Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸி. கிரிக்கெட் ரசிகர்களின் இனவெறி

Featured Replies

சிட்னி: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மாண்டி பனீசார் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இனவெறி கருத்துக்களை வெளியிட்டு அவமதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா வந்துள்ளது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி சில பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் பனீசரும், தென் ஆப்பிரிக்காவில் பிறந்த வெள்ளையரான கெவின் பீட்டர்சனும் இடம் பெற்றுள்ளனர். பனீசர் ஒரு சீக்கியர் ஆவார்.

கான்பெர்ரா நகரில் நியூ சௌத் வேல்ஸ் அணியுடன் நடந்த போட்டியின்போது பனீசரையும், பீட்டர்சனையும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் படு துவேஷமாக விமர்சித்து தங்களது இன வெறியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பனீசர் மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது அவரை மிகக் கடுமையான சொற்களால் அர்ச்சித்துள்ளனர். முட்டாள் இந்தியர் என்று அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்த செய்தியை சிட்னியிலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ளது.

பனீசரை நோக்கி ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர், ஆங்கிலம் பேசத் தெரியாத மாண்டி, நீ ஒரு முட்டாள் இந்தியன். உனக்கு இங்கே என்ன வேலை? ஆங்கிலேயனே அல்லாத நீ எப்படி இங்கிலாந்து அணிக்காக விளையாடலாம்? என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியர்கள் உலகின் மிகச் சிறந்த இன வெறியர்கள் என்பது உலகம் அறிந்த விஷயம். வெள்ளை இனத்தவர்கள்தான் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பது அவர்களது தாழ்மையான எண்ணம். மற்ற யாரையும் அவர்கள் திறமையானவர்களாக அங்கீகரிப்பதில்லை.

ஆஸ்திரேலியர்களின் இனவெறிக்கு இப்போது பனீசர் இலக்காகியுள்ளார். இதற்கு முன்பு இந்திய, இலங்கை வீரர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள கருப்பர் இன வீரர்களும் இதுபோன்ற துவேஷங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

பனீசரைப் போல பீட்டர்சனும் இன வெறியர்களின் மோசமான அர்ச்சனையை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் இந்த இன வெறி காமென்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நியூ சௌத் வேல்ஸ் அணியின் கேப்டனும், ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரருமான சைமோன் காடிச் கூறுகையில், இது எனக்கு ஏமாற்றத்தைத் தருகிறது என்று கூறியுள்ளார்.

தனது அணியின் வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் அசிங்கமாக விமர்சித்துள்ளது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்யப் போவதில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து இங்கிலாந்து அணியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்களது வீரர்கள் மோசமாக விமர்சிக்கப்பட்டது குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிலைமையை இப்போது பெரிதுபடுத்த விரும்பவில்லை. இருப்பினும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்த விஷயம் குறித்துக் கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இனவெறி எதிர்ப்பு விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அவற்றை அமல்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்கையில், முதலில் இந்தப் பிரச்சினை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எங்களை அணுகியபோதுதான் நடந்தது குறித்துத் தெரிய வந்தது என்றனர்.

இனவெறி கருத்துக்களை தெரிவித்தாலோ அல்லது பேசினாலோ, வீரர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, அந்த நாட்டின் மீது ஆயுட்கால தடை விதிக்க முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறை கூறுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து வெளிநாட்டு அணிகளும் இந்தப் பிரச்சினையை சந்தித்து வருகின்றபோதிலும் இதுவரை ஆஸ்திரேலியா மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ரசிகர்களை கடுமையாக எச்சரித்து பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது. குடித்து விட்டு இனவெறியை வெளிப்படுத்தி கோஷமிடுவது, வீரர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பது ஆகியவற்றுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

மேலும் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்புகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தது. ரசிகர்களை உன்னிப்பாக கவனிக்க பல்வேறு வீடியோ கேமராக்களையும் நிறுவி நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதையும் மீறி தற்போது இரு வீரர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து வீரர்களை அவமதிப்பது போல நடந்து கொள்ளும் ரசிகர்கள் அடையாளம் காணப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் பீட்டர் சுதர்லேன்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்பு இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களே இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் கடுமையாக விமர்சித்து பெரும் சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம்.

பனீசர் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பும் முன்பே தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித், பனீசரை இனவெறிக் கருத்துக்களால் ஆஸ்திரேலியர்கள் சீண்டுவார்கள் என எச்சரித்திருந்தார்.

சிறந்த சுழற் பந்து வீச்சாளராக உருவாகி வரும் பனீசரும், இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டால் எப்படி மனரீதியாக அதை எதிர்கொள்வது என இங்கிலாந்து மன நல நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டுதான் ஆஸ்திரேலியாவுக்கே வந்துள்ளார்.

எனவே இனவெறியர்களையும் மீறி தனது சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணியை சுழற்றியடிப்பார் என அவரது ஆதரவாளர்கள் படு நம்பிக்கையாக உள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2006/11/15/australia.html

ஆனால் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து வெளிநாட்டு அணிகளும் இந்தப் பிரச்சினையை சந்தித்து வருகின்றபோதிலும் இதுவரை ஆஸ்திரேலியா மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறீலங்காவின் கொடுமைகளை கண்டும் காணாதது போல...ம்ம்ம்

  • தொடங்கியவர்

ஆஸி அணியே துவேசம் பிடிச்சவங்கள் மற்றும் தலைக்கணமும் கூட

ஆஸி சனமும் கூட என்ன செய்ய வந்தாச்சு அனுபவிக்கதானே வேணும் :lol:

விளையாட்டில் தான் அப்படி..இல்லையா?

இதுவரை நான் இனத்துவோசமான ஒருவரையும் இங்கு சந்தித்ததில்லை..

  • தொடங்கியவர்

ஏனில்லை பஸ் ட்ரைவரில் இருந்து துவேசம் அத்தனை வெள்ளைகளிடமும் இருக்குது அனால் காட்டிகொள்ளமாட்டார்கள்

உங்களுக்கு என் நண்பரின் கதையை சொல்கிறேன் கேளுங்கள்.அவரி வகுப்பில் வெளிநாட்டு மாணவ்ர்களும் உள்நாட்டு மாணவர்களும் இருகிறார்களாம்.படிப்பில் வெளிநாட்டவர்கள்தான் சுட்டி.ஒழுங்காகப்பழகும் வெள்ளை மாணவர்கள் ஆசிரியரிடம் சொன்னார்களாம் தமக்கு முன்னால் வெளிநாட்டு மாணவர்கள் பார்த்து எழுதுகிறார்கள் ஆனால் பெனாண்டோ மாத்திரம் அப்படி செய்வது இல்லையென அந்த பெனாண்டோ கொலம்பிய வெள்ளை இனத்தவர்

நிரத்துவேசம் கொண்டவர்கள் அவுஸ்திரேலியர்கள் விளையாட்டில் மட்டுமல்ல எதிலும் தோல்வியை சகித்துக்கொள்ளமுடியாதவர்கள

அது எம்மினத்திலும் இருக்கே!!!

நான் முதலில் தனிய ஒருவரிடம் தமிழ் கற்றேன்..பின்னர் தமிழ் பாடசாலையில் சேர்ந்தேன்..பரீட்சையில் நான் முதலாவதாக வர.... அங்கிருந்த 6 மாணவர்களை அவர்கள் பெற்றோர்கள் அழைத்து சென்றுவிட்டனர்..காரணம் புதிதாக வந்த நான் நல்ல மதிப்பெண் எடுத்தது..

எனக்கு நீங்கள் இருக்கும் இடத்தை பற்றி அதிகம் சொல்ல தெரியவில்லை..

நான் இருக்கும் இடத்தில் இப்படியான பிரச்சனைகள் இல்லை... சீன, இந்தியர்களை தான் இங்கிருக்கும் சில வெள்ளையர்கள் வெறுக்கின்றனர்..

இந்தியர்களுக்கும், எமக்கும் பல வித்தியாசம் இருக்கு என்று வெள்ளையர்கள் எனக்கு கூறினார்கள்... அதை இங்கு சொல்லி இந்திய சகோதரங்களின் மனதை நோகடிக்க விரும்பவில்லை..

இடங்களுக்கு இடம் மாறுமோ என்னமோ..

அவர்கள் என்னதான்.. விளையாட்டு வெறியரகள் என்றாலும்..

விளையாட்டுத்திறனால்..cricket,football,rugb

,bowls ,tennis, more and more

எல்லாவற்றிலும் முன்னனியில் நிற்பவர்கள்..

அவர்களை வெறிறிபெறிறுவிட்டு நாங்களும் வாயாடலாமே..

கையாலாதவன்..

இனத்துவெசம் அதுஇதவென்ள..ஏன் வீண்வாதங்கள்..

ஒருவீரன் கிரிட்டிஸம்.. விமர்சனம் எதாலும் பாதிப்புறக்கூடாது..

மாறாகத்தன்னை வளப்படுத்திக்கொள்ள வேண்டும்..

  • தொடங்கியவர்

அது உண்மை துயா இந்தியர்களை எம்மையும் வேறாகத்தான் பார்கிரார்கள் நான் இப்படி கண்டதில்லை என் நண்பர்கள் கூற கேள்விப்பட்டுள்ளேன்

என்னதான் கெட்டிகாரனாக இருந்தாலும் இனத்துவேசமும்,பெறாமையும் தொல்வியை மதிக்காத மனப்பான்மையும் இருந்தால் அது விளையாடு வீரருக்கு அழகல்ல என்பது என் கருத்து விகட கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.