Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாடம் கற்றுத்தந்த தொடரும் தாக்குதல

Featured Replies

தமிழர் தாயகத்திலும் தமிழர் தாயகத்துக்கு அப்பால் சிங்களவர் பிரதேசத்திலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த ஒரு ஆய்வை இந்த கட்டுரை விவரிக்கிறது.

விசாரணை ஆணைக்குழுக்கள் மூலம் சிறிலங்கா அரசால் படைத்தரப்பு அழிவுகளை தடுக்க முடியாது. இதுவரையான சிறிலங்காவின் இராணுவ வெற்றிகளும் தோல்விகளும் இதனை உறுதிப்படுத்தும்.

வட போர்முனைப் படுதோல்வி- திகம்பத்தனையில் கடற்படையினருக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவு- காலி கடற்படைத்தளத்தில் ஏற்பட்ட பேரழிவு- கிபீர் விமானம் வீழ்ச்சி என்பன சிறிலங்கா அரசுக்கு பெரும் சிக்கலை கொடுத்துள்ளன.

வட போர்முனையில் கடைசியாக சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை 600 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

20061025002-1.jpg

சிறிலங்கா இராணுவத்தரப்பு தகவலாக இதனை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

தாக்குதலில் 138 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்றும் அது தெரிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் 134 பேர் கொல்லப்பட்டதாகவே முதலில் தகவல் வெளியிட்டு வந்துள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த படையினரில் 283 பேர் இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளனர்.

இந்த தாக்குதலில் இராணுவத்தின் 4 ஆவது கெமுனு வோட்ச்- 1 ஆவது விஜயபாகு- 6 ஆவது கஜபாகு ஆகிய பட்டாலியன்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

அச்சமடைய வைக்கும் அளவு மோசமான இழப்பை அவை சந்தித்துள்ளன என்று கொழும்பு இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் கடும் சேதங்களை சந்தித்து 53-3 எயார் மொபைல் பிரிகேட் தளபதியாக புதிதாக பிரிகேடியர் சிறிநாத் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியிலிருந்த பிரிகேடியர் சமந்த சூர்ய பண்டார கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இத்தாக்குதலில் சேதமான 55 ஆவது டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ணா கிழக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

55 ஆவது டிவிசன் தளபதியாக பிரிகேடியர் கமல் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைவிட காலி கடற்படைத்தள தாக்குதலையடுத்து காலி "தக்சினா" கடற்படைத்தளத்தின் தளபதி இடம் மாற்றப்பட்டார்.

சிறிலங்கா கடற்படையின் தென்கட்டளையக தளபதி கொமடோர் மென்டிஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பின் தெற்கே வெள்ளவத்தை முதல் வடக்கே வத்தளை வரையான கடற்பரப்பில் சிறிய டிங்கி வகை உட்பட்ட படகுகளில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்படை தவிர்ந்த ஏனைய பயன்பாட்டில் உள்ள படகுகள் யாவற்றையும் பதிவு செய்யும் நடைமுறை சிறிலங்கா கடற்படைத்தரப்பால் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுவரை தமிழர் தாயக கடற்பரப்பில் தமிழ் மீனவர்களை கடல்வலயத் தடைச்சட்டம் மூலம் சிறிலங்கா அரசு வதை செய்து வந்துள்ளது. தற்போது தமது, அதாவது சிங்கள மீனவர்களுக்கே அந்த நிலைமையை கொண்டு வரவேண்டிய நிலைமை சிறிலங்கா அரசுக்கு வந்துள்ளது.

கடலில் எந்தப் படகை நம்புவது என்ற கேள்வி சிறிலங்கா கடற்படைக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்மக்கள் பட்டு வரும் வதையை சிங்கள மக்களுக்கு உணரச்செய்யும்.

தமிழ் மக்களுக்கு அவலத்தை விதைத்த அரசு தன் மக்கள் மீதே அதே போன்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இது சிறிலங்காவின் அரசுக்கு ஆபத்தான ஒன்று.

தாக்குதல்கள் தொடர்பாக தமிழரை மட்டும் குற்றம் சாட்டி உடனடியாக தமிழர்களை கைது செய்து வந்த சிங்களப் படைத்தரப்புக்கு தற்போது தன் மக்களையே நம்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அண்மைக்காலமாக சிங்களவர்களை சந்தேகத்தின் பேரில் படைத்தரப்பினர் கைது செய்து வந்துள்ளனர். ஆனாலும் அதையும் மீறி சிங்களத்தின் கோட்டைகள் என்று கருதப்படும் இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் மூலம் இராணுவத்தரப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஹபரணைக்கு அப்பால் மாத்தளை மாவட்டத்தில் திகம்பத்தனையில் கடற்படை இடம் மாறும் இடத்தில் நடத்தப்பட்ட பாரிய வாகனக் குண்டுத்தாக்குதலில் 117 கடற்படையினர் கொல்லப்பட்டனர். இவர்களில் 110 பேர் ஆபத்தான நிலையில்தான் இருக்கின்றனர்.

இதில் கூட அவர்களின் புலனாய்வு செயற்பாடுகளில் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு குறைபாட்டால்தான் தாக்குதல் நடந்துள்ளது என்று பிரிவுக்கு பிரிவு பந்து எறிதல்தான் நடக்கின்றது.

போரியலில் எதிரியின் பலவீனங்களின் துளையால் அல்லது ஏதுக்களின் வழியாகவே தாக்குதல் நடத்தப்படும்.

அதனால் இந்த வகைத்தாக்குதல்களை நிறுத்தவே முடியாது.

சிறிலங்கா கடற்படையினரது பாதுகாப்புக் குறைபாடுகளினால் இத்தாக்குதல் நடந்ததாக தெரியவந்துள்ளது.

கடற்படையினர் தளத்துக்குச் செல்லும் ஹபரணை பகுதி தாக்குதலுக்கு இலக்காக நேரிடும் என்று ஏற்கெனவே எச்சரித்திருந்ததாக அப்பகுதி சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஹபரணைத் தாக்குதல் நடந்த உடனேயே சிறிலங்கா காவல்துறையினர் மீது கடற்படையினர் குற்றம்சாட்டினர்.

தம்புள்ளவிலிருந்து வெடிபொருட்களுடன் ட்றக் வாகனம் வந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மிரிஸ்கொனியா காவல்துறை தடுப்பைத் தவிர்த்து எப்படி அந்த ட்றக் வாகனம் வந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தம்புள்ள- திருகோணமலை பிரதான வீதியை அந்த வாகனம் வந்தடைந்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர் என சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்தரப்பினர் தெரிவித்தனர்.

ஹபரணை- திகம்பத்தனை தாக்குதல் சம்பவம் நடந்த நாளன்று சிறிலங்கா கடற்படையினரின் பேருந்துகள் நிறுத்துமிடத்திற்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு நிறுத்தி வைக்கப்படுகின்ற கடற்படைக்குச் சொந்தமான 'கப்' ரக வாகனம் எங்கே என சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஹபரணை - திகம்பத்தனை பிரதான வீதியிலிருந்து, சுமார் 50 மீற்றர் உட்புறமாக சற்றுத் தொலைவில் கிறவல் மண் வெட்டப்பட்ட கிறவல் திடலிலேயே வழமைபோல் கடற்படையினர் பயணம் செய்யும் வாகனங்கள் நிறுத்தப்படுவதுண்டு எனவும், அத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் பிரதான வீதியிலிருந்து கிறவல் பகுதிக்குள் செல்லும் பாதைக்குக் குறுக்காக கடற்படையினரின் 'கப்' ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைப்பதுண்டு எனவும் சம்பவ நாளன்று அவ்வாகனம் அங்கு காணப்படாமை சந்தேகத்திற்குரியதெனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

சீகிரியா சிறிலங்கா காவல்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரியான தினேஸ்குமார சிங்க "துரதிர்ஷ்டவசமாகவோ, திட்டமிடப்பட்டவாறோ சம்பவ தினம், ஏனோ பாதுகாப்பு வழங்கும் குறிப்பிட்ட வாகனம் நிறுத்தப்பட்டிருக்கவில்லை என்பது புதிராக இருக்கிறது. அவ்வாறு வழமைபோல அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்திருக்குமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.