Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜை இழந்த சாவகச்சேரி

Featured Replies

-யாழின் மைந்தன்- http://www.thinakkural.com/news/2006/11/19...s_page15529.htm

தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக குரல்கொடுத்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு ஒருவாரகாலம் கடந்துவிட்டது. தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென கால்நூற்றாண்டுகளுக்கு முன்னர், காங்கேசன்துறை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றபின்னர், தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கூறிய தீர்க்கதரிசனம் இன்றும் பொய்க்கவில்லையென்பதை ரவிராஜின் படுகொலை நிரூபணமாக்கியுள்ளது. தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக போராடுபவர்கள் சுட்டுச் சரிக்கப்படுவது, திருகோணமலையில் நடராஜன் என்ற வீரமறவன், மணிக்கூட்டுக்கோபுரத்தில் கறுப்புக்கொடியைக் கட்டியபோது படைத்தரப்பினால் சுட்டுக்கொல்லப்பட்டது முதல் ஆரம்பித்து இன்றுவரை அரங்கேறிவருகின்றது. இன்றுவரை பல தலைவர்களை நாம் இழந்திருந்தாலும், தமிழ் மக்களது விடுதலையுணர்வு மேலோங்கி வருவதையே காணலாம்.

துப்பாக்கிக் கலாசாரம் என்று இலங்கையில் தலையெடுத்ததோ அன்றுமுதல், தமிழ் மக்களின் வாழ்வும் துப்பாக்கியே விதியை நிர்ணயித்து வருகின்றது. சிங்களப் பேரினவாதம் அதனையே தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்குவதற்கு பயன்படுத்தி வருகின்றது. இதற்கு நல்ல உதாரணமாக மாமனிதர் ரவிராஜ் படுகொலை உதாரணமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டுமக்களின் ஒரே தரைவழிப் பாதையை அரசாங்கம் தன்னிச்சையாக மூடி அவர்களைப் பட்டினிபோட்டு, தொழில்முயற்சிகளுக்கு வேட்டுவைத்து அவர்களை அழிக்க முயல்வதை ஐ.நா. தூதுவராலயம் முன் முழங்கிய இருபத்துநான்கு மணித்தியாலயத்தில் அவர் சுட்டுச்சரிக்கப்பட்டார். அவர் அதிகாலையில் சிங்கள மக்களின் விருப்புக்குரிய தொலைக்காட்சிக்கு உண்மைநிலையை தெளிவுபடுத்தி பேட்டியளித்துவிட்டு, தொழில் நிமித்தம் வெளியே சென்றவேளையில், அதுவும் அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரதேசத்தில் இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவர் கொல்லப்படுவதற்கு உடனடித்திட்டமாக இதனைக் கருத இடமில்லை. இது திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட கொலையென்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடு இருக்கமுடியாது. அவருடன் தன்னுயிரை ஈர்த்தவர் அவரது மெய்ப்பாதுகாவலர் சிங்கள சகோதரர் என்கின்றபோது மனிதகுலத்தை நேசிக்கும் அனைவருக்கும் வேதனைதரும் நிகழ்வாகும். இதைவிட வேதனை அவரது சகோதரர் சில தினங்களுக்குமுன் முகமாலைச்சமரில் முகம்தெரியாதளவிற்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்ற செய்தியாகும். கொடிய யுத்தம் மனிதகுலத்தின் அழிவுக்குவழிவகுக்குமென அமரர் ரவிராஜ் கூறிவந்த வார்த்தைகளை இது புலனாக்கியுள்ளது.

இந்தியாவின் விடுதலைக்காக போராடி அதனை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியே இந்தியா சுதந்திரம் பெற்ற நூற்றி எண்பத்தைந்தாவது நாளில் மதவெறிகொண்ட கோட்சே என்ற கொலையாளியால் சுட்டுச்சரிக்கப்பட்டார். அகிம்சையை உலகுக்குப் போதித்த இந்தியாவே காந்தி சுடப்பட்டார் என்ற செய்தியை உலகுக்கு அறிவிக்க நான்கு மணித்தியாலங்கள் தடுமாறியது. இன வெறிக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கும், அமெரிக்காவை வளம்படுத்தவந்த ஜனாதிபதி ஜோன் கெனடியும் சுட்டுச்சரிக்கப்பட்டது வரலாறு. இந்த வரலாறு உலக அரசியலில் இன்றும் திருத்தப்படாத கறை படிந்த அரசியல் கலாசாரமாக வளர்ந்துதான் வருகிறது. இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த அன்னை இந்திராகாந்தியும், தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மெய்ப்பாதுகாவலரால் சுட்டுச்சரிக்கப்பட்டவர்தான

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.