா­தி­ப­தியோ பிர­த­மரோ கைய­டிக்க முடி­யாத சட்­டத்தின் ஆட்­சி­ப­டுத்­தலை நான் உரு­வாக்­குவேன். எமது அனைத்து கட்சி அர­சாங்­கத்தில் இந்த நிலையை உரு­வாக்­குவேன். நான் தயா­ரித்த மருந்து சட்­ட­மூலம் காணாமல் போனது. மருந்து நிறு­வ­னங்கள் இதில் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன.

ஜனா­தி­பதி சிரிக்­கிறார். பிள்­ளைளை தூக்­கு­கின்றார். அபி­வி­ருத்தி செய்­கின்றார். ஆனால் அவை எல்லாம் வற்­றையும் தாண்டி பாரிய விட­யங்கள் இடம்­பெ­று­கின்­றன.

இந்த அர­சாங்கம் வளங்­களை கொள்­ளை­ய­டிக்­கின்­றது. இதனை மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். நான் நாட்டின் தலை­வ­ராக வந்த பின்னர் அனைத்துக் கட்­சி­களும் அடங்­கிய தேசிய அர­சாங்­கத்தை அமைப்போம். நாட்டில் 100 நாட்­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­துவோம். 

புதிய அர­சியல் கலா­சா­ரத்தை அமைப்போம். என்னை பொது வேட்­பா­ள­ராக கொண்­டு­வ­ரு­வ­தற்­காக ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க பாரிய தியா­கத்தை செய்­துள்ளார். அதனை நான் மறக்­க­மாட்டேன். நான் அந்த நன்­றியை மறக்­க­மாட்டேன்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி தன்­னுடன் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டையும் வேட்­பாளர் யார் என்று கூட்டம் ஒன்றில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார்.

ஆனால் அவ­ருடன் போட்­டி­யிட்டு வெற்­றிப்­பெ­றப்­போகும் அந்த வேட்­பாளர் அலரி மாளி­கையில் இருந்­தமை அவ­ருக்குத் தெரி­யாது.

வெற்­றி­பெ­றவே முடி­யாது

தற்­போது ஜனா­தி­பதி எப்­ப­டி­யா­வது என்ன செய்­தா­வது வெற்­றி­பெ­றுவார் என்று அர­சாங்க அமைச்­சர்கள் கூறு­கின்­றனர். ஆனால் ஒன்றைக் கூறு­கின்றோம். எப்­ப­டியும் உங்­களால் வெற்­றி­பெற முடி­யாது. நாங்கள் மக்கள் ஆத­ர­வுடன் வெற்­றி­பெ­று­வத எவ­ராலும் தடுக்க முடி­யாது. மக்­களின் பலம் எம்­மிடம் உள்­ளது. நாங்கள் ஜன­நா­யக அர­சாங்­கத்தை அமைப்போம். மக்கள் வாத அர­சாங்­கத்தை அமைப்போம்.

ஜனா­தி­ப­தி­யுடன் போட்­டி­யிட உங்­க­ளுக்கு பய­மில்­லையா என்று சிலர் என­னிடம் கேட்­கின்­றனர். நான் ஏன் என்று கேட்டேன். ஒருவர் சபா­நா­யகர், ஒருவர் ஜனா­தி­பதி, ஒருவர் பாது­காப்புச் செய­லாளர், மற்­றொ­ருவர் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர், மற்­றவர் கதிர்­கா­மத்தின் நில­மே­யாக இருக்­கின்­றார்கள். 

ஆனால் யாருக்கும் நான் பய­மில்லை. பயந்­து­கொண்டு இந்த போராட்­டத்­துக்கு வர­வில்லை. பயந்­து­கொண்டு வாழ்­வ­தை­விட ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்­காக உயிர் தியாகம் செய்ய தயா­ரா­கி­விட்டோம்.

எம்­மீது அடக்கு முறையை ஆரம்­பித்­து­விட்­டனர். மேலும் செய்வார்கள். அரச வளங்களை பயன்படுத்தி எம்மீது அடக்குமுறை வரும். ஆனால் எமக்கு எதிராக அடக்கு முறையை கொண்டுவரவேண்டாம் என்று ஜனாதிபதிக்கு கூறுகின்றோம். நீதி மற்றும் நியாயமான தேர்தலுக்கு தடை போடாதீர்கள். 

அவ்வாறு தடை செய்தால் தேர்தலை ஒரு பக்கம் வைத்துவிட்டு மக்களை அணிதிரட்டி வீதியில் இறங்கிவிடுவோம் என்பதனை கூறுகின்றோம். எனவே எமது போராட்டத்தை வேறு திசைக்கு மாற்ற முயற்சிக்கவேண்டாம். 

உலகத்தில் இவ்வாறான உதாரணங்கள் இருந்துள்ளன. அடக்கு முறைகளுக்கு தலைகுனிய மாட்டோம். எமது தேர்தல் வெற்றி உறுதியாகிவிட்டது. நாங்கள் செய்துள்ள கணக்கெடுப்பின்படி நாங்கள் 65 வீதத்தினால் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது என்றார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114330/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் தானாகவே ஜெயிலுக்கு நடந்து போவீங்களா ?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.