Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தகத் திருவிழா 2015: நான் என்னென்ன வாங்கினேன்?

Featured Replies

 
book_2274638f.jpg 700 அரங்குகள் | 5,00,000 தலைப்புகள் | 20,00,000 வாசகர்கள்

புத்தகக் காதலர்கள் ஆவலுடன் காத்திருந்த திருவிழா கொண்டாட்டத்துடன் நேற்று தொடங்கியது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 38-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

38 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்வமும் அக்கறை யும் மிக்க சில பதிப்பாளர்கள், புத்தக விற்பனை யாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி). வாசகர்களிடம் புத்தக வாசிப்பு தொடர்பான ஆர்வத்தை விதைப்பதற்கும், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரையும் ஊக்கத்துடன் இயங்கவைப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இந்தச் சங்கம்.

சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் 700 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்டமான புத்தகக் காட்சியில் 350-க் கும் மேற்பட்ட பதிப்பாளர்களுடன் ஊடகங்களும் பங்கேற்கிறார்கள். ஏறத்தாழ ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 30 ஆயிரம் புதிய புத்தகங்கள் இடம் பெறுகின்றன.

‘தி இந்து’ அரங்கு

 

தமிழ்ப் பதிப்புலகில் கால்பதித்துள்ள ‘தி இந்து’, இந்தப் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்திருக்கிறது. புத்தகக் காட்சி வளாகத்தில் ‘சேரன் செங்குட்டுவன்’ வீதியில் நம்முடைய அரங்கு எண்கள்: 143-ஏ, 143-பி.

 

எதுவரை நடக்கிறது?

நேற்று தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி, இந்த மாதத்தின் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் புத்தகக் காட்சி, வார நாட்களில் (ஜனவரி 12, 13, 19, 20, 21) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் (ஜனவரி10, 11, 14, 15, 16, 17, 18) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

 

நிகழ்ச்சிகள்

புத்தகக் காட்சியின் விழா அரங்கில் தினமும் மாலை 6 மணிக்கு இலக்கியம் தொடர்பான நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன. அவற்றுடன் வாசிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்களுக்கான போட்டியில் தேர்வான குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் புத்தகக் காட்சிக்கு மசாலா சேர்க்கின்றன.

 

விருதுகள்

புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில், இந்த ஆண்டின் சிறந்த தமிழறிஞருக்கான விருது சிலம்பொலி செல்லப்பனுக்கும், சிறந்த பதிப்பாளருக்கான விருது பி.ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸுக்கும், சிறந்த விற்பனையாளருக் கான விருது ஆர்.ராஜ் ஆனந்துக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருது நெல்லை. ஆ.கணபதிக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக் கான விருது ஸ்ரீகுமார் வர்மாவுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான விருது டாக்டர். இ.கே.தி.சிவக்குமாருக்கும், சிறந்த நூலகருக்கான விருது ஆர்.சம்யுக்தாவுக்கும் வழங்கப்பட்டன.

 

தொடக்க நிகழ்ச்சி

புத்தகக் காட்சி தொடக்க விழாவை, சந்திரயான் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கிவைத்துப் பேசினார். நிகழ்ச்சிக்கு நல்லி குப்புசாமி செட்டி தலைமை வகித்தார். காவல்துறைத் தலைவர் (பயிற்சி) க. வன்னியபெருமாள் விருது பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார். பபாசி தலைவர் மெ. மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்றார். பபாசி செயலாளர் கே.எஸ். புகழேந்தி நன்றி கூறினார்.

 

book_fair_2274640a.jpg

 

 

book_fair2_2274639a.jpg

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6772651.ece?ref=relatedNews

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

நான் என்னென்ன வாங்கினேன்?

 

book_2275546f.jpg

 

தமிழகம் முழுவதும் உள்ள இலக்கிய வட்டத்தினரிடம் சு.வெங்கடேசன் என்ற பெயர் எப்படி அறிமுகம் என்று கேட்டால், முதலில் அவர்கள் சொல்லும் பதில் தேர்ந்த வாசகர் என்பதாகவே இருக்கும். சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்தக் ‘காவல் கோட்டம்’ எழுத்தாளர் முதல் நாள் அன்றே சென்னைப் புத்தகக் காட்சிக்காக மதுரையிலிருந்து வந்துவிட்டார்.

 
“தமிழ்ல நல்ல புத்தகங்கள் வர்றது நாளுக்கு நாள் அதிகமாயிட்டிருக்கு. ஒரு வாசகனா நாமளும் நாளுக்கு நாள் நம்மளை மேம்படுத்திக்க வேண்டியிருக்கு.
 
எப்போதுமே சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரும்போது கையில ஒரு பட்டியலோடதான் வருவேன். இந்த முறையும் பட்டியலோடதான் வந்தேன்.
 
தேனி சீருடையான் எழுதின ‘நிறங்களின் மொழி’. இந்தப் புத்தகத்தோட சிறப்பு மனோகர் தேவதாஸின் அற்புதமான ஓவியங்கள் (விகடன் பிரசுரம்).
அருணன் எழுதின ‘கடவுளின் கதை’ (வசந்தம் வெளியீட்டகம்)
ஆதவன் தீட்சண்யாவோட ‘மீசை என்பது வெறும் மயிர்’,
பெருமாள் முருகன் எழுதின ‘அர்த்தநாரி’ (காலச்சுவடு),
கலாநிதி எஸ்.சிவநேசன் எழுதின ‘இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்’ (குமரன் புத்தக இல்லம்)
இதெல்லாம் பட்டியல்ல உள்ள புத்தகங்கள்ல வாங்கினது. தவிர, நிறைய இங்கே கண்டுபிடிச்ச புத்தகங்களையும் வாங்கியிருக்கேன். அப்புறம் பார்க்கலாம், நிறைய வாங்க வேண்டியிருக்கு!”
 
மூட்டையும் கையுமாக அடுத்தடுத்த அரங்குகளை நோக்கி நகர்கிறார் வெங்கடேசன்!
 
  • தொடங்கியவர்

நான் என்னென்ன வாங்கினேன்? - டாக்டர் கு. கணேசன்

 

naan_2276569f.jpg

 

பரபரப்பான பணிகளுக்கிடையிலும் வாசிப்புக்காகவும் எழுதுவதற்காகவும் நேரம் ஒதுக்க முடிந்த பாக்கியவான்கள் மிகக் குறைவு. அவர்களில் ஒருவர்தான் டாக்டர் கு. கணேசன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வார இதழ்கள், நாளிதழ்கள் என்று தமிழின் முக்கியமான பத்திரிகைகளில் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதிவருபவர் இவர்.

ராஜபாளையத்தில் வசிக்கும் இவர், ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சிக்காக சென்னை வந்து ஆயிரக் கணக்கில் செலவுசெய்து புத்தகங்களை அள்ளிச் செல்வார். இந்த முறை புத்தகக் காட்சியில் கார் நிறைய புத்தகங்களை அள்ளிச் சென்றவரிடம் பேசினோம்.

 

“உன் வாசிப்பு எவ்வளவு நாள் இருக்குதோ அவ்வளவு நாள் வரைக்கும்தான் நீ புது மனுஷனா இருக்க முடியும். வாசிப்ப நீ விட்டுட்டா, பழையவனா ஆயிடுவேன்னு என் அப்பா சொல்லுவார். டாக்டராகிட்டா பலரும் தொழில் தொழில்னு ஓடுவாங்க. ஆனா, டாக்டரான பிறகுதான் நான் அதிகம் படிக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல வாசிப்பு என்னை எழுத்தை நோக்கித் தள்ளிச்சு. எழுத்தும் வாசிப்பும் இப்போ பிரிக்க முடியாத அங்கமாயிடுச்சு. நெறைய மருத்துவர்கள் வாசிப்பைக் குறைச்சிடுறாங்க. இல்லேன்னா, ஆங்கிலப் புத்தகங்களோட அவங்க வாசிப்பு நின்னுபோயிடுது. அப்படி இருக்கக் கூடாது. தமிழ்ல படிச்சாத்தான் நம்ம சமூகத்தோட நிலையும் போக்கும் டாக்டர்களுக்குத் தெரியும். மக்களோட உணர்வுகளையும் புரிஞ்சுக்க முடியும்” என்றார்.

 

கார் கொள்ளாத புத்தகங்களை வாங்கியிருக்கும் டாக்டர் கணேசன், “ஒவ்வொரு வருஷமும் புத்தகக் காட்சிக்காகக் காத்திருப்பேன். இப்போ மூணு நாள் முழுக்கப் புத்தக வேட்டைதான். முதல் நாள் பாதி வரைக்கும் 35 புத்தகங்கள் வாங்கியிருக்கேன். இன்னும் பாதி நாள் இருக்கு. அதுக்கப்புறம் இரண்டு நாள் இருக்கு. மொத்தமா அள்ளிக்கிட்டுப் போனாதான் நமக்குச் சந்தோஷம்” என்கிறார். அவர் வாங்கிய புத்தகங்களில் சிலவற்றை வாஞ்சையுடன் காட்டுகிறார்.

“பூமணியின் ‘அஞ்ஞாடி...’, வாண்டுமாமா எழுதிய ‘நமது உடலின் மர்மங்கள்’, பாரதி தம்பியின் ‘தவிக்குதே தவிக்குதே’, ரே பிராட்பரியின் அறிவியல் புனைகதையான ‘ஃபாரன்ஹீட்’ ஆகிய புத்தகங்களோடு மருத்துவம் தொடர்பான புத்தகங்கள் 20-க்கும் மேல வாங்கியிருக்கேன்” என்கிறார். அத்தனைப் புத்தகங்களையும் பத்திரமாக காரில் வைத்துக்கொண்டு கையசைத்தபடி விடைபெறுகிறார் டாக்டர் கு. கணேசன்!

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article6778145.ece?ref=relatedNews

 

  • தொடங்கியவர்

நான் என்னென்ன வாங்கினேன்?- எஸ்.ராமகிருஷ்ணன்

esra_2278406f.jpg

ஓர் எழுத்தாளன் என்ற முறையில் புத்தகக் காட்சிதான் எனது தீபாவளி, எனது பண்டிகைக் காலம். வாசகர்களைச் சந்திப்பது, தேடித் தேடிப் புத்தகம் வாங்குவது, வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களைச் சந்திப்பது என இந்த நாட்கள், ஆண்டின் மறக்க முடியாத நாட்கள்.

 
பள்ளி வயதில் புத்தகம் படிக்கத் தொடங்கினேன். ஓர் எழுத்தாளனாக என்னை உருவாக்கியது புத்தகங்களே. பள்ளி, கல்லூரிகளில் கற்றுக்கொண்டதைவிடவும் அதிகம் நான் நூலகத்தில்தான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
 
புத்தகம் வாங்குகிற ஆசை எல்லோருக்கும் வந்து விட்டிருக்கிறது. ஆனால், படிக்கிற ஆசை வெகுவாகக் குறைந்துபோயிருக்கிறது. புத்தகங்கள் ஒருபோதும் காட்சிப் பொருட்கள் இல்லை. சினிமா பார்க்க நேரம் ஒதுக்குவதுபோல, ஷாப்பிங் மாலுக்குப் போவதற்கு நேரத்தை ஒதுக்குவதுபோல, வாசிப்பதற்கென்றும் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்.
 
நமது ஆளுமையை, அறிவுத்திறனை, அனுபவத்தை மேம்படுத்திக்கொள்ள உள்ள எளிய, சிறந்த வழி புத்தகங்களே. ‘உன் நண்பன் யாரென்று சொல்; உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்’ என்றொரு பொதுமொழி யிருக்கிறது. இதற்கு மாறாக, ‘நீ என்ன புத்தகம் படித்திருக்கிறாய் என்று சொல், உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்’ என நான் சொல்வேன்.
 
வேறு எந்த உயிரினமும் தனது அறிவை, அனுபவத்தைச் சேகரித்து இன்னொரு உயிரினத்துக்குப் பரிசாகத் தருவதில்லை. மனிதன் மட்டுமே செய்கிறான். அப்படித் தனது வாழ்வனுபவங்களையும் நினைவுகளையும், கற்பனையையும் ஒன்று சேர்த்து அவன் உருவாக்கிய புத்தகங்களே இன்று நாம் அடைந்துள்ள நாகரிக வளர்ச்சிக்கான பெரும் கருவி.
 
புத்தகச் சந்தையில் ஒவ்வொரு நாளும் புத்தகங்களை அள்ளிச் செல்வது என்னுடைய இயல்பு. இன்றைக்கு வாங்கிய புத்தகங்களில் முக்கியமானவை ரே பிராட்பரி எழுதிய ‘ஃ பாரென்ஹீட் 451’, வண்ணதாசனின் ‘சின்ன விஷயங்களின் மனிதன்’, ஜெ.டி. சாலின்ஜர் எழுதிய ‘குழந்தைகளின் ரட்சகன்’, சார்லஸ் ஆலன் எழுதிய ‘பேரரசன் அசோகன்’, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை’, தி.க.சி-யின் நாட்குறிப்புகள்.
 
நேற்று 50 வயதைத் தொட்ட ஒரு பெண், எனது ‘சஞ்சாரம்’நாவலின் மூன்று பிரதிகளில் கையெழுத்து வாங்கினார். எதற்காக எனக் கேட்டேன். எனது மகன் அமெரிக்காவில் வசிக்கிறான். நேரில் உங்களைச் சந்தித்து கையெழுத்து வாங்கி, புத்தகத்தை ஏர்மெயிலில் அனுப்பச் சொல்லியிருக்கிறான். ஒன்று எனக்கு, மற்றொன்று என் மகனுக்கு, மூன்றாவது எனது மகளுக்கு என்றார்.
 
இவரைப் போன்ற வாசகர்கள் இருப்பதே எழுத்தை நம்பி வாழும் எனக்குப் பெரும் நம்பிக்கை.
 
  • தொடங்கியவர்

நான் என்னென்ன வாங்கினேன்? - எழுத்தாளர் சாரு நிவேதிதா

 

charu_2279404f.jpg

புத்தகக் காட்சியில் ‘தி இந்து’ அரங்கில் (எண்:143ஏ-143பி) எழுத்தாளர் சாரு நிவேதிதா
 

தமிழர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எட்டுக் கோடி. ஆனால், ஒரு எழுத்தாளரின் நாவல் ஆயிரம் பிரதிகளே விற்கிறது. சமீபத்தில் கொஞ்சம் முன்னேறி இன்னும் ஒரு ஆயிரம் கூடியிருக்கிறது. பக்கத்தில் உள்ள கர்நாடகத்தில்கூட லட்சம் பிரதி விற்கிறது. எனவே, என் சக எழுத்தாளர்

 
களைப் போல் புத்தகக் காட்சியை நான் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், இந்த ஆண்டு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னுடைய சமீபத்திய நாவலான ‘புதிய எக்ஸை’லில் ஏதோ ‘இம்போஸிஷன்’ எழுதுவது போல் என் கையெழுத்தைப் போட்டுக்கொண்டே இருக்கிறேன். நான் கொஞ்சம் சர்ச்சைக்குரிய விஷயங்களையும் தொடுவதால், என் நூல்களைப் பெண்கள் வெளிப்படையாகப் படிப்பதில்லை. ஆனால், இந்தப் புத்தக விழாவில் என்னிடம் கையெழுத்து வாங்கியவர்களில் பெரும்பாலும் பெண்களே.
 
வாசிப்பு மட்டுமே ஒரு சமூகத்தைப் பண்படுத்தக் கூடியது. அதில் நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். அதிலும் தமிழ் வாசிப்பு மிகவும் குறைந்திருக்கிறது. சினிமாவும் தொலைக்காட்சியும் முக்கியக் காரணங்கள். இருந்தாலும், வாசகர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை இந்தப் புத்தக விழா எனக்கு உணர்த்தியது. ஆனாலும், ஒரு சிரமம் என்ன
 
வென்றால், 800 அரங்குகளில் சுமார் 80 அரங்கு களில்தான் வாசிப்பை மேம்படுத்தக் கூடிய நூல்கள் உள்ளன. அந்த அரங்குகளைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. இருந்தும் அரங்குகளின் வரிசை எண்களை வைத்துக்கொண்டு போனேன்.
 
காலச்சுவடு, க்ரியா அரங்குகளில் நிறைய நூல்கள் வாங்கினேன். முக்கியமாக மொழி பெயர்ப்புகள். ஓரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’, ‘பனி’, ‘இஸ்தான்புல்’ எல்லாவற்றையும் ஜி. குப்புசாமி நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். பாரதிமணியின் ‘புள்ளிகள், கோடுகள், கோலங்கள்’ வாங்கினேன். குளச்சல் மு. யூசுப் மலையாளத் திலிருந்து மொழிபெயர்த்த எல்லா நூல்களையும் வாங்கினேன். குறிப்பாக, ‘திருடன் மணியன் பிள்ளை’. ஏற்கெனவே கடன் வாங்கிப் படித்து விட்டதால் இது எனக்கான பிரதி.
 
என் வாழ்நாளில் இப்படி ஒரு புத்தகத்தைப் படித்ததில்லை. திருடனாக வாழ்ந்தாலும் மணியன் பிள்ளை ஒரு ஞானி. அப்புறம், பி.ஏ. கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள்’. ஐரோப்பாவில் பிரபலமான ‘டின்டின் சாகசக் கதைகள்’வாங்க நினைத்தேன். அதன் விலை ரூ. 8,000 என்பதால் விலகிவிட்டேன். ராஜ் சிவாவின் அறிவியல் புத்தகங்களான ‘நிலவில் ஒருவன்’, ‘இறந்த பின்னும் இருக்கிறோமா?’, ராமச்சந்திர குஹா எழுதிய ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’. இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கின்றன. தினமும் போய்க்கொண்டிருக்கிறேன்.
 
  • தொடங்கியவர்

நான் என்னென்ன வாங்கப்போகிறேன்? - எஸ்.வி. ராஜதுரை, மூத்த எழுத்தாளர்

 

rajadurai_2280681f.jpg

 

புத்தகக் காட்சியில் புத்தகம் வாங்க உடல்நலம் ஒரு பொருட்டா? “இல்லவே இல்லை” என்று அழுத்தமாகச் சொல்கிறார் மூத்த எழுத்தாளரும் மார்க்ஸிய - பெரியாரிய அறிஞருமான எஸ்.வி. ராஜதுரை.

உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோவை அருகே ஒரு சின்ன கிராமத்தில் ஓய்வில் இருந்தாலும், அவருடைய மனது இந்தப் புத்தகக் காட்சியையும் புத்தகங்களையும் விட்டு நீங்கிவிடவில்லை. நண்பர்களுக்கு ஒரு பெரிய பட்டியலை அனுப்பியிருக்கிறார்.

 

“அடிப்படையில காஸ்மோபாலிடன் பார்வை கொண்டவன் நான். ஒரு மார்க்ஸியவாதியா இருந்தாலும் மார்க்ஸியத்தைத் தாண்டி எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்கணும்னு நெனைக்கிறவன்; எதிர்க் கருத்து கொண்டவங்ககிட்டயும் கத்துக்க முடியும்னு நம்புறவன். இந்தக் கத்துக்குற எண்ணம்தான், வாசிப்பு இல்லாத ஒரு நாளைக்கூடக் கற்பனை செய்ய முடியாத ஒரு பிணைப்பைப் புத்தகங்களோடு எனக்கு உருவாக்கியிருக்கு. கண்ணுல அறுவைச் சிகிச்சை செஞ்சுக்கிட்ட பின்னாடி, வாசிக்கிறது ரொம்ப சிரமமாத்தான் இருக்கு.

 

ஆனாலும், உருப்பெருக்காடியை வெச்சுப் படிக்கிறேன். படிக்காம இருக்க முடியலை. என்னைப் பொறுத்த அளவுல புத்தகக் காட்சிங்கிறது ஒவ்வொரு நாளும் புதுசாயிட்டிருக்குற உலகத்தை மேலும் புதுசா பார்க்குறதுக்கான ஜன்னல் மாதிரி. தவிர, என்னோட வாசகர்கள், தோழர்களோட உரையாடுறதுக்கு ஒரு வாய்ப்பு. நான் மொழிபெயர்த்த ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ புத்தகத்துக்கும், ஜார்ஜ் தாம்சனின் ‘மனிதசாரம்’ புத்தகத்துக்கும் இந்தப் புத்தகக் காட்சியில நல்ல வரவேற்பு இருக்குன்னு நண்பர்கள் சொல்லுறாங்க.

 

இந்த முறை பெரிய பட்டியலையே கொடுத்து அனுப்பியிருக்கேன் நண்பர்கள்கிட்ட. அதிலிருந்து ஒரு பத்துப் புத்தகங்களை மட்டும் உங்களுக்குச் சொல்றேன். டெர்ரி ஈகில்டனோட ‘மார்க்ஸிய இலக்கிய விமர்சனம்’- மொழிபெயர்ப்பு, மு. நித்தியானந்தனோட ‘கூலித் தமிழ்’, ஆ. சிவசுப்பிரமணியனோட ‘தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்’, சேகர் பந்தோபாத்தியாய எழுதிய ‘நாமசூத்திரர்கள் இயக்கம்’- மொழிபெயர்ப்பு, பாமயனின் ‘விசும்பின் துளி’, சைமன் சிபாக் மாண்டிஃபயரின் ‘ஜெருசலேம்: உலகத்தின் வரலாறு’- மொழிபெயர்ப்பு, ரே பிராட்பரியோட ‘ஃபாரென்ஹீட் 451’- மொழிபெயர்ப்பு, மயூரா ரத்தினசாமியின் ‘மூன்றாவது துளுக்கு’ சிறுகதைத் தொகுப்பு, யூமா வாசுகியோட ‘சாத்தானும் சிறுமியும்’ கவிதைத் தொகுப்பு. இதெல்லாம் அந்தப் பட்டியல்ல முக்கியமான புத்தகங்கள்.

 

இந்தப் பட்டியல்ல உள்ள மொழிபெயர்ப்பு நூல்களோட மூல நூல்களை நான் ஆங்கிலத்திலேயே படிச்சிருக்கேன். ஆனா, நானும் ஒரு மொழிபெயர்ப்பாளர்ங்கிற முறையில இன்னொருத்தர் மொழிபெயர்ப்புல அவர் என்னென்ன சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்னு தெரிஞ்சுக்குறதுல எனக்கு ஆர்வம் அதிகம்.

 

இன்னொரு முக்கியமான விஷயம், நான் கருத்தியல் சார்ந்து இயங்குபவன் என்றாலும்கூட படைப்பிலக்கியங்களின் மீதுதான் எனக்கு ஈடுபாடு அதிகம். உலகத்தைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி படைப்பிலக்கியங்கள்தான் நுட்பமாக நமக்குச் சொல்லுதுங்கிறது என்னோட எண்ணம்!”

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/article6794620.ece?ref=relatedNews

 

  • தொடங்கியவர்

நான் என்னென்ன வாங்கினேன்? - மனுஷ்ய புத்திரன், கவிஞர், பதிப்பாளர்

 

manush_2281607h.jpg

 

சென்னை புத்தக் காட்சி என்பது என்னப் பொறுத்தவரை பதிப்புத் தொழில் செய்வதற்கான ஒரு இடம் மட்டுமல்ல; அது எழுத்தாளனாக என்னை நானே புதுப்பித்துக்கொள்கிற இடம். 2003 ஆண்டில் முதன்முதலாக ஒரு பதிப்பாளனாக இந்தப் புத்தகக் காட்சிக்குள் நுழைந்தேன். ஆயிரம் ஆயிரம் முகங்களின் எல்லையற்ற அன்பை இங்கே நீந்திக் கடந்திருக்கிறேன். ஒவ்வொரு புத்தகக் காட்சிக்காகவும் இரண்டு மாதங்கள் தூக்கமற்ற இரவுகளோடு வேலை செய்துவிட்டுப் புத்தகக் காட்சியில் வந்து உயிர்மையைத் தேடி வரும் வாசகர்களின் கைகளை இறுகப் பற்றிக் குலுக்கும்போது அத்தனை களைப்பும் ஒரு கணத்தில் நீங்கிவிடுகிறது. சொல் எத்தனை மகத்தானது!

 

சென்னை புத்தகக் காட்சியை மக்களிடம் கொண்டுசெல்வதற்காகப் பல்வேறு முயற்சிகளை ஊடகங்களின் வழியே செய்துவந்திருக்கிறேன். நான் என்ன செய்தேன் என்று வெளிப்படையாக உரிமை கோர விரும்பவில்லை. ஆனால் இது ஒரு கலாச்சாரச் செயல்பாடு. மேலும், புத்தகக் காட்சியில் எழுத்தாளர்-வாசககர் சந்திப்பு ஒன்றை தினமும் ஏற்பாடு செய்துவருகிறேன். தினமும் மாலை 3.30-க்கு சங்கப்பலகை சிற்றரங்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் நவீன எழுத்தாளர்களோடு வாசகர்கள் உற்சாகமாக உரையாடுகிறார்கள்.

 

ஒரு கவிஞனாக இந்த ஆண்டு புத்தக் காட்சி எனக்கு முக்கியமான ஒன்று. என் வாழ்நாளின் மிகப் பெரிய கவிதைத் தொகுப்பான ‘அந்நிய நிலத்தின் பெண்’ இந்தப் புத்தகக் காட்சியில்தான் வெளிவந்தது. இதுபோன்ற ஒரு தொகுப்பை இன்னொரு முறை எழுதுவேனா என்று தெரியாது. என் காலத்தின், என் மனதின் கொந்தளிக்கும் கடல்களை அந்தத் தொகுப்பில் கொண்டுவந்திருக்கிறேன். வாசகர்களிடம் அதற்குக் கிடைக்கும் உற்சாகமான வரவேற்பு பெரிதும் என்னை உற்சாகமூட்டுகிறது.

 

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் கே. சந்துருவின் ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’, சீதாராம் யெச்சூரியின் ‘மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை’, வால்டர் ஐசாக்ஸன் எழுதிய ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’, ஞானக் கூத்தனின் ‘என் உளம் நிற்றி நீ’, கெயில் ஓம்வெத்தின் ‘அம்பேத்கர்: ஒரு புதிய இந்தியாவுக்காக’, டி.ஆர். நாகராஜின் ‘தீப்பற்றிய பாதங்கள்’, மனோகர் மல்கோங்கரின் ‘காந்தியைக் கொன்றவர்கள்’ எனப் பல நூல்களை வாங்கினேன்.

ஜனவரி 21 வரை நடக்கும் இந்தப் பண்பாட்டுத் திருவிழாவின் முடிவில் ஏற்படும் வெறுமையை நினைத்து இப்போதே பயப்படுகிறேன்.

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/article6799148.ece?ref=relatedNews

 

  • தொடங்கியவர்
கே.என். ராமசந்திரன், எழுத்தாளர்.
 
இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் கே.என். ராமசந்திரன். 45 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. “எழுதுறது மாதிரி பல நூறு மடங்கு படிப்பேன்” என்று சிரிக்கிறார்.
 
“தமிழ்ல இலக்கியப் புத்தகங்கள் வர்ற அளவுக்கு அறிவியல் புத்தகங்கள் அதிகம் வர்றதில்லை. ஏன்னா, தமிழ்ல அறிவியல் எழுத்தாளர்கள் ரொம்பக் குறைவு. சுஜாதாவோட அறிவியல் புனைகதைகளை விரும்பிப் படிப்பேன். அறிவியல் கட்டுரைகளை எழுதுறப்ப அனைவரும் விரும்பிப் படிக்கிற ஒரு மொழி நடையில எழுதுறது ரொம்பவும் அவசியம். யானைக்கால் நோய்க்கு மருந்து கண்டுபிடிச்ச டாக்டர் சுப்பா ராவ் இந்தியாவோட முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்ல ஒருத்தர். உலக அளவுலயும் ரொம்ப முக்கியமானவர் அவர். ஆனா, வாழ்நாள் முழுக்க அவருக்குப் புறக்கணிப்புதான் பரிசா கிடைச்சுது. அவர் போன்ற மேதைகளோட புத்தகங்கள் தொகுக்கப்பட்டு, இதுமாதிரி புத்தகக் காட்சிகள்ல பரவலா கிடைக்கணும்கறதுதான் என்னோட ஆசை.
 
எனக்கு ராஜாஜி, கல்கியின் எழுத்துக்கள் ரொம்பப் பிடிக்கும். ராஜாஜியோட ‘வியாசர் விருந்து’, மணியன் செல்வன் ஓவியங்களோட வெளிவந்திருக்கிற கல்கியோட ‘பொன்னியின் செல்வன்’னு முக்கியமான புத்தகங்களை வாங்கியிருக்கேன்” என்கிறார் கே.என்.ஆர். சந்தோஷமாக.
 
மகிழ் திருமேனி, இயக்குநர்.
 
இயக்குநர் மகிழ் திருமேனி! தன் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இந்த இளைஞர், அதிரடியான மூன்றாவது படத்தில் அழுத்தமான வெற்றி முத்திரையைப் பதித்துவிட்டார். ஆர்யா நடிப்பில் இவர் இயக்கிய ‘மீகாமன்’ திரைப்படம், வணிகப் படங்களின் தடத்திலேயே புதிய அனுபவத்தைக் கொடுத்தது. ரசிகர்கள், விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டைப் பெற்றிருக்கும் மகிழ் திருமேனி புத்தகக் காட்சியில் அரங்கங்களுக்குள் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தார்.
 
“ஒரு வாசகனா, ரசிகனா இல்லாம கலைஞனா உருவாக முடியாது. புத்தகங்கள் மூலமாகத்தான் உலகத்தை நான் தெரிஞ்சுக்கிட்டேன். திரைத் துறையை நோக்கிய என்னோட பயணத்துல, சக பயணிகளாக இருக்குறதும் புத்தகங்கள்தான்” என்கிறார். “சாகித்ய அகாடமி விருது வாங்கிய பூமணியோட ‘அஞ்ஞாடி…’, ஹெச்.ஜி. ரசூலோட ‘தலித் முஸ்லிம்’ (பாரதி புத்தகாலயம்), ராஜ் கௌதமனோட ‘கலித்தொகை - பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு’ இதுபோல நிறைய வாங்கினேன். தி. ஜானகிராமனோட ‘அம்மா வந்தாள்’ பத்தி நண்பர்கள் நிறைய சொல்லியிருக்காங்க. இந்த முறை அந்தப் புத்தகத்தை வாங்கினதில கூடுதல் சந்தோஷம்” என்று மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறார் மகிழ் திருமேனி!
 
ஜோ டி குருஸ், எழுத்தாளர்.
 
தனது ‘கொற்கை’ நாவலின் மூலம், 2013-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற ஜோ டி குருஸ், ஒவ்வொரு அரங்காகப் புத்தக வேட்டையாடிக்கொண்டிருந்தார். “கண்மணி குணசேகரன் எழுதிய ‘வந்தாரங்குடி’, தேவிபாரதி எழுதிய ‘நிழலின் தனிமை’, ஜெயமோகனோட ‘கொற்றவை’, லா.ச.ர. எழுதிய ‘புத்ர’, பிரான்சிஸ் கிருபா எழுதிய ‘கன்னி’, கார்த்திக் புகழேந்தி எழுதிய ‘வற்றாநதி’ன்னு முக்கியமான புத்தகங்களை வாங்கினேன். மன உறவுகளைப் பத்திப் பேசுற குறுநாவலான ‘ஆட்டம்’ (சு. வேணுகோபால்), குழந்தைகளோட உலகத்துக்குள்ள நம்ம கையப் பிடிச்சி கூட்டிட்டுப்போற ‘ஆதிரையின் கதைசாமி’ (கவை பழனிச்சாமி) மாதிரியான புத்தகங்களை வாங்குனதில மனசுக்குத் திருப்தி” என்றவாறு அடுத்த அரங்கை நோக்கி நகர்கிறார் ஜோ டி குருஸ்.
 
  • தொடங்கியவர்

நான் என்னென்ன வாங்கினேன்? - பிரசாந்தி சேகர், அயல்வாழ் தமிழர்

 

prashanthi_2282511f.jpg

 

உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், சென்னைப் புத்தகக் காட்சிக்குப் புத்தகம் வாங்க வருவதற்கு என்றே ஒரு வாசகர் கூட்டம் உண்டு. பிரசாந்தி சேகர் அந்த ரகம். தேர்ந்த வாசகரான பிரசாந்தி, கட்டுரையாளரும்கூட. யாழ்ப் பாணத்தில் பிறந்து, ஜெர்மனியில் வளர்ந்து, இப்போது துபையில் வசிக்கிறார். புத்தகங்கள் வாங்குவதற்காக சென்னைப் புத்தகக் காட்சிக்கு வந்தவர், தன் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

 

“பகல் முழுதும் நிலத்தை வெப்பமேற்றிச் செல்லும் வெயிலுக்கு ஒவ்வொரு இரவிலும் மழையெனப் பெய்வது எனது வாசிப்பு. புத்தகங்களுடன் உண்டு உறங்கி நடப்பவள் நான். ஜெர்மனியிலும் துபையிலும் இன்னும் பல இடங்களிலும் புத்தகக் காட்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆனாலும், சென்னைப் புத்தகக் காட்சி அனுபவம் தனி.

நான் ஒரு மூட்டைப் புத்தகங்கள் வாங்கி யிருக்கிறேன். முக்கியமானவை இவை: அம்பையின் ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’, அ. இரவியின் ‘1958’, தி. ஜானகிராமனின் ‘செம்பருத்தி’, குணா கவியழகனின் ‘நஞ்சுண்ட காடு’, எஸ். ராம கிருஷ்ணன் தொகுத்த ‘100 சிறந்த கதைகள்’ ‘சதத் ஹசன் மண்ட்டோ கதைகள்’, சே. பிருந்தாவின் ‘மகளுக்குச் சொன்ன கதை’ ” என்றார் பிரசாந்தி சேகர்.

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/article6801276.ece?ref=relatedNews

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன வாங்கினேன்..? - ராசவன்னியன், கருத்தாளர், யாழ் களம்.

 

 

photo-6458.jpg?_r=1376465505

 

 

 

குச் நஹி, ஒக்கட்டி லேது, ஒன்டுமில்லா, ஒன்றுமில்லை! :):lol:

 

 

Rasavannian

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அடே யப்பா! எல்லோரும் தமிழ் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருக்க நீங்கள் மட்டும்தான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்று பன்மொழிப் புத்தகங்கள் வாங்கியிருக்கின்றீர்கள்...!  :lol::) 

  • கருத்துக்கள உறவுகள்

அடே யப்பா! எல்லோரும் தமிழ் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருக்க நீங்கள் மட்டும்தான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்று பன்மொழிப் புத்தகங்கள் வாங்கியிருக்கின்றீர்கள்...!  :lol::)

 

யாரும் இத்திரியை கவனிக்கப் போவதில்லை என்றே நினைத்திருந்தேன், வளைச்சி கட்டி குறும்பாக எழுதியுள்ளீர்கள் சுவி, :icon_idea:

 

அடேயப்பா..!  நல்ல 'சென்ஸ் ஆஃப் ஹியூமர்' உங்களுக்கு..!! :lol::D

 

நன்றி!

 

Edited by ராசவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.