Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச ஊடகத்தில் நிமிடத்திற்கு நிமிடம் வட கிழக்கு மக்களின் மனக்காயங்களை கிளறும் யுத்த விளம்பரம்

Featured Replies

 
இலங்கை அரசின் ஊத்தியோகபூர்வத் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட அரச ஊடகங்களில் யுத்தம் ஓர் விளம்பரமாக காண்பிக்கப்படுகின்றது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த விளம்பரக் கட்சி ஒளிபரப்பாகின்றது என்றும் இதனைப் பார்க்கும் வடகிழக்கு மக்கள் பதறுவதாகவும் எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். 
 
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தின் சூடுபிடித்துள்ள நிலையில் தன்னை எப்படியாவது வெல்ல வைக்க வேண்டும் என்ற நோக்கில் அரச வளங்களை தீவிரமாகப் பயன்படுத்தி வரும் இலங்கை ஜனாதிபதி தனது தேர்தல் தேவைகளுக்காக அரச ஊடகத்தை அதிகமாக பயன்படுத்துகின்றார். 
 
அரச தொலைக்காட்சிகளில் யுத்த விளம்பரம் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பப்டுகின்றது. யுத்தத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி என்ற தோரணையில் ஒளிபரப்பாகும் இந்த விளம்பரம் தொடர்ந்தும் பயங்கரவாதத்தை முறியடிக்கவும் அபிவிருத்தியை முன்னெடுக்கவும் மகிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு அமைகிறது. 
 
குறித்த விளம்பரத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற சில காட்சிகள் வீர சாகசமாக காண்பிக்கப்படுகின்றது. இராணுவத்தினர் யுத்த ஆயுதங்களால் தாக்;குதல் நடத்துவது படை நடைவடிக்கையில் ஈடுபடுவது மக்கள் சரணடைவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெறுகின்றன. 
 
அத்துடன் யுத்தம் முடிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிநாடு ஒன்றிலிருந்து கொழும்பு வந்திறங்கி மண்ணை முத்தமிட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகளுடன் அந்த விளம்பரம் நிறைவடைகிறது. இது தமிழர்களை தோற்கடித்த யுத்தத்தை காட்டி வாக்கு கேட்கும் வித்தில அமைந்ததுள்ளது. 
 
இவற்றைப் பார்க்கும்போது தங்கள் மறக்க நினைத்தும் மறக்க முடியாது மனதை வலிக்கச் செய்யும் யுத்த நாட்களான முள்ளிவாய்க்காலுக்கு தங்கள் மனங்கள் செல்வதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். அந்தக் கட்சிகள் நினைவிலும் கனவிலும் தம்மை தொந்தரவு செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 
 
இவ்வாறான விளம்பரங்கள் இனக்காயத்திற்கு உ;ளளான மக்களை மேலும் நோகடிக்கும் நடவடிக்கை என குறிப்பிடு;ம் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இதனை இலங்கை அரசாங்கம் வெளியிடுவது இனவாத ரீதியான ஓர் ஆதாயத்தையே தேடும் நோக்கம் கொண்டது எனவும் விபரித்தார். 
 
தமிழர்களின் மனக்காயங்களை ஆற்றத் தவறிய அரசாங்கம் தொடர்ந்தும் மேலும் புதிய காயங்களை உருவாக்கும் விதத்திலும் சிங்கள மக்களுக்கு யுத்த வெற்றி என்ற ஒற்றைப்படையான பார்வையை உருவாக்கும் விதமாகவும் ஒளிபரப்பபட்டும் இந்த விளம்பரம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 
 
  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களின் மனங்களில் காயங்களை ஏற்படுத்தக்கூடிய தொலைக்காட்சிகள் உள்ளிட்ட அரச ஊடகங்களில் காண்பிக்கப்படுபவற்றை இலங்கை அரசின் ஊத்தியோகபூர்வமற்ற ஏனைய தமிழ் ஊடகங்கள் மறுபதிவு செய்யாதிருந்தாலே பெருமளவு தமிழர்கள் மனங்கள், காயத்திற்குள்ளாவதைத் தடுக்கமுடியும். இந்தப் பதிவை நான் பார்த்திராது இருந்திருந்தால் என் மனதின் காயம் மீண்டும் கிளறப்பட வாய்ப்பு இருந்திருக்காது.
 
எல்லாமும் எல்லோரும் அறிந்திராது, சிலரே அறிந்திருந்த காலத்தில் மனிதர்களுக்கு உடற்காயங்களே அதிகம். எல்லாமும் எல்லோரும் அறியக்கூடியவாறு அனைவரும் அறிவியலில் வளர்ந்திருக்கும் இக்காலத்தில் மனக்காயங்களே அதிகம்.
 
உடற்காயங்கள் போற்றுவதற்கும் உட்படுகிறது. மனக்காயங்கள் மனிதவாழ்வையே சிதைத்து அழித்துவிடும் ஆபத்தான தன்மைக்கும் உட்படுகிறது. 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.