Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மே 7ம் தேதி இங்கிலாந்து பொதுத் தேர்தல்: - யாருக்கு வெற்றி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 7ம் தேதி இங்கிலாந்து பொதுத் தேர்தல்: - யாருக்கு வெற்றி !

[Tuesday 2015-05-05 20:00]
uk-election-050515-400-seithy-world.jpg

நாளைய மறுநாள், மே 7ம் தேதி, இங்கிலாந்து பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தான் வரும் ஐந்தாண்டுக்கு இங்கிலாந்தை எந்தக் கட்சி ஆட்சி செய்யப்போகிறது என்று தீர்மானிக்கும்.

 

இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்திருக்கும் புதிய இளவரசியால் இங்கிலாந்தில் அரசியல் பரபரப்பு கொஞ்சம் தனிந்திருக்கிறது. இருந்தாலும், இந்த முறை எந்தக் கட்சி வெற்றிப் பெறும், என்று இணையங்களில் மக்களிடம் கருத்து கேட்டி கணிக்கப்பட்டு வருகின்றன.

 

அப்படி YouGov என்ற பிரபல இணையம் மேற்கொண்ட கருத்து கணிப்பின் முடிவில் ஒரு அதிர்ச்சி கரமான முடிவு கிடைத்துள்ளது. இங்கிலாந்து தேர்தலில் மொத்தம் 6 முக்கிய கட்சிகள் போட்டி இடுகின்றன.

  

அவை, தற்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் பார்டி(Conservatives), பழமையான கட்சிகளுள் ஒன்றான எட் மிலிபண்டின் தொழிலாளர் கட்சி(Labours Party), ஐக்கிய ராஜ்ஜிய சுதந்திரக் கட்சி(Ukip), லிபரல் டெமாக்ரட் கட்சி (Liberaல் Democrats) மற்றும், கிரீன் கட்சி(Green Party). இதில், கன்சர்வேடிவ் கட்சி, தொழிற்கட்சி மற்றும் லிபரல் டெமாக்ரட் ஆகிய மூன்றும் பெரும்பான்மை பெறும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால், நாளடைவில் நடந்த கருத்துக் கணிப்புகளில், கேமரூனின் கன்சர்வேடிவ்ஸுக்கும், மிலிபண்டின் லேபர்ஸுக்கும் கடினமான போட்டி நிலவுவது தெளிவாகி இருக்கிறது. அண்மையில், YouGov இணையதளம் மக்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், 33 சதவீதம் பேர் கன்சர்வேடிவ்ஸ் கட்சிக்கும், லேபர்ஸ் கட்சிக்கும் ஆதரவளித்துள்ளனர்.

 

மற்ற கட்சிகளான கிரீன் பார்டிக்கு, 5 சதவீதம் பேரும், லிபரல் டெமாக்ரட்டுக்கு, 10 சதவீதம் பேரும், சுதந்திரக் கட்சிக்கு 12 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர். எனவே இந்த முறையும், கூட்டனி ஆட்சி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் தேர்தல் நாளைய மறுநாள், மே 7ம் தேதி, காலை 7 மணிக்கு துவங்க இருக்கிறது.

 

7 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நடைபெறும். 650 தொகுதிகளில், வாக்கு பதிவு பணியில் மொத்தம் 3,500 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 மணியோடு நிறைவடையும் ஓட்டுப் பதிவை, முடிந்த உடனேயே எண்ண ஆரம்பித்து விடுவார்கள். இதற்காக, 1,500 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், இரண்டு இலங்கை அமைச்சர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=131529&category=WorldNews&language=tamil

பிரித்தானிய தேர்தலில் தமிழ்மக்களை அதிகளவில் வாக்களிக்குமாறு வேண்டுகோள்! - இரு ஈழத்தமிழர்களும் போட்டி.

[Tuesday 2015-05-05 20:00]
uk-election-050515-400-seithy.jpg

பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அதிகளவிலான தமிழ்மக்களது பங்கெடுப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு பரப்புரைகளை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதிகள், வாக்குரிமையினை தவறாது பயன்படுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளனர்.

  

புலம்பெயர் தேசங்களில் இடம்பெறுகின்ற உள்நாட்டுத் தேர்தல்களில், அந்தந்த நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு வழங்கியுள்ள வாக்குரிமையினை பயன்படுத்துவதனை ஊக்குவிக்கும் தீர்மானமொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் ஏலவே நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் மே 7ம் நாள் வியாழக்கிழமை பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகளவிலான தமிழ்மக்களை பங்கெடுக்குமாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

சனநாய வழிமுறை தழுவிய இன்றைய ஈழ விடுதலைப் போராட்டத்தின் மென்வலுவில் புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற ஈழத்தமிழ் மக்களின் வகிபாகம் முக்கியமான ஒன்றாகவுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்கள் தங்கள் குடிமக்களுக்கு வழங்கியுள்ள வாக்குரிமையினை உரியமுறையில் பயன்படுத்துவதன் ஊடாக தமிழ்மக்கள் அத்தேசங்களில் தங்களது சமூக அரசியல் இருப்பினை உறுதியாக அடையாளப்படுத்த முடியும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இத்தேர்தலில், ஈழத்தவர்களான செல்வி உமா குமரன் மற்றும் திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=131546&category=TamilNews&language=tamil

பிரிட்டிஷ் தேர்தலில் தமிழர் வாக்கு யாருக்கு? 

 

பிரிட்டனில் எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.

வாக்காளர்களில், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் உட்பட சிறுபான்மையினர் 8 வீதம்.
ஆனாலும் போட்டி கடுமையாக இருப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகள், தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், தேர்தலின் முக்கிய விவாதப் பொருளாக அமைந்துள்ள பொருளாதாரத்தின் அடிப்படையில், தமிழர்களின் வாக்கு யாருக்கு?
 
இவை குறித்து எமது பூபாலரட்ணம் சீவகன் வழங்கும் காணொளி.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்­தா­னி­யாவின் 56 ஆவது பாரா­ளு­மன்­றத்தைத் தெரிவுசெய்­வ­தற்­கான முக்­கி­யத்­து­வ­மிக்க பொதுத் தேர்தல் இன்று ஆரம்­ப­மா­கி­றது.

 

david-cameron-vs-ed-miliband.jpg
தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான இரு கட்­சி­க­ளாக அந்­நாட்டுப் பிர­தமர் டேவிட் கமெ­ரோ­னின் பழை­மை­வாதக் கட்­சியும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரான எட் மிலிபான்­டி­ன் தொழில் கட்­சியும் விளங்­கு­கின்­றன.

 

இந்த இரு கட்­சி­களும் 1922 ஆம் ஆண்டு முதல் பிரித்­தா­னி­யாவின் மிகப் பெரிய கட்­சி­க­ளாக விளங்கி அந்­நாட்­டுக் கான பிர­த­மர்­களை வழங்கி வந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இந்­நி­லையில் அந்தக் கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வரே அடுத்த பிர­த­ம­ராக வரு­வ­தற்கு வாய்ப்­புள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது. மேற்­படி தேர்­த­லை­யொட்டி பிரித்­தா­னிய அர­சியல் கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் தீவிர பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

 

எனினும் இந்த தேர்­தலில் எந்­த­வொரு கட்­சியும் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெறும் சாத்­தி­ய­மில்லை என கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்­புகள் தெரி­விக்­கின்­றன.

 

பிரித்­தா­னியா ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்­ததை விடவும் பல­ம­டைந்­துள்­ள­தா­கவும் ஆயினும் மேலும் செய­லாற்ற வேண்­டி­யுள்­ள­தா­கவும் பிர­தமர் டேவிட் கமெரோன் தெரி­வித்­துள்ளார். பழை­மை­வாத கட்­சிக்கு இந்த தேர்­தலில் வெற்றி பெற முடியும் என அவர் கூறினார்.

 

அதே­ச­மயம் எட் மிலிபான்ட், எமது நாட்­டுக்கு கடின உழைப்பின் வெகு­ம­தியை மீளப் பெற்றுத் தரு­வ­தற்கு மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
பிர­தமர் டேவிட் கமெ­ரோனின் பழை­மை­வாத கட்சி 2010 ஆம் ஆண்டுத் தேர்­தலில் 307 பாரா­ளு­மன்ற ஆச­னங்­களை வென்­றெ­டத்­துள்ளார்.

 

“2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து நாம் பல­வற்றை அடைந்­துள்ளோம். எனினும் கல்வி உள்­ள­டங்­க­லான விட­யங்­களில் தற்­போது அடையப் பெற்­ற­வைகள் திருப்­ப­தி­க­ர­மா­ன­வை­யாக இல்லை" என தெரிவித்துள்ள டேவிட் கமெரோன்இ நலன்புரி மற்றும் பாடசாலை சீர்திருத்த விவகாரங்கள் தொடர்பில் மேலும் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாக குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/articles/2015/05/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BE%C2%AD%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.