Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா உருவாக்கிய மனித அவலங்கள் என்ன?

Featured Replies

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா உருவாக்கிய மனித அவலங்கள் என்ன?: ஜெனீவாவில் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்க உரை

[சனிக்கிழமை, 28 ஒக்ரொபர் 2006, 16:29 ஈழம்] [சுவிஸ் நிருபர்]

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மனித அவலங்கள் என்ன? எத்தகைய வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன? என்பது உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் நிலைமையை ஜெனீவாவில் இன்று தொடங்கிய பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கினார்.

சிறிலங்கா அரசாங்கக் குழுவினருடனான பேச்சுக்களின் போது தமிழர் தாயக நிலைமைகளை விளக்கி சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய தொடக்க உரை:

இலங்கைத்தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அயராத முயற்சிகளை மேற்கொண்டு வரும் நோர்வே அரசாங்கத்திற்கும் பேச்சுக்களை நடாத்துவதற்கு இடமளித்து உதவிய சுவிற்சர்லாந்து அரசாங்கத்திற்கும் முதலில் எமது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

இணைத் தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து எமக்கு சமாதானத்திலுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம்.

ஐந்து வருடத்திற்கு முன்பு மார்கழி 24, 2001 இல் நாம் ஒருதலைப்பட்சமாக ஒரு மாதத்திற்கு யுத்தநிறுத்தம் ஒன்றினைப் பிரகடனப்படுத்தினோம். இலங்கை அரசாங்கம் எமது சமாதான சமிக்கைகளை ஊதாசீனப்படுத்தியது. நோர்வே அனுசரணையாளரின் அயராத உழைப்பினால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டது. எமது தேசியத் தலைவரும் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதில் கையொப்பமிட்டனர். யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு சர்வதேச மட்டத்தில் அமோக வரவேற்புக் கிடைத்தது. இதுவரை காலமும் சர்வதேச ஆதரவுடன் இருதரப்பினராலும் கையொப்பமிடப்பட்டு அமுலுக்கு வந்த ஒரேயொரு ஒப்பந்தமாக இது விளங்கியது. இராணுவ சமநிலை காரணமாக ஏற்பட்ட இந்த ஒப்பந்தம் பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் இனப்பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என நாம் நம்பினோம்.

அரசியலமைப்புச் சாக்குப்போக்கு

ஆறு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகளில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்கு இயல்பு வாழ்க்கையினைக் கொண்டு வருவதற்கான பல முன்மொழிவுகள் கொண்டு வரப்பட்டன. யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பயன்களை எமது மக்கள் அனுபவிப்பதற்காக ஒரு இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்குக் கோரினோம். சிறிலங்கா அரசியலமைப்பைக் காரணங்காட்டி அதுவும் மறுக்கப்பட்டது. பின்னர், வடகிழக்கில் இயல்பு வாழ்க்கையை உருவாக்குவதற்கான முக்கிய அமைப்பாக சிரானை செயற்படுத்த அரசு உறுதிமொழி வழங்கியும் அது செயலற்றதாக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் யுத்தநிறுத்த உடன்படிக்கையை வலுப்படுத்துவதாகவன்றி வலுச் சமநிலையைக் குழப்புவதாகவே அமைந்தது. தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி மக்களின் வாழ்க்கையில் இயல்புநிலையைத் தோற்றுவிப்பது எட்டாக்கனியாகவே இருந்தது.

சிரான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை முடக்கப்பட்ட நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்கான அவசர தேவையினை கருத்திற்கொண்டு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான ஆலோசனையை முன்வைத்தோம். பேச்சுக்கள் இதனடிப்படையில் மீள ஆரம்பிப்பதை தடுக்கும் நோக்கோடு பாராளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டது. தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழர்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை ஆதரித்த தமது 22 பிரதிநிதிகளை தமிழ் மக்கள் தெரிவுசெய்தனர். இவர்கள் தமிழர் தாயகத்தின் அதீத பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.