Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை நோக்கி சிங்களப் படைகள் பாரிய படைநடவடிக்கை

Featured Replies

வாகரை நோக்கி சிங்களப் படைகள் பாரிய படைநடவடிக்கை

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிங்களப் படைகள் இன்று பாரிய படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாங்கிகள், கவச ஊர்திகளுடன் பெருமளவான படையினர் யுத்த சூனியப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி நகர முயன்றவேளை விடுதலைப் புலிகள் படை நகர்விற்கு எதிராக தமது பதில் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

படையினரின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பான செய்தியை விடுதலைப் புலிகள் படைத்துறைப் பேச்சாளர் திரு. இராசையா இளந்திரையன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

www.sankathi.com

  • தொடங்கியவர்

தொடர்புபட்ட செய்தி

http://news.yahoo.com/s/afp/20061123/wl_st...st_061123052920

  • தொடங்கியவர்

வாகரையில் படையினரின் முன்னேற்ற முயற்சி புலிகளால் முறியடிப்பு.

வாகரையில் இன்று காலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்றமுயற்சி புலிகளின் கடுமையான எதிர்ச்சமரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களிற்கு தெரிவித்திருக்கும் விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையன் மாங்கேணி மற்றும் கஐவத்தா படைமுகாம்களில் இருந்து படையினர் பல்குழல் மற்றும் ஆட்லறி எறிகணைச் சூட்டதரவுடன் யுத்த டாங்கிகள் சகிதம் புலிகளின் கட்டுப்பட்டுப்பகுதிகளை நோக்கி வலிந்த முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து வெடித்த உக்கிரசமரில் யுத்த சூனியப்பிரதேசத்தில் வைத்து சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி போராளிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

www.pathivu.com

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் முன்னேறிய படையினரை எதிர்த்து விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்தியதில் ஏழு சிறப்பு அதிரடிப் படையினர் பலி.

மட்டக்களப்பில் வலிந்த முன்னேற்ற நடவடிக்கையொன்றை மேற்கொண்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை நோக்கி விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்தியதில் 7சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர். ரி.56 துப்பாக்கிகள் மூன்றும் 40 மில்லிமீற்றர் கிரினைட் லொஞ்சர் என்பன விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

விடுதலைப்புலிகள் தரப்பில் வீரவேங்கை நந்தன் வீரச்சாவைத் தளுவிக்கொண்டுள்ளார் மட்டக்களப்பு படையினரின் ஆக்கிரமிப்புப் பிரதேசமான 36கிராமத்திலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான 38கிராமத்தை நோக்கி முன்னேற முயன்ற போதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த (15வயது)மாணவி கமலாகரன் அருட்செல்வி பலியானர் அவரது சகோதரி கமலாகரன் அருட்ச்செல்வி (20) சகோதரன் கமலாகரன் அருள் ராசா (18) இன்னொரு சகோதரியான கமலாகரன் விதுசா (12) உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்

www.sankathi.org

Edited by YARLVINO

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு வலிந்த தாக்குதலில் மாணவி படுகொலை- முறியடிப்புச் சமரில் 7 இராணுவத்தினர் பலி- போராளி வீரச்சாவு மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் பாடசாலை மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது சகோதரி மற்றும் 2 சகோதரர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புச் சமரில் 7 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் ஒரு போராளி வீரச்சாவடைந்தார்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியதாவது:

பதுளை வீதிச் சந்தி மற்றும் 36 ஆம் கொலனி இராணுவ முகாம்களிலிருந்து 38 ஆம் கொலனியை நோக்கி பாரிய எறிகணைத் தாக்குதல்களுடன் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் முன் நகர்வை மேற்கொண்டனர்.

மேலும் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள கொண்டவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்தும் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைகள் வெல்லாவெளி திக்கோடையில் உள்ள 50 வீடமைப்புத் திட்டப் பகுதியில் விழுந்து வெடித்தது.

இதில் பாடசாலை மாணவியான கமலாகரன் அருட்செல்வி (வயது 15) என்பவர் உயிரிழந்தார்.

கமாலகரன் அருட்செல்வியின் சகோதரிகள் கமலாகரன் நிருசா (வயது 7), கமலாகரன் கலைச்செல்வி (வயது 20) மற்றும் சகோதரர் கமலாகரன் அருள்ராசா (வயது 20) ஆகியோரும் தங்கராசா சந்திரா(வயது 38) மற்றும் கணபதிபிள்ளை பாக்கியம் (வயது 65) ஆகியோரும் படுகாயமடைந்தனர். தங்கராசா சந்திரா மற்றும் கணபதிபிள்ளை பாக்கியம் ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியான மாணவி கமலாகரன் அருட்செல்வி மற்றும் காயமடைந்த அனைவரும் சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் எல்லைப் பகுதியிலிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள 39 ஆம் கொலனியிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்பாக திக்கோடை 50 வீடமைப்புத் திட்டப் பகுதிக்கு இடம்பெயர்ந்தவர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலி போராளி நந்தன் வீரச்சாவைத் தழுவியுள்ளார். தாக்குதல் நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்திடமிருந்து 40 எம்.எம். கிரனைட் லோஞ்சர் மற்றும் ரி-56 துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.

----------------------------------------------------

வாகரை நோக்கி இராணுவம் வலிந்த தாக்குதல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் இன்று பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கையை மெற்கொண்டனர்.

கஜுவத்த மற்றும் மாங்கேணி சிறிலங்கா இராணுவ முகாம்களிலிருந்து பாரிய எறிகணை, மோட்டார் மற்றும் பல்குழல் உந்துகணைத் தாக்குதல்களுடன் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர்.

"சூன்யப் பிரதேசத்தைத் தாண்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் சிறிலங்கா இராணுவத்தினர் உள்நுழைந்ததையடுத்து பதில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 8 ஆம் நாளன்று வாகரை பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 47 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அப்பகுதிக்கான மனிதாபிமான உதவிகள் எதுவும் சென்றடையவில்லை.

இந்நிலையில் மீண்டும் வாகரை பிரதேசத்தில் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.