Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை பாராட்டவே வருகிறார் ஜோன் ஹெரி

Featured Replies

John-e1420799354631-300x224.jpg

 

இலங்கையின் புதிய அரசின் செயற்பாடுகளைப் பாராட்டுவதற்காகவே அமெரிக்க ராஜாங்க செயலர் ஜோன் ஹெரி இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜோன் ஹெரி வெளிநாடுகளுக்கான தனது ஒருவார கால விஜயத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளார்.
 
2004 சுனாமி அனர்த்தத்தின்போது அப்போதைய அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொலின் பவல் விஜயம் மேற்கொண்ட பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜோன் ஹெரி இந்த விஜயத்தின்போது சந்திப்பார்.
 
முன்னைய அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார பாணியிலான நிர்வாகத்தை மாற்றியமைக்கப்போவதாக சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பது உட்பட பல முன்னேற்றகரமான விடயங்கள் அடங்கிய 100 நாள் திட்டத்தை சிறிசேன நடைமுறைப்படுத்தியுள்ளார்.
 
இலங்கையுடன் பரஸ்பரம் உதவிகரமான உறவுகளை ஏற்படுத்துவதற்கான வாயப்புகள் உள்ளதாக அமெரிக்க கருதுவதாக செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர், இலங்கை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான கலங்கரை விளக்காக திகழும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் ஒரேயொரு விடயமே இரு நாடுகளின் உறவை தீர்மானித்ததுஇ யுத்தக்குற்றம் மற்றும் மனித உரிமைகளே அந்தவிடயம் என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் டெரெசிட்டா ஸ்காவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும் கடந்த பெப்ரவரியில் இலங்கையின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்களுடன் ஒத்துழைப்பதற்கு அவகாசத்தை வழங்குவதற்காக யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஆறு மாதங்களுக்கு பிற்போடுவதற்கு ஐ.நா இணங்கியது.
 
தனி தமிழ் தேசத்திற்காக 30 வருட காலமாக மோதலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இறுதிக்கட்ட மோதலில் ராஜபக்ச அரசாங்கம் பாரிய, பரந்துபட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 
ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை தாமதிப்பதை தான் ஆதரித்ததாக தெரிவித்த ஸ்காவர் யுத்த குற்றங்கள் குறித்த விடயங்கள் மிகவும் சர்ச்சைக்குரியனவாகவும்இ கொந்தளிப்பானவையாகவும் மாறியிருந்தன. அதனால் நாங்கள் முன்னெடுக்க விரும்பும் பேச்சுவார்த்தைகள் குழம்பும் அபாயம் காணப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
 
ஜோன் ஹெரி  தனது விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதுடன் வெசாக் நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார்.
 
இலங்கையுடன் புதிய உறவுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக தன்னை இணைத்துக்கொள்ள ஜோன் ஹெரி முயல்கின்றார் என ஸ்காவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை இலங்கை நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை அடையும் தனது இலக்குகளை எட்டுவதற்கு அமெரிக்கா உதவ விரும்புகின்றது என இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் வொய்ஸ் ஒப் அமெரிக்க ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.