Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மொழியால் தமிழ் கண்ட நன்மை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்மொழியால் தமிழ் கண்ட நன்மை...

 

vasagar%20pakkam%20image(1).jpg'செம்மொழியான தமிழ் மொழியே' என்ற பாடல் சிலருக்கு சங்க நாதமாகவும், சிலருக்கு சகிக்க முடியாத இரைச்சலாகவும் பாடப்பட்டு,  5 வருடம் முன்பு தொடங்கப்பட்ட செம்மொழி மாநாடு சாதித்தது என்ன ? 

தமிழ் செம்மொழி ஆன பின், 'ஆகா... ஓஹோ...!' என வானுயர குதித்தார்கள். இனி தமிழுக்கு ஏற்றம்தான் என்றார்கள் .கண்டது ஏமாற்றம் தான். தமிழை அறிவித்த பின் அப்போதைய காங்கிரஸ் அரசு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளையும் அறிவித்து, தமிழ் மொழிக்கு செம்மொழி என்று தனி பெருமை ஒன்றும் கிடையாது என்பது போல் குறுக்கி விட்டார்கள்.

முந்தைய காங்கிரஸ் அரசு மலையாள மொழிக்கும் தமிழின் சேய் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளாம் முதலான மொழிகள் செம்மொழித் தகுதி பெறுகின்றன என அறிவித்ததால் தமிழுக்குப் பெருமை தானே என்று எண்ணலாம். ஆனால் வீண் பெருமையால் பயனில்லை. செம்மொழித் தகுதிக்குரிய தொன்மை, முதன்மை தாய்மை முதலான தகுதிகளற்ற மொழிகளுக்கு அவ்வாறு தகுதியை வழங்குவது முறையல்ல. சமஸ்கிருதத்தைவிடவும், மூத்த மொழியாகவும் சிறந்த தனித்தியங்கும் மொழியாகவும் தமிழ் உள்ளது. 

ஆனால் சமஸ்கிருதத்திற்கு இணையான உதவியைத் தமிழுக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. செம்மொழிக்கான கால வரையறையை 2000 ஆண்டு என வரையறுத்திருந்ததை 1000 என மத்திய அரசு மாற்றியது. 3000 ஆண்டாக மாற்ற வேண்டும், கி.மு. என அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் அறிஞர்கள் குரல் கொடுத்தனர். முதல்வராக இருந்த பொழுது கருணாநிதி முதலில் 1000 ஆண்டு வரையறைக்கு ஒப்புக்கொண்டு, அதன்பின் வலுத்த எதிர்ப்பினால் 1500 ஆண்டு என மாற்றினார்.

semmozhi%20500%201(1).jpg

உன் மொழிக்குத் தகுதி கிடைத்துவிட்டது. அடுத்த மொழிக்குக் கிடைப்பதாக இருந்தால் உனக்கு என்ன என்ற தொனியில் நேரில் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் சொல்லி உள்ளார். காலவரையறைக் குறைப் பிற்கு உடன்படாமல் ஒதுக்கியிருந்தார் என்றால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது. 

semmozhi%20250.jpgமத்திய அரசின் சதியை உணர்ந்து, கால வரையறையை மாற்றாமல் இருக்க வழிவகை செய்திருந்தால், இவ்வாறு அடுக்கடுக்காக ஒவ்வொரு மொழிக்காகச் செம்மொழித் தகுதி அளித்து உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாழவுபடுத்தும் நிலை வந்திருக்காது. பத்தாவது படிப்பவரும் phd படித்தவரும் எப்படி ஒன்றாக முடியும் ?

காங்கிரஸ் அரசுக்கு பின் வந்த மோடி அரசு, 'அடுத்த வீட்டுக்காரனுக்கு அதி காரம் வந்தால் அண்டை வீட்டுக் காரனுக்கு இரைச்சல் இலாபம்'  என்பது போல் சமஸ்கிருதத்துக்கு பெரும் அந்தஸ்து  கொடுத்துக்கொண் டிருக்கிறது. 

'சமஸ்கிருத வாரம் ,ஹிந்தி வாரம் என கொண்டாடி வடநாட்டு மொழிக ளுக்கு வாழ்த்து பா பாடுகிறது. செம்மொழி தகுதி கிடைத்ததால் அண்ணா விருது, கலைஞர் விருது போல் செம்மொழி விருது கொடுக்கப்பட்டதுதான் கண்ட பலன் என என்ன தோன்றுகிறது. இதனால் தமிழ் வளர்ச்சிக்கு வழி ஏதும் ஏற்படவில்லை. 

- ஷான்

Tanks vikadan

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கு செம்மொழியானால் மனவாடு கலைஞர் கருணாதிக்கு உள்ளூர மகிழ்ச்சிதானே..! :icon_idea::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கு செம்மொழியானால் மனவாடு கலைஞர் கருணாதிக்கு உள்ளூர மகிழ்ச்சிதானே..! :icon_idea::D

அதனால்தான் தமிழின் ஆண்டுகுறைப்புக்கு ஒத்துக்கொண்டுள்ளார்  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முதுகிலை கத்தி செருகின சம்பவத்துக்கு பின்பு எவனாவது எனக்கு முன்னாள் "மண் தோன்றி கல் தோன்றா எண்டு தொடங்க முதலே ஒரு கல்லை எடுத்து அடிபோடணும் சுற்ற வர என்ன நடக்குது என்பது தெரியாமல் வாழ்வதும் தற்பெருமை பேசுவதும் தமிழனின் இயல்பாய் போய் விட்டது .


இந்த கருநாய் ஒத்தாசைஉடன் தமிழ் ஒருங்குறி குழுவில் சமஸ்கிருத விசுவாசி சர்மா மீண்டும் உள்வாங்கபட்டுள்ளார் .

முதலில் அடுத்தவர் மொழி மற்றும் பண்பாடுகளை மதிக்க வேண்டும் சிங்களவர்களை மற்றும் குறை சொன்னால் அது தவறு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அடுத்தவர் மொழி மற்றும் பண்பாடுகளை மதிக்க வேண்டும் சிங்களவர்களை மற்றும் குறை சொன்னால் அது தவறு

என்ன சொல்ல வருகின்றிர்கள் ராஜா? கன்னடன் செம்மொழி தகுதி பெற்றது சரி என்றா ? அடுத்த 50 வருடத்தில் தமிழ் எப்படி இருக்கும் என தெரியவில்லை இதுக்குள்ளை உங்கடை ..................... :lol:

Edited by பெருமாள்

மொழியின் பழமையும இலங்கையிள் தமிழ் மக்களின் எண்ணீககையும் ஒத்து போகும்

ஒரு நாட்டின் மொத்த வாக்கெடுப்பு எடுத்தால் இலங்கையில் தமிழர்களின் கை ஒஙகாது

கண்னட மொழிக்கு செம்மொழி கொடுத்தால் தமிழ்க்கு என்ன நட்டம் வரபோகிறது

  • கருத்துக்கள உறவுகள்

மொழியின் பழமையும இலங்கையிள் தமிழ் மக்களின் எண்ணீககையும் ஒத்து போகும்

ஒரு நாட்டின் மொத்த வாக்கெடுப்பு எடுத்தால் இலங்கையில் தமிழர்களின் கை ஒஙகாது

கண்னட மொழிக்கு செம்மொழி கொடுத்தால் தமிழ்க்கு என்ன நட்டம் வரபோகிறது

தமிழுக்கு நட்டம் வராது.. ஆனால் "செம்மொழி" என்கிற வரையறைக்கு இழுக்காகிவிடும். இழுக்காகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

மொழியின் பழமையும இலங்கையிள் தமிழ் மக்களின் எண்ணீககையும் ஒத்து போகும்

ஒரு நாட்டின் மொத்த வாக்கெடுப்பு எடுத்தால் இலங்கையில் தமிழர்களின் கை ஒஙகாது

கண்னட மொழிக்கு செம்மொழி கொடுத்தால் தமிழ்க்கு என்ன நட்டம் வரபோகிறது

 

%25E0%25AE%258E%25E0%25AE%25B2%25E0%25AF      %E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.