Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு வந்தார் பாப்பரசர் – புறக்கணித்தார் மகிந்த

Featured Replies

கொழும்பு வந்தார் பாப்பரசர் – புறக்கணித்தார் மகிந்த JAN 13, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Pope-Sri-Lanka-300x201.pngகத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மூன்று நாள் பயணமாக சற்று முன்னர் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

பாப்பரசரை ஏற்றிய இத்தாலி விமானம் இன்று காலை 8.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த்து.

இதையடுத்து, காலை சுமார் 9.06 மணியளவில் பாப்பரசர் விமானத்தில் இருந்து கீழ் இறங்கி இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.

அவரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும்,அமைச்சர்கள், அதிகாரிகளும், கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களும், கைலாகு கொடுத்து வரவேற்றனர்.

விமான நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் அணிவகுத்து நின்று  வரவேற்பு அளித்ததுடன், சிங்கள கலாசார மரபுகளின் படி வரவேற்பும் அளிக்கப்பபட்டது.

pope-lanka.jpg

இந்த வரவேற்பு நிகழ்வில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை.

அவருக்கு புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

முன்னதாக, கத்தோலிக்கத் திருச்சபை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றாலும், இரண்டு பேரும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று கோரியிருந்தது.

அதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/01/13/news/2850

 

 

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

திருத்தந்தைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட வரவேற்பு அளிக்கும் நிகழ்வு தற்சமயம் நடைபெற்று வருகிறது.

pop-colombo-2.JPG

இலங்கை வந்துள்ள பாப்பரசர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

இலங்கையின் புனிதர் அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராகத் திருநிலைப்படுத்தும் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றும் பரிசுத்த பாப்பரசர் வடக்கிற்கு விஜயம் செய்து மடுத்திருப்பதியில் விசேட வழிபாடொன்றை நடத்துவதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை சர்வமதத் தலைவர்களைச் சந்திக்கும் பரிசுத்த பாப்பரசர் அங்கு விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

கொழும்பிலுள்ள வத்திக்கான் அப்போஸ்தலிக்கத் தூதரகத்தில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் பரிசுத்த பாப்பரசர் பேராயரில்லத்தில் கத்தோலிக்க ஆயர் பேரவையினரைச் சந்திக்கவுள்ளார்.

இச் சந்திப்பில் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மறை மாவட்டங்களையும் பிரதிநிதித்து வப்படுத்தும் ஆயர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

pop-colombo-1.JPG

இதனைத் தவிர, பரிசுத்த பாப்பரசர் இலங்கையில் பங்கேற்கும் முக்கிய நிழ்வுகளில் இந்தியா, பிலிப்பைன்ஸ் உட்பட சர்வதேச நாடுகளின் கர்தினால்கள், ஆயர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

விமான நிலையத்தில் பரிசுத்த பாப்பரசருக்கு மகத்தான அரச வரவேற்பளிக்கப்படுவதுடன் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஆயர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பரிசுத்த பாப்பரசர் அவர்கள் கட்டுநாயக்காவிலிருந்து விசேட ஊர்தி மூலம் கொழும்பு வத்திக்கான் அப்போஸ்தலிக்கத் தூதரகம் வரை அழைத்து வரப்படவுள்ளார். கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையிலான பிரதான பாதையின் இரு மருங்கிலும் மக்கள் பரிசுத்த பாப்பரசரை வரவேற்பர்.

தேசியக் கொடிகள் பரிசுத்த பாப்பரசரின் கொடிகள், கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் கொடிகள் என மக்கள் கொடிகளை அசைத்து ஆரவாரத்துடன் பரிசுத்த பாப்பரசருக்குத் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவுள்ளனர்.

கொழும்பு 07ல் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்குச் செல்லும் பரிசுத்த பாப்பரசர் அங்கு பரிசுத்த பாப்பரசரின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வார்.

அதனையடுத்து கொழும்பு பேராயர் இல்லத்தில் கத்தோலிக்க ஆயர் பேரவையைச் சந்திக்கும் பரிசுத்த பாப்பரசர் இலங்கையின் அனைத்து மறை மாவட்டங்களையும் சேர்ந்த ஆயர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

இன்று பிற்பகல் 5.00 மணியளவில் இலங்கையிலுள்ள சர்வ மதத் தலைவர்களையும் பரிசுத்த பாப்பரசர் சந்திக்கவுள்ளார். இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன் மதத் தலைவர்கள் மத்தியில் பரிசுத்த பாப்பரசர் சிறப்புரையொன்றையும் ஆற்றவுள்ளார்.

இச்சந்திப்பினையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பரிசுத்த பாப்பரசருக்குமிடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை வருகை தொடர்பான முத்திரையொன்றும் இலங்கையின் புனிதராக திருநிலைப்படுத்தப்படவுள்ள அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரின் நினைவு முத்திரையுமே இங்கு வெளியிடப்படவுள்ளன. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை நினைவு கூரும் விசேட நாணயக் குற்றிகளும் இதன் போது வெளியிடப்படவுள்ளன.

நாளை 14 ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு தினமாகும். இலங்கைத் திருநாட்டிற்கான முதலாவது புனிதரை உத்தியோக பூர்வமாக உலக திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் அறிவிக்கும் நிகழ்வு அது.

கொழும்பு காலி முகத்திடலில் பிரமாண்டமான முறையில் அமைக்கப் பட்டுள்ள அரங்கில் இலட்சோப இலட்சம் மக்கள் மத்தியில் அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளார் புனிதராக திருநிலைப் படுத்தப்படுவார். இது இலங்கை வாழ் கத்தோலிக்க மக்கள் வாழ்நாளில் கண்டிராத அரிய நிகழ்வாகும்.

இலங்கை மற்றும் சர்வதேச ஆயர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் நிறைவேற்றும் மாபெரும் கூட்டுத் திருப்பலியின் போது இந்த புனிதத்துவ திருநிலை இடம்பெறும். திருப்பலியில் கலந்து கொள்வதற்கு இலங்கையின் அனைத்துப் பங்கு மட்டங்களிலும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதால் நாடளாவிய சகல பங்குகளிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டு இறையாசீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

அதனையடுத்து பரிசுத்த பாப்பரசர் நாளை மடுத்திருப்பதிக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு வடக்கு, கிழக்கு மறை மாவட்டங்களின் ஏற்பாட்டில் மாபெரும் மத வழிபாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் பத்து இலட்சம் மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக மன்னார் மறை மாவட்டம் அறிவித்துள்ளது. இந்த வழிபாட்டு நிகழ்வையடுத்து கொழும்பு திரும்பும் பரிசுத்த பாப்பரசர் கொழும்பிலுள்ள வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதரகத்தில் தங்கி மறுநாள் காலை தமது அடுத்த திருயாத்திரையான பிலிப்பைன்ஸ் விஜயத்தை மேற்கொள்வார்.

பரிசுத்த திருத்தந்தை கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் போவலலானையில் முன்னாள் பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசீர்வாதப்பரின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்விக் கல்லூரியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்காக 24,000 மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வத்திக்கானிலிருந்தும் பாதுகாப்பு அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். காலிமுகத்திடல் விசேட திருப்பலியையொட்டி அச்சுற்றுச் சூழல்களில் விசேட கமராக்கள் பொருத்தப் பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் இலங்கைத் திருநாட்டிற்குப் பெரும் ஆசீராக அமையும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

 

http://www.pathivu.com/news/36911/57//d,article_full.aspx

_DSC5606-600-1.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பொதுபலசேனா?...மைத்திரி ஜனாதிபதியாக வந்தவுடன் கத்தோலிக்க கொடி கொழும்பு வீதிகளில் பறக்கின்றது ..... :D

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வந்தார் பாப்பரசர் – புறக்கணித்தார் மகிந்த

 

 

மகிந்த வத்திக்கான் வந்திருந்தபோது

தனது காலில் பாப்பரசரை குனியச்செய்தார் :(  :(

அந்த பாவம் தான் தோல்வியைத்தந்துவிட்டது என்ற வெட்கமோ தெரியவில்லை... :(

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வந்தார் பாப்பரசர் – புறக்கணித்தார் மகிந்த

 

 

மகிந்த வத்திக்கான் வந்திருந்தபோது

தனது காலில் பாப்பரசரை குனியச்செய்தார் :(  :(

அந்த பாவம் தான் தோல்வியைத்தந்துவிட்டது என்ற வெட்கமோ தெரியவில்லை... :(

 

இருக்கும் இருக்கும்.......ஆனால் கொழும்பில மகிந்தாவுக்கு பல பேர் குனியினம்....காலில் விழுயினம்

இலங்கைக்கு எப்போது பாப்பரசர் வந்தாலும் அவரை வருமாறு அழைத்த நாட்டின் தலைவர் அப்போது ஆட்சியில் இருப்பதில்லை. அடுத்து ஆட்சிக்கு வருபவரால் தான், பாப்பரசர் வரவேற்கப் படுகிறார்" இதற்கு கீழே இன்னொருவர் இவ்வாறு எழுதியிருக்கிறார் "1970ல் டட்லி சேனநாயக்க பாப்பரசர் 5ம் சின்னப்பரை அழைத்தார் ஆனால் வரவேற்றதோ பிரதமர் ஸ்ரீமாவோ.
1995ல் விஜயதுங்க வத்திகானிடம் பாப்பரசர் 2ம் அருளப்பரிடம் அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால் ஆட்சி மாறி வரவேற்றது சந்திரிக்கா..
2015 தற்போது நேரில் சென்று முன்னாள் சனாதிபதி மகிந்த அழைப்பை விடுத்தார் ஆனால் வரவேற்றது சனாதிபதி மைத்ரி..."

 

இணைய கருத்து ஒன்று  உண்மையா .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். சண்டே லீடர் இதை செய்தியில் போட்டிருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.