Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடமாகாண சபை நிதியில் கட்டப்பட்ட வைத்தியசாலையை அமைச்சர் ரிஷாத் திறக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டம்

Featured Replies

வடமாகாண சபை நிதியில் கட்டப்பட்ட வைத்தியசாலையை அமைச்சர் ரிஷாத்  திறக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டம்!

தாராபுரம் வைத்தியசாலையை அமைச்சர் ரிஷாத் பதியுதீனே திறக்கவேண்டும் என்று கோரி, வடக்கு மாகாண சுதாராத அமைச்சரை வைத்தியசாலைக்குள் நுழையவிடாது இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி மக்கள். 2013ஆம் ஆண்டு வட மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதி வழங்கப்பட்டு நிர்மாணப் பணிகள் 2014ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் நிறைவு பெற்றிருந்தாலும் அமைச்சார் ரிஷாத் பதீயுதீனால்தான் திறக்கப்படவேண்டும் என தெரிவித்து நீண்டகாலம் திறக்கப்படாமல் உள்ளது.

இன்று மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் ஆரம்ப சுகாதார வைத்தியசாலை, பண்டாரவெளி வைத்தியசாலை, எருக்கலம்பிட்டி கிராமிய வைத்தியசாலை, ஆகியவற்றை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் திறந்துவைத்தார். அத்துடன் நீண்டகாலம் திறக்கப்படாதுள்ள தாராபுரம் ஆரம்ப சுகாதார வைத்தியசாலையையும் இன்று அமைச்சர் திறப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் ரிஷாத் பதியுதீனே வைத்தியசாலையைத் திறக்கவேண்டும் என்று கூறி மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பதை தவிர்த்து அதனை பார்வையிட வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் சென்றிருந்தனர். எனினும் குறித்த கிராமத்தின் பெண்கள் வீதியை மறித்து வைத்திய சாலைக்குள் அமைச்சரை செல்லவிடாது தடுத்தனர். இதனையடுத்து வடமாகாண அமைச்சர் குழு மக்களுடன் கலந்துரையாடி வைத்தியசாலையைப் பார்வையிட்டுத் திரும்பியது.

mannar%20ffgg44521.jpg

: http://www.malarum.com/article/tam/2015/07/03/10835/வடமாகாண-சபை-நிதியில்-கட்டப்பட்ட-வைத்தியசாலையை-அமைச்சர்-ரிஷாத்-திறக்கவேண்டும்-என்று-ஆர்ப்பாட்டம்-.html#sthash.ndiESV5f.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

மதவாதம் 

  • தொடங்கியவர்

மக்களைப் பிழையாக வழிநடத்தும் அரசியல்வாதிகள் எமது சமுதாயத்துக்குத் தேவையில்லை 

மக்களைப் பிழையாக வழிநடத்தும் அரசியல்வாதிகள் எமது சமுதாயத்துக்குத் தேவையில்லை!

மக்களை பிழையாக வழிநடத்தும் அரசியல்வாதிகள் எமது சமுதாயத்திற்கு தேவையில்லை என வட மாகாண சுகாதார அமைச்சர் ப .சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை மன்னாரில் நடைபெற்ற சுகாதார வைத்தியசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு மூன்று வைத்தியசாலைகளை திறந்து வைத்தார். இதேபோன்று தாராபுரத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார வைத்தியசாலையை திறந்து வைக்கச் சென்ற அமைச்சரை அப்பகுதி பெண்கள் ஒன்று கூடித் தடுத்தனர். இதன்போது அவர்கள் அந்த வைத்தியசாலையை அமைச்சர் றிஷாட்டே திறந்து வைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் வைத்தியசாலையைத் திறப்பதைத் தவிர்த்த அரசியல்வாதிகளின் தூண்டுதலிலேயே இது இடம்பெற்றது எனத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

மன்னார் மாவட்டத்தில் வட மாகாண சபையினால் குறித்தொதுக்ப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைகளை இன்று வெள்ளிகிழமை வைபவரீதியாக திறந்து வைத்தோம். இதன் அடிப்படையில் பண்டாரவெளி, உயிலங்குளம், எருக்கலம்பிட்டியில் உள்ள கிராமிய சிகிச்சை நிலையங்களை திறந்துவைத்து பின் தாரபுரத்திலுள்ள ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தையும் திறப்பதற்கு சென்றிருந்தோம். ஆனால் தாராபுரம் அரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைப்பதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளினால் தடைகள் ஏற்படுத்தபட்டிருந்தது. குறித்த வைத்தியசாலை 2013 ஆம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு முற்பகுதியில் நிர்மாணப்பணிகள் முற்றுபெற்றிருந்தாலும் பல அரசியல் காரணங்களுக்காக தொடர்ச்சியாக மக்கள் சேவைக்கு வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது.

இங்கு சமூகங்களிடையே பிரசினைகள் வரக்கூடாது என்று திறப்பு விழாவை பிற்போட்டிருந்தாலும் கடந்த 25 ஆம் திகதி எமது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிசாட் பதியூதீனையும், சுகாதார இராஜங்க அமைச்சராக இருந்த ஹசன் அலியையும் பிரதம விருந்தினர்களாக அழைத்து திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தவிர்க முடியாத காரணத்தால் அந்த திறப்பு விழாவை நடத்த முடியவில்லை. இரண்டு அரசியல்வாதிகளும் குறித்த வைத்தியசாலையை இணைந்து திறப்பதற்கு ஏற்றுகொள்ள முடியாத நிலை இருந்தபடியால் அதனை நாங்கள் பிற்போடவேண்டிய நிலைக்கு தள்ளபட்டோம். இதற்கு பின்னர் வைத்தியசாலைத் திறப்புவிழா தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியூதினின் சகோதரரும் வட மாகாண சபை உறுப்பினருமாகிய றிப்கான் பதீயூதினிடம் பேசி அதன் அடிப்படையில் இணக்கப்பாட்டிற்கு வந்து மன்னார் மாவட்டத்தின் மாகாண சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து அமைச்சராகிய நானும் இணைந்து இன்று தாராபுர ஆரம்ப சுகாதார வைத்தியசாலையைத் திறப்பதற்கு தீர்மானித்து திறந்து வைக்க இருந்தோம்.

எனினும் நாம் தாராபுர வைத்தியசாலைக்கு செற்றபோது அங்கு ஊர் பெண்கள் அமைச்சர் றிசாட் பதியூதீன் இல்லாமல் அந்த வைத்தியசாலையை திறக்க முடியாது என தெரிவித்து தடை செய்தார்கள். குறிப்பாக போருக்குப் பின்னரான சந்தர்ப்பத்தில் மீள்குடியமர்கின்ற மக்கள் தங்களுக்கு வைத்தியசாலை வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் இக் காலத்தில் இங்கு வைத்தியசாலையை திறக்கவேண்டாம் என மூடி வைத்துக்கொண்டு பெரிய வளத்தை திறக்க முடியாமல் தடுத்து வைப்பது என்பது வேடிக்கையாக உள்ளது.

இதன் அர்த்தம் என்ன என்று சொன்னால் இம் மக்கஎளுக்கு அவ்வைத்தியசாலை வேவையில்லை என்பதே. ஏனெனில் சுமார் இரண்டு கிலோ மீற்றருக்குள் வேறு வைத்தியசாலைகள் இருக்கின்றன. ஆகவே உண்மையில் இந்த வைத்தியசாலை வேறு இடத்திற்கு போகவேண்டிய நிலையில் அரசியல்வாதிகளின நடவடிக்கையால் தேவையில்லாத இடத்திற்கு இவ்வைத்தியசாலை வழங்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். எமது வட மாகாணத்தில் அனைவருக்கும் தொடர்ந்து சுகாதார சேவையை வழங்கும் பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் எனக்கு இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகள் மக்களை பிழையாக வழிநடத்துவதின் ஊடாக மக்களுக்கு வழங்கபோகின்ற சேவையினை தடுத்து நிறுத்துவது மனவருத்தத்திற்குரிய விடயம். இவ்வாறான அரசியல்வாதிகள் எமது சமுதாயத்திற்குத் தேவையில்லை - என்றார்.

 http://www.malarum.com/article/tam/2015/07/03/10837/மக்களைப்-பிழையாக-வழிநடத்தும்-அரசியல்வாதிகள்-எமது-சமுதாயத்துக்குத்-தேவையில்லை-.html#sthash.zt1qVe9O.dpuf

 

மக்களை பிழையாக வழிநடத்தும் அரசியல்வாதிகள் எமது சமுதாயத்திற்கு தேவையில்லை என வட மாகாண சுகாதார அமைச்சர் ப .சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை மன்னாரில் நடைபெற்ற சுகாதார வைத்தியசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு மூன்று வைத்தியசாலைகளை திறந்து வைத்தார். இதேபோன்று தாராபுரத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார வைத்தியசாலையை திறந்து வைக்கச் சென்ற அமைச்சரை அப்பகுதி பெண்கள் ஒன்று கூடித் தடுத்தனர். இதன்போது அவர்கள் அந்த வைத்தியசாலையை அமைச்சர் றிஷாட்டே திறந்து வைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் வைத்தியசாலையைத் திறப்பதைத் தவிர்த்த அரசியல்வாதிகளின் தூண்டுதலிலேயே இது இடம்பெற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.