Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா உதவி!

Featured Replies

இலங்கைத் தமிழர்களுக்கு 7 ஆயிரம் டன் உணவுப் பொருள்

கருணாநிதி கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனுப்புகிறது

சென்னை, நவ. 17: இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு 5200 டன் அரிசி, 1500 டன் சர்க்கரை மற்றும் 300 டன் பால்பவுடரை இந்திய அரசு அனுப்பி வைக்கும் என்று முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் 45 பேரை இலங்கை ராணுவம் குண்டு வீசி படுகொலை செய்தது. அப் போது, Ôஇனிமேலும் மத்திய அரசு பொறுமை கடைப்பிடிக்க வேண்டுமாÕ என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார். முதல்வரின் அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கொடுத்தார்.

யாழ்பாணத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடிவிட்டது. அதனால் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வது தடைபட்டது. இதனால் தமிழர்கள் பட்டினி கிடக் கின்றனர். இந்நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு, மன்மோகன் நேற்று அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

இலங்கை ராணுவத்தால், அங்குள்ள நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றியும், படுகாயம் அடைவது பற்றியும் கடந்த 10 ம் தேதி நீங்கள் வெளியிட்ட அறிக்கையை டி.ஆர்.பாலு என்னிடம் கொடுத்தார்.

அப்பாவிப் பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதற்கு எந்தவித நியாயமும் கிடையாது. இலங்கையில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் வன்முறை காரணமாக தமிழ் மக்கள் உயிரிழப்பது பற்றி எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளோம். கடந்த காலங்களில் செய்ததைப் போலவே இலங்கை அரசுக்கு இந்த முறையும் எங்கள் உணர்வுகளை திரும்பவும் எடுத்துரைப்போம்.

இலங்கைப் பிரச்னையில் ராணுவ ரீதியான தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும். அதன் மூலமே தமிழர்களுடைய உண்மையான உரிமைகளைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அதிகாரப் பங்கீடு செய்து கொள்ள முடியும். இந்த கருத்தை நாங்கள் தெளிவு

படுத்தி இருக்கிறோம்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு, 5,200 டன் அரிசி, 1,500 டன் சர்க்கரை, 300 டன் பால் பவுடரை அனுப்பி வைக்கவுள்ளது. இலங்கையில் தமிழர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

எனினும், இப்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும் என்பதுதான் முதன்மையானது. இந்திய அரசின் வெளியுறவுத் துறை செயலர், கொழும்பு செல்லவிருக்கிறார். அப்போது இலங்கை அரசுக்கு நமது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பார். இலங்கையில் மற்ற குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளையும், சலுகைகளையும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்துவார்.

அடுத்து, இலங்கை அதிபர் ராஜபக்சேவை நான் சந்திக்கும் போது, உரிய முறையில் இவற்றை அவருக்குத் தெரிவிப்பேன்.

(நன்றி : தினகரன்)

  • கருத்துக்கள உறவுகள்

உதவிசெய்யட்டும் நல்ல விடயம் ஆனால் அவை தமிழருக்கு போய் சேருகிற மாதிரி செஞ்சிலுவை சங்கம் மூலம் போகிற மாதிரி பார்த்து கொண்டால் நல்லது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்கள்?

கப்பலில் வரப்போகும் சில "பிரத்யேகமான பொதிகள்" இலங்கை இராணுவத்திற்கு செல்ல வேண்டாமா? செஞ்சிலுவை சங்கம் அதை வைத்து என்ன செய்யும்? "உணவுக் கப்பல்" என்ற சங்கேத சமிஞ்சைகளை யார் உணர்கிறார்களோ இல்லையோ புலிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

ம்ம்ம்ம்ம் எப்ப வருமாம்? எப்படி வருமாம்?

¯½× «ÛôÒÈÐ ºó§¾¡ºÁ¡É Å¢ºÂõ¾¡ý, ¬É¡ø Å¡ö¸Ã¢º¢Â¡ Á¡È¡ÁøÅ¢ð¼¡ø ¿øÄÐ

இலங்கைத் தமிழர்களுக்கு 7 ஆயிரம் டன் உணவுப் பொருள்

கருணாநிதி கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனுப்புகிறது

சிறிலங்கா விமானப்படையினருக்கு தமிழகத்தில் பயிற்சிகள்

தமிழகம் இந்தியா சூளுர் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய வான்படைத்தளத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இதனைகண்டித்து பெரியார் திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் பாரரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது

இதேவேளை இவ்வாரம் இந்தியாவின் பஞ்சாப் தலைநகர் சண்டிகாரில், கடந்த சிலநாட்களாக சிறிலங்கா விமானப்படையினருக்கு இந்தியாவால் இரகசியமாக விமானப்பயிற்சிகள் வழங்கப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.