Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முக்கிய நகரங்களை குண்டு வைத்து தகர்க்க சதி வங்காள தேசத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது உத்தரபிரதேசத்தில் பிடிபட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
201501030538044076_Foiled-plot-to-bomb-m

லக்னோ,

 

இந்தியாவின் பல முக்கிய நகரங்களை குண்டு வைத்து தகர்க்க சதி செய்ததாக வங்காள தேசத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாதி பிடிபட்டார்

கடந்த டிசம்பர் மாதம் 17–ந்தேதி மேற்கு வங்க மற்றும் உத்தரபிரதேச மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கூட்டாக இணைந்து டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவனை கைது செய்தனர்.

அவனிடம் இருந்து மடிக்கணினி ஒன்றும், சில வரைபடங்களும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அவனிடம் விசாரணை நடத்தியதில் அவனது பெயர் முகமது ரக்துல்லா என்பதும், அவன் வங்காளதேசத்தின் பரித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீவிரவாதி என்பதும் தெரிய வந்தது.

கூட்டாளியை சந்திக்க திட்டம்

மேலும் அவனுடைய கூட்டாளி அப்துல் அஜிஸ் உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் நகரில் பதுங்கி இருப்பதாகவும் அவன் தெரிவித்தான். அப்துல் அஜிஸ்சும் வங்காளதேசத்தை சேர்ந்தவன்தான். அவனைச் சந்திப்பதற்காக ரக்துல்லா, சஹரன்பூர் நகருக்கு செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று உத்தரபிரதேசம் வந்தனர். அவர்கள் சஹரன்பூரில் பதுங்கியிருந்த அப்துல் அஜிஸ்சையும் கைது செய்தனர்.

பர்த்வான் குண்டு வெடிப்பு

2 மாதங்களுக்கு முன்பு, மேற்கு வங்க மாநிலத்தின் பர்த்வான் நகரில் ஒரு வீட்டில் வெடிகுண்டு தயாரித்தபோது குண்டுகள் வெடித்ததில் 2 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதி மேற்கு வங்க போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோதுதான் ரக்துல்லா பிடிபட்டான். இதைத் தொடர்ந்து அவனுடைய கூட்டாளி அப்துல் அஜிஸ்சும் இப்போது சிக்கி உள்ளான்.

பர்த்வான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தீவிரவாதிகள் 2 பேரும் உடனடியாக கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முக்கிய நகரங்களை தகர்க்க சதி

இவர்கள் இருவரிடமும் இருந்து கைப்பற்றிய மடிக்கணினியின் மூலம் இந்தியாவின் பல முக்கிய நகரங்களை குண்டு வைத்து தகர்ப்பது தொடர்பான தகவல்களை சேகரித்து வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இவர்களைப் போலவே இன்னும் பல தீவிரவாதிகள் டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேச மாநிலத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக புகுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனால் டெல்லியின் புறநகர் பகுதியிலும், மேற்கு உத்தரபிரதேசத்திலும் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

http://www.dailythanthi.com/News/India/2015/01/03053804/Foiled-plot-to-bomb-major-cities-2-militants-arrested.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்தியாவில் ஒரே கலவரமும் குழிபறிப்புமாக இருக்கு..

இந்தியா உடைந்தது என்ற நல்ல செய்தி  எப்போது...??

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்தியாவில் ஒரே கலவரமும் குழிபறிப்புமாக இருக்கு..

இந்தியா உடைந்தது என்ற நல்ல செய்தி  எப்போது...??

 

நிலைமையை... மிக உன்னிப்பாக, அவதானித்துக் கொண்டுள்ளோம்.11aeg03.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.