Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்காக கவலை வெளியிட்டார் சந்திரிகா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
chandrika-150.jpg

புதிய ஜனாதிபதி மைத்திரிபால உங்கள் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு சரியாக முறையில் தீர்வு காண்பார். பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படாத வகையில் தான் நாம் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

   

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரித்து நல்லூர் சங்கிலியன் தோப்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இன மோதல் , இராணுவ மோதல் காரணமாக எனது நாட்டில் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்த நீங்கள் இன்று ஓரளவு மகிழ்ச்சியுடன் உள்ளீர்கள் இதனால் நான் மகிழ்ச்சியடைகின்றேன். 1994 இல் எனது ஆட்சி அமைக்கப்பட முன்னரும் பின்னரும் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும், போர்நிறுத்தப்படும், தீர்வு காணப்படும் பிரச்சினைகளுக்கு என நான் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கினேன். எனது ஆட்சி அமைந்து 2 வாரங்களுக்கு உள்ளேயே நான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று கூறினேன். 8 மாதங்களுக்கு நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கி அமுலாக்கினோம். அந்த 8 மாதமும் எனது அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகள் முழுமையான சமாதானத்திற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. அவர்கள் மீண்டும் போருக்கே சென்றுவிட்டார்கள்.

இந்தநிலையில் நாட்டின் அரச சார்பிலும் மக்கள் சார்பிலும் நானும் அந்த போரில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு தாய் என்ற வகையிலும் பெண் என்ற வகையிலும் போரின் காரணமாக நீங்கள், உங்களுடைய பிள்ளைகள், உறவுகள், உங்கள் நண்பர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட துன்பங்களை எண்ணி உண்மையில் கவலைப்படுகின்றேன். நேர்மையாக இந்தக் கவலையை தெரிவிக்கவும் விரும்புகின்றேன். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பாவிட்டாலும் கூட எனது அரசு 9 மாதங்களுக்குப் பின்பு இந்த நாட்டில் புதியதொரு அரசியல் அமைப்பினை அறிமுகப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.

குறிப்பாக எமது அரசியலின் இரண்டாவது இருப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை மாற்ற வேண்டும் என்பது உள்ளடக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இந்த அரசை மாற்றியமைக்கும் கூட்டு முயற்சியில் ஒரு பங்காளராகவே சரத் பொன்சேகா இந்த மேடையில் உள்ளார். எனது அரசு 11 ஆண்டுகள் பதவி வகித்தது. எனது காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய மாகாணங்களிலும் வாழக்கூடிய பெரும்பான்மை மக்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் மக்கள் மத்தியிலும் அதிகாரம் தொடர்பான அதிகாரப்பகிர்வு அமுல்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த அரசியல் அமைப்பினை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டேன்.

அந்த நேரம் அரசியல் அமைப்பினை மாற்றுகின்ற கனவை நான் நனவாக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலேயே முடியும். ஆனால் அன்றைய கால கட்டத்தில் என்னுடைய இந்த அரசியல் அமைப்பு யோசனைக்கு சார்பாக பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காமையினால் அந்த முயற்சியைக் கைவிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆகவே இந்த அரசியல் அமைப்பை யதார்த்தமாக்க எமக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன. விடுதலைப் புலிகள் மிகவும் வன்முறை சார்ந்த சில நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால் இந்த நாட்டு மக்களை , முஸ்லிம் மக்களை பெரும்பாதிப்புக்கு ஏற்படுத்திய காரணத்தினால் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்கள் அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இன்று போர் ஓய்ந்து விட்டது. ஆகவே நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள்.

இந்த நாட்டிலே அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு. எமது எதிர்கால ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன ஐ.தே.க தலைவர் ரணிலின் ஓத்துழைப்பும் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பினையும் பெற்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை மிகவும் சுமுகமான முறையில் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் தீர்த்து வைப்பார் என்பதை உறுதியாக கூறுகின்றேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் சட்டத்தின் ஆட்சி மஹிந்த அரசின் ஆட்சியின் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. நீதித்துறை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான இயங்கவும் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல பொலிஸ் திணைக்களத்திலும் அரசியல் மயமாக்கல் ஊடுருவியுள்ளது. சட்டத்தின் ஆட்சியில் மஹிந்த என்ன தொலைபேசியில் சொல்கின்றாரோ அதுவே நீதித்துறையும் சரி பொலிஸ் துறையாக இருந்தாலும் அவர் கூறியது போலவே நடந்து கொள்கின்றன. கைதுசெய்திருந்தால் விடுவி, தண்டனையைக் குறை என்று கூறுவாராயின் அதனையே செய்யும் அளவிற்கு தான் இங்கு நிலைமை உள்ளது. ஆகவே அடிமுதல் நுனி வரை முழுமையாக இந்த அரசானது ஒட்டுமொத்தமாக ஊழல் , மோசடி மிகுந்த அரசாங்கமாக மாற்றமடைந்துள்ளது. ஒரு குடும்பம் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் வளங்களையும் சொத்துக்களையும் சுரண்டிக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டினதும், அரசின் சொத்துக்களையும் இந்த அரசு மோசடிகளுக்கும் ஊழல்களுக்கும் களவாடல்களுக்கும் உட்படுத்துகின்றது.

இந்த நாட்டில் ஜனநாயகம் சுதந்திரம் என்பவற்றை காப்பதற்கான சகல நிறுவனங்களும் செயலிழந்துள்ளன. பொலிஸ், அரச சேவை, நீதித்துறையோ வேறு சேவையோ உரிய முறையில் செயற்படாமல் உள்ளன. சட்டத்தின் ஆட்சி ஆட்டம் கண்டு வீழ்ச்சியடைந்துள்ளது. தங்களுடைய எதிரிகளுக்கு எதிராக வன்முறையையும் ஆடாவடித்தனங்களையும் அச்சுறுத்தல்களையும் மஹிந்த அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. மனிதர்கள் என்ற வகையில் எமக்கு சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அந்த அனைத்து உரிமைகளையும் அவர்கள் களவாடி கொள்ளையடித்து உள்ளார்கள். அந்த உரிமைகளை செயற்படுவதற்கும் இடமளிக்காத வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

போர் முடிவடைய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. ஆனால்இன்று போர் ஓய்ந்து விட்டது. அபிலாசைகள் , எதிர்பார்ப்புக்கள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. புதிய ஆட்சியில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிலையான சமாதானத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த வேண்டும். எமது நாட்டில் வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் சமாதானமாகவும் வாழும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. இன்று பொதுவேட்பாளரை வெற்றியடையச் செய்ய இந்த நாட்டில் உள்ள ஐ.தே.க , சிறிலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை, முஸ்லீம் கட்சி, த.தே.கூ ஒன்றிணைந்துள்ளது. இன்று நாம் உங்கள் முன்னிலையில் வழங்கக்கூடிய உறுதிமொழிகளை வெற்றிகரமாக செயற்படுத்தக் கூடிய சக்தியும் வலுவும் இந்தக் கூட்டணிக்கு உள்ளது. தமிழ் , முஸ்லிம் , சிங்கள மக்களுக்கும் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கும் மகிந்த அரசு அவற்றை ஒன்றையும் நிறைவேற்றாத நிலையில் தொடர்ந்தும் பதவியில் உள்ளார்.

போரின் பின்னர் தமிழ் மக்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை மீள்குடியேற்றம். தங்களுடைய சொந்த நிலங்களுக்கு செல்ல முடியாது, குடியிருக்க முடியாது பலர் உள்ளனர். உங்களுக்கு சொந்தமான காணிகளை அரசு அத்துமீறி உரித்தாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இந்த நாட்டில் பாதுகாப்பு முக்கியம் பாதுகாப்புக்கு தேவையான நிலப்பரப்பை மாத்திரம் வைத்துக் கொண்டு எஞ்சிய உங்களது நிலங்களை மீள திருப்பி வழங்குவோம். தொழில் வாய்ப்பும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில் வாய்ப்புக்களை வழங்க எங்களால் இயன்ற முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். வடக்கு கிழக்கு மக்களுக்கு வாழ்வாதாரம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கும் தொழில் வாய்ப்புக்களையும் ஏனைய மாகாணங்கள் போல சம உரிமையுடன் வழங்குவோம்.

நீண்ட காலமாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த நீங்கள் வடக்கு மாகாண சபையை பெரும்பான்மை வாக்குடன் தெரிவு செய்தீர்கள். சர்வதேச அழுதங்கள் காரணமாகவே மாகாண சபை தேர்தலை மஹிந்த வடக்கில் நடத்தினார். தேர்தலின் பின்னர் சரியாக முறையில் வடக்கு மாகாண சபையை சரியான முறையில் நடத்த தடை விதித்து வருகின்றனர். நாங்கள் ஏனைய மாகாண சபைகள் இயங்குவதற்கு வழங்கும் நிதி, வளங்கள் வழங்குவது போல வடக்கு மாகாண சபையும் இயங்க தேவையான அனைத்தையும் நாங்கள் வழங்குவோம் என்று உறுதி கூறுகின்றோம். எனவே மக்களாகிய நீங்கள் உங்களுடைய எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு வாக்களியுங்கள் என்றார்.

 

jaffna-cbk-311214-seithy.jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=123672&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப செம்மணி.. நவாலி.. நாவர்கோவில்.. மடு தேவாலயம்.. புதுக்குடியிருப்பு.. யாழ் பெரிய தேவாயலம்.. உதயன் மீதான விமானத்தாக்குதல்.. இதெல்லாம்.. மோசமான வன்முறைகள் இல்லையோ. புலிகள் பண்ணினது தான் மோசமான நாட்டை பாதித்த வன்முறைகள்..???!

 

கேட்கிறவன் கேணயன் என்றால் சந்திரிக்கா சந்திர மண்டலத்திலும் தேர்தல் கூட்டம் போடுவா. நாட்டின் பாதுகாப்புக்கு இடம் பிடிச்சு வைப்பா. :(:o

 

சிங்களவர்களின் நாட்டின் பாதுகாப்புக்கு சிங்களவர்கள் வடக்கில்  காணி பிடிச்சு வைக்கலாம் என்றால் தமிழர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு தெற்கில் காணி பிடிச்சு வைக்க உலகம் இடமளிக்குமா..?????! :rolleyes::icon_idea:

 

அதுசரி மாகாண சபைக்கு காசு தாறம் என்றியள்.. அப்ப 13 திருத்தச் சட்டத்தில் குறைந்த பட்சமாக வழங்கப்பட்டுள்ள.. அந்த காணி... பொலிஸ் அதிகாரங்கள். அதே அம்போ தானா..???!

 

யோவ் சம்பந்தரு காரு. எதை வைச்சுய்யா.. இவாவை நீரு நம்புறீரு. விளக்கம் பிளீசு. :lol::D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.