Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாராய வியாபாரியின் மனைவிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாராய வியாபாரியின் மனைவிகள்.

தமிழ்நாட்டின் நெல்லைப் பகுதியில் ஒரு சாராய வியாபாரி இருந்தார். மனைவி வந்த ராசியோ பணம் மழையாகக் கொட்டியது.

சாராயமழை பாய, பணமழையும் பாய்ந்தது. 300 கோடிக்கு மேல் சொத்து திரண்டது.

கூடவே, யாவாரிக்கு எல்லா பணக்காரருக்கும் வரும் வியாதி வந்தது. கிளி போல பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி வேணுமே.

தேடினார், கிடைத்தது. வந்தவளை இரண்டாவது மனைவி ஆக்கிக் கொண்டார்.

பணமுதலை அவ்லவா! மிகச் சிறப்பாக கவனித்துக் கொண்டார் இரண்டாவது மனைவி.

அகமகிழ்ந்து போன யாவாரி, சும்மா 100 கோடியை அப்படியே வாரிக் கொடுத்துவிட்டார்.

வந்தது வினை.

கோபத்தில் துடித்தார், முதல் மனைவி. இந்த மாதிரி போனால், எல்லாத்தையுமே உருவிடுவாளே, நம்மள நாக்க வழிக்கத் தான் வைச்சிருவாள் போல இருக்கே என்று உறுமினாள்.

கொலைத்திட்டம் உருவாகியது.

இரண்டாவதைப் போட அல்ல... யாவாரியை..

மிகப் புத்திசாலித்தனமான தேர்வு. இரண்டாவது மனைவியைப் போட்டால், போலீசாரின் நேரடிச் சந்தேகம் வரும். மேலும் யாவாரியின் கோவம், ஒரு சதமும் தேற விடாது.

யாவாரியும், இரண்டாவது மனைவியும் ஒருநாள் காரில் பக்கத்து ஊர் போய் திரும்பும் போது, கார் மடக்கப்பட்டது. கூலிக் கொலையாளிகள் 15 பேர், காரிலிருந்த இருவரையும் இழுத்து வெட்டியது.

யாவாரி அங்கேயே அவுட். இறந்துவிட்டார் என விட்டுச் செல்லப்பட்ட இரண்டாவது மனைவியோ, குற்றுயிராக, வைத்தியசாலை கொண்டு செல்லப் பட்டு தப்பிப் பிழைத்தார்.

ஆனால், கொலைக்கும்பல் அனுப்பப் பட்டது தனது சகலியால் என உறதியாக நம்பிய இரண்டாவது மனைவி வஞ்சம் வளர்த்தார்.

எதிர்பார்தது போலவே, பணமும் வியாபரமும் கைக்கு வர சந்தேகத்தின் பேரில் கைதான முதல்மனைவி, செய்ய வேண்டியதை செய்ய, யாவாரி, யாவாரப் போட்டியால் கொல்லப் பட்டிருக்கலாம் என, போலீசார் 'சந்தேகப்பட', அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.

இது நடந்தது 2013ல்.

தருணம் பார்த்து காத்திருந்தார் இரண்டாவது மனைவி, தன் கண் முன்னே கொல்லப் பட்ட 'ஆசை நாயகன்' கொலைப்பழிக்குப் பழி வாங்க.

அரசல் புரசலாக இந்த தகவல் தெரிந்ததும், கொஞ்ச நாள், சாமாதானம் பேசி முடிக்கும் வரை சிங்கப்பூர் சென்று பாதுகாப்பாக இருக்கலாம் என சென்னை கிளம்பினார், பெயிலில் இருந்த முதல் மனைவி.

சென்னப் பட்டணம் போகும் வழியில், 'தூக்குங்கடா', என்ற இரண்டாவது மனைவியின் உத்தரவில் வந்த, 11 பேர் கொண்ட கூலிக்கும்பல் சீர்காழி அருகே, காரை மறித்து முதல் மனைவியை வெட்டிக் கொன்றது.

இது நடந்தது கடந்த ஞாயிறு 26 ஏப்பிரல் 2015 அன்று.

வஞ்சம் தீர்த்த இரண்டாவது மனைவியும் கூலிக்கும்பலின் 4 பேரும் கைதாகி உள்ளனர்.

ஆக, சாராய வியாபாரியின் பாவச் சொத்தை, யாரோ அனுபவிக்க நினைத்து, யாரோ அனுபவிக்கப் போகிறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி  பயப்படுத்தக்கூடாது..... :lol:

 

நாங்களாவது

திருந்திறதாவது.... :icon_mrgreen:  :D

இதைத்தான் சொல்லுவாங்களோ "கொலையும் செய்வாள் பத்தினி என்று" :o :o :unsure:

Edited by ஆதிவாசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.