Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவரைப் போய் அடுத்த டெண்டுல்கர்னு சொல்லிட்டாரே ரமீஸ் ராஜா!

Featured Replies

இவரைப் போய் அடுத்த டெண்டுல்கர்னு சொல்லிட்டாரே ரமீஸ் ராஜா!

 

பெங்களூரு: ரசிகர்களைப் பொறுத்தவரை, நீங்கதான் அடுத்த சச்சின் டெண்டுல்கர்... இது பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா விராத் கோஹ்லியைப் பார்த்துக் கூறிய வார்த்தை... நடப்பு உலகக் கோப்பைப் போட்டி ஒன்றின் இறுதியில், கோஹ்லியிடம் இப்படிக் கூறியிருந்தார் ரமீஸ். ஆனால் இவரைப் போய் அடுத்த சச்சின் என்று சொல்லி விட்டாரே என்று முகம் சுளிப்பது போலத்தான் நடந்து வருகிறார் கோஹ்லி.

35cr4sy.jpg

எதுக்கெடுத்தாலும் கோபம், முரட்டுத்தனம், சண்டையில் இறங்குவது என்று கோஹ்லியைப் பற்றி புகார் வராத நாளே இல்லை என்பது போல அடாவடியாக நடந்து வருவது கோஹ்லியின் குணாதிசயமாக மாறியுள்ளது. உண்மையில் கோஹ்லி இன்னும் பக்குவப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வருங்கால கேப்டன் என்று அவரைச் சொன்னாலும், ஒரு கேப்டனுக்குரிய தகுதி எதுவுமே அவரிடம் வந்ததாகவே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதைக்கு கோஹ்லியிடம் உள்ள ஒரே நல்ல விஷயம், பல சாதனைகளை படைப்பதும், இருக்கும் சாதனைகளை உடைப்பதும் மட்டுமே. இதைத் தாண்டி கோஹ்லி இன்னொரு சச்சினாக நிச்சயம் உருவாகவில்லை.

 

நல்ல பேரை வாங்க வேண்டும் கோஹ்லி அடுத்த சச்சினாக மாறுகிறாரோ இல்லையோ சச்சின் களத்திலும், களத்திற்கு வெளியிலும் நடந்து கொண்டதைப் பார்த்து முதலில் கோஹ்லி கற்றுக் கொள்ளத் தொடங்க வேண்டும்.

 

தலைக்கனம் கூடவே கூடாது தலைக்கனம் மிக்கவராக இருக்கிறார் கோஹ்லி என்பது நீண்ட கால குற்றச்சாட்டு. எனவே அதை சரி செய்ய கோஹ்லி முன்வர வேண்டும். யார் எதைச் சொன்னாலும் அதை பொறுமையுடன் கேட்பதில்லை என்பதும் ஒரு புகாராக உள்ளது. அதையும் அவர் சரிசெய்ய முன்வர வேண்டும்.

 

தேவையில்லாமல் 'ஷோல்டரை' உயர்த்தக் கூடாது அதேபோல சக வீரர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் கோஹ்லி. முன்பு கம்பீருடன் மோதினார். பிறகு ஷிகர் தவானுடன் மோதினார். இப்படித் தேவையில்லாமல் "ஷோல்டரை" உயர்த்தி சக வீரர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எப்படி கேப்டனாக இவர் சிறப்பாக செயல்பட முடியும் என்று தெரியவில்லை.

 

பத்திரிகையாளருடன் மோதல் அனுஷ்கா சர்மாவைப் பற்றி எழுதி விட்டார்கள் என்பதற்காக சம்பந்தமே இல்லாத செய்தியாளரைப் பிடித்து கடுமையாக திட்டி தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் கோஹ்லி. இந்தியில் மிகவும் அசிங்கமாக அந்த பத்திரிகையாளரை கோஹ்லி திட்டியதாக கூறப்படுகிறது. இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

 

எழுதியவர் யாரோ.. திட்டு வாங்கியது இவர் உண்மையில் அந்தக் கட்டுரையை எழுதியவர் இந்த பத்திரிகையாளர் இல்லை. வேறு யாரோ. ஆனால் திட்டு இவருக்குக் கிடைத்துள்ளது.

 

மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை இல்லையே இதை கோஹ்லியும் பின்னர்தான் உணர்ந்துள்ளார். ஆனால் அந்தப் பத்திரிகையாளரிடம் அவர் நேரில் மன்னிப்பு கேட்கவில்லை. முன்வரவில்லை. மாறாக, மற்ற பத்திரிகையாளர்களிடம், தான் ஸாரி சொன்னதாக அவரிடம் சொல்லி விடுமாறு கூறியுள்ளார். இதுதான் கோஹ்லியின் பெருந்தன்மை போலும்!

 

விரல் காட்டுவது, வாயை விடுவது.. எல்லாத்தையும் நிறுத்தனும்! முன்பு இப்படித்தான் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது தனது நடுவிரலைக் காட்டி அசிங்கமாக நடந்து கொண்டார் கோஹ்லி. இப்போது வாயை விட்டு மாட்டியுள்ளார். இதையெல்லாம் கோஹ்லி நிறுத்த வேண்டும். அப்போதுதான் அவர் முதிர்ச்சி அடைய முடியும்.

 

பிளேபாய் மற்றும் பேட் பாய் ஏற்கனவே பிளே பாய் என்ற பெயரை எடுத்த கோஹ்லி இப்போது பேட் பாய் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இது அவருக்கும், அவரது கிரிக்கெட் எதிர்காலத்திற்கும் நிச்சயம் நல்லதல் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

 

சீனியர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவும் சச்சின், டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் போன்ற சீனி்யர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் பார்த்து கோஹ்லி நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

டோணியைப் பாருங்கள் கேப்டன் டோணியிடமே கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. மிகக் கடுமையான சூழலிலும் கூட அவர் அமைதியாக இருக்கக் கூடியவர். நிதானமாக நடந்து கொள்ளக் கூடியவர். அந்தக் குணம் கோஹ்லிக்கும் வர வேண்டும்.

 

பிசிசிஐ கடிவாளம் போட வேண்டும் கோஹ்லி தானாக திருந்துவார் என்று காத்துக் கொண்டிருக்காமல், இந்திய கிரிக்கெட்வாரியமும் சற்று கடுமை காட்டி அவரை சரிப்படுத்த முயற்சிப்பதும் நல்லது. மாறாக கோஹ்லி என்ன செய்தாலும் அவர் நல்ல புள்ளையாச்சே, சேச்சே அப்படியெல்லாம் அவர் செய்ய மாட்டார் என்று சப்பைக் கட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அமைதியை விட வலிமையான ஆயுதம் எதுவும் இல்லை.. கோஹ்லி புரிந்து கொண்டால் நல்லது!

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/bad-boy-kohli-needs-learn-from-tendulkar-dravid-laxman-222125.html

  • தொடங்கியவர்

நிருபரை திட்டிய கோஹ்லி மீது ஐசிசியில் "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" புகார்... வழக்கும் தொடர முடிவு!

 

துபாய்: பத்திரிகையாளரை கண்டபடி திட்டிய விராட் கோஹ்லி மீது ஐசிசியில் புகார் அளித்துள்ளது ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை. மேலும், ஆஸ்திரேலிய சட்டப்படி கோஹ்லி மீது நடவடிக்கை எடுக்க முயலவும் அப்பத்திரிகை முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக, வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்திய வீரர்கள்.

 

நிருபரை திட்டிய கோஹ்லி மீது ஐசிசியில் நேற்றைய வலைப் பயிற்சி முடிந்ததும், ஓய்வு அறைக்கு நடந்து சென்றார் இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோஹ்லி. அப்போது எதிரே நின்ற இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில பத்திரிகையின் நிருபர் ஜஸ்விந்தர் சித்துவை பார்த்து கண்டபடி திட்டினார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அனுஷ்கா ஷர்மாவுடனான கோஹ்லியின் காதல் குறித்து அந்த பத்திரிகை முன்பு ஒருமுறை எழுதிய கட்டுரைக்காக இந்த திட்டு என்று பிறகு அந்த பத்திரிகையாளருக்கு தெரியவந்தது.

 

இருப்பினும் எழுதிய ரிப்போர்ட்டரை விட்டுவிட்டு தவறுதலாக அதே பத்திரிகையின் வேறு ரிப்போர்ட்டரை திட்டியது கோஹ்லி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து வேறு பத்திரிகையாளர் மூலமாக, ஜஸ்விந்தர் சித்துவிடம் மன்னிப்பு கேட்டார் கோஹ்லி. ஆனால் இந்த விவகாரத்தை சீரியசாக கையில் எடுத்துள்ளது இந்துஸ்தான் டைம்ஸ்.

 

இதுகுறித்து அதன் விளையாட்டு பிரிவு எடிட்டர் சுக்வந்த் பஸ்ரா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "எங்கள் பத்திரிகையின் தலைமை எடிட்டருடன் சம்பவம் குறித்து பேசியாகிவிட்டது. அவரது வழிகாட்டுதலின்பேரில், கோஹ்லிக்கு எதிராக, ஐசிசி, பிசிசிஐ அமைப்புகளில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய சட்டப்படி, பத்திரிகையாளரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதற்கு எதிராக வழக்கு தொடர முடியுமா என்பது பற்றி அந்த ஆங்கில பத்திரிக்கை ஆய்வு செய்துவருவதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/trouble-kohli-batsman-s-abusive-behaviour-reported-icc-bcci-222153.html

  • தொடங்கியவர்

என்ன நடந்துச்சுன்னே எனக்குத் தெரியாது.. கோஹ்லி குறித்த சர்ச்சைக்கு அஸ்வின் பதில் 

 

பெர்த்: விராத் கோஹ்லிக்கும், பத்திரிகையாளருக்கும் இடையிலான மோதல் குறித்து கருத்து சொல்ல எனக்குத் தகுதி இல்லை. அதுகுறித்து எனக்குத் தெரியவும் தெரியாது. அதுகுறித்து நான் கருத்து சொல்லவும் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். அனுஷ்கா சர்மா குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரையால் கோபமடைந்தார் கோஹ்லி.

 

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து செய்தி சேகரிக்க வந்துள்ள அந்த நாளிதழின் செய்தியாளரிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டு மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்து விட்டார். ஆனால் உண்மையில் கட்டுரையை எழுதியவர் இந்த செய்தியாளர் அல்ல. இதுகுறித்து பின்னர் தெரிய வந்ததும் தர்மசங்கடமாகிப் போன கோஹ்லி, அந்த செய்தியாளரிடம் நேரில் மன்னிப்பு கேட்க .தயங்கிக் கொண்டு வேறு ஒரு செய்தியாளர் மூலம் மன்னிப்பு கேட்டார்.

 

என்ன நடந்துச்சுன்னே எனக்குத் தெரியாது.. கோஹ்லி குறித்த சர்ச்சைக்கு அஸ்வின் பதில் இந்த விவகாரத்தில் கோஹ்லிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வாரியமும், இந்திய அணி நிர்வாகமும் உள்ளன. ஒப்புக்குக் கூட இந்த இரு தரப்பும் அந்த செய்தியாளரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. இதையடுத்து ஐசிசியில் புகார் கொடுத்துள்ளார் அந்த செய்தியாளர். வழக்குத் தொடரவும் அவர் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பெர்த் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

 

அதற்கு அஸ்வின் அளித்த நீண்ட பதில்... எங்களை ஆதரிக்க, இந்திய அணிக்கு ஆதரவாக இங்கே பத்திரிகையாளர்கள் வந்துள்ளீர்கள். மிகப் பெரிய அளவில் வந்திருப்பது உண்மையிலேயே எங்களை நெகிழ வைத்துள்ளது. கிரிக்கெட்டை மிகவும் பொறுப்பான முறையில் ரிப்போர்ட் செய்ய வேண்டியது ஊடகத்தின் கடமையாகும். அதை பொறுப்பான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களுக்கு எப்படித் தர வேண்டுமோ அந்த முறையில் தர வேண்டும். இருப்பினும் சில நேரங்களில் மீடியாக்களின் போக்கு மகிழ்ச்சி தருவதில்லை. இது எனது கருத்து.

 

அதேசமயம் பெரும்பாலான நேரங்களில் வீரர்களுக்கு மீடியாக்கள் தரும் ஆதரவு பாராட்டுக்குரியதாகவே உள்ளது. சம்பவத்தன்று என்ன நடந்தது என்று உண்மையிலேயே தெரியாது. கண்டிப்பாக எனது எல்லைக்குள் அந்த விவகாரமும் இல்லை. எனவே என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாத நிலையில் அதுகுறித்து நான் கருத்துக் கூறவும் முடியாது. அதில் நான் நேர்மையாக இருக்கிறேன். என்ன நடந்தது என்பது தெரியாது. நடந்ததை விட்டு விட்டு, அடுத்து நடக்கப் போகும் போட்டி குறித்து அனைவரும் பார்ப்போம். எங்களால் முடிந்தவரை அந்தப் போட்டியை சிறப்பாக முடிக்க முயற்சிப்போம் என்றார் அஸ்வின்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/kohli-controversy-what-did-very-honest-ashwin-say-222192.html

  • தொடங்கியவர்

பிரச்சினையை சுமுகமாக தீர்க்கவேண்டும்: கோலிக்கு முன்னாள் வீரர்கள் அறிவுரை
 

 

பத்திரிகையாளரை திட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள விராட் கோலிக்கு, முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் வி.வி.எஸ்.லஷ்மண் ஆகியோர், பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்குமாறு அறிவுரைத்துள்ளனர்.

 

சில நாட்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் ஒருவரை விராட் கோலி சரமாரியாகத் திட்டி சர்ச்சையில் சிக்கினார். ஆனால் திட்டிய பிறகே அவர், தான் நினைத்த பத்திரிகையாளர் அல்ல, வேறொருவர் என்பது கோலிக்குத் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அந்த பத்திரிகையாளர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் கோலி மீது புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியதாவது;

 

"நான் கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டு, என்னுள் இருக்கும் அத்தனை அழுத்தங்களையும் வெளியேற்ற முயற்சிப்பேன். எவ்வளவு அழுத்தமான சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முயற்சிப்பேன். தோனியைப் போலவோ, லக்‌ஷ்மணை போலவோ, டென்னிஸ் வீரர் ஜார்ன் போர்க்கை போலவோ எந்த சூழலிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

 

ஊடகங்கள் இங்கு முக்கியமான பங்கை வகிக்கின்றன. வீரர்கள், நிர்வாகம், ஊடகம், ரசிகர்கள், விளம்பரதாரர்கள் என கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்ட அனைவருமே, விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

 

அதே நேரத்தில், ஊடகங்களும் உண்மையான தகவல்களையே தர வேண்டும். தாங்கள் கேள்விப்படாத விஷயங்களையோ, ஊகத்தின் அடிப்படையிலோ செய்தி இருக்கக் கூடாது"

 

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

லஷ்மண் பேசுகையில், "இந்தப் பிரச்சினையை சுமுகமாக முடிக்க ஒரே வழி, சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை கோலி நேரில் சந்தித்து, 'உங்களை வேறொருவர் என தவறாக நினைத்து விட்டேன்' எனக் கூறி மன்னிப்பு கேட்பதுதான். ஒரே ஒரு முறை, வீரர்களின் அறையில் எனது பொறுமையை இழந்து கோபம் கொண்டுள்ளேன். மற்றபடி எங்குமே நான் எனது பொறுமையை இழந்ததில்லை" என்றார்.

 

முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சாதனை வீரர் பிரயன் லாரா பேசுகையில், "ஊடகங்கள் வீரர்கள் இடையிலான உறவைப் பேணுவது என்றுமே எளிதாக இருந்ததில்லை. எனக்கும் ஊடகங்களுடன் சச்சரவு ஏற்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்கள் நடக்கும் ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே விளையாட்டின் நலனை, உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு, அதை மறக்க வேண்டும். அணியின் பார்வையிலிருந்து பார்க்கும் போது, கண்டிப்பாக இது இந்திய அணியின் கவனத்தை சிதறடிக்கும். இந்தச் சம்பவத்தால் கோலி பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது இன்னும் வைராக்கியம் பெற்றிருக்கலாம்" என்றார்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/article6963203.ece

  • தொடங்கியவர்

கோஹ்லிக்கு பிசிசிஐ திடீர் எச்சரிக்கை... கெளரவத்தைக் காக்கும் வகையில் நடக்குமாறு அறிவுரை!

 

மும்பை: இந்திய அணியின் கெளரவத்தைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று விராத் கோஹ்லிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியாளரிடம் அசிங்கமாக நடந்து கொண்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து கோஹ்லியை பகிரங்கமாக எச்சரித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

 

கோஹ்லிக்கு பிசிசிஐ திடீர் எச்சரிக்கை... கெளரவத்தைக் காக்கும் வகையில் நடக்குமாறு அறிவுரை! ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் கோஹ்லிக்கு ஆதரவாகத்தான் கருத்து கொண்டிருந்தது வாரியம். ஆனால் அவமானத்திற்குள்ளான செய்தியாளர் ஐசிசியில் இதுகுறித்து புகார் கொடொடுத்து விட்டார். மேலும் வழக்குப் போடப் போவதாகவும் கூறி விட்டார். இதையடுத்து பிசிசிஐ சற்று சுதாரித்து கோஹ்லியை பகிரங்கமாக கண்டித்துள்ளது. மார்ச் 3ம் தேதியன்று நடிகை அனுஷ்கா சர்மா குறித்து வெளியான செய்தி ஒன்றுக்காக சம்பந்தமே இல்லாமல் இந்த செய்தியாளரை கடுமையாகத் திட்டி அவமானப்படுத்தினார் கோஹ்லி.

 

இது அனைவரையும் அதிர வைத்தது. நாகரீகமே இல்லாமல் கோஹ்லி நடந்து கொண்ட முறையால் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு எழுந்தது. இருப்பினும் கோஹ்லி ஆபாசமாக எதையும் பேசவில்லை என்று பிசிசிஐ சப்பைக் கட்டுக் கட்டியது. இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும், கோஹ்லி தவறாக நடக்கவில்லை என்று ஒத்து ஊதியது. ஆனால் அந்த செய்தியாளர் ஐசிசியிடம் புகார் கொடுத்து விட்டார். வழக்குப் போடப் போவதாகவும் கூறி விட்டார். இதை பிசிசிஐ எதிர்பார்க்கவில்லை மேலும் பல முன்னாள் வீரர்களும் கோஹ்லி நிதானமாக நடக்க வேண்டும் என்று அறிவுரை கூற ஆரம்பித்தனர். இதனால் இன்று பிசிசிஐ இறங்கி வர வேண்டியதாயிற்று. இதுகுறித்து பிசிசிஐயின் புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுராக் தாக்கூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 

அதில், 2 நாட்களுக்கு முன்பு பெர்ததில் நடந்த சம்பவம் குறித்து வாரியத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. சம்பந்தப்பட்ட வீரர், அணியின் கெளரவத்தையும், மாண்பையும் அனைத்து நேரத்திலும் கட்டிக் காக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோல நடக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் செய்திகளை சேகரிக்கும் ஊடகங்கள் மீது பிசிசிஐ மரியாதை வைத்துள்ளது. மதிக்கிறது. விளையாட்டை பிரபலப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கை அது மதிக்கிறது, மீடியாவின் ஆதரவையும் அது வரவேற்கிறது. சம்பந்தப்பட்ட அனைவரும் அடுத்து நடக்க வேண்டியது குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவின் அடுத்தடுத்த போட்டிகள் குறித்து அனைவரும் கவனம் செலுத்துவோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/bcci-warns-virat-kohli-tells-him-maintain-dignity-indian-222210.html

  • கருத்துக்கள உறவுகள்

கோஹ்லிக்கு அனுஷ்காவா கிரிக்கட்டா என்று குழப்பம் வந்திடப்போகுது.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.