Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்ததாக கூறப்பட்ட காதலருடன் 10 ஆண்டுக்கு பின் இணைந்த காதலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
lovers-joining-10years-later-301214-350-

காதலன் இறந்ததாக கிடைத்த தவறான தகவலால், திருமணத்தை வெறுத்து கன்னியாஸ்திரியாக மாற முடிவெடுத்த காதலி, 10 ஆண்டுகளுக்கு பின்னர் காதலனை கரம் பிடித்துள்ளார். உண்மை காதலுக்கு அழிவில்லை என்பதை நிரூபிக்கும் இந்த நெகிழ்ச்சி சம்பவம் தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியை சேர்ந்த மரியசூசை மகன் ஜான்சன் (34). ஐடிஐ படித்தவர். டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2004ல் சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

   

பக்கத்து வீட்டில் வசித்து வந்த லீமா ரோஸ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. லீமாரோஸ் குடும்பத்தினர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலைகிராமத்தை விட்டு, 2005ல் மதுரைக்கு வந்த ஜான்சன் தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்றில் டிரைவராக சேர்ந்தார். தொடர்ந்து லீமா ரோசுடன் பேசி காதலை வளர்த்து வந்தார்.இந்நிலையில் திடீரென விபத்தில் சிக்கிய ஜான்சன், தலையில் பலத்த காயமடைந்தார். இதில் தனது சுயநினைவை இழந்தார். 2009 வரையிலும் தொடர் சிகிச்சையில் இருந்துள்ளார். இதனால் காதலியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட லீமா ரோசின் குடும்பத்தினர், விபத்தில் ஜான்சன் இறந்து விட்டார் எனக் கூறி அவரது மனதை மாற்ற முயற்சித்துள்ளனர். அவருக்கு வேறொருவரை திருமணம் செய்து வைக்க முயன்றனர். காதலர் இறந்து விட்டார் என்ற செய்தியறிந்து, கடும் துயரத்தில் ஆழ்ந்த லீமா ரோஸ், ‘வேறொருவருக்கு எனது வாழ்வில் இடமில்லை, எனக்கு திருமணமே வேண்டாம் கன்னியாஸ்திரி ஆகிறேன்‘ என பிடிவாதம் பிடித்தார்.

அவரது மனதை மாற்ற முயன்று பெற்றோர்களும், உறவினர்களும் தோல்வியடைந்தனர். பின்னர் அவரது விருப்பம் போல கன்னியாஸ்திரி படிப்புக்குரிய கல்லூரிகளில் சேர்த்தனர். கடந்த 8 வருடத்திற்கும் மேலாக சென்னை, திருச்சி, தஞ்சை, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில் அவர் இறைகல்வியை படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது படிப்பு தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு லீமாரோஸ், ராயப்பன்பட்டிக்கு வந்தார். இந்த கால இடைவெளியில் ஜான்சனும் மெல்ல குணமடைந்து, பழைய நினைவுகளுக்கு திரும்பினார். 9 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்பாராதவிதமாக 2 பேரும் ராயப்பன்பட்டி மெயின் ரோட்டில் சந்தித்தனர். இறந்து விட்டதாக கூறப்பட்ட காதலர், தன் முன்னே உயிருடன் வந்து நிற்பதை பார்த்த லீமாரோசுக்கு பேச்சு வரவில்லை. உணர்ச்சிகரமான அந்த சந்திப்பில் 2 பேரும் கண்ணீர் விட்டு கலங்கினர். திருமணம் செய்து கொள்வது என அந்த கணத்திலேயே முடிவெடுத்தனர்.இதற்கு இருவீட்டாரும் சம்மதிக்க மறுத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (டிச.28) ஜான்சனும், லீமாரோசும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கணவாயில் உள்ள சர்ச் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். மணக்கோலத்துடன் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு 2 பேரும் வந்தனர். விவரம் அறிந்த போலீசார், இருவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். இருவீட்டாரும் திருமணத்தை ஏற்க மறுத்தனர்.

இதையடுத்து இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிய மகளிர் போலீசார், புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.ஜான்சன் கூறுகையில், “மனதார காதலித்தோம். 10 ஆண்டுகளுக்கு பிறகு எங்களை கடவுள்தான் ஒன்று சேர்த்து வைத்துள்ளார்“ என்றார்.லீமாரோஸ் கூறுகையில், ' இப்படியெல்லாம் நடக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை. கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்“ என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=123652&category=Puthinam&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் உயரிய, சீரிய நற்பண்புகள் லீமாரோசின் காதல்கதை மூலம் தெளிவாகின்றன.. :unsure: இவற்றைப் படித்து நெடுக்ஸ் போன்றவர்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேணும்.. :icon_idea::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.