Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டுக்கு ஜநா உதவி பெற்றால் போராட்டம் வெடிக்கும் JVP

Featured Replies

குடாநாட்டுக்கான விநியோகத்திற்கு ஐ.நா.வின் உதவி பெறப்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் -ஜே.வி.பி. கடும் எச்சரிக்கை

யாழ். குடாநாட்டு மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ள அரசாங்கம் ஐ.நா.வின் ஒத்துழைப்பைப் பெற முயற்சிக்குமானால் அதன் மூலம் எமது நாட்டின் இறைமைக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுமென கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., ஏ-9 வீதியைத் திறக்காமல் மாற்று வழி மூலம் அந்த மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றது.

ஐ.நா.வின் தலையீட்டுக்கோ, ஏ-9 வீதியைத் திறப்பதற்கோ ஜே.வி.பி. ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும், அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ள முற்பட்டால் தென்னிலங்கையிலுள்ள மக்களை அணி திரட்டி அதனை முறியடிக்கத் தவறப்போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஜே.வி.பி. செய்தியாளர் மாநாட்டில் அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

ஏ-9 வீதியை மூடுவதற்கு அரசு எடுத்த தீர்மானத்தை ஜே.வி.பி. அங்கீகரிக்கின்றது. அதற்கு ஆதரவும் அளிக்கின்றது. எவ்வாறாக இருந்த போதிலும் ஏ-9 வீதி மூடப்பட்டதால் யாழ். குடாநாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணவு நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக எழுந்துள்ள பிரச்சினை பாரதூரமாக நோக்க வேண்டியுள்ளது. குடாநாட்டு மக்கள் முகம் கொடுத்திருக்கும் இந்தப் பாரிய உணவு நெருக்கடி குறித்து ஜே.வி.பி. ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றது. இவ்விடயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு உணவுத் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடப்பாடாகும்.

ஏ-9 வீதி மூடப்பட்டதால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பது அப்பாவி பொதுமக்களே ஆவர். இவ்வீதியைத் திறந்து விடுவதால் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளே மேலோங்க முடியும். ஏ-9 வீதியைத் திறக்கக் கோருபவர்கள் விடுதலைப் புலிகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுமே ஆவர்.

அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதென்பது நாட்டின் இறைமை, ஆதிபத்தியம் என்பவற்றை ஐ.நா. உட்பட சர்வதேச சமூகத்துக்கு தாரை வார்ப்பதாகவே அமைந்துவிடும். உள்ளூரில் இயங்கும் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் நோக்கம் எமது மண்ணின் இறைமையைக் காட்டிக் கொடுப்பதாகவே அமையும். குறிப்பிட்ட பணிக்கு மட்டுமே ஐ.நா. இவ்விடயத்தில் தலையிடும் என்று அரசு தெரிவிப்பது தூர நோக்கற்றதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

சைப்பிரஸ் தேசிய நெருக்கடியின் போது மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மூன்று மாதங்களுக்கு மட்டுமே என்று அங்கு சென்ற ஐ.நா. படை 32 வருடங்களாக இன்று வரை அந்த நாட்டில் தனது அதிகாரத்தைப் பிரயோகித்த வண்ணமிருக்கின்றது. இலங்கையிலும் இவ்வாறானதொரு அவலம் ஏற்பட எந்த விதத்திலும் இடமளிக்க முடியாது.

யாழ். குடாநாட்டு மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க மனிதாபிமான அடிப்படையில் செயற்படவே ஐ.நா. உதவி பெறப்படுகிறது என்ற கூற்றை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. மனிதாபிமான அடிப்படையிலாக இருந்தாலென்ன வேறு தேவைக்காக இருந்தாலென்ன ஐ.நா.வோ, வேறு சர்வதேச அல்லது உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களோ எமது நாட்டு உள்விவகாரத்தில் தலையிட அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இதனையும் மீறி அரசு பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ளுமானால் அரசுக்கு எதிராக மக்கள் பேரணியை திரட்டிப் போராடி முறியடிக்கத் தவறமாட்டோம்.

http://www.thinakkural.com/news/2006/11/9/...s_page14856.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.