Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசத்தின் உதவியிலான உள்ளூர் விசாரணையை ஏற்கமாட்டோம்

Featured Replies

7851_content_Suresh-Premachandran_1.jpg

 

 

சர்வதேச அனுசரணையுடனான  உள்ளூர் விசாரணையை   ஏற்றுக்கொள்வதென்பது கூட்டமைப்பின் முடிவல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

"ஐ.நா.விசாரணையாளர்கள் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம் எனவும் ஐ.நா. மனிதவுரிமை பேரவையின்  மேற்பார்வை யின் கீழ் உள்ளக விசாரணை ஒன்று நடைபெறுமாயின் அவ்விசாரணையை நாம் வரவேற்போம்' எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்திற்கு கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்  பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதாவது ;

 

 இவ்வாறான முடிவுகள் எடுப்பதற்கான எந்த கலந்துரையாடலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுடனோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ நடத்தப்படவில்லை.  சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தல்ல என்பதுடன் இது அவரின் சொந்த தனிப்பட்ட கருத்தாகும். இதேபோல் சுதந்திரதின விழாவில் கலந்துகொள்வது என்பதிலும் அவர்கள் தனிப்பட்ட முடிவையே எடுத்தார்கள்.

 

 உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்வதென்பதும் ஐ.நா. இலங்கைக்குள் வந்து விசாரணைகளை நடத்த வேண்டுமென்பதும், விசாரணையின் காலத்தை நீடித்து ஐ.நா. விற்கான அறிக்கையை வெளியிடாமல், காலதாமதம் ஆக்குவதற்கான உத்திகளே. இவ்வாறான உத்திகளை கையாள்வதென்பது ஒருவருட காலம் விசாரணை செய்து உருவாக்கப்பட்டு எதிர்வருகின்ற மார்ச் மாதம் வெளிவருகின்ற அறிக்கையை வெளியிடாமல் தடைசெய்வதற்கு சமனானதாகும்.  

 

மார்ச் மாதம் அறிக்கை வெளியிடாது காலதாமதப்படுத்தப்பட்டால் பின்னர் எப்பொழுதும் வெளியிடப்படாது என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் கிடையாது.  இவ்விசாரணைக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது ஒரு வருடத்திற்கு மாத்திரமே போதுமானது. இந்த விசாரணை நீடிக்கப்படவேண்டுமாயிருந்தால் நிதியாதாரங்கள் கிடைக்காதென்பதும் இதற்கான நிதியை வழங்குவதற்கு உறுப்பு நாடுகள் முன்வருவார்களா என்பதும் தெளிவற்றதாகவே இருக்கின்றது.

 

2014 ஆம் ஆண்டு இவ்விசாரணைக்கு நிதியில்லை என்ற காரணத்தைக் காட்டி பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்தன. ஆனாலும் அன்று பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா.வின் சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இன்று சர்வதேச விசாரணை முடிவுற்று மார்ச் மாதம் அதன் அறிக்கை வெளியிடப்படவுள்ள சூழ்நிலையில், வருகின்ற ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தைக் கலைத்து, ஜூன் மாதம் அதற்கான தேர்தலை நடாத்த இருப்பதால் அதற்கு முன்னதாக மார்ச் மாதம் இவ்வறிக்கை வெளியிடப்பட்டால் மகிந்த ராஜபக்ஷ அவ்வறிக்கையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்.  ஆகவே இதனை தாமதப்படுத்த வேண்டும் என்பதே இப்பொழுது முன்வைக்கப்படும் வாதமாகும்.

 

இது அர்த்தமற்றதோர் வாதமாகும். பாராளுமன்றம் கலைக்கப்படுமா? கலைக்கப்படாதா? தேர்தல் எப்பொழுதுவரும்? 2015 இலா அல்லது 2016 இலா என்பதெல்லாம் கேள்விகளாகவே உள்ளன.  இந்நிலையில், நடக்குமா நடக்காதா என்ற தேர்தலுக்காக விசாரணை அறிக்கையை ஒத்திப்போட இணங்குவதென்பது எம் தலையில் நாமே மண்ணை அள்ளிக்கொட்டுவதற்கு சமமாகும்.

 

தேர்தல் பிற்போடப்படுமாயின், மார்ச்சுக்கு வெளிவராத விசாரணை அறிக்கையானது, செப்டெம்பருக்கும் வெளிவராமல் பின்னர் 2016 மார்ச்சுக்கும் வெளிவராமல் போகலாம். தேர்தலோடு சர்வதேச அறிக்கையை தொடர்புபடுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே விசாரணை அறிக்கையை வெளியிடாமல் காலத்தை நீடிப்பதும் ஒத்திப்போடுவதும் நிரந்தரமாகவே சர்வதேச விசாரணை அறிக்கைக்கு மூடுவிழா செய்வதற்கு சமனானது.

 

உள்ளூர் விசாரணை என்பது காலத்தை இழுத்தடிக்கும் செயலேயன்றி வேறெதுவும் இல்லை. இதற்கு முன்னர் உள்ளூர் விசாரணைக்கு ஏற்பட்ட கதியை மக்கள் அறிவார்கள். ஆகவே உள்ளூர் விசாரணை என்பதும் தமிழ் மக்களை ஏமாற்றி சர்வதேச விசாரணை அறிக்கையை ஒழிக்கின்ற செயற்பாடாகும். இவ்வாறான அறிக்கைகளை சுமந்திரன்  ஏற்றுக்கொள்வதென்பது அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும். இத்தகைய செயற்பாட்டினை கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய அங்கத்துவக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article.php?local/qnqehshlge561655a0ce820019083mnm5bcf39c3028ebc66f356bf7ecurzk#sthash.ArrXKvzp.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்க்கூட்டமைப்பின் தலைமைகள் ஐக்கியநாடுகளின் மனித உரிமைச்சபையின் அறிக்கை பற்றி அகமொன்றும் புறம் ஒன்றும் கூறக்கூடாது. ஒபாமாவுக்கான தமிழர்கள். 

http://www.tamilsforobama.com/Letters/TNA_should_be_Truthful_to_Tamils_on_NHRC_Report_on_Sri_Lanka.html

 

 

letter.jpg

 

தமிழ்க்கூட்டமைப்பின் தலைமைகள் ஐக்கியநாடுகளின் மனித உரிமைச்சபையின் அறிக்கை பற்றி அகமொன்றும் புறம் ஒன்றும் கூறக்கூடாது. ஒபாமாவுக்கான தமிழர்கள். 

அடுத்த மாதம் ஜெனிவாவில் வரஇருக்கும் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் பற்றிய விசாரணை அறிக்கையை தள்ளிப்போடுவதற்கு இலங்கைக்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆதரவு தன்மையை கூறிக்கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுமான நிலைப்பாட்டினை காட்டிக்கொள்வது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று தவறாகும்.

ஐரோப்பாவில் உள்ள அரச சார்பற்ற அமைப்பு ஒன்றுடன் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, ஜெனீவாவில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றிய விசாரணை அறிக்கை உரிய நேரத்தில் வெளியாகுமா என வினாவியோது, இலங்கை அரசு விசாரணை அறிக்கை வெளியாவதை ஒத்தி வைக்குமாறு கோரியிருந்தனர். நாம் இதுபற்றி தமிழ்க்கூட்மைப்பு என்ன கூறியது என்று கேட்போது, அவர்கள் (தமிழ்க்கூட்மைப்பு) அதற்கு அதுபற்றி அவர்கள் இலங்கை அரசின் கோரிக்கையை மறுதலிக்கவிலை (We don't mind) என்று கூறினார்கள். இதனால் அவ் விசாரணை அறிக்கை வெளியாவது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளனர். எனவே அப்படி ஒத்தி வைக்க கோரிய தமிழ் கூட்டமைப்பின் தலைமை யார் என்ற கேள்வி எழுகின்றது. 

மேலும் நேற்றைய தினம் 16.02.2015 யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையில் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள திரு சுமந்திரன் அவர்கள், நிபந்தனையின் படி இலங்கை அரசாங்கம் நடந்து கொண்டால் விசாரணை அறிக்கை வெளியாவதன் காலத்தினை நீட்டிக்கலாம் என்றும் சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்ளக விசாரணைக்கு அதரவு தெரிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இச்செய்தியானது, போரில் கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களுக்கும், காணாமல் போன உறவுகளுக்கும் மற்றும் போரில் இடம்பெயர்ந்து சென்ற அனைத்து உறவுகளுக்கும் கடுமையான விசனத்தினையும், கவலையையும் ஏற்படுத்தும்.

உதயன் பத்திரிகையில் வெளியாகிய விடையங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு:

http://www.onlineuthayan.com/News_More.php?id=884463874815750775

1. 'ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை இடம்பெறுவதற்கு உத்தரவாதம் கொடுத்தால் அதை நாம் வரவேற்போம்.'
(இது சர்வதேச விசாரணையை நிராகரிக்கும் செயலாகும். இந்த உள்நாட்டு விசாரணை கம்போடியாவிலும் நடைபெற்று தோல்வி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது என ஒபாமாவுக்கான தமிழர்கள் தெரிவித்துள்ளனர்)

2. 'ஐ.நா. விசாரணையின்போது விசாரணையாளர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. அவர்களுடைய காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணையை நடத்த இலங்கை அரசு இடமளித்தால்இ காலத்தை நீடிக்க நாம் இணக்கம் தெரிவிக்கலாம்.'

வெளிவகார அமைச்சர் திரு மங்கள சமரவீர அவர்கள் வாசிங்டனில் வைத்து அமெரிக்க ராஜதந்திரிகளிடம் பேசும் போது வெளிநாட்டு விசாரணையாளர்களுக்கு 07.02.2015 அன்று அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்தே திரு சுமந்திரனும் மேற்சொன்ன விடையத்தினை கூறியிருப்பதானது திட்டமிட்ட ஒரு செயற்பாட்டினையும், விசாரணை அறிக்கையை வெளியாவதை ஒத்திவைப்பதற்கு உள் இணக்கம் ஏற்படுத்திவிட்டு விடப்படும் அறிக்கை போன்றே தோன்றுகின்றது.

மேலும் திரு மங்கள சமரவீர அவர்கள் வாசிங்டனில் வைத்து அமெரிக்க ராஜதந்திரிகளிடம் பேசும் போது 1965ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்க்கூட்டமைப்புத் தலைமைகள் சுதந்திர நிகழ்வில் கலந்து கொண்டமையானது, புதிய அசராங்கத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், தாம் எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு அவர்கள் ஆதரவுத்தன்மையை வெளிப்படுத்துவதாகும் இருப்பதாக கூறினார்.

இப்படியாக தமிழ் கூட்மைப்பின் தலைமை நடந்துகொள்வதால், சர்வதேச விசாரணையின் மூலம் நீதியையும் அரசியல் தீர்வினையும் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்து மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தினையும், எமது மக்களின் இன்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்ல உழைத்த புலம்பெயந்த மக்களுக்கும் இதற்காக உழைத்த பல சர்வவேச அமைப்புக்கள் ஆகியற்றிக்கு மிகுந்த ஏமாற்றத்தினையும், சலிப்பினையுமே ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமாவுக்கான தமிழர்கள்.



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
suresh-premachandran-300-news-4.JPG

ஐ.நா.விசாரணையாளர்கள் நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம்' எனவும் 'ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை ஒன்று நடைபெறுமாயின் அவ்விசாரணையை நாம் வரவேற்போம்' எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஷ் க.பிரேமச்சந்திரன் நிராகரித்துள்ளார்.

   

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதாவது:- 'ஐ.நா.விசாரணையாளர்கள் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம்' எனவும் 'ஐ.நா. மனிதவுரிமைக் கவுன்சிலின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை ஒன்று நடைபெறுமாயின் அவ்விசாரணையை நாம் வரவேற்போம்' எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

 

ஆனால் இவ்வாறான முடிவுகள் எடுப்பதற்கான எந்தக் கலந்துரையாடலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுடனோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனோ நடத்தப்படவில்லை. சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தல்ல என்பதுடன் இது அவரின் சொந்த தனிப்பட்ட கருத்து என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

 

சுதந்திரதின விழாவில் கலந்து கொள்வது என்பதிலும் அவர்கள் தனிப்பட்ட முடிவையே எடுத்தார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். உள்ளக விசாரணையை ஏற்றுக் கொள்வதென்பதும், ஐ.நா. சிறீலங்காவிற்குள் வந்து விசாரணைகளை நடத்த வேண்டுமென்பதும் விசாரணையின் காலத்தை நீடித்து ஐ.நாவிற்கான அறிக்கையை வெளியிடாமல், காலதாமதம் ஆக்குவதற்கான உத்திகளே. இவ்வாறான உத்திகளை கையாள்வதென்பது ஒருவருடகாலம் விசாரணை செய்து உருவாக்கப்பட்டு வருகின்ற மார்ச் மாதம் வெளிவருகின்ற அறிக்கையை வெளியிடாமல் தடைசெய்வதற்குச் சமனானதாகும்.

 

இது மார்ச் மாதம் வெளியிடப்படாமல் காலதாமதப் படுத்தப்பட்டால் பின்னர் எப்பொழுது வெளியிடப்படும் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் கிடையாது. இந்த விசாரணைக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது ஒரு வருடத்திற்கு மாத்திரமே போதுமானது. இந்த விசாரணை நீடிக்கப்பட வேண்டுமாக இருந்தால் நிதியாதாரங்கள் கிடைக்காதென்பதும் இதற்கான நிதியை வழங்குவதற்கு உறுப்பு நாடுகள் முன்வருவார்களா என்பதும் தெளிவற்ற விடயங்களாகவே இருக்கின்றது.

 

2014ஆம் ஆண்டு இவ்விசாரணைக்கு நிதியில்லை என்ற காரணத்தைக் காட்டி, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்தன. ஆனாலும், அன்று பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று சர்வதேச விசாரணை முடிவுற்று மார்ச் மாதம் அதன் அறிக்கை வெளியிடவுள்ள சூழ்நிலையில், வருகின்ற ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜூன் மாதம் அதற்கான தேர்தலை நடத்த இருப்பதால் அதற்கு முன்னதாக மார்ச் மாதம் இவ்வறிக்கை வெளியிடப்பட்டால் மஹிந்த ராஜபக்‌ஷ அந்த அறிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார். ஆகவே இதனைத் தாமதப்படுத்த வேண்டும் என்பதே இப்பொழுது முன்வைக்கப்படும் வாதமாகும்.

 

இது அர்த்தமற்றதோர் வாதமாகும். நாடாளுமன்றம் கலைக்கப்படுமா கலைக்கபடாதா? தேர்தல் எப்பொழுதுவரும்? 2015இலா அல்லது 2016இலா என்பதெல்லாம் கேள்விகளாகவே உள்ளன. இந்நிலையில், நடக்குமா நடக்காதா என்ற தேர்தலுக்காக விசாரணை அறிக்கையை ஒத்திப்போட இணங்குவதென்பது எம் தலையில் நாமே மண்ணை அள்ளிக்கொள்வதற்குச் சமமாகும். தேர்தல் பிற்போடப்படுமாயின், மார்ச்சுக்கு வெளிவராத விசாரணை அறிக்கையானது, செப்ரெம்பருக்கும் வெளிவராமல், பின்னர் 2016 மார்ச்சுக்கும் வெளிவராமல் போகலாம். தேர்தலோடு சர்வதேச அறிக்கையை தொடர்புபடுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

 

எனவே விசாரணை அறிக்கையை வெளியிடாமல் காலத்தை நீடிப்பதும் ஒத்திப்போடுவதும் நிரந்தரமாகவே சர்வதேச விசாரணை அறிக்கைக்கு மூடுவிழா செய்வதற்குச் சமனானது. உள்ளூர் விசாரணை என்பது காலத்தை இழுத்தடிக்கும் செயலேயன்றி வேறெதுவும் இல்லை. இதற்கு முன்னர் உள்ளூர் விசாரணைக்கு ஏற்பட்ட கதியை மக்கள் அறிவார்கள். ஆகவே உள்ளூர் விசாரணை என்பதும் தமிழ் மக்களை ஏமாற்றி சர்வதேச விசாரணை அறிக்கையை ஒழிக்கின்ற செயற்பாடாகும்.

 

இவ்வாறான அறிக்கைகளை சுமந்திரன் ஏற்றுக்கொள்வதென்பது அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகும். இத்தகைய செயற்பாட்டினை கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய அங்கத்துவக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=126718&category=TamilNews&language=tamil

என்னப்பா இது கூட்டமைப்பா கூத்தமைப்பா ? ஆளுக்கொரு அறிக்கை நாளுக்கொரு கோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
அன்றைக்கு மாற்று கருத்தாளர்கள் இவர்களை பார்த்து கூத்தமைப்பு என்று எழுதியபோது கோபமாக இருந்தது இன்றைக்கு இவர்கள் நடக்கிறதைப்பார்த்தால் .......  :rolleyes:
 
  • கருத்துக்கள உறவுகள்

 

அன்றைக்கு மாற்று கருத்தாளர்கள் இவர்களை பார்த்து கூத்தமைப்பு என்று எழுதியபோது கோபமாக இருந்தது இன்றைக்கு இவர்கள் நடக்கிறதைப்பார்த்தால் .......  :rolleyes:

 

 

இதைத்தான் தொடர்ந்து  எழுதி  வருகின்றேன்

முக்கியமான விடயங்களில் முடிவெடுக்கும்   போது தான்   தோன்றித்தனமாக  

ஒரு சிலரின் தெரிவாக முடிவெடுக்கக்கூடாது....

அது 

அமைப்பையே  ஆட்டம் காணவைத்துவிடும்

அதுவும் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் 

மிகவும் நிதானமாக இருந்திருக்கணும் தலைவர்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“...சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தல்ல என்பதுடன் இது அவரின் சொந்த தனிப்பட்ட கருத்து என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்....”

 

மேலேயுள்ள கருத்து சுரேஷின் தனிப்பட்ட கருத்தா, கூட்டமைப்பின் கருத்தா என்பதை எங்கே, யாரிடம்  போய் உறுதிசெய்துகொள்ள வேண்டும்?

 

பேசாமல் கூட்டமைப்பில் ஆளுக்கொரு ரப்பர் ஸ்டாம்ப் செய்து வைத்துக் கொள்ளலாம் - “இந்தக் கருத்து சுத்தமான நெய்யில் தயாரிக்கப்பட்ட கூட்டமைப்பின் கருத்து”

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமாக பேச்சாளர் சுரேஸ் என்பதால் அவரின் கருத்தை உத்தியோகபூர்வ கருத்தாக கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

உள்ளூர் விசாரணையை ஏற்றுக் கொள்வது தமிழினத்திற்கு செய்யும் துரோகம்- கஜேந்திரகுமார்

 

gajendran%20p_CI.jpg

 

உள்ளூர் விசாரணை அறிக்கையை சிலர் ஏற்றுக் கொள்வதென்பது தமிழினத்திற்கு செய்கின்ற மாபெரும் துரோகம்  என தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (17-02-2015) காலை 10.30 மணியளவில் அவரது யாழ். அலுவலகத்தில் இடம் பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


 அவ்வாறு துணை போகின்றவர்கள்  தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும்வடக்கு மாகாண சபையில் தமிழர் தாயகத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழினத்தின் கருத்தாக இது இருக்கின்றது. ஆனால் இங்கு இராணுவம் குற்றம் இழைக்கவில்லை என்றும் இனப்படுகொலை என்ற ஏதும் நடக்கவே இல்லை என அரசாங்கம் மறுத்து வந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் வெளியிடப்படவிருந்த இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையை பிற்போட வேண்டுமென ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் கோரியதன் அடிப்படையில், மேற்குலக நாடுகளின் விருப்பத்திற்கமைய ஆட்சி மாற்றமும் ஏற்பட்டதையடுத்து மேற்படி விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு நடைபெற்றதும் இனப்படுகொலை தான் என்பதனை திடமாகக் கூறியுள்ள நிலையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசும் அதனை மறுதலித்து இங்கு ஒன்றுமே நடைபெறவில்லை எனக் கூறி நியாயப்படுத்துவதற்குவதற்கு முயற்சித்து வருகிறது.

இவ் அறிக்கையினை பிற்போடுவதற்கு உதவியாக இருந்த சர்வதேசம் இதற்கும் உதவ வேண்டும். ஆயினும் இந்த அறிக்கை பிற்போடப்பட்டாலும் அக்காலப்பகுதியில் மூன்று பிரதான விடயங்களைக் குறிப்பிடுகின்றோம்.

    இதில் முதலாவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று தொடர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இரண்டாவதாக ரோம் சாசனப்படி சர்வதேச நீதிமன்றத்தினூடாக இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது இன அழிப்பென்பது சர்வதேச சட்ட ரீதியில் மன்னிப்பு வழங்க முடியாத குற்றமாகும். தாயகத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதனை வடக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

    மூன்றாவது பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் ஐ.நா விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்கி விடக் கூடாது. ராஜபக்ச அரசின் காலத்திலும் எவ்வாறு நாம் சார்ந்த கட்சி உள்ளக விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அதே போல் தற்போதுள்ள அரசின் காலத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியலில் உள்ள முக்கியத்துவத்தை விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இங்கு ஓர் ஆட்சி மாற்றத்தையே விரும்பினார்களே தவிர தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையில்லை.

யுத்த வெற்றியில் தமக்கே அதிக பங்கு உண்டு எனக் கூறி வருகின்ற தற்போதைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையிலான புதிய அரசின் உள்ளக விசாரணையை எவ்வாறு நீதியானதென ஏற்றுக் கொள்ள முடியும்.இதற்கு உடந்தையாக இருக்கும் தமிழ் அரசியல் தலைமைகளை இனத் துரோகிகளாகக் அடையாளப்படுத்துவதற்கும் தயங்கமாட்டோம்.

எனவே மக்கள் போராட்டத்தின் மூலமாகவே இவற்றையெல்லாம் வெற்றி கொண்டு தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும் அநீதிகளுக்கும் நிலைத்து நிற்கக் கூடியதாக நீதி நியாயம் வழங்கப்பட வேண்டும்.ஆனால் அதற்கு தயாரில்லாத மேற்குலக நாடுகள் தமது தேவைகளுக்கு ஏற்பவே செயற்படுவதனை இந்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளதன் ஊடாகவே விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே தமிழினத்திற்கு நிலைத்து நிற்கக் கூடிய நீதியான தீர்ப்புக் கிடைத்தால் மட்டுமே சரியான நேரிய பாதையில் செல்ல முடியும் என தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116680/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.