Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Featured Replies

அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

JUL 18, 2015 | 16:55by கார்வண்ணன்in செய்திகள்

Nisha-TNAஇனப்படுகொலை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடக்கி வாசிக்குமாறு, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்தவாரம் அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன் போது, இனப்படுகொலை குறித்து அடக்கி வாசிக்கும்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தி தவறதானது என்றும், நிஷா பிஸ்வால் அவ்வாறு கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர்.

லண்டனில் நடந்த நிகழ்வு ஒன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புகளையும் உதாசீனம் செய்யமாட்டோம் என்றும், அவர்களின் நல்வாழ்விற்காக தாங்கள் தொடர்ந்து உழைப்போம் என்றே நிஷா பிஸ்வால் தன்னிடம் கூறியதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/07/18/news/7940

  • தொடங்கியவர்
Roger Sinna (Face Book)

அண்மையில் அமெரிக்க அலுவலர் நிஷா அவர்கள் என்னை அவமதித்துக் கதைத்ததாக ஒரு பத்திரிகைச் செய்தி வந்தது. ‘இன அழிப்பை அடக்கி வாசி’என்று கூறியதாக செய்தி வந்தது. அது முற்றிலுந் தவறான செய்தி.

உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் எதிர்பார்ப்புகளையும் நாங்கள் உதாசீனம் செய்ய மாட்டோம். அவர்களின் நல் வாழ்விற்காக நாங்கள் தொடர்ந்து உழைத்து வருவோம் என்றே அவர் கூறினார்.

அதே செய்தியில் நான் இங்குள்ள அமைச்சர் ஒருவரைச் சந்தித்து விருந்தும் உண்டதாகச் செய்தி வந்தது.

நான் இப்பொழுதுதான் இங்கிலாந்துக்கு வருகின்றேன். ஆனால் அந்தச் செய்தியாளர் இருவாரங்களுக்கு முன்னர் இங்கு வந்து விருந்துண்ண வைத்துவிட்டார். இப்படியான தவறான செய்திகளைத் தவிரக்குமாறு தயைகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

இன அழிப்பு என்ற வார்த்தைப் பிரயோகம் என்னால் கொண்டுவரப்பட்டதல்ல. தந்தை செல்வா அவர்களே அதை முதலில் பாவித்தார். 1974 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை தீவில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றிய பேராளர்களுக்கு தந்தை செல்வா மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

அதிலே, தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள தேசத்தின் இனஅழிப்பு தொடர்பாக தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். சிங்களத் தலைவர்களுக்கு ஒரு நோக்கம் உண்டு. அது, இரு இனங்கள், இரு மொழி, பல மதங்களை கொண்ட இலங்கைத் தீவை, ஒரு இனம் - சிங்கள இனம், ஒரு மொழி -சிங்கள மொழி மற்றும் பௌத்தம் மட்டும் கொண்ட ஒரு தேசமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கமே அது.

அதற்காக அவர்கள் இனஅழிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கோடிட்டு அன்றே காட்டியிருந்தார். தீவிரவாதம், பயங்கரவாதம் என முத்திரை குத்துகின்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்க முன்னரே, அன்றைய தமிழ்த் தலைவர்கள் எமது இனஅழிப்புத் தொடர்பாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆகவே, முத்திரை குத்தல்களுக்குஞ் சாடல்களுக்கும் அஞ்சி எமது இனத்துக்கு நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பென்ற நிலைப்பாட்டிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுபற்றி முன்பே சொல்லி இருந்தேன்.. உண்மை பேசுகிறவர்களை இங்கே  இருவருக்கு பிடிக்காது.. ஒன்று உண்மையான சிங்களவன் இரண்டாவது சம்சுங். அவைகள்தான் இப்படியான கதைகளை பரப்புகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.