Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிரி சார்பில் சட்டத்தரணி ஆஜராவதை எவராலும் தடுக்க முடியாது; ஊர்காவற்றுறை நீதவான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எதிரி சார்பில் சட்டத்தரணி ஆஜராவதை எவராலும் தடுக்க முடியாது; ஊர்காவற்றுறை நீதவான்
1082bc88a29414c2373f09a7b9b7b13d.jpg
எதிரி சார்பில் ஆஜராகும் எந்தவொரு சட்டத்தரணியையும் தடுப்பதற்கு எவருக்கும் முடியாது . அவ்வாறு தடுத்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் அதற்கான நடவடிக்கையினை எடுப்பேன் என ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தெரிவித்தார்.
 
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான மரண விசாரணை நேற்று மன்றில் இடம்பெற்றது. 
 
இதன்போது வித்தியாவின் மரணம் தொடர்பில் 7பேர் சாட்சியமளித்தனர்.எனினும் கடந்த வழக்குத் தவணையின் போதே சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளை நியமிக்குமாறு நீதவான் தெரிவித்திருந்தார்.
 
எனினும் நேற்றைய விசாரணையின் போதும் சட்டத்தரணிகள் எவரும் குற்றவாளிகள் சார்பில் சமூகமளித்திருக்கவில்லை. சட்டத்தரணிகளை ஏன் நியமிக்கவில்லை என்று நீதிபதி கேட்டபோதே எவரும் ஆஜராக மாட்டார்கள் என்று சந்தேகநபர்கள் தெரிவித்தனர்.
 
அதனையடுத்து பதிலளிக்கும் போதே நீதிபதி  மன்றில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
ஒரு வழக்கைப் பொறுத்தமட்டில் சட்டத்தரணிகளின்  பங்கு மிகவும் முக்கியமானது. அந்த வழக்கை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு சட்டத்தரணிகள் அவசியமானவர்கள் . இந்தநிலையில் குறித்த வழக்கிற்கு சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை.
 
அத்துடன்  ஆஜராகும் சட்டத்தரணிகளை ஆஜராக வேண்டாம் என தடுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது . இருப்பினும் சட்டத்தரணிகள் தங்களுடைய சுயமான முடிவில் ஆஜராகாது விட்டாலோ அல்லது பயம் காரணமாக ஆஜராகாது போனால் அதற்கு மன்று எதுவும்  செய்ய முடியாது. 
 
அவ்வாறு ஆஜராக முன்வரும் சட்டத்தரணிகளை ஆஜராக விடாது யாராவது தடுத்தால் எனக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் .அதற்குரிய நடவடிக்கையினை நான் எடுப்பேன். 
 
அடுத்த விசாரணையின் போது சட்டத்தரணிகளை நியமிக்கவும் என்றும்  அவர் மேலும் மன்றில் தெரிவித்தார்.
 
இதேவேளை , நேற்று இடம்பெற்ற வழக்கின்போது தென்பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணிகள்  மூவர் மன்றிற்கு வருகைதந்திருந்தனர்.
 
எனினும்  வித்தியா சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி தவராசா குறித்த மூவரையும் எந்த வழக்கிற்காக வந்தீர்கள்?  வித்தியாவின் சார்பில் என்றால் உங்கள் பெயர்களை தாருங்கள் பதிவு செய்வோம் என கேட்டுள்ளார்.
 
தாம் வழக்கை அவதானிப்பதற்கு வந்தோம் என்று கூறியுள்ளனர். பின்னர் வழக்கு முடிவுற முன்னர் மன்றைவிட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=453134088216856486#sthash.JlyC1gjc.dpuf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வித்தியா படுகொலை வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் சிங்கள சட்டத்தரணிகள் ஆஜரா? photo.png

[Tuesday 2015-06-16 07:00]
lawers-kayts-160615-380-seithy.jpg

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரண விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது சிங்கள சட்டத்தரணிகள் மூவர் மன்றில் ஆஜராகினர். குறித்த சட்டத்தரணிகள் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் ஆஜராக வந்தனரா அல்லது வேறு காரணங்களுக்காக வந்தனரா என்பது நேற்று விசாரணைகள் நிறைவுறும் வரை தெளிவுபடுத்தப்படவில்லை.

  

இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து வருகை தந்துள்ளதாக இவர்களிடம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சக சட்டத்தரணிகள் கேட்ட போது தெரிவித்ததாகவும், இவர்கள் என்ன நோக்கத்திற்காக வருகை தந்துள்ளார்கள் என்பது பற்றிய விளக்கங்கள் நீதிமன்றில் தெளிவுபடுத்தப்படவில்லை எனவும் நேற்றைய தினம் மன்றில் பிரசன்னமாகியிருந்த பெரும்பாலான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

 

இந் நிலையில் இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் சாதக பாதக நிலைமைகளை அவதானிப்பதற்காகவே வருகை தந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் சட்டத்தரணிகள் எவரும் பிரசன்னமாகாமை தொடர்பிலும் நேற்று மன்றில் நீதிவானின் கவனம் செலுத்தப்பட்டது. நேற்று சுமார் மூன்று மணி நேரம் நீடித்த விசாரணைகள் நிறைவுக்கு வரும் தறுவாயில் சந்தேக நபர்கள் சார்பில் யாரும் ஆஜராகாதமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

 

இதன் போது பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா புதிதாக கொழும்பில் இருந்து மூவர் மன்றுக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர்களிடம் வினவுமாறு நீதிவானை அவர் கேட்டுக்கொண்டார். இதன் போது அவர்களை வினவ நீதிவான் முற்பட்டபோது போது அந்த மூன்று பேரும் நீதிமன்றிலிருந்து வெளியேறியிருந்தனர்.

 

இதன் போது பிரதிவாதிகள் கூட்டிலிருந்தவாறு சந்தேக நபர் ஒருவர் நீதிவானிடம் எங்கள் சார்பில் சட்த்தரணிகள் வைக்க முடியாத நிலமை உள்ளது. அவர்கள் ஆஜராவது தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனையடுத்து அது தொடர்பில் இறுதியாக கருத்து தெரிவித்த நீதிவான் லெனின் குமார், இது ஒரு முக்கியமான வழக்கு என்ற ரீதியில் பிரதிவாதிகளும் சட்டதரணிகளை வைத்து அவர்களது தரப்பு நியாயங்களை முன்வைக்க வேண்டும். அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராவதை எவரேனும் தடுப்பார்களாயின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். நீதிமன்ற நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் பங்கேற்பதை எந்த காரணத்திற்காகவும் யாராலும் தடுக்க முடியாது. அதேவேளை, சட்டத்தரணிகள் தமது சொந்த நிலைப்பாட்டுக்கு அமைய விலகிக்கொண்டால் அதனை அச்சுறுத்தலாக கொள்ளவும் முடியாது என்றார்.

 

 

lawers-kayts-160615-seithy%20%281%29.jpg

 

lawers-kayts-160615-seithy%20%282%29.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=134162&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.