Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய முன்னாள் கடற்படைப் பேச்சாளருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய முன்னாள் கடற்படைப் பேச்சாளருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!

[Thursday 2015-04-02 07:00]
dasanayake-200-seithy.jpg

தலைநகரின் பல பிரதேசங்களிலும் 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடத்தப்பட்ட 9 மாணவர்கள் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீ.கே.பீ.தஸநாயக்கவிடம் வாக்கு மூலம் ஒன்று பெறப்பட்டுள்ள போதிலும் அவரிடம் மேலும் விசாரணை செய்யும் அவசியம் ஏற்படும் என குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றிடம் தெரிவித்தது.

  

அத்துடன் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூவர் ரவிராஜ் எம்.பி.கொலை தொடர்பிலும் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில் மேலும் சிலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு மேலும் குறிப்பிட்டது.

இதனையடுத்து காணாமல் போயுள்ள மாணவர்களின் பெற்றோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்து அவர்களது உரிமையை நிலை நாட்டும் வகையில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர்களை உடன் கைது செய்து துரித விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஆச்சலா செனவிரத்ன நேற்று வாதிட்டார்.

 

2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் காணாமல் போயுள்ள மாணவர்கள் குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பீ.தஸநாயக்க அமெரிக்கா சென்று தனது படிப்பை மேற்கொள்ள நீதிமன்றின் அனுமதியை கோரிய போதே காணாமல் போயுள்ள மாணவர்களின் பெற்றோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆச்சலா செனவிரத்ன இந்த வாதத்தினை முன்வைத்தார்.

 

தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்ட மூன்று தமிழ் மாணவர்கள், அவர்களது இரு முஸ்லிம் நண்பர்கள் மற்றும் மருதானை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் கடத்தப்பட்ட தமிழ் சிங்கள மாணவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையானது கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணை தொடர்பில் மேலதிக அறிக்கையினை சமர்பித்து வருகின்றது.

 

அதன்படி இந்த விசாரணைகளில் அமெரிக்காவில் பயிற்சி நெறியொன்றை மேற்கொன்டுவந்த முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் தஸநாயக்கவிடமும் இந்த கடத்தல் விவகாரங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூஅலம் பெற்றுக்கொன்டுள்ளனர். அத்துடன் அவருக்கு வெளி நாட்டு பயணமும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

இந் நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பீ.தஸ்நாயக்க சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தஸ்நாயக்க தனது பயிற்சி நெறியை தொடர அமெரிக்கா செல்ல அனுமதிக்குமாறு கோரினர்.

 

இந் நிலையில் கடந்த தவணை விசாரணையின் போதும் இதே கோரிக்கையை அந்த சட்டத்தரணிகள் வைத்திருந்த நிலையில் , கடற்படை தளபது தனிப்பட்ட ரீதியில் முன்னாள் பேச்சாளர் தஸநாயக்க தொடர்பில் பொறுப்புக் கூறுவாராக இருந்தால் பயணத்தடையை நீக்குவது குறித்து ஆராயலாம் என அறிவித்திருந்தார்.

இந் நிலையில் நேற்றும் அதே கோரிக்கையை அவர்கள் முன்வைத்த போதும் கடற்படையின் தளபதியின் உறுதிப்பாடொன்றை முன்வைத்திருக்கவில்லை. இந் நிலையில் தஸநாயக்கவின் அமெரிக்கா பயணத்துக்கு தடையை நீடித்த நீதிவான் பிரியந்த லியனகே , கடற்படை தளபதியின் தனிப்பட்ட உறுதியை பெற்றால் இடையீட்டு மனுவொன்றினூடாகவேனும் அதனை நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினால் பயணத்தடையை நீக்குவது குறித்து ஆராயலாம் என குறிப்பிட்டார்.

 

இந் நிலையில் மேலதிக விசாரணை அறிக்கையை நீதிவானிடம் சமர்பித்துத்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு, காணாமல் போயுள்ள மாணவர்கள் விவகாரம் குறித்து தற்போதும் மூவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

இதனைவிட முன்னாள் கடற்படை பேச்சாளர் தஸநாயக்கவிடம் ஏற்கனவே தாம் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ள போதும் இந்த மாணவர் விவகாரம் தொடர்பில் மீண்டும் அவரை விசாரணை செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம் என புலனாய்வுப் பிரிவினர் நீதிவானிடம் சுட்டிக்காட்டியதுடன் அதனால் அவர் அமெரிக்கா செல்வாதானால் கடற்படை தளபதி அது தொடர்பில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் பொறுப்பேற்காது தஸநாயக்க அமெரிக்கா செல்வதனை தாம் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டனர்.

 

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் மேலும் சில கடற்படை அதிகாரிகளிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.இதனை தொடர்ந்து நீதிமன்றுக்கு கருத்துக்களை முன் வைத்த காணாமல் போயுள்ள மாணவர்களின் பெற்றோர் தொடர்பில் ஆஜரான சட்டத்தரணி ஆச்சலா செனவிரத்ன இவ்வாறு வாதிட்டார்.

 

எமது கட்சிக் காரர்கள் பல வருடங்களாக தமது பிள்ளைகள் உறவினர்களுக்காக ஏங்குகின்றனர். இப்படி இருக்கையில் சந்தேக நபர்கள் பலர் சுதந்திரமாக திரிகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சந்தேக நபர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது. அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். இதனூடாக காணாமல் போயுள்ள மாணவர்களின் பெற்றோருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதுடன் அவர்களது உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.இது ஒரு மிகவும் பயங்கரமான நிலமையாகும். என வாதிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது காணாமல் போயுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்பது பேர் நீதிமன்றுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=129452&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.