Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ்லாந்தில் யாழ் யுவதி கதறக்.. கதறக்… கடத்தப்பட்டார்.

Featured Replies

சுவிஸ்லாந்தில் யாழ் யுவதி கதறக்.. கதறக்… கடத்தப்பட்டார். 

 

ஒரு திரைப்படக் காட்சிபோல் இந்தச் சம்பவம் Quincy-sous-Sénart இல் நடந்துள்ளது. 22 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் ஆயுதமுனையில் திருமணத்திற்கு முதல் நாள் கடத்தப்பட்டுள்ளார்.

23h00 மணியளவில் பெண்ணின் அலறல்களையும் பெரும் சத்தங்களையும் கேட்ட அயலவர்கள் உடனடியாகக் காவற்துறையினரை அழைத்துள்ளனர்.

Brunoy (Essonne) காவற்துறையினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள் இங்குள்ள Val d’Yerres 2 பல்பொருங் அங்காடிகள் சதுக்கத்திற்கு அருகில் இருக்கும் தொடர்மாடிக் கட்டடத்திற்கு வந்த காவற்துறையினர், அங்கு ஒரு சிறீலங்காப் பிரஜை பெரும் பதற்றத்தில் இருந்தததைக் கண்டுள்ளனர்.

தனது துணைவியார் தங்களது வீட்டில் வைத்துக் கடத்தப்பட்டதாகப் பெரும்பதற்றத்துடன் இவர் காவற்துறையினர்க்குத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுப் பெண் ஆறு நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடத்தற்காரர்கள் சிலர் ஆயுதங்கள் வைத்திருந்துள்ளனர் எனவும் அவர்கள் இந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு சுவிற்சர்லாந்து இலக்கத்தகடுடைய சிற்றுந்தில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறையினரிடம் வழங்கிய வாக்கு மூலத்தில் தாங்கள் இருவரும் அடுத்த நாள் திருமணம் செய்ய இருந்தாக இந்தச் சிறீலங்காக் குடிமகன் தெரிவித்துள்ளார்.

தங்களது திருமணத்திற்குத் தனது துணைவியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துப் பிரச்சினைகள் கொடுத்து வந்துள்ளனர் எனவும் அவர்களே இந்தக் கடத்தலை ஏற்பாடு செய்துள்ளனர் எனவும் இவர் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

இவர்கள் மிக அண்மையிலேயெ இந்த வீட்டில் குடியேறியிருந்தனர் எனவும் மிக அமைதியாகவே இருந்தனர் என்றும் அடிக்கடி விருந்தாளிகள் வந்து செல்வார்கள் என்றும், இவர்கள் பற்றி அயலவர்கள் தெரிவித்தனர். அதனாலேயே கடத்தலின் போது பெண்ணின் அலறல் கேட்டு இவர்கள் காவற்துறையினரை அழைத்துள்ளனர்.

இந்த விசாரணை உடனடியாக வேர்செய் காவற்துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட, மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அனைவரும் தமிழர்களே என உறுதிப்படுத்தப்படாத செய்தித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது ஒரு இணையச் செய்தி முற்று முழுவதுமாக உறுதிப்படுத்தப் முடியவில்லை

http://www.jvpnews.com/srilanka/104693.html

  • கருத்துக்கள உறவுகள்

கதறினது, அடுத்த நாள் தாலியக் கட்ட இருந்தவர் தானே.

என்ன தலைப்போ? :o

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில்  இது  போன்ற விடயங்கள் கிரிமினல் குற்றங்களாகப்பார்க்கப்படுபவை
கொஞ்சப்பேர் விரைவில் ஊர் பார்ப்பார்கள்..

***********

நியானி: மேற்கோளும் பதிலும் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ்லாந்தில் யாழ் யுவதி கதறக்.. கதறக்… கடத்தப்பட்டார். 

 

ஒரு திரைப்படக் காட்சிபோல் இந்தச் சம்பவம் Quincy-sous-Sénart இல் நடந்துள்ளது. 22 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் ஆயுதமுனையில் திருமணத்திற்கு முதல் நாள் கடத்தப்பட்டுள்ளார்.

----

ஒரு சிறீலங்காப் பிரஜை பெரும் பதற்றத்தில் இருந்தததைக் கண்டுள்ளனர்.

தனது துணைவியார் தங்களது வீட்டில் வைத்துக் கடத்தப்பட்டதாகப் பெரும்பதற்றத்துடன் இவர் காவற்துறையினர்க்குத் தெரிவித்துள்ளார்.

----

கடத்தற்காரர்கள் சிலர் ஆயுதங்கள் வைத்திருந்துள்ளனர் எனவும் அவர்கள் இந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு சுவிற்சர்லாந்து இலக்கத்தகடுடைய சிற்றுந்தில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறையினரிடம் வழங்கிய வாக்கு மூலத்தில் தாங்கள் இருவரும் அடுத்த நாள் திருமணம் செய்ய இருந்தாக இந்தச் சிறீலங்காக் குடிமகன் தெரிவித்துள்ளார்.

 

தங்களது திருமணத்திற்குத் தனது துணைவியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துப் பிரச்சினைகள் கொடுத்து வந்துள்ளனர் எனவும் அவர்களே இந்தக் கடத்தலை ஏற்பாடு செய்துள்ளனர் எனவும் இவர் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

 

இவர்கள் மிக அண்மையிலேயெ இந்த வீட்டில் குடியேறியிருந்தனர் எனவும் மிக அமைதியாகவே இருந்தனர் என்றும் அடிக்கடி விருந்தாளிகள் வந்து செல்வார்கள் என்றும், இவர்கள் பற்றி அயலவர்கள் தெரிவித்தனர். அதனாலேயே கடத்தலின் போது பெண்ணின் அலறல் கேட்டு இவர்கள் காவற்துறையினரை அழைத்துள்ளனர்.

 

இந்த விசாரணை உடனடியாக வேர்செய் காவற்துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட, மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அனைவரும் தமிழர்களே என உறுதிப்படுத்தப்படாத செய்தித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

இது ஒரு இணையச் செய்தி முற்று முழுவதுமாக உறுதிப்படுத்தப் முடியவில்லை

 

http://www.jvpnews.com/srilanka/104693.html

 

 

இணையச் செய்தி... ஒன்றுக்கு, ஒன்று முரண் படுபவையாக... உள்ளன.

மற்றும்.... செய்தியில் உள்ள, தமிழ் எழுத்துப் பிழைகள் ஏராளம்.

ஆமா... அது, ஜே.வி.பி. நியூஸ். :D

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரையில்.... ஸ்ரீலங்கா செய்தி ஊடகங்கள்,
அதுகும்... ஜே. வி. பி. என்ற பெயரில் உள்ள, இணையத்தின் மூலம் செய்தி பரப்பும், என்று நம்பவில்லை.

 

இந்தச் செய்தியில் ஆரம்பத்தில் உள்ள... "சிறீலங்காப் பிரஜை", என்ற சொல்லே....
இது, இந்திய புலனாய்வுத் துறை (றோ), அல்லது பள்ளிக் கூடப் பக்கம் போகாத தமிழன்,  சிங்கள ஆமி, ஒட்டுக் குழு ....  நடத்தும்  இணையம்  என்று சந்தேகிக்கின்றேன்.
 

எதற்கும்.... இந்த இணைப்புக்களை, யாழ்களத்தில் இணைப்பதையிட்டு, நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

 

இதே போன்ற, எழுத்துப் பிழைகளுடன்... தொடர்ந்தும், அந்த இணையத் தளம் செய்தி வெளியிட்டால்... அந்த, இணையத்தை... யாழ்களத்தின், கறுப்புப் பட்டியலில் இணைப்பதை தவிர, வேறு வழி இல்லை என நினைக்கின்றேன்.

 

 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.