Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமரணம்

Featured Replies

திருமலை துணை தளபதி லெப் கேணல் அறிவு வீரமரணம் 09112006

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்ப இண்டைக்கா?

எங்கு? எப்போது ?

இன்னும் இணையங்களில் வெளிவரவில்லையே :D

தகவல் உண்மையாயின் அந்த மாவீரனுக்கு என் வீரவனக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு? எப்போது ?

இன்னும் இணையங்களில் வெளிவரவில்லையே :D

தகவல் உண்மையாயின் அந்த மாவீரனுக்கு என் வீரவனக்கம்

இன்றைய சண்டே ரைம்சில் திருகோணமலைக் கடலில் வன்னிக்கு எடுத்துச் சென்ற மாவீரனின் உடல், சேதமடைந்த படகு ஒன்றில் எடுக்கப்பட்டதாகப் போட்டிருக்கின்றது. அது திருமலை துணை ராணுவத் தளபதி அறிவு என்று இக்பால் அத்தாஸ் சொல்கின்றார். ஆனால் அது எவ்வகை உண்மையானது என்று தெரியவில்லை.

இது குறித்து பிபிசிப் பேட்டியில் இளந்திரையன் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் மாவீரன் பற்றிய விபரம் ஏதும் சொல்லவில்லை.

col12.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது குறித்து பிபிசிப் பேட்டியில் இளந்திரையன் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் மாவீரன் பற்றிய விபரம் ஏதும் சொல்லவில்லை.

அந்த விளக்கம்தான் என்ன? அது உண்மையா, இல்்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனகபுரம் மாவீர துயிலும் இல்ல புனிதவிதை குழியில் லெப். கேணல் அறிவு வித்துடல்

[ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2006, 19:05 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்கா இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் அறிவின் வித்துடல் இன்று ஞாயிற்றுக்கிழமை புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.

வாகரைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (09.11.06) சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் லெப். கேணல் அறிவு வீரச்சாவடைந்தார்.

லெப். கேணல் அறிவு வீரவணக்க நிகழ்வுகள் இன்று புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சியில் நடைபெற்றன.

புதுக்குடியிருப்பு

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பண்பாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுகிழமை முற்பகல் 11.50 மணிக்கு நடைபெற்ற லெப். கேணல் அறிவு வீரவணக்க நிகழ்வுக்கு முல்லைத்தீவு மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவையைச் சேர்ந்த இ.செல்வநாயகம் தலைமை தாங்கினார்.

லெப்.கேணல் அறிவின் வித்துடலுக்கு அவரது துணைவியார் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன.

பின்னர் நடைபெற்ற வீரவணக்க கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு ஆற்றிய உரை:

அரசியல், புலனாய்வு மற்றும் இராணும் மூன்று நிலைகளிலும் நேர்த்தியாகச் செயற்பட்டவர் லெப்.கேணல் அறிவு. போராளிகளை இனங்கண்டு போரியல் நுணுக்கங்களைப் புகட்டி பல்வேறு போரியல் வெற்றிகளுக்காக அவர் உழைத்தவர். அவர் மக்களுடன் சிறப்பாக பழகும் பாங்கு கொண்டவர். மேலும் போராளிகளை நேர்த்தியாக வழிநடத்துவதிலும் வல்லவர்.

சிறிலங்கா அரசும் அதன் கட்சிகளும் இணைந்து தமிழ் மக்களை முற்றாக அழிக்கும் முடிவையெடுத்துச் செயற்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

சர்வதேசம் எமக்கான தீர்வினைப் பெற்றுத் தரும் என்ற நிலைப்பாட்டினைக் கைவிட்டு எமக்கான தீர்வினை நாமே பெற்றுக்கொள்ள ஒன்றிணைந்து எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்றார் கேணல் பானு.

திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் ஆற்றிய உரை:

மக்களையும், போராளிகளையும், விடுதலைப் போராட்டத்தையும் பற்றியுமே தொடர்ந்தும் சிந்தித்துச் செயற்பட்டு வந்தவர் லெப்.கேணல் அறிவு.

சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எந்தக் காலத்திலும் தீர்வினைத் தரப்போவதில்லை. அதற்கான மாற்றத்தினை நாமே ஏற்படுத்தவேண்டும். எமது சுதந்திரத்தின் பின்னரே சர்வதேசம் எம்மைத் திரும்பிப் பார்க்கும்.

எமது விடுதலையை விரைவுபடுத்துவதற்கு நாம் செய்கின்ற பணியே லெப்.கேணல் அறிவுக்கு நாங்கள் செய்கின்ற வணக்கமாகும் என்றார் எழிலன்.

ஆசிரியர் பீதாம்பரமும் வீரவணக்க உரை நிகழ்த்தினார்.

கட்டளைத் தளபதி கேணல் தீபன், சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி கோபித், தளபதி செல்வராசா, குட்டிசிறீ மோட்டார் படையணி மகளிர் தளபதி பவநிதி, போக்குவரத்துக் கண்காணிப்புப்பிரிவுப் பொறுப்பாளர் தீபன் மற்றும் துறைசார் பொறுப்பாளர்கள், போராளிகள் மக்கள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்டு லெப். கேணல் அறிவுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

கிளிநொச்சி

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் அமுதன் தலைமையில் லெப்.கேணல் அறிவு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

தமிழீழ நிதித்துறையின் நிதிப் பொறுப்பாளர் தமிழ்க்குமரன் பொதுச்சுடரினை ஏற்ற லெப். கேணல் அறிவின் வித்துடலுக்கு அவரது துணைவியார் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் லெப்.கேணல் அறிவுவின் வித்துடலுக்கு மலர்மாலை அணிவித்தனர்.

இந்நிகழ்வில் வீரவணக்க உரையாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு,

லெப். கேணல் அறிவு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பொறுப்பு மிக்க தளபதியாக திகழ்ந்தார். மிகச் சிறந்த போராளியாகவும் இராணுவப் புலனாய்வாளனாகவும் மக்கள் மத்தியில் மதிப்புப் பெற்ற போராளியாகவும் அவர் விளங்கினார் என்றார்.

கட்டளைத் தளபதி கேணல் தீபன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன், தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி உள்ளிட்டோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.

புலனாய்வுத்துறை தளபதிகளில் ஒருவரான கபிலம்மான் மலர் வணக்கத்தினை தொடங்கி வைத்தார்.

கிளிநொச்சியில் வீரவணக்கக்கூட்டம் முடிந்த பின்னர் லெப். கேணல் அறிவின் வித்துடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் கனகபுரம் மாவீரர்துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு முழு இராணுவ மரியாதைகளுடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.

புதினம்

கோழைகள், நேருக்கு நேர் போர் செய்ய இயலாமல்...இப்படி :angry:

மாவிரனுக்கு வீரவணக்கம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாவீரன்தான் யாழ் A9 பாதை திறக்கப்படும்போது சிங்கள இராணுவ தளபதியொருவருக்கு கைகொடுத்து வரவேற்கும் புகைப்படத்தில் நின்றவர் என்னு அறிகின்றேன்..

கடற்சமரில் மீட்ட சடலத்தை கடற்படையினர் கையளித்தனர்

திருகோணமலை,நவ.12

திருகோணமலை கடற்பரப்பில் சல்லிக்கும் கோணேஸ்வரத்திற்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற கடற்சமரின்போது மீட்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினரின் சடலம் செஞ்சிலுவைச் சர்வதேச குழுவிடம் கையளிக்கப்பட்டது.

திருகோணமலை கடற்படைத்தளத் தில் வைத்து இச்சடலம் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் கையளிக்கப்பட் டது.

கிழக்கில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் சடலத்தைத் படகு மூலம் வன்னிக்கு எடுத்துச் சென்ற சம யம் அந்தப் படகுகள் மீது தாம் தாக்கு தல் நடத்தியதாகவும்

இச்சம்பவத்தின் போது விடுதலைப் புலி உறுப்பினரின் சடலம் மீட்கப்பட் டது என்றும் கடற்படையினர் தெரி வித்தனர்.

குறிப்பிட்ட சடலமே செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிடம் நேற்றுக் கைய ளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளிடம் கையளிப் பதற்காக இச்சடலம் செஞ்சிலுவைச் சர்வதேச குழுவினால் வன்னிக்கு எடுத் துச் செல்லப்பட்டது. (1151)

http://www.uthayan.com/Pages/news/today/18.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.