Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கே இனியவனின் கஸல் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

நீ
வெயிலா
மழையா
சொல்லிவிட்டு போ...?

நான் சிலந்திபோல்
உன் நினைவுகளால்
வலைபின்னுகிறேன்
நீயோ - சிலந்தியாய் 
என்னை விழுங்குகிறாய்

நான் 
மரணத்திலிருந்து
தப்பிவிட்டேன் ...
உன் வலியில் இருந்து
தப்ப முடியவில்லை ....!!!

+
கே இனியவன் - கஸல் 100

  • Replies 219
  • Views 26k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நீ வைரக்கல்
மின்னுவதில் அழகாய் 
கொல்லுவதில்....
விஷமாய் இருகிறாய் ...!!!

உன்னை சந்தித்தது
சூரிய உதயம் ...
உன்னை பிரிந்தது ....
சூரிய அஸ்தமனம் ....!!!

நீ
என்னை விட்டு
விலகமுன்
உன் எண்ணங்களை ...
என்னிலிருந்து விலக்கிவிட்டு ...
செல் உயிரே ....!!!

+
கே இனியவன் - கஸல் 101

நீ வானவில் 
நான் இரவு 
எப்படி உன்னை 
நான் பார்ப்பது ...?

கவிதை எழுதும் போது 
கற்பனை வரவில்லை 
என்றால் -உன்னை 
நினைப்பேன் 

நான் இறக்கவே 
மாட்டேன் 
என் இதயம் -உன் 
இதயத்துக்குள் 
மறைத்து வைத்திருக்கிறேன் 




+
கே இனியவன் - கஸல் 102

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நீ 
என் மூச்சாக இருந்த ....
காலமெல்லாம் நான் ....
உன் உயிராக இருந்தேன் ....
நீ மூச்சை நிறுத்தினாய் ...
காதல் இறந்தது ....!!!

இதயத்தில் ரோஜாவை ....
வளரவிடாமல் -எதற்கு ..?
முள்ளை வளர்கிறாய் ....?

நீடூடி வாழ்க ....
வாழ்த்துவோர் உள்ளார் ...
நீடூடி காதல் வாழ்க ...
வாழ்த்துவோர் யாரும் இல்லை ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 872

  • தொடங்கியவர்

உன்னை காதலித்து ...

நானும் கற்றுகொண்டேன் ....

எப்படி வலிக்காமல் ....

மறப்பதென்று ....!!!

 

உன்னை நினைக்காமல் ....

கவிதை எழுத முயற்சித்தேன் ...

வெற்றிபெற்றது -நீ 

 

இக்கரைக்கு 

அக்கரை பச்சை - நீ 

அடிக்கடி இப்படிதான் ,,,

ஏமாற்றுகிறாய் ,,,,,

ஒருமுறை என்னை 

காதலித்துப்பார் ,,,,

பலஜென்மம் என்னை ...

காதலிப்பாய் ....!!!

 

+

கவிப்புயல் இனியவன்

ஈழக்கவிஞன் 

தொடர் பதிவு கஸல் - 873

  • தொடங்கியவர்

ஓராயிரம்... 
நினைவுகளுடன் ....
ஆழமான  துயரத்துடன்...
நிகழ்ந்து விட்டது ...
நம் பிரிவு......!!!

நீ
என்னை மறந்து போய்
நினைத்திருக்கலாம் 
இப்போதான் உனக்கு ...
காதல் புரிந்திருக்கும் ....!!!

ஒப்பாரி என்றால் என்ன ...?
இப்போது புரிந்தது எனக்கு ...
உன் ஒவ்வொரு செயலும் ...
என் காதலுக்கு ஒப்பாரிதான் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 874

காதல் மலர் போல் ....
காலையில் அழகாய் ....
மாலையில் வாடிவிடும் ....
என்றாலும் காதல் ...
அழகும் மென்மையும் ....!!!

மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
நீ உள்ளூர் மயானத்தில் ...
நான் வெளியூர் மயானத்தில் ....!!!

உன்னைப்போல் காதலிக்க ...
தெரியாத உள்ளமும் ஒரு ....
அங்கவீனம் தான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 875

  • தொடங்கியவர்

இறந்த காலம் தான் ....
இனிமையான காலம் ....
இனிமையாய் நீ பேசி ....
இளமையை ரசித்தேன் ....
இப்போ தனிமையில் ....!!!

உனக்காய் வாழ்வேன் ...
உறுதியாய் கூறினாய் ....
உயிரை மறந்து வாழ்ந்தேன் .....
உயிர் வலிக்கிறது இப்போ ....!!!

அன்பே என்றாய் ....
அனைத்தையும் இழந்தேன் ....
ஆருயிரே என்றாய் ....
ஆவியாய் அலைகிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 876

  • தொடங்கியவர்

கண்ணில் பட்டு கதலானாய் ....
கல்லறைவரை தொடருமென்றாய்....
கண்மூடி தனமாய் நம்பினேன் ...
கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!!

கிட்டவா காதல் பரிசு தா ....
கிள்ளி விட்டு போனபோது ....
கிள்ளியது என் இதயம் என்பதை ....
கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது ....
கிறுக்கணுக்கு  புரிந்தது ....!!!

காத்திருந்தேன் கவிதை வந்தது ....
காணாமல் போனாய் கவிதை வந்தது ....
காதல் பைத்தியம் என்றார்கள் ....
காதலித்து பாருங்கள் புரியும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 877

  • தொடங்கியவர்

வானவில்லில் ஏழுநிறம் ....
வானத்து அழகியே உனக்கும் ...
வானவில் குணமோ ....?
வா என்கிறாய்  போ என்கிறாய் ....?

விட்டில் பூச்சியை ....
விளக்கம் காட்டினேன் ....
விதி எனக்கும் சரியானது ....
விதி மதி இரண்டும் இழப்பாய் ....
காதலித்துப்பார் ....!!!

வீறாப்புடன் ....
வீட்டை எதிர்த்து காதல் செய்தேன் ....
வீதியில் நிற்கிறேன் உன்னை இழந்து ...
காதல் கண்னை மறைக்கும் ...
உறவையும் மறக்கும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 878

  • தொடங்கியவர்

எட்ட 
முடியாத காதலர் நாம் .....
சூரியனும் சந்திரனாய் ...
வானமும் நிலமுமாய் ...!!!

காதலை விதைத்தேன் ...
வதையாகும்  உணர்ந்தேன் ...
காதல் ஆழ்கடல் -நீ 
துறைமுகம் ....!!!

நான் 
வெறும் நெருப்பு ...
நீயே வெப்பம் ...
நீயே ஒளி....
நீயே கரி ....
நீ தணல் .....
அணைந்து விடாதே ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 879

  • தொடங்கியவர்

உன் வெட்கம் என்னை ....
தலை குனிய வைக்கிறது ....
உன் பார்வை என்னை ....
மனிதனாக்கியது....!!!

என் காதல் மீது - நீ ...
ஏறிநின்று குதிக்க 
ஆசைப்படுவதேன் ...?

காதலில் ....
வலி -ராகம் ..
கண்ணீர் - மது ....
பிரிவு - வாழ்கை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 880

  • தொடங்கியவர்

உன்னை 
காதலிப்பதும் ....
என்னை 
காயப்படுத்துவதும் ....
ஒன்றுதான் .....!!!

என் நினைவுகள் ...
உனக்கு தூசிபோல் .....
நான் அலைந்துகொண்டு ....
இருக்கிறேன் ....!!!

ஒன்றை 
நினைவில் வை ....
உன்னை காதலிப்பதால் ....
என் உயிர் துடிக்கிறது ...
நீ காயப்படுத்தினாலும் 
இதயம் தாங்குகிறது ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 881

  • தொடங்கியவர்

எனக்கு நரகம் வராது ...
காதல் வந்துவிட்டதே ....
எனக்கு சொர்க்கமும் ...
வராது நீ  இல்லையே....!!!

என் 
புகைபடத்தை ....
தந்துவிட்டாய் .....
இதயம் புகைக்கவில்லை ....!!!

மனிதனின் தோற்றமும் ....
முடிவும் கண்ணீருடன் ....
தொடங்க காரணமே ....
காதல் தான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 882

  • தொடங்கியவர்

நீ எப்படி வந்தாய் ....?
புரியவில்லை எனக்கு ....
எப்படி சென்றாய் ....
புரிந்துகொண்டேன் ....
கண்ணீர் வந்தபோது ....!!!

காதலுக்கு முன் ....
உறவுகளுக்கு ....
ரோஜாவோடு ராஜா ....
காதலின் பின் ....
உறவுகளுக்கு ....
முள்ளோடு ராஜா ....!!!

காதலை நீ சொல் ....
காதலிப்பது எப்படி ...?
நான் சொல்கிறேன் ....
மறக்காமல் - பிரிவது ....
எப்படி என்றும் சொல் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 883

உன்னை பார்த்ததை விட ...
உன்னை பற்றி கேட்டதே ....
அதிகம் .....
என் காதல் காதால் ....
தோன்றியது ....!!!

எனக்கு உயிர் இருக்கும் ....
வரைக்கும் நீ இருப்பாய் ....
நீ போனாலும் காதல் ....
இருக்கும் .....!!!

உன் 
காதலின் ஆழத்தை ....
திருமண அழைப்பிதலில் ....
அழகாக போட்டிருந்தாய் .....
பொருத்தமான் பெயருடன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 884

  • தொடங்கியவர்

நானும் பனித்துளியும் ....
ஒன்றுதான் இரவில் ....
அழுதுகொண்டிருப்பதில் ....!!!

நீ 
போவது வலியில்லை....
போய் என்ன ....
செய்யபோகிறாய் ....
என்பதுதான் வலி ....!!!

எனக்கு உனக்கும் 
அகண்ட இடைவெளி ...
காதலால் தோன்றியது ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 885

  • தொடங்கியவர்

நான் வெறும் நூல் ....
நீ தான் காற்றாடி ....
அசையும் இடமெல்லாம் ....
என்னை இழப்பேன் ....!!!

இதயத்தில் 
முள் தோட்டம் .....
விளைந்தது காதல் ....
வந்தது முள் வலி ....!!!

கஸ்ரப்பட்டு காதல் மழை ....
பெய்கிறேன் -நீயோ ....
குடைபிடித்து தடுக்கிறாய்...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 886

உன்னை காதலித்த ...
இதயத்தை பார்த்து ....
கவலை படுகிறேன் ....
உன் காதல் புரியாமல் ....
காதலித்து விட்டதே ....!!!

காதல் 
நிறைகுடத்தை ....
குறைகுடமாக்கும் ....
எனக்கு சரிப்பட்டது ....!!!

உன் கண் தான் என் ....
கவிதை எழுத்து கருவி ....
என்னை நன்றாக பார் ....
கவிதை அருவியாய் வரும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 887

  • தொடங்கியவர்

காதலுக்கு தனி கல்லறை ....
அதில் முதல் அங்கத்தவன் ....
நான் தான் நீ அருகில் ....
வேண்டாம் ....!!!

எதற்காக தூண்டிலை ....
போட்டு காத்திருகிறாய்...?
நான் ஏற்கனவே இறந்த மீன் ....!!!

எப்போதும் என் முகவரி 
நீ தான் - தயங்காதே 
அப்போதே என் முகவரி 
தொலைந்து விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 888

துடுப்பு 
இழந்து தவிக்கிறேன் ....
என்னை காப்பாற்று ....!!!

காதல் கீதம் பாட ....
சொல்லும் நீயே ....
காதலை தர மறுக்கிறாய் ....!!!

வலிகளால் வலை பின்னி ....
வழிதெரியாமல் தடுமாறும் ...
காதல் மன்னன் நான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 889

  • தொடங்கியவர்

நான் 
கரையோர நண்டு .....
நீ எழுந்து விழும் அலை ....
மீண்டும் உள்ளே இழு ...!!!

காதல் படகில் தனியே ....
பயணம் செய்து என்ன ...?
சாதிக்கபோகிறாய்....?

பட்டபகலில் ....
நிலாபாடல் கேட்கிறாய் ....
நடு இரவில் சூரிய உதயம் ....
பார்க்கணும் என்கிறாய் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 890

  • தொடங்கியவர்
என்னமோ புரியல்ல ....
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீருடன் கவிதை ...
அருவியாய் வருகிறது ....!!!

உனக்கு காதல் குப்பை ...
எனக்கு காதல் குண்டுமணி ....
தண்டவாளமாய் ......
பயணிக்கிறோம் ....!!!

உன்னில் 
ஒரு திறமை இருக்கிறது .....
நீ சிரித்துகொண்டே ...
என்னை அழவைப்பதில் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 891
  • தொடங்கியவர்
என்னமோ புரியல்ல ....
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீருடன் கவிதை ...
அருவியாய் வருகிறது ....!!!

உனக்கு காதல் குப்பை ...
எனக்கு காதல் குண்டுமணி ....
தண்டவாளமாய் ......
பயணிக்கிறோம் ....!!!

உன்னில் 
ஒரு திறமை இருக்கிறது .....
நீ சிரித்துகொண்டே ...
என்னை அழவைப்பதில் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 891
  • தொடங்கியவர்

என் 
காதல் சமாதியாகிவிட்டது....
உன் நினைவுகள் கல்லறை ...
சுவராய் நிறுவியிருக்கிறேன் ...!!!

காதல் தோற்காது ....
என்னை கவிஞனாக்கியதே ...
வரிகளில் காதல் ...
வாழ்ந்துகொண்டே இருக்கிறது ....!!!

நீ என் காதலை ....
நிராகரித்ததிலிருந்து....
என் வீட்டு மலர்கள் ....
கருகிகொண்டு வருகின்றன ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 892

காதலுக்கு 
உன் கண் தூண்டில் ....
என் இதயம் அகப்பட்ட ...
மீன் ....!!!

உனக்கு புரியாது ....
என் இதயம் உன்னைவிட ...
வலிமையானது ....
இத்தனை வலிகளை..
சுமக்கிறது ....!!!

உன் 
காதல் விசித்திரமானது ....
தண்ணீராகவும் இருகிறாய் ...
வெநநீராகவும்  இருகிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 893

  • தொடங்கியவர்

நீ நிழல் ...
என்னை விட்டு ...
விலகுவதுமில்லை .....
எப்போதும் என்னோடு ...
இருப்பதுமில்லை ...!!!

கட்டை விரலை ...
இழந்த ஏகலைவன் போல் ...
காதல்  அம்பிருந்தும் ...
எய்ய முடியவில்லை ...!!!

நீ என்னில் இருக்கும் ...
நொடிகளில் நான் இறக்கிறேன்...
நீ என்னில் இல்லாதபோது ...
உயிர்க்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 894

வா ....
காற்றோடு கலந்து ....
விண்ணோடு மறைந்து ...
நிலவோடு காதல் செய்வோம் ...!!!

காதல் உன்னை கண்டால் ...
கண் மூடிகொள்கிறது...
உன்னை பிடிகவில்லையாம் ...!!

நீ காற்று ...
எப்படி வீசுவாய்....?
பயமாக இருக்கிறது ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 895

  • தொடங்கியவர்

நீ தீபமாய் இரு ....
அப்போதும் நான் ....
விட்டில் பூச்சியால் ....
உன்னால் இருப்பேன் ...!!!

என் 
கண்ணீர்த்துளிகள் ...
வைரக்கல் போல் தெரிகிறதா ...?
அப்போ உனக்காய் ....
நான் அழத்தயார்....!!!

நீ 
கற்பனையாய் இரு ....
அப்போதுதான் எனக்கு ....
கவிதை வரும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 896

  • தொடங்கியவர்

நீ காற்று ....
எப்படி வருகிறாயோ ...?
ஆனால் வருகிறாய் ....
நீ இல்லாமல் எப்படி ....?
வாழ்வது ...?

நான் 
கண்ணீர் விட்டதை ....
புற்கள் பனித்துளியாய் ....
எடுத்துவிட்டன .....!!!

நான் மூச்சு ...
விட்டதை பஞ்சுகள் ...
உல்லாசமாய் எடுத்து ...
மகிழ்கின்றன ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 897

  • தொடங்கியவர்

நீ பனிகட்டி ...
என்னை உறைய ...
வைத்துவிட்டாய் ......!!!

நீ எப்போது 
என்னிடம் வந்தாயோ ..
அப்போதே  இறந்துவிட்டேன் ...!!!

உன்னோடு இருக்கையில் ...
இரவெல்லாம் பகல் ....
இப்போ பகல் எல்லாம் ....
இரவு விடியமாட்டேன் ...
என்கிறது இரவு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 898

  • தொடங்கியவர்

தத்தளிக்கிறேன் ....
என்னை காதலில் இருந்து ...
காப்பாற்று ....!!!

எனக்காக 
வாழ ஆசைபடுகிறேன் ....
என்னை விட்டுவிடு .....!!!

நான் சிறுகதை ....
எழுதுகிறேன் -நீ 
தொடர்கதையாய் ....
வர ஆசைபடுகிறாய்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 899

 

Edited by கவிப்புயல் இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.