Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(ஆயுதக் கொள்வனவு)போருக்குத் தயாராகும் அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில் பாரிய யுத்தத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வரவு - செலவுத் திட்டம் மூலம் பாதுகாப்புக்கு மிகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள அதேநேரம் போர்த் தளபாடங்களை வாங்கிக் குவிப்பதில் அரசு தீவிர ஆர்வம் காட்டுகிறது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வடக்கு - கிழக்கைப் பிரித்த அரசு, அரசியல் ரீதியாக வடக்கு - கிழக்குப் பிரிப்புக்கு எதிரான செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ள அதேநேரம், இராணுவ ரீதியிலும் வடக்கு - கிழக்கைத் துண்டாடுவதில் தீவிர அக்கறை காட்டுகிறது.

கிழக்கில் துணைப் படைகளை வளர்ப்பதன் மூலம், கிழக்கில் தான் மேற்கொள்ளவுள்ள படை நடவடிக்கைகளை இவர்களே மேற்கொள்வதாக வெளியுலகுக்குக் காட்டும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேநேரம், வடக்கு - கிழக்கில் இன்று முழுப் பலத்துடன் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்து விடுவதிலும் அரசு தீவிரம் காட்டுவதாக கடும் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

யாழ்.குடாநாட்டுக்கான `ஏ-9' பாதை மூடப்பட்டதன் மூலம் குடாநாடு இன்று திறந்தவெளிச் சிறைச்சாலையாகிவிட்டதுடன் படுகொலைக் களமாகவும் மாறிவிட்டது. நுழைவாயில் மூடப்பட்டு, ஆயிரக் கணக்கில் படைகள் குவிக்கப்பட்டு, இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு ஆட்கடத்தல்களும் படுகொலைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

நாட்டைப் பாதுகாக்கவும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவுமே வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினம் இரட்டிக்கப்பட்டதாக அரசு தரப்பு கூறுகிறது. பயங்கரவாத ஒழிப்பு, நாட்டின் பாதுகாப்பென்ற போர்வையில் மிகப் பெரும் யுத்தமொன்றுக்கு அரசு பெரும் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

வடக்கு - கிழக்கை பிரிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்றின் சட்டவாக்க அதிகாரங்கள் மூலம் மீண்டும் வடக்கு - கிழக்கை இணைத்து நிலைமை மோசமடைவதைத் தடுத்திருக்க முடியும். உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு வடக்கு - கிழக்கை இணைக்குமாறு கோரியே பாராளுமன்றில் சத்தியாக்கிரகப் போராட்டங்களை மேற்கொண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து இதனை வலியுறுத்தியிருந்தது.

இது தொடர்பாக உறுதியான முடிவெடுக்கும் வரை இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் இணைந்த வடக்கு - கிழக்கிற்கே நிதி ஒதுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்‌ஷவை வலியுறுத்தி வந்தது. எனினும், ஜனாதிபதி அதனை நிராகரித்து, வடக்கு - கிழக்கிற்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம், வடக்கு - கிழக்கு இணைப்பு விவகாரத்தில் அரசினதும் தனதும் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

`சாணேற முழம் சறுக்கும்' நிலைமையே இன்று இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியிலுள்ளது. நாளும் பொழுதும் புதுப்புதுப் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதன் மூலம், அவை குறித்துப் பேசி முடிவெடுக்கவே பல வருடங்கள் செல்லும் நிலையில் அடிப்படை பிரச்சினை குறித்து ஆராயும் நிலைமை ஏற்படும் வாய்ப்பே இல்லாமல் போய்விடப் போகிறது. போர் நிறுத்த உடன்பாட்டைச் செய்து விட்டு அதனை அமுல்படுத்தாததால் முதல் சுற்று ஜெனீவாப் பேச்சில் போர் நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கம் பற்றியே பேச வேண்டியிருந்தது. அதேநேரம், இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் திறக்கப்பட்ட `ஏ-9' பாதை மூடப்பட்டதால் இரண்டாம் சுற்று ஜெனீவாப் பேச்சில், இந்தப் பாதை திறப்பது பற்றியே பேசப்பட்டது.

இவ்விரு பேச்சுகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன. இனப் பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு பற்றியும் அதன் அமுலாக்கம் பற்றியுமே இந்தப் பேச்சு நடைபெறுகிறதே தவிர, என்ன காரணத்திற்காக இந்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதோ அது அடிபட்டுப் போய்விட்டது.

தற்போதைய நிலையில் கூட, தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்க எதுவித நடவடிக்கையும் எடாத அரசு, தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையான, இணைந்த வடக்கு - கிழக்கு என்ற தாயகக் கோட்பாட்டை நிராகரித்து நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வடக்கு - கிழக்கை தனித் தனியாக்கியது மட்டுமன்றி, வரவு - செலவுத் திட்டத்திலும் வடக்கிற்கு வேறாகவும், கிழக்கிற்கு வேறாகவும் நிதி ஒதுக்கி சத்தமின்றி அரசியல் ரீதியாகவும் வடக்கு - கிழக்கை பிரித்துள்ளது.

அதேநேரம், பாதுகாப்புச் செலவினத்தை இரட்டிப்பாக்கி முப்படைகளுக்கும் பல நூறு கோடி ரூபாவில் போர்த் தளபாடங்களைக் குவிப்பதன் மூலம் பெரும் போருக்கு அரசு தயாராகி வருகின்றது. தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் அரசியல் ரீதியாகவும் பிரிக்கப்பட்டிருக்கும் வடக்கு - கிழக்கை, இராணுவ நடவடிக்கை மூலமும் பிரிப்பதே அரசின் திட்டமாகும்.

கிழக்கில் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தி அங்கு பிரிவினையை தோற்றுவித்ததன் மூலம் வடக்கு - கிழக்கிலும் பிளவை ஏற்படுத்தி பிரிவினையைத் தோற்றுவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒருகட்டமே கிழக்கில் துணைப் படைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் அரசின் நடவடிக்கையாகும்.

கிழக்கில் துணைப் படைகளை வளர்த்து புலிகளுக்கு சவால்விடச் செய்வதும் அந்த துணைப் படைகளைத் தங்கள் கடடுப்பாட்டினுள் வைத்துக் கொண்டு வடக்கிற்கு எதிராக கிழக்கின் செயற்பாடுகளைத் தூண்டுவதுமே அரசின் திட்டமாகும். வடக்கு - கிழக்கை பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை வலுவிழக்கச் செய்து வடக்கு - கிழக்கை நிரந்தரமாகப் பிரித்துப் பின்னர் கிழக்கைத் தங்களது (சிங்களவர்) கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழர்களையும், முஸ்லிம்களையும் சிறுபான்மையினராக்கி வடக்கை தனிமைப்படுத்துவதே இனவாதிகளின் திட்டமாகும்.

கடந்த காலங்களில் எல்லாம் கிழக்கில் அடிக்கடி தமிழ் - முஸ்லிம் கலவரங்கள் தூண்டப்பட்டு வந்தன. கிழக்கில் தமிழர்களுக்கெதிராக முஸ்லிம்களைத் தூண்டுவதன் மூலம் வடக்கு - கிழக்கு இணைப்புக் கெதிராக முஸ்லிம்களை செயற்படச் செய்யும் அதேநேரம் கிழக்கில் தமிழ் - முஸ்லிம் உறவைச் சீர்குலைப்பதன் மூலமே தங்களது நோக்கங்களை நிறைவேற்ற முடியுமென்பதும் இனவாதிகளின் திட்டமாகும்.

தற்போது கிழக்கில் துணை இராணுவக் குழுக்களை வளர்ப்பதன் மூலம் தமிழர்களையும் - தமிழர்களையும் மோதவிட்டு கிழக்கிற்குள் தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் கிழக்கைத் தமிழர்களது ஒத்துழைப்புடன் பிரித்துவிடலாமென்றும் அரசு கனவு காண்கிறது. இதனால்தான் தற்போது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே முன்னரைப் போன்று இனக்கலவரங்கள் தூண்டப்படாது, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பிரச்சினைகள் எதுவும் தோன்றாதவாறு அரசும் படைத் தரப்பும் நிலைமைகளைக் கையாளுகின்றன.

கிழக்கில் தமிழ் - முஸ்லிம் கலவரம் ஏற்படுவதற்கு, முன்னர் புலிகளே காரணமென்பது போன்றும் தற்போது துணை இராணுவக் குழுக்கள் கிழக்கில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வளர்ப்பது போன்றதொரு தோற்றப்பாடும் ஏற்படுத்தப்படுவதுடன், கிழக்கில் தமிழ் - முஸ்லிம் கலவரமானது தற்போதைய நிலையில் துணை இராணுவக் குழுவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதித்து விடுமென்பதால் முஸ்லிம்களை தமிழர்களுடன் மோதவிடாது இனநல்லுற கட்டியெழுப்பப்படுவது போன்றதொரு மாயையும் உருவாக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.