Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை செல்கிறார் இந்தியப் பேராளர்....!!!!

Featured Replies

இலங்கை செல்கிறார் இந்தியப் பேராளர்....!!!!

---------------------------------------

இலங்கையில் வடக்கு கிழக்கில் உணவு உள் ளிட்ட அடிப்படைப் பொருட்கள் எதுவுமின்றி மக்கள் அவதிப்படும் பிரச்சினைக்கு இலங்கை உடனடித் தீர்வு காணவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்தச் செய்தியை இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் நேரடியாக வலியுறுத்துவதற்காகப் புதன்கிழமை யன்று இந்திய வெளியுறவு செயலாளர் சிவ சங்கர் மேனன் கொழும்பு செல்கிறார். இலங்கையில் இம்மாதம் 22-24 வரை தங்கி இருக்கும் திரு மேனன் 23ம் தேதி கொழும்பில் அதிபர் ராஜபக்சேயைச் சந்திப்பார். இலங்கை அதிபர் ராஜபக்சே இம்மாதம் 28ம்தேதி இந்தியாவுக்குச் செல்ல திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு முன்னோடிப் பயணமாக இந்திய அதிகாரியின் இலங்கை பயணம் இடம் பெறுகிறது.

கொழும்பில் திரு மேனன் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயையும் சந்திப்பார. திரு ரணில் இம்மாதம் 27-29 தேதிகளில் புதுடில்லயில் இருப்பார் என்றும் அவர் இந்திய அரசியல் தலைவர்களைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

"இலங்கையில் மற்ற குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளும் சலுகைகளும் இலங்கை யில் வாழும் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது. பேச்சு வார்த்தை மூலம் தான் அரசியல் தீர்வு காண முடியும். அதன் மூலமாகத்தான் தமிழர்களின் உண்மையான உரிமைகளைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அதிகாரப் பங்கீடு செய்து கொள்ளமுடியும் இதுவே இந்தியாவின் நிலை. ஒருங்கிணைந்த கூட்டாட்சி அடிப்படை யிலான இலங்கையில் தமிழர்களுடைய உரிமை களைப் பாதுகாப்பதற்குரிய வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் பட வேண்டு மென்ற இந்தியாவின் எண்ணம் ஆழமானது. தொடர்ந்து இருந்து வருவதும் அதுவே. இந்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் கொழும்பு செல்லவிருக்கிறார். அப்பொழுது இலங்கை அரசுக்கு இந்தியாவின் ஆழ்ந்த கவலை களைத் தெரிவிப்பார். இலங்கை அதிபர் ராஜபக்சேயை இந்தியாவில் நான் சந்திக்கும்போது, உரிய முறையில் இவற்றை அவருக்குத் தெரிவிப்பேன்" என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.இதற்கிடையே இலங்கை மட்டக்களப்பு வாகரையில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்புமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் சபையில் பெரும் இழுபறி, கலகம் ஏற்பட்டது.

இதன் உச்சக்கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனது மேல் அங்கியைக் கழற்றி எறிந்துவிட்டு சபை நடுவே நின்று பெருத்த குரலில் ஆக்ரோஷமாகக் கத்தினார். இதனால் சபையில் பெரும் அமளி-துமளி ஏற்பட்டது.

இவ்வேளையில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு அமைதி காணும் முயற்சிக்குத் திரும்பும்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே விடுத்த கோரிக்கையை விடுதலைப் புலிகள் நிராகரித்தனர்.

நாடாளுமன்றத்தில் பேசிய ராஜபக்சே, வன்முறை, ஆயுதங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு ஜனநாயகம், அமைதி, நாட்டின் மேம் பாட்டுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு, புதிய இலங்கையை அமைக்க முன்வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் கிளிநொச்சியில் புலிகளின் ராணுவ செய்தித்தொடர்பாளர் ராசய்யா இளந் திரையன் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ஆயுதங்களை ஒப்படைக்கும்படி அதிபர் ராஜபக்சே விடுத்த கோரிக்கையை ஏற்கமுடியாது என்றார் இதனிடையே, இலங்கை இனப் பிரச் சினைக்குத் தீர்வு காண உதவும் நோக்கில் பிரிட்டன் சார்பில் நடுவராக இலங்கைக்குச் செடனற எம்பி பால் மர்பி, தனது மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை இரவு லண்டன் திரும்பினார். அவர் தான் சேகரித்த விவரங்களைப் பிரிட்டிஷ் அரசிடம் விரைவில் அளிப்பார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

----TAMILMURASU-SINGAPORE---------------------------------------------------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.