Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை : கூட்டாச்சியா? போரா?

Featured Replies

இலங்கை : கூட்டாச்சியா ? போரா?

இலங்கை : கூட்டாச்சியா ? போரா ?

ஈழ விடுதலைப் போராட்டம் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய மாற்றங்களைப் பெற்று இருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் மிக நீண்ட விடுதலைப் போராட்டங்களாகத் தான் இருந்து வந்திருக்கிறது. சில வருடங்களில் எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. அரை நூற்றூண்டுக்கும் மேலான போராட்டங்களை நாம் உலக வரலாற்றில் பார்த்து இருக்கிறோம். நீண்ட காலமாக நடந்தாலும் விடுதலைப் போராட்டம் பயணிக்கும் பாதை முக்கியமானது. விடுதலைப் போராட்டம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும், தேங்கிப் போய் விடக்கூடாது. அதற்கு மிகச் சரியான அரசியல் பாதை வகுக்கப்பட வேண்டும்.

ஈழப் போராட்டம் கடந்த 20 ஆண்டுகளில் அத்தகைய ஒரு திட்டமிட்ட பாதையில் சரியாக முன்னேறியிருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன். குறிப்பாக கடந்த ஒரு வருட நிகழ்வுகள் இலங்கையின் சிக்கல் மிகுந்த காலமாக பலர் பார்க்கிறார்கள். புலிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பலர் நம்புகிறார்கள். அவ்வாறு நம்பும் பல ஈழத் தமிழர்களின் குரல்களையும் கேட்க முடிகிறது. ஊடகங்கள் புலிகள் பலவீனம் அடைந்து இருப்பதாக எழுதிக் கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த ஒரு வருடம் தான் ஈழப் போராட்டத்தின் மிக முக்கியமான கட்டமாக நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்த ஒரு வருடம் ஈழப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தின் தொடக்கம். திட்டமிட்ட ஒரு பாதையின் அடுத்த கட்டம்.

மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிறகான கடந்த ஒரு வருட நிகழ்வுகள் முக்கியமானது. மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றதற்கு காரணம் தமிழர்களின் தேர்தல் புறக்கணிப்பு தான். பிரபாகரன் ராஜபக்ஷவை வெற்றி பெற வைத்தன் முக்கிய நோக்கம் சிங்கள் இனவாதத்தை வெளிப்படுத்துவது தான் (இது குறித்த என்னுடைய முந்தையப் பதிவுகள் - தேர்தலும் தமிழ் ஈழ அங்கீகாரமும், புதிய யுத்தம்).

கடந்த ஓராண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை நோக்கும் பொழுது அந்த நோக்கம் வெற்றி பெற்று இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சர்வதேச சமூகம் ராஜபக்ஷவின் சிங்கள தேசியவாத முகத்தின் மனித உரிமை மீறல்களை கண்டித்திருக்கிறது. அதன் போர் உத்திகளை உணர்ந்திருக்கிறது. ஆனாலும் அதனை தடுக்காத இரட்டை வேடத்தை தான் வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் அதனை அப்படியே தொடர முடியாது என்பதற்கு சாட்சியாகத் தான் பல நாடுகள் தங்களது பொருளாதார உதவிகளை நிறுத்தப்போவதாக அச்சுறுத்த தொடங்கியிருக்கின்றன. ஜெர்மனி அதை செயலிலும் காட்டியிருக்கிறது.

Unitary Nation என்ற கோஷத்துடன் ஆட்சியை கைப்பற்றிய ராஜபக்ஷ, புலிகள் கொடுத்த நிர்பந்தத்தால் ஒரு Federal அமைப்பில் ஆட்சிப் பகிர்வை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளானார். அதிலிருந்து தப்பிக்க போர் நோக்கி ராஜபக்ஷ செல்ல தொடங்கினார். இதற்கிடையில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் போக்கில் முனைந்தார். ஆனால் சிங்கள தேசியவாதக் குழுக்களின் போர் முழுக்கத்திற்கு கட்டுப்பட்டு போர் புரிய முனைந்த பொழுது, புலிகள் சம்பூரில் இருந்து தங்கள் படைகளை விலக்கிக் கொண்டனர். இது சிங்கள இராணுவத்திற்கு கிடைத்த வெற்றியாக சித்தரிக்கப்பட்டது. ஒரு வகையில் சம்பூரில் இருந்து புலிகள் தங்கள் படைகளை விலக்கி கொண்டதன் மூலம் செயற்கையான ஒரு வெற்றியை அவர்களுக்கு ஏற்படுத்தியும் கொடுத்தனர். ( சம்பூர் போரில் முன்னேறிய இராணுவத்தை புலிகள் எதிர்க்க வில்லை என்பதையும், அது ஒரு தந்திரமாக இருக்கும் என்றும் முகமாலையின் தோல்விக்கு பிறகே இராணுவ நோக்கர்கள் கூற தொடங்கினர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்)

சிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், வங்காலை படுகொலை, மூதூர் தன்னார்வ நிறுவன ஊழியர்களின் படுகொலை, ஐநாவின் கண்டனம் என கடுமையான சர்வதேச கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை சிறீலங்கா அரசுக்கு ஏற்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு இன்றைக்கு சிறீலங்கா அரசை "முழுமையாக" ஆதரிக்க முடியாத சூழலுக்கு சர்வதேச சமூகம் நிர்பந்திக்கப்பட்டிருக்கிற

  • தொடங்கியவர்

2 மறுமொழிகள்:

நன்கு அலசி ஆராயப்பட்ட பதிவு. நன்றி. Kuppusamy

Chellamuthu, at 10:12 PM சசி

இலங்கை பிரச்சினையை, போரின் சூழ்நிலை, இயக்கத்தின் யுக்தி போன்றவற்றை மிக தெளிவாக உங்கள் கட்டுரை விளக்குகிறது.

அங்குள்ள தமிழ் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாள் எந்நாளோ?

மயிலாடுதுறை சிவா... மயிலாடுதுறை சிவா, at 11:14 PM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.