Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலை: சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தும் இலங்கையின் நிராகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை: சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தும் இலங்கையின் நிராகரிப்பு

12 பெப்ரவரி 2015

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்றும் இலங்கையில் அறுபது வருடமாக தொடர்வது இன அழிப்பு என்றும் உலகமெல்லாம் போராட்டங்களும் தீர்மானங்களும் நிறைவேற்றியபோது ஈழத் தமிழ் தலைவர்கள் தேர்தலிலும் அரசியல் நோக்கங்களுக்காக சில ஊடகங்களிலும் பேசிய இனப்படுகொலை குறித்த கதைகளைக்கூட முறையான விதத்தில் வெளிக்கொணரவில்லை. சபைகளில் பேசவில்லை. உலகளவில் எடுத்துச் செல்ல அஞ்சினர். தமது பதவிகள் பறிக்கப்படும் என்ற அச்சத்தால் அதை தந்திரோபாயம் என்று கூறினர். இது ஒடுக்கப்படும் ஓர் இனத்தின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது மக்களுக்குச் செய்யும் அநியாயம்.

காலம் கடந்தேனும் வட மாகாண சபை இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் காலம் தாழ்த்தியமையினால் ஏற்பட்ட பாதகத்தையும் இங்கு மறுக்க முடியாது. இனப்படுகொலை என்ற சட்ட ரீதியான தீர்மானம் ஒன்றை எட்டுவதில் ஏற்பட்ட கால தாமதமும் இதுவரை காலமும் சில தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இனப்படுகொலை என்று கூறத் தயங்கியதும் ஓடுக்கு முறையாளர்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதையும் மறுக்க முடியாது. ஆனால் ஓர் இனத்திற்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை எளிதாக மறுக்கவோ மறைக்கவோ கூடியதல்ல என்பதனாலும் அதற்கு என்றாவது நீதி கிடைக்க வேண்டும் என்பதனாலும் இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது.

காலம் தாழ்த்தியமை தொடர்பிலும் எடுக்கப்படும் இந்த தீர்மானத்திற்கு எதிராக அல்லது அதனை பலவீனப்படுத்தும் முறையில் பேரினவாதத்தின் குறீயீடான சிங்கக் கொடியை ஏந்தியமை அந்தப் பேரினவாதத்தை கொண்டாடும் சுதந்திரதினத்தில் பங்குபற்றியமை என்பன விமர்சனத்திற்குரியது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியமையை தமது பதவி இருப்பை தக்க வைத்துக்கொள்ளும் தேர்தலுக்கான நடவடிக்கையாக கையாளாமல் இனப்படுகொலைக்கான நீதியை பெறும் நடவடிக்கையாக முன்னெடுக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.

தமிழீழம் வேண்டாம் என்று நீதிமன்றங்களில் சத்தியக்கடதாசி வாசிப்பதிலும் இராணுவ மய நீக்கத்தை நாங்கள் கோரவில்லை என்று கூறுவதிலும் காட்டிய அக்கறை இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, ஏன் தமிழீழத்ததைக் கோரினோம், இராணுவத்தை ஏன் வெளியேற்ற வேண்டும் போன்ற நியாயங்களை எடுத்துரைப்பதில் காட்டவில்லை. உண்மைகளை மறைத்து சிங்கள மக்கள் வெறுப்பார்கள் என்று பொய் கூறுவதன் மூலம் ஓர் தீர்வை எட்டலாம் என நினைப்பது சிங்களப் பேரினவாதிகள் செய்யும் அரசியலுக்கு ஒப்பானது. இனப்படுகொலையை சந்தித் அறுபதுவருட இன அழிப்பை எதிர்கொள்ளும் ஓர் இனம் தன்னை ஒடுக்கும் இனத்திடன் உண்மைகளை மறைத்து நிலையான ஓர் தீர்வை எட்ட இயலாது. அது பேரினவாத்திற்குத் துணைபோகும் சரணாகதி அரசியலே.

சில நேரங்களில் ஓர் அநீதியை குறித்துப் பேசாமல் மௌனமாகவும் அதை ராஜதந்திரம் என்றும் சொல்வதன் மூலம் மாபெரும் அந்த அநீதிக்கு துணைபோக நேரிடுகிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த இனப் படுகொலையை மறைத்துக் கொண்டு பயங்கரவாதிகளை அழித்தோம் என்று இன்னமும் யுத்த வெற்றியை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போற்றிப் பாடிக் கொண்டு தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணுவோம் என்பதும் வடக்கையும் தெற்கையும் இணைப்போம் என்பதும் தமிழ் மக்களை நுட்பமாக ஒடுக்கும், சிங்களப் பேரினவாதத்தை பாதுகாக்கும் ஓர் நடவடிக்கையே.

ஈழத் தமிழ் மக்களின் தலைமைகளாய் இருப்பவர்களில் ஒரு சிலரும் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை இன அழிப்பு தொடர்கிறது என்பதை குறித்து இனியாவது ஆராய்ந்து பார்க்க வேண்டும். குறிப்பாக சுமந்திரன் போன்றவர்கள் இனப்படுகொலை என்று சொல்ல முடியாது என்றனர். வட மாகாண சபையின் பிரேரணையை நிராகரிப்பதாகவும், அதற்கான காரணங்களில் ஒன்றாக போர் முடிந்த பிறகு எந்த தமிழ் அரசியல் தலைவரும் இனப்படுகொலை என்று கூறப்படுவது குறித்து தன்னுடனோ அரசுடனோ விவாதிக்கவில்லை என்றும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்தன சொல்லியுள்ளார்.

கடந்த முறை மாகாண சபையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்த வடக்கு முதல் இப்போது எப்படி இனப்படுகொலை என்கிறார் என்றும் அவர் கேட்கிறார். இதற்காகத்தான் இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிக்கிறதா? இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதன் மூலம் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை ஒன்றை நாட வேண்டும் என்பதையும் இலங்கையில் நடத்தப்படும் விசாரணையின் முடிவுகள் எப்படி அமையும் என்பதையும் இலங்கை அரசு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. யுத்த வெற்றியைப் போற்றிப் பாடும் இலங்கையின் புதிய அரசு அந்த யுத்தத்தில் இழைக்கப்பட்ட இனப்படுகொலையை எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்?

யுத்தக் குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்துவதாக குறிப்பிடும் இலங்கை அரசு அதனை இன அழிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அது கடுமையான பிரேரணை என்றும் கூறுகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக காலம் காலமாக ஆட்சி செய்த இலங்கை அரசுகளும் மகிந்த ராஜபக்ச அரசும் எடுத்த நடவடிக்கைகள் குறித்த ஆதார பூர்வமான தீர்மானம் கடுமையானவை என்கிற இன்றைய இலங்கை அரசு தமது முன்னைய அரசுகள் தமிழ் மக்கள்மீது மேற்கொண்டவை கொடுமையான இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தபடி ஒப்புக்கொள்கின்றனர். சர்வதேச விசாரணைக்கு மறுப்பதன் மூலமும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஒப்புக்கொள்கிறது.

ஆட்சிகள் மாறினாலும் யுத்த வெற்றி என்பது இலங்கை அரசுக்கு என்றைக்கு பெருமை பயப்பது என்ற அடிப்படையில் யுத்த வீரத்தை குறித்து புதிய அரசும் பேசிக் கொண்டிருக்கிறது என்ற அடிப்படையில் சிங்கள பேரினவாத அரசாகவே தொடர்ந்தும் இயங்குகிறது என்ற அடிப்படையில் வட மாகாண சபை கோரும் சர்வதேச பொறிமுறைக்கு முன்னைய அரசு மாத்திரமல்ல புதிய இலங்கை அரசும் பதில் அளிக்க வேண்டிய கடப்பாட்டிற்கு ஆளாகிறது.

இந்த நாட்டின் உண்மையான பிரச்சினைக்கு நேர்மையான நிலையான தீர்வு காணப்பட வேண்டும் எனில் தமிழ் இனத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளை ஒப்புக்கொள்வதிலிருந்தே அது சாத்தியம் ஆகும். அந்த அநீதிகளை ஒப்புக்கொள்வதிலிருந்தே தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பெறமுடியும். ஏனெனில் அந்த உரிமைகளை மறுக்கவே அநீதிகள் அரங்கேற்றப்பட்டன. எனவே உண்மைக்குப் பின்னரே இத்தீவு இயல்புக்குத் திரும்பும். யாரையும் பழிவாங்கும் நோக்கம் தமிழர்களிடமில்லை. நீதியை பெற்று இத் தீவில் இன அழிப்பை நிறுத்துவதே ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் ஏக்கம்.

தமிழ் மக்கள் இழந்த லட்சக்கணக்கான உயிர்களையும் அவர்களின் மாபெரும் இழப்புக்களையும் அதனால் பல தலைமுறைகளுக்கு ஏற்படுத்திய தாக்கங்களையும் மறைத்துக் கொண்டு பயங்கரவாதிகளை அழித்த படையினர் என்று தொடர்ந்தும் யுத்த வீரத்தைக் குறித்து பேசிக்கொண்டிருப்பது மிகப் பெரும் அநீதியல்லவா? இதுவும் இன ஒடுக்குமுறையின் மிகப் பெரிய வெளிப்பாடல்லவா?

யுத்த வெற்றி என்றும் போற்றிப் பாடடப்படும் என்றும் அதில் பங்கெடுத்த இராணுவம் உன்னதமானவர்களாக கொண்டாடப்படுவர்கள் என்றும் கூறப்படும் பட்சத்தில் நாட்டில் ஒரு பகுதியில் வசிக்கும் ஓர் இனத்திற்கு எதிராக அந்த யுத்தம் நிகழ்த்தப்பட்டமை மற்றும் அவ் இனம் அதில் இனப்படுகொலை செய்யப்பட்டது என்றும் அந்த விடயங்கள் குறித்த முழுமையான ஆதாரத்துடன் அந்த மக்களின் பிரதிநிதிகளால் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு அவ்வளவு இலகுவா புறக்கணிக்க முடியாது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116494/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.