Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக் போர் மிகப் பெரிய தவறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் போர் மிகப் பெரிய தவறு: பிளேர்

நவம்பர் 19, 2006

லண்டன்: ஈராக் மீது போர் தொடுத்தது மிகப் பெரிய தவறு என்று இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை குவித்து வருவதாக கூறி அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது. அமெரிக்காவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் பிளேர், அமெரிக்க படைக்கு நிகராக தனது நாட்டு படை வீரர்களையும் போரில் ஈடுபடுத்தினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து தலைமையிலான அமெரிக்க ஆதரவு படையினரின் கடும் தாக்குதலால் ஈராக் வீழ்ந்தது. சதாம் உசேனும் பிடிபட்டார். ஆனாலும் அமெரிக்கா சொன்ன முக்கியக் குற்றச்சாட்டான பேரழிவு ஆயுதக் குவியலில் ஒரு சின்ன இரும்புத் துண்டைக் கூட அமெரிக்கவால் மீட்க முடியவில்லை.

பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்பதை அமெரிக்கா பகிரங்காக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட அத்தகைய ஆயுதங்கள் அறவே இல்லை என்பதை உலகம் புரிந்து கொண்டது. 'சரி, வந்தது வந்து விட்டோம், வழித்து விட்டு இடத்தைக் காலி செய்வோம்' என்ற அடிப்படையில் ஈராக்கை ரணகளப்படுத்தி வருகின்றன அமெரிக்கா தலைமையிலான படைகள்.

தினசரி அங்கு நடைபெறும் சண்டைகளில் அப்பாவி ஈராக்கியர்கள் பலியாகி வருகின்றனர். அமெரிக்காவின் படையெடுப்புக்குப் பின்னர் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈராக்கியர்கள் உயிரிழந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

இந்த நிலையில் ஈராக் போர் தவறானது என்று பிளேர் பகிரங்கமாக கூறியுள்ளார். அவரது இந்த ஓபன் ஸ்டேட்மென்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரபு நாட்டுத் தொலைக்காட்சியான அல் ஜசீராவின் ஆங்கில அலைவரிசைக்கு பிளேர் அளித்த பேட்டியில்தான் இவ்வாறு தெரிவித்தார்.

பிளேர் கூறுகையில், ஈராக் மீது நடந்த படையெடுப்பு இதுவரை எந்தவித நல்ல விளைவையும் கொடுக்கவில்லை. இதுவரை நடந்துள்ளது பேரழிவுதான். போர் தவறாகி விட்டது.

திட்டமிட்டதில் ஏற்பட்ட தவறுதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம். மேலும் அல்கொய்தா, சன்னி முஸ்லீம்களின் கூட்டு ஒருபுறம், ஈரான் ஆதரவு ஷியா முஸ்லீம்கள் மறுபுறம், இப்படிப்பட்ட நிலையில் எங்களது இலக்கு குறி தவறி விட்டது. சமாளிப்பது சிரமமாகி விட்டது.

மொத்தத்தில் சண்டையை விரும்புபவர்கள் பெரும்பான்மையாகவும், அமைதியை விரும்புபவர்கள் குறைவாகவும் போய் விட்டதால் ஈராக்கில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது என்றார் பிளேர்.

பிளேரின் இந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நிலையை முழுமையாக ஆதரித்த ஒரே நாடு இங்கிலாந்து மட்டுமே. படைகளையும் உடனேயே அனுப்பி வைத்தார் பிளேர்.

ஈராக் விவகாரத்தில் ஜார்ஜ் புஷ் மேற்கொண்ட நிலைக்கு அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்களது ஆவேசமான பதிலைக் காட்டி விட்டனர். இதனால் புஷ் ஆடிப் போயுள்ளார். இந்த நிலையில், பிளேர் பகிரங்கமாக ஈராக் போர் தவறானது, அது பேரழிவை ஏற்படுத்தி விட்டது என்று கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பேரழிவு என்ற வார்த்தையை பிளேர் பயன்படுத்தவில்லை என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் விளக்கியுள்ளது.

கண்கெட்ட பின்னே சூரியநமஸ்காரம்.

சுமார் 115 பேரை கொன்ற வழக்கில் சதாமிற்கு தூக்கென்றால் 6 இலட்சம் மக்கள் சாவிற்கு காரணமான புஸ்ஸிற்கும், பிளேயருக்கும் என்ன தண்டனை கொடுப்பது?????

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோல் எடுத்தாச்சில்லே, தங்கட வேலை முடிஞ்சுது, உந்த பிரிட்டிஸ் காரர்களால் தானே எங்கட பிரச்சனைக்கு ஒரு காரணம். இலங்கையில் ஆண்டு தங்கட சுய நலத்துக்காக தமிழர் ஆட்சியையும்,சிங்களவர் ஆட்சியையும் ஒன்றாக்கி, களவெடுத்து, மதம் பரப்பி, தங்கட வேலை முடிஞ்சதும் சென்றது மட்டுமல்லாது, சிங்கள அரசுக்கு இராணுவ உதவி வழங்கியதும் புலிகளுக்கு தடை விதிச்சும் உந்த பிரிட்டிசுக்காரர்கள் தானே

அடுத்தவரை சித்திரவதை செய்து அவர்கள் கண்ணீரில் இலாபம் தேடும் இந்த போக்கு மனிதனுக்கு எப்போது ஆரம்பித்தது? மனிதன் தோன்றியதிலிருந்தேவா?

சுரண்டும் வரை சுரண்டி விட்டு பாந்து உந்த பிரிட்டிஸ் உலகின் ரத்தக்களரிக்கு காரணம் உவர்கள்தான் ஆனால் ஒரு சிறிய நாட்டை சேர்ந்தவர்கள் உலகத்தின் பெரும்பாலான நாடுகளை தம் ஆட்சிக்கு உட்படுத்தி வைத்திருந்தது ஆச்சரியமளிக்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.