Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிட்லரிடமிருந்து யூத மக்களின் விடுதலையை நினைவுபடுத்தும் நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஹிட்லரிடமிருந்து யூத மக்களின் விடுதலையை நினைவுபடுத்தும் நாள் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
 
66935a.jpg
 
இன்று,(27.01.15) யூதமக்கள் வாழும் பல நாடுகளிலும்,ஜேர்மன் நாட்டதிபதி ஹிட்லரின் கொடுமையிலிருந்து,யூதமக்கள் விடுதலையான முதலாம் நாள் நினைவுபடுத்தப் படுகிறது., எழுபது வருடங்களுக்குமுன், போலாந்து நாட்டிலிருந்த,கொடுமையான ஜேர்மன் சித்திரைவதைமுகாமான ஆஷ்விட்ச் என்ற இடத்திலிருந்து,கிட்டத்தட்ட 50.000-100.000 யூத மதக்கைதிகள்,இரஷ்யப்படைகளால் விடுவிக்கப்பட்டதை இன்று யூத மக்கள் நினைவுபடுத்துகிறார்கள்.
ஆஷ்விட்ஷ் முகாமின் முன்னால் இன்று இரவு,உலகத்தலைவர்களாலும்,முகாமில் கைதிகளாயிருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட முதியோர்களாலும் அந்த முகாமில் நடந்த பல கொடுமையான சரித்திரத்தை நினைவுகூரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 
அந்தச் சித்தரைவதை முகாமிலிருந்து,யூதமக்கள் இரஷ்யப் படையால் விடுவிக்கப் பட்டதுபோல், வேறு பல முகாம்களிலிருந்தும் அடுத்த சில மாதங்களில் பல்லாயிரக்கணக்கான யூத மதக்கைதிகள்,பிரித்தானிய,அமெரிக்கப் படைகளால் விடுவிக்கப் பட்டார்கள்.,
 
ஹிட்லர் ஆடசிக்கு வந்ததும்,(30.01.1933) ‘தூய்மையான ஆரிய இனத்தை’ விருத்திசெய்யப் பலவழிமுறைகளையும் கண்டுபிடித்தான். ஆரம்பத்தில், ஜேர்மன் மக்களின் கடுமையான உழைப்பின் தயவில் வாழும் மனநோயளிகள்.அங்கவீமானவர்கள்,அத்துடன்,ஹோமோசெக்சுவல்ஸ்கள்,என்று கிட்டத்தட்ட 200.000 மக்கள்; தூய்மையான ‘ஆரியஇன’ விருத்திக்குத் தேவையற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களை கொலை செய்தான். அதைத் தொடர்ந்து அவனின் செயல்களை எதிர்க்கும் புத்திஜீவிகள்,மாhக்;சிய சிந்தனையுள்ளவர்கள்.ஜஹோவாவிற்னஸ் கிறிஸ்தவர்கள் என்று பலர் எண்ணிக்கையற்ற விதத்தில் கொலை செய்யப் பட்டார்கள்.
 
அதைத் தொடர்ந்து,ஜேர்மனிய இனத்தைவிடத் தாழ்ந்த இனங்களாக அவன் கணித்த வேறு பல்லின மக்கள், ஜிப்சிகள், அதே கெதிக்கு ஆளானார்கள். ஹிட்லரின் பார்வையில், போலாந்து,இரஷ்ய,செக்கோசெலவாக்கிய மக்களும், தாழ்ந்த இனமாகக் கணிக்கப் பட்டிருந்தார்கள். ,ஐரோப்பாவின் பெரும்தொகையான-யூத இனமக்கள்-போலாந்தில் வாழ்ந்தார்கள். 1939ல் போலாந்தைப் பிடித்தான். அங்குவாழ்ந்த மூன்று கோடிக்கும் அதிகமான யூதமக்கள் ஹிட்லரால் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். அங்கு ஒருசொற்ப நாட்கள் யூத எதிர்ப்பாளர்கள் ஹிட்லரின் நாஷிப் படையுடன் வார்ஷோ நகரிற் போராடி அழிந்தார்கள். 1940ல் பிரான்ஸ் நாட்டையும் தன் பிடிக்குள் கொண்டுவந்த ஹிட்லர்,அவனின் பார்வையில்’ தாழ்த்தப்பட்ட இனமான’ இரஷ்யா பக்கம் திருப்பினான்.
 
அத்துடன்,பலகாலமாகவே,பிரித்தானியருக்கு இந்தியா என்றொரு பெரியநாடு காலனித்துவ அதிகாரத்துக்குள் இருப்பதுபோல் தனக்கும் இரஷ்யாபோன்ற பெரியநாடு வசப்படவேண்டுமென்ற கனவு கண்டான்.அத்துடன், இரஷ்யாவில்.கார்ல் மார்க்ஸின் (யூதன்!) அரசியற் கோட்பாடு, (கம்யூனிசம்!) அரசுசெய்வதை அடியோடு அழிக்கவும் கங்கணம் கட்டினான்.இரஷ்யாவின் பல நகரங்களை ஆக்கிரமித்த அவன் படைகள் இரண்டு மூன்று வருடங்கள் மனிதர்கள் நினைத்துப் பார்க்க மடியாத கொடுமையெல்லாம் இரஷ்யர்களுக்குச் செய்தது.
 
இரஷ்யாவில் அவன் படைகள் செய்த அக்கிரமத்தாலும், பல நகரங்கள் பிடிபட்டு ஆக்கிரமிப்புக்குள்ச்; சிக்குண்ட படியாலும், எங்கும் ஓடமுடியாது பனியில் அகப்பட்டும் கிட்டத்தட்ட 25கோடி இரஷ்ய மக்கள், இரஷ்யாவின் பல நகர்களிலிருந்தும் இரண்டு,மூன்று வருடகாலகட்டத்தில் இறந்து மறைந்தார்கள்.இவர்களிற் பெரும்பாலோர் யூத மதத்தைச் சேர்ந்தவர்களாகும்.
 
அதைத்தொடர்ந்து,இரஷ்ய,போலாந்து கைதிகளைச் சிறைப்படுத்த, அவர்களின் கையாலேயே ஆஷ்விட்ச் வித்திரவதைமுகாமை 1940ல் அமைத்தான். 1941ம் ஆண்டுதொடக்கம்,ஆரம்பத்தில்,50.000-200.000வரையான கைதிகளை சிறைபிடித்துச் சித்திரவதை செய்து கொலை செய்ய ஆஷ்விஷ்சில் 7000 மேலான ஜேர்மன் சிறையதிகாரிகள் வேலைசெய்தார்கள்.
 
ஆப்படியான பல முகாம்களில்,; யூத மக்களுக்கு,’விசேட’ தண்டனை கொடுக்க முடிவு செய்தான். ஐரொப்பாவில் அவன் ஆக்கிரமித்த பதினெட்டு நாடுகளிலிருந்தும், (நோர்வே, பிரானஸ், இரஷ்யா, ஹொலண்ட,போன்ற பல) யூதமக்கள், ஜேர்மனியில் பல இடங்களிலும் அமைக்கப்பட்ட சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டு,அவர்களை ‘நச்சுவாயு’மூலம் பல்லாயிரக்கணக்கில் கொலை செய்தான். ஆஷ்விட்ச் முகாமில் மட்டும் ஒன்றரைக்கோடி மக்கள்,(இரஷ்யர்,புத்திஜீவிpகள், போலாந்து நாட்டவர் உட்பட) கொலை செய்யப் பட்டதாக ஆவணங்கள் சொல்கின்றன.
 
ஐரோப்பாவில் பல நாடுகளிலும் வாழ்ந்த யூதமக்களில் (கிட்டத்தட்ட,ஆறு கோடியினர்), 60 வீதமானவர்கள் ஹிட்லராற் கொலை செய்யப் பட்டார்கள். இதில் ஒன்றரைக்கோடியினர் குழந்தைகளாகும். கைதிகள் சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டதும், அவர்களுக்கு அடையாள இலக்கம் கொடுத்து, வயது, வலிமைத்தரம்,ஆண.;பெண் என்று பிரிக்கப்பட்டு,முதியோரும்,குழந்தைகளும் உடனடியாகக் கொலைசெய்யப்பட்டார்கள்.வலிமைபடைத்தோர் சிறையில் கொடுக்கப்படும் வேலைகளுக்கும்,வெளியில் ரெயில்வேத் தடங்கள் போடும் வேலைகளுக்கும் பயன்படுத்தப் பட்டார்கள்.ஒருவேளை உணவாக வெறும் கஞ்சியோ அல்லது ஒரு துண்டு பாணோ கொடுக்கப்பட்டது.இவர்கள் ஆண்பெண் என்ற வித்தியாசமின்றி மிருகங்கள்மாதிரி அடைக்கப்பட்டார்கள்.மலசலவசதி எதுவும் கிடையாது.
இதனால் நோய் நொடியால் பல்லாயிரம் கைதிகள் இறந்தார்கள்.
 
 
 
 
 
ஹிட்லரின் மிகக் கொடுமையான வைத்தியர்களில் ஒருத்தனான டொக்டர் மிங்கிலே என்பவன் தங்களிடம் பிடிபட்ட யூதக்கைதிகளை பலவிதமான,கொடுமையான வைத்திய பரிசோதனைக்கு ஆளாக்கினான்;.
உணவில்லாமல் ஒரு மனிதன் எத்தனை நாட்கள் உயிர்வாழமுடியும்? மனிதனின் இரத்தக்குழாயை வெட்டி இரத்தத்தைக்கசிய விட்டால் ,அந்த மனிதனின் உடலில் உள்ள குருதி ஒட்டுமொத்தமாக வெளியேறி அவன் இறக்க எவ்வளவு நேரம் எடுக்கும்? மனித உடலின் முக்கிய உறுப்புக்களை ஒவ்வொன்றாக அகற்றினால் அதன் விளைவுகள் என்ன? யூதர்கள்,பொதுவுடமைவாதிகள் போன்றோரின் மூளைளை வெட்டிப்;பார்த்து,அவை எப்படி அமைந்திருக்கின்றன? என்பது போன்ற பல பயங்கரப் பரிசோதனைகளை மிங்கிலே முன்னெடுத்தான்தான்.
 
கற்பவதிகளான சிறைக்கைதிகளின் வயிற்றைப் பிழந்து அந்தச்சிசு எவ்வளவு காலம்,உணவின்றி உயிரோடு வாழும் என்று பரிசோதனை செய்தான். இரட்டைக்குழந்தைகளுக்கு வித்தியாசமான பயங்கரக் கிருமிகளை உள்கொடுத்து அவை எப்படி உடம்பில் வளர்கிறது?எப்படி மனிதக் கலங்களைச் சிதைக்கிறது என்பதுபோல் பல தரப்பட்ட, மனித குலம் கற்பனைசெய்ய பயங்கரமான மருத்துவப் பரிசோதனையை அவன் செய்தான்.
யூதமக்களின் உடற்தோலை உரித்தெடுத்து காலணி போட்டு மகிழ்த்தார்கள். இளம் பெண்களைப் பல்விதமான பாலியற் கொடுமைகளுக்கு உட்படுத்திக்கொலை செய்தார்கள்.
 
 
 
பணம் படைத்த யூதர் சிலர்; ஹிட்லரின் கொடுமை ஆரம்பிக்க முதலே அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் ஓடிவிட்டார்கள்.
 
ஹிட்லரின் அழிவுக்குப் பின். 8.5.1947ம் ஆண்டு ஜேர்மனி; நேட்டோ(அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ) நாடுகளின் கண்காணிப்புக்குள் அடக்கப் பட்டது. பெரும்பாலான யூதர்கள் கடவுளால் யூதருக்குக்கொடுக்கப்பட்ட ‘புனிதபூமியாக’ அவர்களாற் கருதப்பட்ட பாலஸ்தீனத்திற்கும் கணிசமான பகுதியினர் அமெரிக்காவுக்கும் சென்றார்கள்.
 
அதுவரையும் அங்கு காலனித்துவ ஆதிக்கம் செய்த பிரித்தானியபடை வெளியேறியதும்,14.5.1948ல் இஸ்ரேல்;நாடு,யூதருக்கான(கடவுளாற் கொடுக்கப்பட்ட புனிதபூமி) நாடாகத் தனது சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியது.
1947-48 வரைக்குமான கால கட்டத்தில,ஜேர்மனியில் ஹிட்லரின் கொடுமைக்குத் தப்பிய 70.000 யூதமக்கள் இஸ்ரேல் நாட்டில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
 
அதே கால கட்டத்தில,பாலஸ்தீனத்தில் தொடரும் அரசியற் பிரச்சினைகளால்,பணம் படைத்த 30.000 பாலஸ்தீனியர் வேறு பல நாடுகளிலும் போய் வசதியாக வாழ்க்கை அமைத்துக்கொள்ள,கிட்டத்தட்ட 200.000 பாலஸ்தினிய அராபிய மக்கள் சில நாட்களிலேயே தங்கள் நாட்டில் அகதிகளாக்கப் பட்டார்கள். பல நாடுகளிலுமிருந்து அகதிகளாகப் பாலஸ்தினியா போன யூத மக்கள் தங்களுக்கென்று ஒரு நாடான’இஸ்ரேலில் வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, தங்கள் பாலஸ்தினியத் தாய்நாட்டிலிருந்து அகதிகளாக அண்டைய முஸ்லிம் நாடுகளுக்குச் சென்ற பாலஸ்தீனிய மக்கள்.சிரியா,ஜோர்தான்,லெபனான் போன்ற நாடுகளில் இன்னும்,அறுபத்தாறு வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். 2013ம் ஆண்டின் கணிப்பின்படி பாலஸ்தினிய அகதிகளின் தொகை 1.524.698ஆகும்.
 
பலநாடுகளிலுமிருந்து, இஸ்ரேலுக்கு வரும் யூதமக்கள் மதத்தால் ஒன்றுபட்டாலும், மொழியால், நிறத்தால், இனத்தால் வேறுப்பட்டவர்கள். ஆனால் பாலஸ்தீனிய மக்களோ மொழியால், இனத்தால், சமயத்தால் ஒன்று பட்டவர்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு ஸ்திரமான நாட்டை எடுத்துக்கொள்ள இன்னும் முடியாமலிருக்கிறது. யூதரின் இஸ்ரேல் பிகடனப் பட்ட அடுத்த நாள் பக்கத்து அராப் நாடுகள் இஸ்ரேலடன் போர் தொடுத்தன். தோல்வி கண்டன.
 
அதேபோல் 1966லிலும் ஆறுநாட்போர் இஸரேலுக்கும் அராப் நாடுகளுக்கும் நடந்தது.இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் வெற்றி பெற்றது. பாலஸ்தீனிய மக்கள்,இஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப் பட்ட நாளிலிருந்து பல நாடுகளிலம், அவர்கள் வாழும் பாலஸ்தீனத்தினத்திலும் சொல்லவொண்ணாத் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
 
யூதமக்கள் ஹிட்லரால் அனுபவித்த இனஅழிப்புக் கொடுமையை முன்னெடுத்து நினைவு விழாக்கள் வைக்கும்; பிரித்தானிய பத்திரிகைகளும்,புத்தி ஜீவிகளும, கடந்த கால கட்டத்தில் நடந்த பல தரப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை நினைவு கூரவேண்டும் என்று ஒரு ஆங்கிலேய புத்திஜீவி பி.பி.சி. நிகழ்ச்சி ஒன்றில் கேட்டார்.
 
‘1915ம் ஆண்டு காலகட்டத்தில் ஒட்டமான் (துருக்கிய) ஏகாதிபத்தியம்,ஒன்றரைக்கோடி கோடி ஆர்மேனிய சிறுபான்மை மக்களைக்கொலை செய்து இனஅழிப்பு செய்தது. அதேமாதிரி பல்லாயிரக்கணக்கான கிரேக்க மக்கள்,அசிரிய மக்களையும் இன ஒழிப்பு செய்தது.
1803 தொடக்கம் 1847 வரையிலான கால கட்டத்தில்,பிரித்தானிய ஏகாதிபத்தியம் தாஸ்மேனியாவைச் சேர்ந்த ஆதிக்குடிகளான’பார்லிவர் மக்களை ஒருத்தர் மிகுதியிpல்லாமல் அழித்து முடித்தது.
1900-1902-காலகட்டத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த ‘போயர்’ சண்டையில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் கறுப்பு இனமக்களைச் சிறைப்பிடித்து,ஜேர்மன் ஆஷ்விட்ச் சித்திரவதை முகாம்மாதிரி ஒன்றில் வைத்து அழித்து முடித்தது. இவையெல்லாம் நினைவு படுத்தப்படவேண்டியவை’ என்று அவர் குறிப்பிட்டார்.
 
அத்துடன் மேற்கத்திய நாடுகள் பல இன்று இந்தநாளை நினைவு படுத்த ஒன்று சேரும்போது,யூத மக்களின் விடுதலைக்கு வித்திட்ட இரஷ்யா,அரசியற் காரணங்களால் இந்த நிகழ்ச்சிகளிலிருந்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
 
யூதமக்களைப்போல் பல கொடுமைகளை ஜேர்மனியரால் அனுபவித்த போலாந்து மக்கள், போருக்குப்பின் ஸ்டாலினின் பொதுவுடமை ஆட்சியை எதிர்த்தபோது நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஹிட்லர்காலத்தில் யூதர் மட்டுமல்லாமல் பல இன, பல சமயத்தைச்சேர்ந்த சாதாரண அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கண்டிக்கப்படவேண்டியவை. இனி அப்படி நடக்கக்கூடாது, நடக்க விடக்கூடாது என்ற சபதத்தைச் செய்யப் பண்ணக்கூடியவை.
 
ஆனாலும் இன்றும் பல கொடுமைகள், இனஅழிப்பு நடவடிக்கைகள் மதரீதியாகவும் இனரீதியாகவும் இன்று பலநாடுகளிற் தொடர்கிறது. நாங்கள் வாழும் கால கட்டத்தில் பலவிதமான கொடுமைகளையும் அழிவுகளையும் சாதாரணமக்கள் பல நாடுகளிலும் எதிர்நோக்கும்போது,சிலவேளைகளில், மேற்கு நாடுகள் தெரிந்தும் தெரியாமலிருக்கும்போது நீதிக்குக்குரல் கொடுக்கவும் ‘பணவசதி தேவையா என்று கேட்கத்தோன்றுகிறது.
 
1994ம் ஆண்டு சித்திரை மாதம் தொடக்கம்,ஆடிமாதம் வரைக்குமான நூறு நாட்களில்; ஆபிரிக்காவின் ருவாண்டா என்ற நாட்டில்,பெரும்பான்மையினமான ஹ¬ட்டு இனத்தினர் சிறுபான்மை மக்களான ருட்சி இனமக்களை,இனஒழிப்பு செய்ய மனித வேட்டையாடினார்கள்.கிட்டத்தட்ட ஒருகோடி ருட்சி மக்கள் கொலை செய்யப் பட்டதாகக்; கணிக்கப்பட்டது.அது அந்த மக்களின் ஒட்டுமொத்தத்தொகையில் எழுபது விதமாகும். ஓட்டு மொத்த ருவாண்டா நாட்டின் சனத் தொகையில் 20 விகிதமாகும். அத்தனை மக்களும் மிருகத்தமாகக் கொலை செய்யப் பட்டார்கள். ருவாண்டா பெல்ஜிய நாட்டின் காலனிகளில் ஒன்று. நூறு நாட்கள் அங்கு நடந்த இனஒழிப்பு மிருகவெறியைத்தடுக்க அவர்களோ,அல்லது ஐக்கியநாடுகள் சபையோ ஆனமான நடவடிக்கை ஒன்றும் எடுக்கவில்லை
 
கடந்தவருடம் பாலஸ்தீனிய பாடசாலைகளுக்குக் குறிவைத்து, இஸ்ரேலிய விமானங்கள்; குண்டுபோட்டுக் குழந்தைகள் இறக்கும்போது மேற்கத்திய’மனிதம்’ ஓரக்கண்ணால் விடயங்களை விமர்சித்ததைப் புத்திஜீகள் அறிவார்கள்.
 
2013ம் ஆண்டு பங்குனி 20-22 திகதிகளில்; பர்மாவில் முஸ்லிம் மக்களுக்கெதிராக புத்தமத இனவெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தில் 20 முஸ்லிம் மக்கள் இறந்தார்கள். 60க்கும்மேல் படுகாயமடைந்தார்கள்.பல்லாயிரக்கணக்கானோர் வீடுவாசல்களையிழந்தார்கள். ஆனாலும் சமாதான தேவதையாக மேற்கத்திய அரசுகளால் முடிசூடப்பட்டு நோபல் பரிசும் பெற்ற பர்மியத் தலைவி, ஆன் சான் சு கியு,இந்தக் கொடுமைகளுக்கெதிராக வாய்திறக்கவேயில்லை!.
 
மேற்கத்திய மனித உரிமை ஸ்தாபனங்கள் பர்மியத்தலைவியின் ‘மவுனத்திற்கெதிராகக் குரலெழுப்பினார்கள். ‘அடுத்த வருடத்தில்(2014) பர்மாவின் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் புத்த மதத்தினரின் ஆதரவுதேவையென்பதால் அவர் மவுனமாகவிருக்கிருக்கிறார்’ என்ற வதந்தி அடிபட்டது. சமாதானமும் மனித உரிமையும் ஒரு நாட்டு மக்கள் அத்தனைபேருக்கும் உரிமையானது. அது ஆதிக்கவெறியின் தேவைகளால்; மறைக்கப் படுகிறதா?
 
1983ம் ஆண்டு இலங்கையில் யு.என்.பி அரசு,இனஅழிப்பு வெறியுடன் தமிழர்களைக் கொழும்பு தெருக்களில,உயிருடன் எரித்தபோது,லண்டன் வாழ் தமிழர்கள் நாம், வானதிரக் கதறி பிரித்தானிய அரசிடம் முறையிட்டோம்.
 
அது நடந்து சில மாதங்களில்; அன்றைய இலங்கை அரசின் தலைவர்களிலொருத்தராகவிருந்த,அமைச்சர் அத்துலக் முதலி லண்டனுக்கு,மார்க்கிரட் தச்சரின் அரசிடம் ‘உதவி’ கேட்க வந்திருந்தார்.அதைத் தொடர்ந்து, ‘தமிழர்களை அடக்க’,இலங்கையில் அதிரடிப்படை உருவானது. தமிழர்களின் நிலை அடுப்பிலிருந்து தவறி நெருப்பில் விழுந்த கதையானது.
இலங்கையின் கிழக்குப்பகுதியில், தமிழ் இளைஞர்கள் அதிரடிப்படையால்பிடிக்கப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவங்களும் (1985-86) உண்டு.அதைத்தொடர்ந்த பல அழிவு நிகழ்வுகள் எழுத்திலடங்காதவை.
 
பிரித்தானிய புத்திஜீவி கேட்டதுபோல், ‘ஏன் சிலவற்றை மட்டும் தூக்கிப்பிடித்து முதன்மை கொடுக்கிறோம்’?
 
உலகில் எந்தவொரு மனிதனும் வைத்திருக்கும் பெரிய செல்வம் அவனது நேர்மையுணர்வும்,மனிதத்துக்குப்போராடும் தார்மீக உந்துதலுமாகும்.அவை எப்போதும் எங்கேயும் ஒருசிலரிடமாவது தர்ம ஒளியாக எரிந்துகொண்டிருக்கும்.அந்த சத்திய ஒளியை அணையாமல்வளர்ப்பது மனித உரிமைவாதிகளின் அளப்பரிய கடமையாகும்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.