Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடன் வெற்றியை அடுத்து பாகிஸ்தான் வீரர்கள் அநாகரீக நடவடிக்கை, விசாரணைக்கு உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

201412141054489078_FIH-orders-inquiry-in

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியாவுடனான போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை நோக்கி ஆபாசமாக கத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது.

8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2–வது அரை இறுதிப்போட்டியில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். இருப்பினும்,  இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3–4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. இதனையடுத்து வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள் மகிழ்ச்சியில் நடனம் ஆடினர்.

  

தங்களது டிசர்ட்டை களைந்து ஆட்டம் போட்ட பாகிஸ்தான் வீரர்கள், ஆபாசமான வார்த்தைகளை சத்தம்போட்டு கத்தினர். கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை நோக்கி ஆபாச சைகைகள் காண்பித்தனர். பின்னர் அவர்களை அந்நாட்டு பயிற்சியாளர் ஷானாஸ் வந்து அழைத்து சென்றார். பாகிஸ்தான் வீரர்களின் அநாகரீக நடத்தைக்கு சர்வதேச ஆக்கி கூட்டமைப்பிடம் ஷானாஸ் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே சாம்பியன்ஸ் கோப்பை இயக்குநர் தோயெர் பாகிஸ்தான் குழுவிடம் பேசினார். சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக கூறினார். 

இதுதொடர்பாக சாம்பியன்ஸ் கோப்பை இயக்குநர் தோயெர் பேசுகையில், “பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாட்டத்தின் போது சில அநாகரீக நடவடிக்கை தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது, சாம்பியன்ஸ் கோப்பை இயக்குநர் என்றமுறையின் எனது தலைமையில் விசாரணை நடத்தப்படும். இவ்விவகாரம் தொடர்பாக நான் பாகிஸ்தான் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ஷானாஸ் ஷேக்கிடம் பேசினேன். பாகிஸ்தான் வீரர்களின் நடத்தை சர்வதேச ஆக்கி கூட்டமைப்பின் நடத்தையை மீறியதாக இருந்தது என்று கூறினேன். பாகிஸ்தான் வீரர்களின் நடத்தை பெரும் கவலையை ஏற்படுத்தியது. 

அநாகரீக நடத்தையில் ஈடுபட்ட குறிப்பிட்ட ஒருவீரர் என்பதை கண்டுபிடிக்க கடினமாக உள்ளது, வீரர்கள் நடத்தை தொடர்பாக அவர்கள் எதிர்வினையை எதிர்க்கொள்ள சாத்தியம் உள்ளது. ஷானாஸ் ஷேக் வீரர்களின் நடத்தைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்று உறுதி அளித்துள்ளார். இந்த விஷயத்தில் உத்தரவாதத்துடன் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முடிவு செய்துள்ளேன்." என்றார். பாகிஸ்தான் வீரர்களின் சைகைகள் மைதானத்தில் இருந்த ஒவ்வொரு நபரையும் ஆத்திரம் அடைய செய்தது.

போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் ஷானாஸ், தனது வீரர்களின் நடவடிக்கைக்கு ஊடகங்கள் மத்தியில் இருந்த கடும் கோபத்தை உணர்ந்தார். ஆனால் அவர் வெறுமனே மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுவிட்டார். இப்பிரச்சனையில் பயிற்சியாளர் ஷானாஸை பொறுத்தவரை பிரச்சினையை தீர்க்க மன்னிப்பு மட்டுமே போதுமானதாக இருந்தது. அவர் பேசுகையில்,  "நான் அரசியல்வாதியில்லை, விளையாட்டாளர், நான் இதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டேன். அவர்கள் இளைஞர்கள் உற்சாகத்தினால் தவறினை செய்துவிட்டனர். இதுபோதும் என்று நினைக்கிறேன்." என்று மிகவும் எளிதாக கூறிவிட்டு செய்தியாளர்களை விட்டு விலகி சென்றுவிட்டார். 

இந்திய ஆக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் வெற்றி கொண்டாட்ட முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். "அதிக குடும்பத்தினர் விளையாட்டினை பார்க்க வந்திருந்தனர், பாகிஸ்தான் வீரர்களின் நடத்தை சரியானதாக படவில்லை. வெற்றி பெற்றதையடுத்து அவர்களுடைய கொண்டாட்டம் ஏற்றுக் கொள்ளதக்கது இல்லை. அவர்களது வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். ஆனால் டிசர்ட்டை களைந்து, ஆபாசமான சைகைகளை காட்டி அவர்கள் வெற்றியை கொண்டாடியது சரியானது இல்லை. இது மிகவும் தவறான செய்தியை அனுப்புகிறது." என்று சர்தார் சிங் கூறினார். 

 

 

 

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பாக். வீரர்கள் நடுவிரலை காட்டி திமிர்தனம்

1pxdw3.jpg

புவனேஸ்வர்: புவனேஸ்வரில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தில் சட்டையை கழற்றி, அசிங்கமான செயல்களில் ஈடுபட்டனர். சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதிப் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் இந்திய அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

 

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியாவை வீழ்த்திய பாக். வீரர்கள் நடுவிரலை காட்டி திமிர்தனம் போட்டியை வென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தில் தங்களின் சட்டையை கழற்றி சுற்றினர். மேலும் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டியதுடன், அசிங்கமாக திட்டினர். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் அணி வீரர்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் ஷெனாஸ் ஷேக் செய்த முயற்சி தோல்வி அடைந்தது. அணி வீரர்களின் நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்குமாறு செய்தியாளர்கள் ஷேக்கிடம் கேட்டனர்.

 

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியாவை வீழ்த்திய பாக். வீரர்கள் நடுவிரலை காட்டி திமிர்தனம் அதற்கு அவர் கூறுகையில், நடந்த சம்பவத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் குழந்தைகள் போன்று நடந்து கொண்டனர். நான் என்ன செய்ய முடியும் என்றார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/hockey-pak-players-remove-shirt-hurl-obscene-gestures-after-win-216947.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.