Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரா சமாதானமா....??? இறுதி எச்சரிக்கை....''

Featured Replies

'' போரா சமாதானமா....??? இறுதி எச்சரிக்கை....''

இதுவரை காலமும் யுத்தம் நடாத்தி கொண்டு இருந்த மகிந்தா அரசு

தற்போது பேச்சு வார்த்தைக்கு உடன் பட்டுள்ளது.

உலக நாடுகளின் அளுங்கு பிடி அழுத்தத்தின் காரணமாக

அதற்கு இணங்கி உள்ளது.

ஏன் அரசு பேச்சுக்கு போகிறது....???

என்ன பேச போகிறது....???

நிபந்தனையற்ற பேச்சில் எது பற்றி விவாதிக்கப்பட போகிறது....???

என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது....??

கடந்த ஜெனிவா ஒன்றில் சொல்லப்பட்ட பேசப்பட்ட எந்தவொரு

உடன்பாட்டையும் இலங்னைக அரசு நடைமுறைப்படுத்தவில்லை

மாறாக மீண்டும் பாரிய நில ஆக்கரமிப்பும் நாளந்தம் படுகொலையும் காணமல் போவதும்

தான் நடைபெற்று கொண்டு இருக்கிகிறது.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மீண்டும் புலிகள் ஏன் நிபந்தனையற்ற

பேச்சுக்கு உடன் பட்டு போனார்கள் ...???

முதவலாவது சுற்றில் பேசப்பட்ட விடயங்களை நடைமுறை படுத்தினால் மட்டுமே

அடுத்த பேச்சை பற்றி சிந்திக்கலாம் என முழங்கி புலிகள் இன்று போனது ஏன்...???

இதில் தான் புலிகளின் இராஜதந்திரம் தங்கி உள்ளது .

இதுவரை காலமும் ஆட்சி எறிய எந்தவொரு அரசும் தமிழ் மக்களின்

பிரச்சனையின் நியாய பாட்டை புரிந்து கொள்ளாமால்

அந்த மக்கள் மீது கொடிய போரை தினித்து அந்த மக்களை

அழிக்கின்ற நிகழ்வுகளை தான் நடந்தேற்றி வந்துள்ளது.

அந்த இடத்தில் தற்போதைய அரச பீடம் மிகவும் தீவிரமாய்

செயல் பட்டு வந்தது வருகிறது.

எனவேதான் இந்த அரசுகளின் போலி முக மூடிகளை சர்வதேசத்தின் மீது

தோலுரித்து காட்டுவதற்கும்.

அதேவேளை தாங்கள் மகிந்தாவிற்கு அளிக்கும் இது இறுதி சந்தர்பமாகவும்

இதை புலிகள் தற்போது வழங்கி உள்ளார்கள்.

புலிகள் வரைந்த நிகழ்ச்சி நிரலின் இறுதி அத்தியாயமாக

இந்த சுற்று அமைய போகிறது என்பது nதிரிகிறது..

இங்கு விவாதிக்கப் போகின்ற விடயங்களாக எது இருக்கப் போகிறது....???

மக்களுடய வாழ்வாதார பிரச்சினைகள்.

பாதுகாப்பு. பொருளாதார தடைகள்.

கற்றல் செயற்பாடுகள். புலம்பெயர் .இராணுவ அழுத்தம். என..பல

சூடு பிடிக்கும் விவாதங்களாக கோரிக்கைகளாக அமைய போகிறது...

உடன் படிக்கையில் கூறப்பட்டுள்ளது போல அரசு செயல்பட வேண்டும் என புலிகள்

வலியுறுத்துவார்கள்.

அதை அரசும் ஏற்று கொண்டேயாக வேண்டும்.

அதற்கு மதிப்பளிக்கின்ற பட்சத்தில் தான் சூமுகமாக தொடர்ந்து

அவ் நிகழ்வை நகர்தி செல்ல முடியும்.

ஆனால் இதற்கு அரசு சம்மதிக்குமா....???

நிச்சயமாக இல்லை...

அடுத்து இந்த பேச்சு வார்த்தையை முன் கொண்டு

நகர்த்த முடியா நிலைக்கு அண்மையில் நீதி மன்றம் போட்ட தீர்ப்பு

பெரும் சச்சைகுள்ளானுதும் இந்த பேச்சுக்கு நெருக்கடியையும் கொடுத்துள்ளது....

எனவே இதை நீக்காமல் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது

அப்படியானால் அந்த யாப்பு முறையை மாற்ற வேண்டும்.

அப்படி செய்தால் தான் இது சாத்தியமாகும்

அதை இந்த அரசு செய்யுமா....???

செய்ய முடியும் ஏனெனில் தற்போது இரு கட்சிகளின் கூட்டு பலமாக

இருக்கிறது அந்த வகையில் இது சாத்தியமே ஆனால் அரச செய்யுமா....??

அரசு தான் பாரிய யுத்த மீறலை செய்யதுள்ளது.

இதை புலிகள் ஆதார hPதியாக தெரிய படுத்துவார்

முன்பு புலிகளை குற்றம் சாட்டிய அரசு இப்போ

என்ன செய்ய போகிறது....???

பாதையை மூடியது....

தடைகளை போட்டது

ஊரடங்கை பிறப்பித்து மக்களது இயல்பு வாழ்வை

குலைத்தது....

கற்றல் செயலை முடக்கியது என பரந்து விரிந்து செல்கிறது...

இப்போ குற்றவாளிய் இலங்கை அரசு....

பட்டறைகள் போட்டு பயிற்சி எடுத்து அரச பிரதிநிதிகள் தாயாராகினர்

ஆனால் புலிகள் மிகவும் மௌனமாகவும் அதேவேளை ஒரு மாறுதலையும்

செய்தனர்...

வழமையாக தலைமை தாங்கி செயற்பட்ட ஆலோசகர்

தற்போது இந்த பேச்சு மேசையில் கலந்து கொள்ளாதது ஏன்....???

உருத்திர குமார் தலைமை வகிக்க வேண்டியதின் சூத்திரம் என்ன....???

இங்கு தான் நாம் என்ன பிரச்சனை தலை தூக்க போகிறது என்பதை

கவனிக்க வேண்டும்....

புலிகள் மீதான தடைகள் அந்த தீர்வுக்கு எதிராக போடப்பட்ட

விலங்குகள். அண்மையில் நடந்தேறிய கைதுகள் என்பனவற்றை

அரசு நிச்சயமாக மேசைக்கு கொண்டு வந்து பேச்சாளர்களை திசை

திருப்பும் நடவடிக்கைளில் இறங்கும்.

அதற்குள் புலிகளை சிக்க வைக்க முயற்சிக்கும் இதை உடைத்தெறிய வேண்டும்

அதுமட்டுமல்லாது பாலவே பேச்சை குளப்புகிறார் என அருசு குற்றம் சுமத்தி வந்ததாகவும்

சொல்லப் படுகிறது..

அதற்கமைவாக ஒரு மாறுதலையும் .

அதே வேளை புலிகள் நம்பிக்கையற்ற நிலையிலும்

இதில் பங்கெடுக்கின்றனர்.

ஏனெனில் கடந்த பேச்சு இவற்றுக்கு சான்று பகிர்கின்றன.

எல்லாத்துக்கும் ஒரு இறுதி தீர்வாகவும் எச்சரிக்கையாகவும்

மகிந்தாவிற்கு புலிகள் வழங்கிய அவகாசத்தின் இறுதி

நிகழ்வாகவும் இது அமைகிறது .

உலகிற்கு தங்கள் நிலை பாட்டை தெழிவாக எடுத்துரைக்ககின்ற

ராஜதந்திர பேச்சாகவும். இதை அந்த நாடுகளே செய்தார்கள் என்றும்

இதனாலயே இந்தளவு பின் தங்கல் பேச்சுக்கு வந்ததென்றும்

புலிகள் பறை சாற்ற போகிறார்கள்.

அதுவே தான் உண்மையும் கூட...

எனவே இதிலே அரசு க்கு புலிகள் இறுதி சந்தர்பம்

வழங்கி உள்ளார்கள். அரசு மனமாறி நல்லென்னத்துடன்

இந்த இனப்பிரச்சிளையில் அக்கறை கொண்டு செயல் படுமாயின்

இந்த இறுதி அத்தியாயத்தில் நல்ல தீர்வை காண முடியும்...

இல்லை எனின் இலங்கையில் மீண்டும் ஒரு பாரிய இரத்த ஆறு

ஓடுவதை தவிர்க்க முடியாது....

எனவே அரசு தான் முடிவெடுக்க வேண்டும் ''போரா சமாதானமா என்பதை....''

நன்றி

-வன்னி மைந்தன்-

:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவம்பர் 27 இற்கு இது ஒரு எதிர்வு கூறலா?

http://www.thenee.ca/artical/sub_48.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.