Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கின் இணைப்பு;நீக்கம் செயலும் அதன் விளைவுகளும் பற

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கின் இணைப்பு நீக்கம்; செயலும் அதன் விளைவுகளும் பற்றிய ஓர் நோக்கு

-பீஷ்மர்

தென்கிழக்கு முஸ்லிம் கோரிக்கையின் எதிர்காலம் யாது?

* பிரிக்கப்படும் வடக்கு கிழக்கில் நிர்வாக இயந்திரங்கள் யாவை?

வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பானது இலங்கையின் சட்ட நிலைப்படி செல்லாது என்பதனை ஐவரைக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர் குழு தீர்மானித்துள்ளது. இலங்கையின் நீதியமைப்பில் ஆட்சியாப்பு விடயங்கள் பற்றி தீர்மானிப்பதற்கென ஒரு குறிப்பிட்ட நீதிமன்று இல்லையெனினும், நமது உச்ச நீதிமன்றம் இந்நாட்டின் மிக உயர் நீதிமன்றம் என்ற வகையில் இதுபற்றிய வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பது அதன் இயல்பான கடமையே என்று கூறப்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்புக் குறிப்பில் அது இவ்விடயத்தினை இலங்கையின் சட்ட அமைப்பு முறைமைக்குள் நின்று பார்த்துள்ளது என்பது தெளிவாகின்றது.

18 வருட காலமாக அரசியல் யதார்த்தமாக விளங்கிவந்த ஒரு அரசியல் நிர்வாக நடைமுறையானது இப்பொழுது சட்டமுறைமை ஒழுங்குகள் வராதது என்பதற்காக நீக்கப்படுகின்ற பொழுது ஒரு முக்கிய உண்மையொன்று புலனாகின்றது. அதாவது இலங்கையினது ஒட்டுமொத்தமான அமைவு முறைமையானது இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையினர் அல்லாத ஒரு பகுதியினருக்கு எவ்வித விசேட இடத்தையும் கொடுக்க இணங்காது என்பதேயாகும். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி எதுவும் நோக்காமல் இது ஒரு சட்டப் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டிருப்பது மிக முக்கியமானதொன்றாகும். இந்த விடயம் பற்றி நோக்கும் பொழுது ஒரு முக்கியமான அவதானிப்பு அவசியமாகின்றது.

இலங்கையின் அரசியல் நிலைப்பட்ட குறிப்பாக தமிழர் நிலைப்பட்ட அரசியல் போக்குகளை அரசியல் ரீதியாக விரும்பாதவர்கள்- எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தினை நாடுகின்றனர் என்பது கடற்கோள் நிவாரண உதவி நிறுத்துகையின் பொழுது தெரியவந்ததாகும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அரசாங்கம் கடல்கோளுக்கான நிவாரண உதவிகளை வழங்கக்கூடாது என்ற ஜே.வி.பி.யின் எதிர்ப்புக் காரணமாக அது நீதிமன்றம் மூலமாக இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இது வரையில் அந்த வழக்கு வரன்முறையான விசாரணைக்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை எனலாம்.

எனவே தான், மேலே சொன்ன கூற்று இலங்கையின் ஒட்டுமொத்த அமைப்பு சிங்களவர் அல்லாத தேசிய இனங்களுக்கு `இடங்கள் வழங்குவதற்கு இடங்கொடாது' இந்த நீதிமன்ற தீர்ப்பினையடுத்து எடுக்கப்பட வேண்டிய நிர்வாக நடவடிக்கைகள் பற்றி இன்னும் எதுவும் தெளிவாகவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இது பற்றி பாராளுமன்றத்தில் கவனத்தை ஈர்க்க முயன்ற நடவடிக்கைகளும் நவம்பர் 7 ஆம் திகதிவரை பின் போடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு யார், எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிர்வாக நடைமுறை உண்மையில் நமக்குத் தெரியவில்லை. ஆனால், அது நிச்சயமாக நடைபெற்றேயாக வேண்டும்.

ஜனாதிபதி இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என்பதும் தெரியவில்லை. ஏனெனில் அரசின் பிரதான உத்தியோகத்தர் என்கின்ற வகையில் இவரிடத்தேயே நீதி, நிர்வாக கடமைகள் உள்ளன. ஆயினும் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு மீண்டும் ஒரு மேல்முறையீடு உண்டா? அதாவது இத்தீர்ப்பினை மீளாய்வு செய்ய முடியுமா என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில் இந்த இணைப்பு நீக்கத்தின் விளைவுகள் பற்றி சிந்திப்பது தவறாகாது.

அதன் விளைவுகள் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பின்புலம் பற்றி நினைவு கூருவது பொருத்தமானதே.

1949 இல் தோற்றுவிக்கப்பெற்ற தமிழரசுக் கட்சி இலங்கை அரசியலில் முதன்முறையாக இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் இருப்புக்கான ஒரு புவியியல் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியது. தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களையும் தமிழர்களையும் இணைக்கின்ற வகையில் `தமிழ் பேசும் மக்கள்' என்ற ஓர் அரசியல் எண்ணக்கருவினை எடுத்துக்கூறி அத்தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசமென வடக்கு, கிழக்கை இனங்காட்டியது. அதாவது தமிழ் மொழிக்கான ஒரு உத்தியோக அந்தஸ்து இலங்கையின் வேறெந்த பாகங்களிலும் கொடுக்கப்பட முடியாவிட்டாலும் அவர்கள் தமது பாரம்பரியமான வாழ்விடத்தில் அதனைப் பெற வேண்டும் என்பதே நிலைப்பாடாகும்.

1959 இல் ஏற்பட்ட பண்டாராநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் வட, கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது. பிக்குகளின் அழுத்தம் காரணமாக அது கிழித்தெறியப்பட்டது. எனினும், அன்றைய நிலையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.