Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நௌருவில் உள்ள 3 இலங்கையர்கள் உள்ளிட்ட 5 பேர் கம்போடியாவில் குடியேற இணக்கம் (2ம் இணைப்பு)

Featured Replies

நௌருவில் உள்ள 3 இலங்கையர்கள் உள்ளிட்ட 5 பேர் கம்போடியாவில் குடியேற இணக்கம் APR 20, 2015 | 11:29by கார்வண்ணன்in செய்திகள்

Nauru-refugees-300x199.jpeg      asylum_seekers.jpg?resize=665%2C443

 

நௌருவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், கம்போடியாவில் குடியேற்றப்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, அகதிகளின் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

கம்போடியாவில் குடியமர இணக்கம் தெரிவித்துள்ள ஏனைய இருவரும் மியான்மார் மற்றும் ஈரான் நாட்டவர்களாவர்.

அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களை வில் குடியேற்றும், திட்டம் ஒன்றை அவுஸ்ரேலியா முன்னெடுத்துள்ளது.

இதற்கான இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், நௌரவில் உள்ள தடுப்பு நிலையத்தில் உள்ள அகதிகளுக்கு சலுகைகளை வழங்கி, கம்போடியாவுக்கு அனுப்பும் முயற்சியில் அவுஸ்ரேலியா ஈடுபட்டுள்ளது.

முதலில் கம்போடியா செல்ல இணங்குவோருக்கு இலவச சுகாதார காப்பீடு, பணம், என்பன வழங்குவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

கம்போடியாவுக்கு செல்வோருக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம், 10 ஆயிரம் தொடக்கம், 15 ஆயிரம் வரையான அவுஸ்ரேலிய டொலரை வழங்கும் என்று அகதிகளுக்கான சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இன்று கம்போடியாவுக்கு அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இவ்வாறு நௌருவில் உள்ள அகதிகளை கம்போடியாவுக்கு அனுப்பும் அவுஸ்ரேலியாவின் நடவடிக்கையை, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள், அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று கண்டித்துள்ளன.

சிறுவர்களின் உரிமைகளை அவுஸ்ரேலியா மீறுவதாக யுனிசெப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நௌருவில் உள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில், 718 அகதிகள் உள்ளனர். அவர்களில்,485 பேர் உண்மையான அகதிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளனர்.

83 பேரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 150 பேர் குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/04/20/news/5364

கம்போடியாவுக்கு அகதிகளை அனுப்பும் அவுஸ்ரேலியாவின் திட்டம் கடைசி நேரத்தில் பிசுபிசுப்பு APR 20, 2015 | 11:49by கார்வண்ணன்in செய்திகள்

australia1-300x199.jpgஅவுஸ்ரேலியாவினால் புகலிடம் நிராகரிக்கப்பட்ட அகதிகளை நௌருவில் இருந்து கம்போடியாவில் குடியேற்றும் திட்டத்துக்கமைய, முதல் தொகுதி அகதிகளை நொம்பென்னுக்கு அனுப்பும் திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.

கம்போடியாவில் குடியேற இணக்கம் தெரிவித்த மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட ஐந்து அகதிகளை வாடகை விமானத்தில் கம்போடியத் தலைநகர் நொம்பென்னுக்கு இன்று அனுப்பி வைக்க அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தநிலையில், இன்று அகதிகள் வருவதாக கிடைத்துள்ள தகவல்கள் கம்போடிய அரசாங்கத்தை குழப்பமடையச் செய்துள்ளதாக கம்போடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், கொய் குயோங் தெரிவித்துள்ளார்.

“அவுஸ்ரேலியத் தரப்பின் நடவடிக்கைகளால் கம்போடிய அரசு அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இன்று நொம்பென்னுக்கு அகதிகள் வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இதுதொடர்பாக அவுஸ்ரேலியாவின் அபோட் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நௌருவில் இருந்து வரும் அகதிகளை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை கம்போடிய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மீள்குடியமர்வுத் திட்டங்கள் தயாரிக்கப்படவில்லை. இவர்களை எங்கு குடியமர்த்துவது என்று இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கம்போடிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, கம்போடியாவில் அகதிகளைக் குடியேற்றும் திட்டத்துக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக, தி கார்டியன் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/04/20/news/5367

 

Edited by BLUE BIRD

அகதிகளை கம்போடியாவுக்கு அனுப்பும் திட்டம் இரத்து

 

அவுஸ்திரேலியாவினால் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் உட்பட பல்நாட்டு அகதிகளை, நவுறு தீவிலிருந்து கம்போடியாவில் குடியமர்த்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கை இரத்துசெய்யப்பட்டுள்ளது.

 
கம்போடிய தலைநகரான 'நொம்பென்' இல் குடியேற்றப்படுவதற்காக முதல் தொகுதி அகதிகள் விசேட விமானத்தின் மூலமாக  திங்கட்கிழமை அழைத்து செல்லப்படவிருந்த நிலையிலேயே இந் நடிவடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது.
 
முன்னதாக, குறித்த அகதிகளை குடியமர்த்துவதற்கான இருபக்க ஒப்பந்தத்தில் கம்போடியாவும் அவுஸ்திரேலியாவும் கைச்சாத்திட்டிருந்தன. 
கம்போடியாவுக்கு அனுப்பப்படவிருந்த அகதிகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் காணப்பட்டுள்ளனர்.
நவுறு தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறுபவர்கள் சுய விருப்புடன் செல்பவர்களாக இருக்க வேண்டுமென  இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
 
அத்துடன். தாமாக விரும்பி கம்போடியாவில் குடியேறுவோருக்கு கையில் பணம், வங்கியில் பணம், வேலைவாய்ப்பு, கல்வி வசதி, மொழிப்பயிற்சி, ஆரோக்கிய காப்புறுதி என பல சலுகைகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
இந்த ஏற்பாட்டின் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்போடியாவுக்கு அகதிகளை அனுப்புவதை மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்திருந்தன. எவ்வாறாயினும் தற்போது இந்த நடவடிக்கை இரத்து  செய்யப்பட்டுள்ளது.
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.