Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"2006-2009" ஆண்டு வரை 13,000 முறை சிங்கள போர் விமானங்கள் தமிழர் பகுதி மேல் குண்டு வீசியுள்ளதாக தெரிவித்துள்ள ஆதாரங்கள் உள்ளன - விடுதலை க .இராசேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாடு அன்னையர் முன்னணி மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் சார்பில் முள்ளிவாய்க்கால் 6-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று (18.05.2015) திங்கள் கிழமை மதியம் நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் காஞ்சி மக்கள் மன்ற தோழர் சங்கீதா மற்றும் தோழர் கௌதமன் ஆகியோர் தமிழீழ விடுதலைப்பாடல்களையும் தோழர் செங்கொடி நினைவு பாடல்களையும் பாடினார்கள். அதன்பின்னர் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தக்கோரி ஐ.நா. சபையை வலியுறுத்தி பதாகையில் அனைவரும் கையெழுத்திட்ட பின்னர் தமிழீழ விடுதலைப்போரில் சிறீலங்கா அரசால் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முள்ளிவாய்க்கால் படுகொலையை சித்தரிக்கும் விதமாக உலகத் தமிழ் அமைப்பின் (GTO) மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். இந்திகழ்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர் தோழர் அங்கயற்கண்ணி, தோழர் காமேசுவரி, தேசிய பெண்கள் முன்னணி தோழர் சர்மிளா,  ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் தலைமை நிலைய செயலாளர் அப்துல் ரசாக், திராவிடர் விடுதலைக் கழக வழக்கறிஞர் தோழர் திருமூர்த்தி, ஊடகவியலாளர் தோழர் தெ.சீ.சு. மணி, அன்னையர் முன்னணி தோழர் அகிலா, தோழர் செ.ஹைதர் அலி (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்)
தோழர்  நிஜாமுதீன் (மேனாள் எம்.எல்.ஏ) (இந்திய தேசிய லீக்) ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்கள்.

சிறப்புரையாற்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தனது உரையில், "முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்களுக்கு உணவுப்பொருட்கள் செல்லவிடாமல் அழித்து பட்டினிப்போட்டு பசியால் சாகடித்த மருத்துவ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. செஞ்சிலுவைச்சங்க அதிகாரிகளும் தங்களின் ஆதாரங்களை பதிந்துள்ளார்கள், சிறிலங்கா பாராளுமன்றத்தில் இராணுவ அமைச்சர் "2006-2009" ஆண்டு வரை 13,000 முறை சிங்கள போர் விமானங்கள் தமிழர் பகுதி மேல் குண்டு வீசியுள்ளதாக தெரிவித்துள்ள ஆதாரங்கள் உள்ளன. மேலும் அனைத்துலக மன்னிச்சபையும் (Amnesty international) இது தொடர்பான ஆவணங்களை பதிவு செய்துள்ளனர்" என்று தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் காஞ்சி மக்கள் மன்ற தோழர் மகேசு மற்றும்  கத்தோலிக்க திருச்சபை அருட்தந்தை குழந்தைச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அன்னையர் முன்னணி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சரஸ்வதி செய்திருந்தார்.

 

TGTE-chennai-180515-seithy%20(1).jpg

 

TGTE-chennai-180515-seithy%20(3).jpgTGTE-chennai-180515-seithy%20(4).jpg

TGTE-chennai-180515-seithy%20(5).jpgTGTE-chennai-180515-seithy%20(6).jpgTGTE-chennai-180515-seithy%20(7).jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.